இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

கொடி அல்லது மாலை சுற்றிப் பிறத்தல்

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை


ஜென்மம் (அ) பிறவி (அ) பிறப்பு

சாதக அலங்காரம் எனும் நூல் 2வது பாவகப் படலம், “எண் ஜாண் உடம்பிற்குச் சிரசே பிரதானமாவது” போல, பன்னிரண்டு பாவகங்களுக்கும் இலக்கின பாவகமே பிரதானமாகையாலும், இந்த இலக்கின பாவகத்தைக் கொண்டே மற்றைய பாவாதிபதிகள் இருக்கும் இடம் - சம்பந்தம் - நோக்க முதலியவற்றால் பலாபலன்களை வரையறுத்து நிச்சயித்தல் நியதியாகையாலும் “சீர் பெறும் ஜென்ம லக்கினம்” எனச் சிறப்பித்தார் ஆசிரியர். (நடராசர், சாதக அலங்காரம், ப.36.)

குழந்தை பிறக்கின்ற போது கொடி அல்லது மாலை போன்ற அமைப்பில் தாயின் தொப்புள் கொடி ஆனது சுற்றி இருக்கும். இந்த அமைப்பே கொடி அல்லது மாலை சுற்றிப் பிறத்தல் என்று வழங்கப் பெறுகின்றது.

ஜாதக கணித விளக்கம் என்னும், பெரிய ஜோதிட சில்லரைக் கோவையில் ஜம்பு மகரிஷியின் கொடி சுற்றல் சோதிடச் செய்தியினைக் கந்தசாமி பிள்ளையாசிரியர் இங்கு குறிப்பிடுகின்றார். இலக்கினத்தில் இராகுவும், லக்கினாதிபதியும் கூடியிருந்தால் தாய் ஜனன காலத்தில் முக்கிப் பெறுவாள், எட்டாமிடத்திற்குடையவனும் லக்கினத்திலிருந்தால் கொடி சுற்றிப் பிறப்பான் என்றும் ஜம்பு மகரிரிஷி வாக்கியம் எனும் நூல் தெரிவிக்கின்றது. (கந்தசாமிப்பிள்ளை, பெரிய ஜோதிடச் சில்லரைக் கோவை, ப.9.)

சாதக அலங்காரம் எனும் நூல் ஜனன சந்திர லக்கினத்திற்கு மத்தியில் சனியிருந்தாலும், பார்த்தாலும் தலை நரைத்த கறுத்த தேக காந்தி உடைய விருத்தப் பெண்ணும், செவ்வாய் இருந்தாலும், பார்த்தாலும் சிவப்பு நிறமான தேககாந்தியை உடைய இளமை வயதுடைய விதவைப் பெண்ணும், சூரியன் - சந்திரன் - குரு இவர்களில் ஒருவர் இருந்தாலும், பார்த்தாலும் விருத்தை வயதும், சுக்கிரன் இளமை வயதும், புதன் நடுவயதும் உடைய சுமங்கலைப் பெண்களும், இராகு கேதுக்கள் இருந்தாலும், பார்த்தாலும் ஆசாரமற்று அனாசாரம் மிகுந்த பெண்ணும் பிரசவப் பெண்ணுடன் இருப்பார்கள். இராகு கேதுக்கள் இருந்தால் குழந்தை கொடி அல்லது மாலை சுற்றிப் பிறக்கும்.



கொடி சுற்றல்

1. சந்திரன் செவ்வாய் திரிகோணத்திலிருக்க, இலக்கினத்திற்கு 2 - 11 ஆமிடங்களில் சுபர்கள் இருந்தால் சர்ப்பம் ஜனனமாகும்.

2. இலக்கினம் செவ்வாய் திரிகோணத்திலிருக்க, அந்த இலக்கினத்திற்கு 2 - 11 ல் சுபக்கிரகங்கள் இருந்தால் சர்ப்பத்தினால் - பாம்பினால் சுற்றப்பட்ட சிசு பிறக்கும்.

மேஷம் 1-வது, கடகம் 2-வது, சிங்கம் 3-வது, விருச்சிகம் 1-வது, தனுசு 2-வது, மீனம் 3-வது திரேகாணங்கள் செவ்வாய் திரிகோணங்களாகும். கொடி மாலை என்பது நாளவேஷ்டனம் என்பதாகும்.

“தானருகே இருந்தமட வார்பருவங் கூறில்
சனிஇருந்து கண்டக்கால் தலைநரைத்த கறுப்பி
ஈனம்இலாக் குஜன்இருந்து காணின் இளம்வயதே
இசையும்நிறம் சிவப்புஆக இருப்பள் சுமங்கலை ஆம்
ஆனகதிர் குருமதியம் விருத்தைபுகர் இளமை
அருணன்நடுப் பருவமுடைச் சுமங்கலைகள் ஆவர்
மானிலமேல் பாம்பு இருந்தால் அனாசார மடந்தை
மகவுநூ லேதரித்து வந்திடுங் கண்டீரே”

என்றும் தெரிவிக்கின்றது. (நடராசர், சாதக அலங்காரம், ஜனன காலப்படலம், செ.63, ப.173.)

