இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

கிரகங்களின் உச்ச பலன்கள்

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை


முன்னுரை

கிரக உச்ச நீச அளவு, உச்சம் நீசம் பெறாத ராசிகள், உச்ச நீச பலன், கிரகங்களும் உச்சமும், சூரியன் உச்சம், சந்திரன் உச்சம், செவ்வாய் உச்சம், புதன் உச்சம், இரு கோள்கள் உச்சம், குரு உச்சம், சுக்கிரன் உச்சம், சனி உச்சம், இராகு உச்சம், கேது உச்சம் ஆகியவற்றினைப் பற்றி வானியல் நூல்களின் வழி இங்கு காண்போம்.

கிரக உச்ச நீச அளவு

அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் சூரியன் மேஷத்தில் 30 உச்சமும் துலாத்தில் 30 நீசமும் பெறுகிறது. சந்திரன் ரிஷபத்தில் 3 உச்சமும் விருச்சகத்தில் 3 நீசமும், செவ்வாய் மகரத்தில் 28 உச்சமும், கடகத்தில் 28 நீசமும், புதன் கன்னியில் 15 உச்சமும் மீனத்தில் 15 நீசமும், குரு கடகத்தில் 5 உச்சமும், மகரத்தில் 5 நீசமும், சுக்கிரன் மீனத்தில் 27 உச்சமும், கன்னியில் 27 நீசமும், சனி துலாத்தில் 20 உச்சமும் மேஷத்தில் 20 நீசமும் பெறுகின்றன என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.104)

உச்சம் நீசம் பெறாத ராசிகள்

அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் ராசி வீடுகளில் மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகியவற்றில் நவக்கிரகங்களில் எதுவுமே உச்சம். நீசம், பெறவில்லை. அங்கெல்லாம் உபகிரகங்கள் உச்சம், நீசம் பெறுவதாக பண்டைய ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. பரிவேடன், மிதுனத்தில் உச்சமும் தனுசில் நீசமும் பெறுகின்றன. இந்திர தனுசு தனுசில் உச்சமும் மிதுனத்தில் நீசமும் பெறுகின்றது. தூமன், தூமக்கேது இருவரும் சிம்மத்தில் உச்சமும், கும்பத்தில் நீச்சமும் சிம்மத்தில் நீசமும் பெறுகின்றன என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.104)

உச்ச நீச பலன்

அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் ஒரு ஜாதகத்தல் உச்ச நிலையில் இருக்கும் கிரகம் நன்மையான பலன்களையும், நீச நிலையில் இருக்கும் கிரகம் பாதகமான பலன்களையும் வழங்கும் என்பது பொதுவிதி என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.70)


கிரகங்களும் உச்சமும்

அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் சூரியனுக்கு மேஷமும், சந்திரனுக்கு ரிஷபமும், செவ்வாய்க்கு மகரமும், புதனுக்கு ஆட்சி வீடான கன்னியும், குருவிற்கு கடகமும், சுக்கிரனுக்கு மீனமும், சனிக்குத் துலாமும் உச்ச இராசிகளாகும் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.91)

சூரியன் உச்சம்

அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் சூரியன் உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தகப்பனாரின் ஆரோக்கியமும் நன்கு இருக்கும். ஆயுள் பாவமும் பலத்திருக்கும் தகப்பனாருடனான உறவு முறை சுமூகமாக இருக்கும். மதப்பற்று மிக்கவராக இருப்பர். அரசுத்துறையில் பணி புரிவர். ஆசிரியர், மருத்துவர், காவல் மற்றும் இராணுவத் துறையில் பணியாற்றுவர் என்று குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.52)

பெரிய சோதிடச் சில்லரைக் கோவை - நவக்கிரக மாலை மேட ராசியில் சூரியன் உச்சம் பெற்று இருந்தால் அதிக யோக பலனையும், வித்யா செல்வமும், கீர்த்தியும், பெருமையும், உத்தியோகப் பலனும், வியாபார லாபமும், புகழும், செல்வமும், மேன்மேலும் பெருகி தனந்தான்யத்துடனே வாழ்ந்திருக்கச் செய்வார். ஆனால் சனி பகவான் சுக்கிரன், இராகு, கேது, சூரியனுடன் சேர்ந்திருந்தால் கெட்டப் பலனையேச் செய்வார் என்பதனை,

“சூரியனும்மேஷத்தி லுச்சமானால்
சொல்லொணாயோகத்தை மிகவேதந்து...”

என்ற பாடல் சான்று பகர்கின்றது.

