இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

தேங்காய் சாஸ்திரப் பலன்கள்

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை


இறை வழிபாட்டுக்கான படையலில் தேங்காய் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. தேங்காய் உடைக்கும் விதம், உடைந்த விதம் போன்றவைகளுக்கான பலன்கள் குறித்து ஸ்ரீகாமியம், பெரிய சோதிட சில்லரைக்கோவை, சிற்ப நூல் சிற்ப சாஸ்திர களஞ்சியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி ஆகியவை குறிப்பிடுகின்றன.

தேங்காய் உடையும் பலன்

தேங்காய் இது தேவர்க்கு நிவேதிக்கும் நைவேத்தியம், படையல் பொருள்களுள் விசேஷமான ஒன்றாகும். தேங்காயை ராசிகளினின்று சுத்தமானதாகப் பார்த்து அதில் பால்யம், விருத்தம் என்கிற மிக இளசும், அதிமுற்றலும் நீக்கி யௌவனம் என்கிற நடுத்திறமானதைக் கொள்ள வேண்டும். கொள்ளுமிடத்துத் (துர்க்கந்தமானதும்) தீயமணம், கோணலுள்ளதும், அதி நீளமானதையும், பின்னமானதையும், அதி சூட்சுமமமானதையும், குடுமியில்லாததையும், அழுகினதையும், நீர் வற்றினதையும், மற்றுமுள்ள குற்றம் உள்ளவைகளையும் நீக்கிவிட வேண்டும்.

தேங்காயைக் கனிஷ்டாங்குலம் உள்ள சிகை உள்ளதாய்க் கொண்டு அதன் சிகையுடன் முகத்தின் பாகமாய்த் தேங்காயைப் பிடித்துக் கொண்டு அருகிலிருக்கிற கல்லின் மேல் காயைச் சாணளவு உயரத் தூக்கி மந்திரஞ் (செபித்து) சொல்லி ஒரே அடியில் இரண்டு பாகமாகும்படி உடைக்க வேண்டும். அப்படி உடைப்பின் அக்காரியம் சுபத்தைத் தருவதும், தன தான்ய விருத்தியும் தருவதாம். முகத்தின் பாகத்தின் முக்கால் பங்கும், அடிப்பாகத்தில் காற்பங்குமாகவும் அல்லது அடிப்புறம் முக்கால் பாகமாகவும், மேற்புறம் கால் பாகமாகவும், உடையின் (புருஷர் ஸ்திரீகளாகிய) ஆண் பெண் ஆகிய இருவருக்கும் அந்யோன்ய கலகம் விளையும். தேங்காய் பொடிப் பொடியாய் உடையின் தாம் கொண்ட கார்யம் நாசமாம். கண்ணின் புறமாக உடையின் (எஜமானன்) முதலாளி கெடுபில் உடையின் ஆசாரியன் கெடுவன். தென் புறமாயுள்ள கண்ணின் நரம்பில் உடையின் கிராமமும், தன்னிருக்கையும் கெடும். வட புறத்தின் கண்ணை அடுத்த நரம்பில் உடையின் தன்னூரையாலும் அரசன் வேறாவன். தேங்காயின் முகம் உடைந்தால் (க்‌ஷோபம்) நன்மை உண்டாம். நீண்டு இடையின் பயமுண்டாம். தேங்காய் உடைக்கத் தொடங்குகையில் கை விட்டு நழுவி அப்பால் வீழின் கர்ப்பத்திலுள்ள கருச்சிதையும், பல சுக்கல்களாய் உடையின் கிராமவாசிகள் பசியால் வருந்துவர். தேங்காய் உடைகையில் உள்ளிடத்தில் நீரில்லாதிருப்பின் மழை நீங்கும். குடுமியில்லாதிருக்கின் தனக்ஷயம். தேங்காயிலுள்ள நீர் துர்க்கந்தமாயிருக்கின் தீயமணம் இராஜ்யச் செல்வமாயினும் கெடும். தேங்காய் அழுகி நாறு மேல் மகாமாரியால் வருத்தமுண்டாம்.

