இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

பஞ்சம் குறித்த ஜோதிடக் குறிப்புகள்

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை


நாட்டில் பஞ்சம் வரப்போவது குறித்து, ஜோதிட நூல்கள் மூலம் அறிந்திட முடியும். பஞ்சம் வருவதற்கான சில ஜோதிடக் குறிப்புகள் இவை.

ஆனி, ஆடி, ஆவணி - கிழக்கு வில்

ஆனி, ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் ஓர் மாதத்திற்குக் கிழக்குத் திசையில் இந்திர தனுசு உண்டானால் உலகில் மிக்கப் பஞ்சமாம். ஆடி மாதம் பதினைந்தாம் தேதி பதினைந்து நாழிகைக்குள் சூரியனை மேகமானது மறைக்குமாகில் (அவனியில்) உலகினில் அதிக நன்மைகள் உண்டாகும்.

“அதுவுந் தண்டு நண்டுசிம்ம மான மதியிற் குணதிசையிற்
சதுரா மிந்திர தனுசுமுறத் தானே பஞ்ச முண்டாகும்
விதுவின் கடக மதிபாதி மேவுங் கடிகை மூவைந்திற்
பதுமத் திறைவன் றனைமேகம் பாங்காய் மறைக்கி லுத்தமமே” (மழை, செ.எ.111, ப.38.)

என்று மேற்காணும் பாடல் குறிப்பிடுகின்றது.


துர்விடய இலட்சணம்

இடபம், சிங்கம் விருட்சிகம், மீனம், தனுசு, சனியாதல், செவ்வாயாதல் வக்கரிக்கில் அரசர்களுக்குக் கேடு. அல்லாத இடங்களில் வக்கரிக்கில் நாட்டுக்குக் கேடு. வௌ்ளிக்கு ஏழாம் இடத்தில், வியாழன் நிற்கின் சம சத்தயோகம் என்று பெயர். வௌ்ளி தெற்கேப் போதல், புதன் வடக்கேப் போதல், இவர்களுக்கு இடையே சூரியன் நிற்க மத்திமம். இவர்களுக்கு முன்னே சனி, செவ்வாய் நிற்க பஞ்சம் என்று குறிப்பிடுகிறது.

“ மனுவோர் அரிதேள் கயல்தனுவில் மந்தன் செவ்வாய் வக்கரிக்கில்
வினையே பெருகும் வேந்தர்க்கு வௌ்ளிக் கேழில் பொன்மேவில்
துனியாம் சுங்கன் படிநடத்தல் புகர்மால் கிடையே கதிர்நிற்கில்
சனிசேர் கதிக்கு முன்சனிசேய் நடத்தல் பஞ்சம் நாடெல்லாம்” (சூரிய உதயம், செ.எ.264)

எனும் செய்யுள் மெய்ப்பிக்கின்றது.

பரிவேடல் சனியைப் பரிவேடமிடல், சூரியனுக்குச் சமீபமாகப் பரிவேடம் தோன்றல், பரிவேட நிறங்களின் தன்மைகள் சனியைப் பரிவேடமிடல், சனியைப் பரிவேடங் கவிக்கில் வேந்தர் தமது நாட்டை விட்டு விலகி நிற்பார். சூரியனுக்குச் சமீபமாகப் பரிவேடம் தோன்றினால் மனிதர்கள் துன்புறுவார்கள்.

“ஆகா மந்தன் றனைக்கவிக்கி லரசர் பதியை விட்டிடுவர்
வாகாமிரவிக் கடுத்திருக்கில் மாந்தர்க் கதிகவிபத் துண்டாம்
பாகாம் புகையைப் போலிருக்கிற் பலவாம் பொருளுஞ் சேதமுறும்
போகாக் கறுப்பு வருணமெனிற் புவியிற் பஞ்ச முற்றிடுமே” (மழை, செ.எண்.30, ப.11.)

என்ற செய்யுள் குறிப்பிடுகின்றது.


