வெற்றிலையை சுபகாரியங்களுக்கும், நாம் உணவிற்குபின் போட்டு்க் கொள்வதற்கும், மருந்துகளுக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்த வெற்றிலையை நமது ராசிகளுக்கேற்பப் பயன்படுத்தி நம் துன்பங்களிலிருந்து விடுபடலாம் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை;
மேஷம்
வெற்றிலையில் மாம்பழம் வைத்து, செவ்வாய் கிழமைகளில் முருகனை வழிபட்டு, வெற்றிலை மற்றும் மாம்பழத்தைச் சாப்பிடத் துன்பங்கள் நீங்கும்.
ரிஷபம்
வெற்றிலையில் மிளகு வைத்து, செவ்வாய் கிழமை ராகுவை வழிபட்டு, வெற்றிலை மற்றும் மிளகைச் சாப்பிட்டால் துன்பங்கள் நீங்கும்.
மிதுனம்
வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து, புதன்கிழமை விருப்பமான தெய்வத்தை வழிபட்டு, வெற்றிலை மற்றும் வாழைப்பழத்தைச் சாப்பிட்டால் துன்பங்கள் நீங்கும்.
கடகம்
வெற்றிலையில் மாதுளை வைத்து, வெள்ளிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு, வெற்றிலை மற்றும் மாதுளையினைச் சாப்பிட்டால் துன்பங்கள் நீங்கும்.
சிம்மம்
வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து, வியாழக்கிழமை விருப்பமான தெய்வத்தை வழிபட்டு, வெற்றிலை மற்றும் வாழைப்பழத்தைச் சாப்பிட்டால் துன்பங்கள் நீங்கும்.
கன்னி
வெற்றிலையில் மிளகு வைத்து, வியாழக்கிழமை விருப்பமான தெய்வத்தை வழிபட்டு, வெற்றிலை மற்றும் மிளகைச் சாப்பிட்டால் துன்பங்கள் நீங்கும்.
துலாம்
வெற்றிலையில் கிராம்பு வைத்து, வெள்ளிக்கிழமை விருப்பமான தெய்வத்தை வழிபட்டு, வெற்றிலை மற்றும் கிராம்புவைச் சாப்பிட்டால் துன்பங்கள் நீங்கும்.
விருச்சிகம்
வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து, செவ்வாய்க் கிழமை விருப்பமான தெய்வத்தை வழிபட்டு, வெற்றிலை மற்றும் பேரிச்சம் பழத்தைச் சாப்பிட்டால் துன்பங்கள் நீங்கும்.
தனுசு
வெற்றிலையில் கற்கண்டு வைத்து, வியாழக்கிழமை விருப்பமான தெய்வத்தை வழிபட்டு, வெற்றிலை மற்றும் கற்கண்டைச் சாப்பிட்டால் துன்பங்கள் நீங்கும்.
மகரம்
வெற்றிலையில் வெல்லம் வைத்து, சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு, வெற்றிலை மற்றும் வெல்லம் சாப்பிட்டால் துன்பங்கள் நீங்கும்.
கும்பம்
வெற்றிலையில் நெய் வைத்து, சனிகிழமை காளி தெய்வத்தை வழிபட்டு, வெற்றிலை மற்றும் நெய் சாப்பிட்டால் துன்பங்கள் நீங்கும்.
மீனம்
வெற்றிலையில் சர்க்கரை வைத்து, ஞாயிற்றுக்கிழமை விருப்பமான தெய்வத்தை வழிபட்டு, வெற்றிலை மற்றும் சர்க்கரை சாப்பிட்டால் துன்பங்கள் நீங்கும்.