புஷ்கரம் என்ற சொல்லுக்கு தீர்த்தமாடுதல் என்று பொருள். புஷ்கரணி என்றால் தீர்த்த கட்டம். அதாவது, அது குளியலுக்கான சாதாரணப் படித்துறை அல்ல. அதை விடப் புனிதமான ஆன்மிகத் தீர்த்தமாடும் தலமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் ராசியின் அடிப்படையிலும், நதிகளின் அடிப்படையிலும் புஷ்கரங்கள் 12 இடங்களில் கொண்டாடப்படுகின்றன.
1. மேஷம்
கங்கை நதியில், கங்கா புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, காசி, ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் கொண்டாடப்படும் ‘கங்கா புஷ்கரம்’ சிறப்புடையது.
2. ரிஷபம்
நர்மதை நதியில், நர்மதா புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, மத்தியப் பிரதேசம் மாநிலம், நர்மதா நதிக்கரையில் ஓங்காரேஸ்வரர் தலம் கொண்டாடப்படும் ‘நர்மதா புஷ்கரம்’ சிறப்புடையது.
3. மிதுனம்
சரஸ்வதி நதியில், சரஸ்வதி புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, குருசேத்திரம், கேசவ பிரயாகை, சோம்நாதபுரம் (குஜராத்), திரிவேணி சங்கமம் (அலகாபாத்), காலேஸ்வரம் (ஆந்திரப்பிரதேசம்), பேடாகட் (மத்தியப் பிரதேசம்) ஆகிய இடங்களில் கொண்டாடப்படும் ‘சரஸ்வதி புஷ்கரம்’ சிறப்புடையது.
4. கடகம்
யமுனை நதியில், யமுனா புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, யமுனோத்ரி, ஹரித்வார், விருந்தாவன், மதுரா, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களில் கொண்டாடப்படும் ‘யமுனா புஷ்கரம்’ சிறப்புடையது.
5. சிம்மம்
கோதாவரி நதியில், கோதாவரி புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, திரியம்பகம் (நாசிக் மாவட்டம்), கோதாவரி நதி தீர்த்தக்கரை (ஆந்திரப்பிரதேசம்) ஆகிய இடங்களில் கொண்டாடப்படும் ‘கோதாவரி புஷ்கரம்’ சிறப்புடையது.
6. கன்னி
கிருஷ்ணா நதியில், கிருஷ்ணா புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, பஞ்ச கங்கா நதி (துளசி, காசரி, போகவதி, கும்பி, சாவித்ரி ஆகிய ஐந்து நதிகள் சேர்ந்து), பிரயாக் சங்கமம் (கிருஷ்ணா நதியோடு சேருமிடம்), விஜயவாடா (ஆந்திரப்பிரதேசம்) ஆகிய இடங்களில் கொண்டாடப்படும் ‘கிருஷ்ணா புஷ்கரம்’ சிறப்புடையது.
7. துலாம்
காவிரி நதியில், காவிரி புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, ஒக்கனேக்கல், மேட்டூர், ஈரோடு, பவானி, பள்ளிபாளையம், கொடுமுடி, நெரூர், வேலூர் (நாமக்கல்), திருச்சி, ஸ்ரீரங்கம், திருவையாறு, சுவாமிமலை, கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால், பூம்புகார் (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் கொண்டாடப்படும் ‘காவிரி புஷ்கரம்’ சிறப்புடையது.
8. விருச்சிகம்
தாமிரபரணி நதியில், பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, பீமாசங்கரம் (ஜோதிர்லிங்கத்தலம்), பண்டரிபுரம், பாண தீர்த்தம் (தாமிரபரணி நதிக்கரை), பாபநாசம், திருவிடைமருதூர், சிந்துபூந்துறை ஆகிய இடங்களில் கொண்டாடப்படும் ‘தாமிரபரணி புஷ்கரம்’ சிறப்புடையது.
9. தனுசு
பிரம்மபுத்ரா நதியில், பிரம்மபுத்ரா புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, பிரம்மபுத்ரா நதிக்கரை (அஸ்ஸாம்) எனும் இடத்தில் கொண்டாடப்படும் ‘பிரம்மபுத்ரா புஷ்கரம்’ சிறப்புடையது.
10. மகரம்
துங்கபத்ரா நதியில், துங்கபத்ரா புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, சிருங்கேரி, மந்த்ராலயம் ஆகிய இடங்களில் கொண்டாடப்படும் ‘துங்கபத்ரா புஷ்கரம்’ சிறப்புடையது.
11. கும்பம்
சிந்து நதியில், சிந்து புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, சிந்து நதி பாயும் ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப் ஆகிய இடங்களில் கொண்டாடப்படும் ‘சிந்து புஷ்கரம்’ சிறப்புடையது.
12. மீனம்
கோதாவரியின் துணை நதியான பிராணஹிதா நதியில், பிராணஹிதா புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, காலேஸ்வரம் (அடிலாபாத், தெலுங்கானா) எனும் இடத்தில் கொண்டாடப்படும் ‘பிராணஹிதா புஷ்கரம்’ சிறப்புடையது.