வசிஷ்டசம்மிதை தரும் செய்தி

மேலும் இந்நூல் வியதீபாத யோகத்தில் சிசு ஜனனமானால் அங்கஹீனமும், பரிகயோகத்தில் மிருத்தியுவும், வைதிருதி யோகத்தில் பிதுருஹானியும், நஷ்டசந்திரனில் அந்த கத்வமும், மூலத்தில் வம்சநாசமும், திருதியோகத்தில் குலநாசமும், இரண்டு சந்தி காலங்களில் அங்க விகாரமும், அல்லது அங்கஹீனமும், பருவங்களில் ஜனனமானால் சகல ஹானியும், பயமும் உண்டாம். இந்தப்படி பல்லுடன் பிறந்தாலும், கால் முன்னாகப் பிறந்தாலும், அசுபத்தையுண்டாக்கும், மற்றும் விபரீத ஜனனமானாலும், குறைந்த அங்கம், அதிக அங்கம், விகார ஜனனம் கொடி சுற்றிப் பிறந்தாலும் (இராச்சியத்திற்கும்) அரசாங்கத்திற்கும், (இராஜனுக்கும்) அரசனுக்கும், குடும்பத்திற்கும் ஆகாது. ஆதலால் அவசியம் சாந்தி செய்து கொள்க என்று குறிப்பிடுகின்றது. (நடராசர், சாதக அலங்காரம், ப.212.)



கொடி சுற்றிப் பிறத்தல் - இலக்கின பாவகம்

இக்கருத்து சாதகலங்காரத்தில், வசிஷ்டசம்மிதையில் மேற்கோள் பாடலில் வடமொழிக் குறிப்புள்ளதால் அறியலாம். வடநூலார் நாளவேஷ்டணம் என்று கூறுவர். இச்செய்தியை இந்நூலில், பெண்கள் பிரசவிக்கும் போது சில சமயங்களில் பிறந்த குழந்தைகள் உடம்பில் கொடி போலவும், மாலை போலவும் சுற்றிக் கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் பிறப்பது கொடி சுற்றிப் பிறத்தல் என்றும், மாலை சுற்றிப் பிறத்தல் என்றும் கூறப்படுகின்றது. அதைக் கண்டவுடன் நம் தேசத்து மக்கள் திடுக்கிட்டு மனங்கலங்கி உடனே சோதிடர்களிடம் விசாரித்தறிவது தொன்று தொட்டு வரும் வழக்கமாக இருக்கின்றது. அநேகமாய் இது அனுபவ சித்தமாயும் இருக்கின்றது. சோதிட சாஸ்திரத்தில் அதன் காரணம் கெட்ட கிரகங்கள் லக்கினத்தைப் பார்ப்பதனாலும் வேறு சில காரணங்களாலும் உண்டாகின்றது என்று கூறப்பட்டிருக்கின்றது.

ஜாதக சிந்தாமணி நூலுடைய ஆசிரியர் தில்லை நாயகனாரவர்கள் கூறிய செய்தி

இலக்கினத்தில் ராகு குளிகன் இருந்து, லக்கினாதிபனும், எட்டாம் வீட்டிற்கதிபனும் கூடி, குரூரமான திரேக்காணத்தில் இருந்தால் கொடி சுற்றிக் கொண்டு பிறக்கும் என்பதாம்.

“குறித்த லக்கினத்தில் ராகுகுளிகனுங் கூடிநிற்க
எறித்தலக் கினத்தோன் எட்டாமிடத் துடையவனுங்கூடிச்
செறிப்புறு குரூரராசித் திரேக்காணந் தன்னில்நிற்க
புறப்படுங் கொடியேசுற்றிப் பிறந்திடுமென்று சொல்வார்”

“மேஷம் குரூரம் சிங்கம் குரூரம் தனுசு குரூரம்
ரிஷபம் சௌமியம் கன்னி சௌமியம் மகரம் சௌமியம்
மிதுனம் குரூரம் துலாம் குரூரம் கும்பம் குரூரம்
கடகம் சௌமியம் விருச்சிகம் சௌமியம் மீனம் சௌமியம்”

“அனைய சர்ப்பத் திரேகாணம் ஆனலக்கினத் திரேகாணம்
புனையிலக் னேசன்றானே பொருந்திய திரேகாணந்தான்
தனையிலக் கினமதாக தகும் நல்லோர் பாராராயின்
வனையுறு கொடியேசுற்றி மன்னின்மேற் பிறக்கு மென்னே” (நடராசர், சாதக அலங்காரம், ப.494.)