இவ்வகை நேருமேல் அவ்வகைத் தேங்காயை நீக்கி வேறொரு யௌவனமாகிய தேங்காயை மூன்று கண்ணுள்ளதாய் இரண்டு பாகம் மூல பாகத்திலும், ஒரு பாகம் முதற் பக்கத்திலும், முக பாகத்தில் மூன்று பாகமும், பின் புறத்தில் இரண்டு பாகமும் அல்லது இரண்டு பாகமும் சமமாகவேனும் உடைக்கின் சர்வ சித்திகளும் உண்டாம் என்று ஸ்ரீகாமியம் குறிப்பிடுகின்றது.

பெரிய சோதிடச் சில்லரைக் கோவையினுள், தேங்காய் உடைக்கும் விதம் பற்றியும், உடைந்த விதம் பற்றியும் கணேசர் துதி முதலான மூன்று பாடல்கள் எண்சீரடி விருத்த யாப்பில் பொருளுடன் இடம் பெற்றுள்ளன. இப்பகுதியில் ஆசிரியர் பெயர் குறிப்பிடப்பெறவில்லை. முதல் பாடல் ஆதிகசான மூர்த்தியை வணங்கி இவ்வாரூடத்தை அனைவருக்கும் உணர்த்த இறைவனை வேண்டும் பாடலாய் அமைந்துள்ளது. இப்பகுதியில் தேங்காயை எப்படி இறைவனுக்கு வணங்கி வேண்டி உடைக்க வேண்டும் என்பது பற்றியும், பலன்கள் பற்றியும் குறிப்பிடப்பெற்றுள்ளது. இச்சகுன பலனைக் கவனிப்பது மக்கள் கடமை என்றும் குறிப்பிடுகின்றது.


தேங்காய்க்குறி ஆரூட பலன்

ஆதி கஜான மூர்த்தியின் திருவருளால் தேங்காய்க்குறி ஆரூடம் எல்லோரும் ஏற்கும் வண்ணம் உண்மையைத் தெரிவிக்கும்படி வேண்டி எனும் வேண்டுதலோடு தொடங்குகின்றது. இந்நூலில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

“அம்பிகை பாலா கௌரி புத்ராஞான
ஆதிகஜானனமூர்த்தி அன்பர்மித்ரா”

எனும் பாடலால் இதனை அறியலாம். (பெரிய சோதிட சில்லரைக் கோவை, தேங்காய்க்குறி ஆரூடபலன், பா.எ.1, ப.187)

மனிதர்கள் தமது வேண்டுதல் நிறைவேறுந் தன்மையான நோன்பு முதலியன புரிந்து விருப்ப தெய்வத்தை வழிபாடு செய்து, சாம்பிராணிப் புகை காட்டிய பிறகு தேங்காயைத் தூய்மையாகக் கழுவிச் சாம்பிராணிப் புகையில் காட்டி தமது மனக்கோரிக்கை எவ்வகை ஆகுமோவென்று மனதில் நினைத்துக் கொண்டு விருப்ப தேவதைக்கு அர்ப்பணம் என்று தேங்காயை உடைத்தால், அது இரண்டு பிளவு சரியாய் உடைந்தால் தான் நினைத்த செயல் வெற்றியாகும். அந்தத் தேங்காய் அழுகியதாய் இருந்தால் தாம் நினைத்த செயல் குறைவாகும். சுக்கல், சுக்கலாயுடைந்தாலும் பலவித கட்டம் ஏற்படும். தேங்காயை உடைக்கும் போது கை நழுவிச் சிதறி விழுந்தாலும் பகைவரால் களங்கம் உண்டு. அச்சமயம் படையல் கலையாமுன்னம் வேறு நல்ல தேங்காய் ஒன்றை வாங்கி வந்து விருப்பத் தேவதையைப் பக்தியாய்ப் பூசித்து, வழிபாடு செய்து கொண்டு தான் நாடிய செயல் வெற்றியாகும்படியாய் அருள்புரிவீர் என்று தேங்காய் உடைத்துக் கற்பூர வழிபாடு செய்து பிரசாதம் உண்டு மனமகிழ வேண்டும். என்பதற்கு,

“அன்புடனேவிரதா னுஷ்டானஞ்செய்து
ஆண்டவனுக்காரா தனையும்செய்ய” (மேலது, பா.எ.2, ப.187)

“இன்னவிதம்மனித வகுப்பார்களெல்லாம்
இசைந்தஆரூடகுறி கவனித்தன்பாய்” (மேலது, பா.எ.3, ப.188)

எனும் இப்பாடல்களும் உரையும் கோவை நூல் தெரிவிப்பதால் அறியலாம்.