புரட்டாசி ஆண்டு

வியாழன் மீனராசியில் இருக்கும் காலத்தின் போது புரட்டாசி என்னும் ஆண்டு. அவ்வாண்டில் மிகுதியான மழை பெய்யாமல் தானியங்கள் ஒன்றும் விளையாது. குதிரை, யானை, மாடு, கன்றுகள் முதலிய நாற்கால் சீவன்களும், மனிதர்களும் அவ்வருடத்தில் ஏற்படும் கொடிய பஞ்சத்தினால் பசிப்பிணியை மாற்றிக் கொள்ளும் வழியின்றி துன்பப்படும் படியான நிலைமை உண்டாகும்.

“சேலதிற் குருவும் நிற்கத் தெரிவையாண்ட வ்வாண்டத்திற்
சாலவுந் தாரை யின்றித் தானிய விளைவு குன்றிச்
சீலமாங் குதிரை யானை செப்பிடுங் கன்று காலி
காலத்தின் கொடுமை தன்னாற் கடும்ப மிகவுண் டாமே” (மழை, செ.எ.181, ப. 64.)

என்ற செய்யுள் குறிப்பிடுகின்றது.

மாறிச் செல்லும் கோள்கள்

சூரியனுக்குப் புதனானவன், முன் போகிற காலத்தில் பின்னும், பின் போகிற காலத்தில் முன்னும், சேர்ந்து போகிற காலத்தில் பிரிந்தும், ஏட்டிக்குப் போட்டியாகச் செல்வான் ஆனாலும், இவ்விதம் மாறுபட்டு செல்லும் காலத்தில் சூரியனுடன் சுக்கிரன் கூடுவானாகில் அதுவே கொடிய பஞ்சத்தைக் காட்டும் கருவியாகும்.

“படியின் மேதை குடமாதி பகர்நா லிரவி தனக்குமுன்
நெடிய தண்டு முதல்நான்கும் நெருங்கிச் சண்டன் பின்செல்வன்
கடியதுாக்கு முதல்நான்குங் கதிரைச் சேர்ந்து நடந்திடுவன்
கொடிதா மாறிற் கதிர்புகருந் கூடிற் பஞ்சக் குறியாமே” (மழை, செ.எ.186, ப.65.)

என்ற பாடல் குறிப்பிடுகின்றது.

சூரியனுக்கு முன் சில கோள்கள் செல்லல்

சூரியனுக்கு முன்னும், பின்னும் சுக்கிரன் மற்றும் புதன் சென்றாலும், சூரியனுக்கு முன்பு சனி மற்றும் செவ்வாய் சென்றாலும், மழை பெய்யாமல், பயிர்கள் ஒன்றும் விளையாமல், உண்ணும் உணவுக்கும் குடிக்கும் தண்ணீருக்கும் துன்பப்படுவார்கள்.

“கதிரவன் றனக்கு முன்பின் கவிபுதன் றானுஞ் செல்லத்
ததியினி லிரவி முன்னஞ் சனிசெவ்வாய் நடப்பா ராகில்
மதித்திடு முதக மின்றி மாபயிர் விளைவு குன்றி
கதித்திடு மாந்தர் பஞ்சக் கலக்கமுற் றிடுவ ரென்னே” (மழை, செ.எ.193, ப.68.)

என்ற பாடல் குறிப்பிடுகின்றது.


சனிக்கு 3-11-ல் குரு, சுக்கிரன் நிற்றல்

சனிக்கு மூன்று அல்லது பதினோறாமிடத்தில் குருவும், சுக்கிரனும் இருப்பார்கள். அப்படியிருந்தால் அரசர்களுக்கும், மக்களுக்கும், ஆடு, மாடுகளுக்கும் (பீடை) துன்பமும், உணவுப் பொருள் பற்றாக்குறையிலான துன்பமும் உண்டாகும்.

“நோய்முகன் றனக்கு மூன்று நுவலும்பன் னொன்றிற் றானும்
வாய்மைசேர் குருவுஞ் சுங்கன் வந்திட வரச ருக்கும்
தூய்மையா மாந்த ருக்குந் துன்பமாங் காலி கட்குந்
தோய்ந்திடும் பீடை யன்றிச் சொல்லிடும் பஞ்ச மென்றே” (மழை, செ.எ.194, ப.68.)

என்ற பாடல் குறிப்பிடுகின்றது.




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/general/p154.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License