இலக்கினம் சர்ப்பத்திரேகாணமாக லக்கினாதிபன் இருக்கும் திரேகாணமும் அப்படியேயாக, நல்லோர் (சுபர்கள்) பார்வையில்லாது இருந்தால் கொடி சுற்றிக் கொண்டு பிறக்கும் என்பதாம்.

“சிந்தைகூ றிடபமேடஞ் சிங்கமே யுதயமாகப்
புந்தியுஞ் சனியுங்கூடப் பொருந்திடு மகவேதோன்றில்
கொந்தவிழ் உடலிற்பின்னிக் கொடிசுற்றிப் பிறக்குமென்பர்
அந்தர மின்னைப்போலும் அழகிய இடையினாளே”

இடபம் - மேடம் - சிங்கம் - லக்கினமாகி, புதனுஞ், சனியுங் கூடி அதிலிருக்க குழந்தை கொடி சுற்றிக் கொண்டு பிறக்கும் என்பதாம்.

“விரவுலக் கினத்திற்பாவர் மேவிடக் கொடியோர் பார்க்கக்
கரியராகு கேதுகூடிக் கடியகோள் வீடுதானே
பரவிலக் கினமதாகிற் பண்புறு தேகமீதில்
தரணியின் மாலையிட்டுத் தான்கொடி சுற்றுந்தானே”

இலக்கினத்தில் பாபக்கிரகங்கள் இருக்க, பாவர்கள் பார்க்க அல்லது ராகு கேதுக்களில் ஒருவர் லக்கினத்திலிருக்க பாபக்கிரகங்களுடைய வீடு லக்கினமாகில் தேகத்தில் மாலை சுற்றிக் கொண்டு பிறக்கும் என்பதாம்.

“நடக்கும்லக் கினந்தீக்கோட்கு நடுவாகப் பாம்புநிற்கத்
தொடுத்தலக் கினத்தைச் செவ்வாய் சூரியன் பார்க்கிற்றானும்
வடுத்தவிர் உதயந்தன்னை மந்தன்சேய் பார்க்குமேனும்
தடுத்திடாக் கொடியேசுற்றித் தரணியிற் பிறப்பன் மாதே”

இலக்கினம் பாவர் மத்தியமாய் அதில் பாம்பிருக்க (ராகு கேது) லக்கினத்தை அங்காரகன் சூரியன் பார்த்தாலும், அல்லது சனி செவ்வாய் பார்த்தாலும் கொடி சுற்றிக் கொண்டு பிறக்கும்.

இப்படிக் கிரகங்கள் நின்றால் கொடியோ, மாலையோ சுற்றிப் பிறக்கும்.


சோதிடப் பரிகாரம்

கொடி சுற்றிப் பிறந்தால் அல்லது மாலை சுற்றிப் பிறந்தால் அதற்குச் செய்ய வேண்டிய பரிகார முறைகள்

1. கொடிசுற்றல் பரிகாரமுறை

சோதிட விதிகள் இவ்வாறு ஏற்படின் - கிரக விதிப்படி நின்றால் கொடியோ மாலையோ சுற்றிப் பிறக்கும். “கொடி சுற்றிப் பிறந்தால் கோத்திரத்திற்கு ஆகாது; மாலை சுற்றிப் பிறந்தால் மாமனுக்கு ஆகாது” என்று உலகோர் வழங்கி வருகின்றனர். சிலர் கொடி சுற்றிப் பிறக்குமாயின் சிசுவின் சரீரத்தில் - தேகத்தில் எப்படிச் சுற்றிக் கொண்டிருந்ததோ அப்படியே வெள்ளியில் ஓர் கம்பி செய்து போட்டுத் திரை ஒன்று கட்டி அதன் ஒரு புறம் தாயினிடம் சிசுவைக் கொடுத்து நிற்கச் செய்து இரும்புப் பாத்திரத்தின் நிரம்ப எண்ணெய் பூரித்து அதில் தோன்றும் சிசுவின் உருவைத் திரையின் மற்றொரு புறம் நிற்கும் தோடமுடையவர்களைப் பார்க்கச் செய்து பின்பு அந்த வெள்ளிக் கம்பியையும், எண்ணெய்ப் பாத்திரத்தையும் சத்புருஷர்களுக்குத் தானஞ் செய்து வருகின்றனர்.