இச்சகுனம் பற்றி மயனாரின் சிற்ப நூல் பெரிய சிற்ப சாஸ்திர களஞ்சியம் என்பதில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. உரையுடன் காணப்பெறுகின்றன. முடிப்பெருத்து அடி சிறுத்தால் இலட்சுமி அமைப்புண்டு. மூன்று பங்கு தலைப்பகுதியிலும், ஒரு பங்கு அடிப்பகுதியிலும் அமைந்தால் குறைவற்ற வாழ்வுண்டாகும். நெடிய பங்கு ஐந்தில் இரண்டுமானால் செல்வமுண்டு. நரம்பு பிடித்தால் நிதான வாழ்வாம். கடுகுப்பிரமாணமாவது தேங்காய்த்துண்டு தேங்காயினுள் விழுந்தால் ஒன்பது வகை நவரத்தினங்களுஞ் சேரும். கைத்தவறித் தேங்காயைக் கீழே விட்டு விட்டால் சண்டை, சச்சரவு, துன்பம் உண்டாகும். என்பதனை,

“முடிபெருத்து வட்டமிடத் திருவே சேரும்
மூன்றிலொரு பங்குடைந்தால் முசியாவாழ்வு
நெடியபங்கி லைந்திரண்டு குறையாச் செல்வம்
நீங்குநரம் பேபிடித்தால் நிதான வாழ்வு
கடுகளவே வுள்ளானால் ரத்னஞ் சேரும்
கைதவறிக் கீழ்விழவே கனத்த பூசல்
அடியவருக் கருள்புரியும் வடிவேல் முன்னோன்
ஆனைமுகன் தேங்காயி னளவி தாமே” (சிற்பநூல் பெரிய சிற்ப சாஸ்திரக் களஞ்சியம், பா.எ.312, ப.131)

என்னும் பாடல் சான்று பகர்கின்றது.

நடுமத்தியாயுடைந்தால் நன்மை, நாலு சுக்கல், ஆறு சுக்கலாய் உடைந்தால் வெகு துன்பம், தேங்காய்க்கண் தெரித்தால் எசமானன் மரணமாவான். ஓடு விட்டால் புசிப்பதற்கு அன்னங் கிடைக்க மாட்டாது. ஓடு நெறித்தால் உடலிற் பிணி யுண்டாகும். கைதவறிப் பூமியிலே விழுந்தால் எசமானன் தலைவன் விலையாய்ப் போய் விடுவான் என்பதனை,

“உண்டிரண்டு தனக்கு நன்மையோர் நாலாறாய்
உடையவெகு துன்பமது வோதக் கேளு
கண்டுமெய்யிற் கண்தெறித்தால் மரண மாவன்
கனத்தநல் லோடுவிட்டா லசனம் வெல்லம்
விண்டோடு தெரித்திடுமேற் பிணியாம் மெய்யில்
மேதினியி லேவிழுந்தால் விலையாங் கண்டீர்
பண்டுதமி ழறிந்தோதும் மயனார் சொன்ன
பாடற்றேங் காய்ச்சகுனம் பகரக் கேளே” (மேலது, பா.எ.313, ப.132)

எனும் இப்பாடலும்,

“வாங்கிய தேங்காய் தன்னை மகிழ்வொடு சிற்பன் றானுந் தாங்கியே யுடைக்கும்போது தவறியே வீழு மாகிற் பூங்கொடி மரணமாவள் பூமகள் தானும் நில்லாள் பாங்கொடு மயனார; சொன்ன பண்டுநூ லிதுவு மாமே” (மேலது, பா.எ.314, ப.132) எனும் இப்பாடலும்,

