ஜோதிடம் என்பது ஒருவன் பிறந்த கணத்தில் இருந்த கோள்களின் நிலை மற்றும் விண்மீண்களின் அமைப்பினைக் கொண்டு கணக்கிடப்படுவதாகும். இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும் உபயோகப்படுவது ஜோதிடம். அவைகளில் சில;
1. வானசாஸ்திர ஜோதிடம்
வான் மண்டலத்தில் ஏற்படும் பல மாற்றங்களால் பூமியில் ஏற்படும் பருவ நிலைகளின் மாற்றங்கள், இயற்கைச் சீற்றங்கள், தட்பவெப்ப நிலை மாற்றங்கள் போன்றவற்றைப் பற்றி அறிய உதவுகின்றது.
2. மாண்டேன் ஜோதிடம்
ஓர் நாட்டின் பொருளாதார நிலை, நாணய மதிப்பு, அரசியல் நிலை, ஏற்றுமதி இறக்குமதியின் நிலை, விலைவாசி, கடன், பொது மரணங்கள் போன்றவற்றை பற்றி அறியப் பயன்படுத்தப்படுகின்றது.
3. தனி ஜோதிடம்
ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், சூழ்நிலைகள் அவன் பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படும் பல சம்பவங்களைப் பற்றி அறியப் பயன்படுகிறது.
4. எண் ஜோதிடம்
ஓர் தனி மனிதனின் பிறந்த தேதிக்குத் தகுந்தாற் போல் அவருடைய பெயர் எழுத்துக்களை மாற்றி அமைப்பதன் மூலம் அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளைப் பற்றி அறியப் பயன்படுத்தப்படுகின்றது.
5. பிரசன்ன ஜோதிடம்
ஓர் நபர் வந்து ஜோதிடம் பார்க்கும் நேரத்தில் அந்த நேரத்தில் இருக்கும் கிரகநிலையை வைத்து, அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி அறியப் பயன்படுத்தப்படுகின்றது.
6. கைரேகை ஜோதிடம்
ஓர் தனி நபரின் கைரேகையை வைத்து அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
7. ஒலி அலை ஜோதிடம்
ஒருவரின் ஒலி அலைகளை மாற்றி அமைப்பதன் மூலம் அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி அறியப் பயன்படுத்தப்படுகின்றது.
8. சாமுத்திரிக்கா லட்சணம்
ஒருவரின் முக அமைப்பு வைத்தும், உடலமைப்பு வைத்தும் அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி அறியப் பயன்படுத்தப்படுகின்றது.
9. கையெழுத்து ஜோதிடம்
ஒருவர் எழுதும் கையெழுத்தை வைத்து அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி அறியப் பயன்படுகிறது.
10. வாஸ்து சாஸ்திரம்
ஒருவர் வசிக்கும் வீட்டின் அளவுகளை வைத்து, அவர் வாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி அறிய உதவுகிறது.