2. மாலை சுற்றல் பரிகாரமுறை

இரண்டாவது முறையாகச் சிலர் மாலை சுற்றி வந்தால் உடனே தாய்மாமன் கையில் ஓர் கத்தியைக் கொடுத்து படர்ந்துள்ள ஓர் கொடியின் அடி வேரினை அறுத்து விடும்படி செய்கின்றனர் என்றும் உள்ளதால் அறியலாம். மேலும் பிரசவக் காலத்தில் குழந்தையின் தேகத்தில் மூன்று தரம் கொடியானது சுற்றி இருந்தால், அக்குழந்தைக்கும், இரண்டு தரம் சுற்றியிருந்தால் தாய்க்கும், ஒரு தரம் சுற்றியிருந்தால் தாய்மாமனுக்கும், பக்கங்களில் சுற்றியிருந்தால் தகப்பனுக்கும், வலக்கையில் சுற்றியிருந்தால் சகோதரர்கட்கும், இடக்கையில் சுற்றியிருந்தால் குழந்தைக்கும் தோஷம் உண்டாகும் என்று ‘சாந்திரத்னாகரம்’ எனும் நூல் குறிப்பிடுகின்றதை சாதகலங்காரம் தெரிவிப்பதால் அறியலாம். (மேலது, செய்யுள் 448, பக்கம் 495 - 496)

மேடம் - ரிடபம் - சிங்கம் இவை ஜெனன ராசியாகயிருந்து அந்த லக்கினத்தில் சனி - குஜன் இருவரும் கூடி நோக்கினாலும் அந்த குழவி இரண்டு கொடிகள் சுற்றிப் பிறப்பான். குஜன் மாத்திரம் பார்த்தால் செம்மை நிறமான கொடியொன்று சுற்றிப் பிறப்பான். சனி மாத்திரம் பார்த்தால் கருமை நிறமுள்ள கொடி சுற்றிப் பிறப்பான்.

விளக்கவுரையில் மேலே சொன்ன சனி - குஜன் பார்த்தால் கொடி சுற்றிப் பிறப்பான் என்பதை மற்ற கிரகங்களுக்குச் சொல்ல வேண்டுமாயின் லக்கினத்தில் இராகுவும், குளிகனும் நின்றும் அஷ்டமத்ததிபதி திரிகோண ராசியிலிருந்தாலும், மேற்படி கொடி சுற்றியேப் பிறப்பான்.

மேடம் - ரிடபம் - சிங்கம் இவை ஜெனை லக்கினமாக சனியும் புதனும் கூடினாலும் கொடி சுற்றியே பிறப்பான். ஜெனை லக்கினத்தில் ராகு நின்று 10-ல் குரு நின்றால் கால் முன்னாகப் பிறப்பான்.

“கண்ணாரிடபந் தகர்சிங்கங் கண்டசன்ம லக்கினமாய்ப்
பண்ணார் சனிசெவ்வாய் கூடிப்பார்க்கிற் கொடி ரண்டுளதாகும்
தண்ணார் செவ்வாய்கண் பார்வைதான் செங்கொடியொன்றே சுற்றும்
எண்ணார்சவுரி பார்வைக்கே யிருக்குங் கரியகொடி யொன்றே” (மேலது, செ.எ.449, ப.496.)

கொடுமையான இராகு, கேதுவோடு சூரியன் கூடியிருக்கப் பிறந்தவன் மேற்சொன்ன கொடி தலையில் சுற்றிப் பிறப்பவனாவான்.

“கொடியபாம்பி னுடனிரவி கூடியிருக்கிற் கொடி தலையாம்.” என்கின்றது. (மேலது, செ.எ.450, ப.496.)


இரண்டாம் பாவகம் - நேத்திர பலன்

நேத்திர ஸ்தானாதிபதி சுக்கிரனாக இருந்து அவர் 8ல் நிற்க ரோகஸ்தானத்தில் சூரியனிருக்க அந்த ஜாதகனுக்கு தன் அந்திய வயதில் நேத்திர ரோகங் காட்டும். சனி அங்காரகன் இவர்கள் சிங்கம் - ரிஷபம் - மேஷம் இவ்விடங்களில் நின்றால் மேன்மையான கொடுமை விளைவிக்கக் கூடிய கொடி சுற்றிப் பிறப்பான்.

“சுக்கிரநேத்திராதி பதியெனத் தோன்றியெட்டில்
நிற்கவோ ராறில்வெய்யோ னிற்கிற்கண்ணோய்பிற்காலம்
துக்கவேறரி மேஷத்திற் சனிகுசன்றானுற்றாலும்
மிக்கதாமதரத்தூன மெழிற் கொடி சுற்றித் தோன்றும்”

என்று சான்று பகர்கின்றது சாதக அலங்காரம் நூல். (நடராசர், சாதக அலங்காரம், செ.எண். 463, ப.501.)

“மாலை சுற்றிப் பிறந்த பிள்ளை மாமனுக்கு ஆகாது” என்று பழமொழியும் வழக்கினில் உள்ளது. எனவே உரிய பரிகார முறையின்படி பயன்பெறுவோம்!

*****




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/general/p42.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License