“உற்றிடு முகூர்த்தத் தேங்கா யுடைத்திடும் பலனைக்கேளு
மற்றது தெரிக்கச் சாவன் வளரும் பெண்முடி பெருக்கிற்
கற்றறி புதல்வ ருண்டாங் கண்விடில் வாழ்வு குன்றும்
சற்றதி லழுக லாகிற் றான்செயுங் கருமந் தீதே” (மேலது, பா.எ.315, ப.132)


எனும் இப்பாடலும் மேற்கருத்துகளைப் புலப்படுத்துகின்றன. கோவை நூலினுள் தேங்காய்ச் சகுனம் பற்றி, பிளவு சரியாய் உடைதல், சுக்கலாய் உடைதல், கை நழுவி தேங்காய் விழுந்து உடைதல், பரிகாரமாக நல்ல தேங்காய் வாங்கி உடைத்தல் ஆகிய செய்திகள் குறிப்பிடப் பெற்றுள்ளது. சிற்ப நூலினுள் இச்சகுனம் பற்றி முடிபெருத்து அடி சிறுத்தல், மூன்று பங்கு தலைப்பாகம், பாதப்பாகம், நெடியப்பங்கு ஐந்தில் இரண்டு, நரம்புப்பிடித்தல், கடுகுப்பிரமாணம் உள்விழுதல், கைத்தவறி விழுதல் ஆகிய செய்திகள் மிகச்சிறப்பாகக் குறிப்பிடப்பெற்றுள்ளன. கைத்தவறி கீழே விழுந்தால் பகைவரால் களங்கம், வீட்டுத் தலைவன் விலையாய்ப் போய் விடுதல் ஆகியன தீயபலன்களாகக் குறிப்பிடப்பெறுவதை இரு நூல்களிலும் நாம் அறியலாம்.

சர்வார்த்த சிற்ப சிந்தாமணியினுள் தேங்காய்ச் சகுனமறிய எனும் உட்தலைப்பினுள், “முகூர்த்தஞ் செய்யுங்காலத்தில் தேங்காயுடைக்கில் முடிபெருத்து அடி சிறுத்து வட்டமாயுடையில் இலட்சுமி விலாசமுண்டு; மூன்று பங்கு சிரசிலும், ஒரு பங்கு அடியிலும் உடைந்தால் சந்தோஷமுண்டாம்; ஜயமுண்டாம்; ஐந்து அல்லது இரண்டாகில் மாறாத செல்வமுண்டாம்; உடைந்து நரம்பு பிடித்தால் வாழ்வுண்டாகும், கடுகளவுப் பிரமாணம் சிறிது உள்ளே விழுந்தால் ரத்தினஞ்சேரும்; நடுவிற் பிளந்தால் சண்டையுண்டாம். நடுமத்தியிலுடைந்தால் விசேஷ நன்மை. 6 - 4 ஆக உடைந்தால் விசேஷ துன்பம் கண்கள் தெரிந்தால் மரணம் உண்டாம்; ஓடு விட்டால் வறுமையுண்டாம்; ஓடு கசங்கிடப் பிணியுண்டாம். அழுகலானால் குற்றம், அது மனஸ்தாபம் விளைவிக்கும்” என்றும் இச்செய்தியினைக் குறிப்பிடுகின்றது. (வீராசாமி முதலியார், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, ப.26)

இந்நூலில் மட்டும் எண்ணிக்கை அடிப்படையிலும் தேங்காய் உடைதலின் பலன்களானது 5 - 2 - 6 - 4 என மாறுபாடாகக் குறிப்பிடப்பெற்றுள்ளது. கடுகுப்பிரமாணம் உள் விழுந்தால் மூன்று நூல்களிலும் சிறந்த பலன்களையே குறிப்பிடுகின்றது. ஓடு விடல், கசங்கல், அழுகல் பற்றி இந்நூலில் மட்டுமே குறிப்பிடப் பெற்றுள்ளது.

நவகோள்களைப் போற்றுவோம்!

*****




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/general/p46.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License