சந்திரன் உச்சம்

அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் சந்திரன் உச்சம் பெற்றிருந்தால் தாயாரின் ஆரோக்கியம் ஆயுளுக்கு நல்லது. ஜாதகர் பெண்களுக்குப் பிரியமானவராக இருப்பர். அறிவும் ஆற்றலும் மிக்கவர். பொறுமைசாலி. கலைஞராக இருப்பர். செயல் திறன் மிக்கவராக இருப்பர். செல்வந்தராக இருப்பர். பெண் மோகம் கொண்டிருப்பர். புத்திர பாக்கியத்திற்கு குறை இருக்காது என்று குறிப்பிடுகின்றது.(ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.56)

பெரிய சோதிடச் சில்லரைக் கோவை - நவக்கிரகமாலை சந்திரன் ரிடபத்தில் உச்சம் பெற்று இருந்தால் சகலவித செல்வமும் பெருகி, தேக ஆரோக்கியமும், ஒளியும், சுகபோக யோக போக்கியமும், வித்தையும், புத்தியும், உத்தியோக செல்வமும், வியாபார லாபமும், புகழும் வெகுவாகத் தந்து வாழ்ந்திருக்கச் செய்வர். ஆனால், இராகு கேது சேர்ந்திருந்தால் மனத்துன்பமும், கவலையும் நேரிடச் செய்து, எப்போதும் கவலையும், துன்பமும் உண்டாகச் செய்து, பரிதவித்திடச் செய்யும். எனவே மற்றக் கிரகங்களின் பார்வை நோக்கமும் கவனித்துத்தான் பலன் ஆராய்ந்து சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. (ப.114)


செவ்வாய் உச்சம்

அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் செவ்வாய் உச்சம் பெற்றவர் மன உறுதி, தைரியம் மிக்கவராக இருப்பர். முன் கோபி. சகோதரர்களுடன் சுமுகமான உறவு கொண்டிருப்பர். எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர். அரசியலில் ஈடுபாடும் இருக்கும். வீடு, நிலம் போன்ற சொத்து இருக்கும். சண்டை போடுவதில் வல்லவராக இருப்பர். கடவுள் பக்தி உள்ளவர் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.64)

பெரிய சோதிடச் சில்லரைக் கோவை - நவக்கிரகமாலை மகரத்தில் செவ்வாய் உச்சம் பெற்றிருந்தால் பூமி லாபமும், காணி, கழனி பெருக்கமும் கிடைத்து, திரவிய லாபத்துடன் புகழுடன், உறவினர்கள், நண்பர்கள் சேர்க்கையும் பொருந்தி நலமாய் வாழ்ந்திருக்கச் செய்யும். ஆனால் சுக்கிரன் செவ்வாயுடன் சேர்ந்திருந்தால் கொடிய இரணகளத்தில் சண்டை சச்சரவு நேரிடும் போது எத்தகையதான சித்தப்பிரமையும், பயங்கரமும், சஞ்சலமும், திகிலும் ஏற்பட்டு எவ்விதம் கலங்கச் செய்யுமோ அவ்விதமாயிருக்கும் என்றும் குறிப்பிடுகின்றது. (மே,ப.114)

புதன் உச்சம்

அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் புதன் உச்சம் பெற்றிருந்தால் ஜாதகர் திறமை மிக்கவராக இருப்பர். விரோதிகளை வெல்லக் கூடியவர். கல்வி, அறிவு மிக்கவர், சங்கீதத்தில் நாட்டமுள்ளவராக இருப்பர். குடும்பத்தை மேன்மை படுத்தக் கூடியவர். சிறந்த தலைவராக இருப்பர் என்று குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.67)

பெரிய சோதிடச் சில்லரைக் கோவை - நவக்கிரகமாலை கன்னியில் புதன் உச்சம் பெற்று இருந்தால் பொன், பொருள், சேர்க்கை, வித்யாலாபம், உத்தியோக மேன்மை, வியாபார லாபம். கீர்த்தி, பெருமை, புத்திரமித்திராதி, களத்திரலாபம் அனைத்தும் உண்டாகும். ஆனால் புதனுடன் சனி, ராகு, கேது சேர்ந்தால் பல துன்பமும், துயரமும், நேரிடும் என்றாலும், சுபக்கிரகங்கள் பார்வையானால் மத்திம பலனாய் இருக்கும் என்று குறிப்பிடுகின்றது. (மேலது, ப.114) மேலும், கன்னியில் புதனுடன், சந்திரனும், சூரியனும் சேர்ந்திருந்தால் வித்யாபிவிருத்தியும், சங்கீத ஞானமும், சாஸ்திர ஆராய்ச்ச்சியிலும், சிறந்த வித்வானாக விளங்கி காண்போர் புகழ்ந்துரைக்கும்படி மிக மகிழ்வுடன் மிகுந்த செல்வத்துடன் வாழ்ந்திருந்து பொன், பொருள் ஆகிய யாவற்றுடனும் நன்மையான அனைத்து வித உறவுகளுடனும் மகிழ்வாய் வாழ்ந்திருப்பார்கள் என்றும் குறிப்பிடுகின்றது. (மே.ப.121) இரு கோள்கள் உச்சம் - புதன், சந்திரன் உச்சம் - கோவை நூலினுள் ஸ்திரீகள் ருது ஜாதக நிர்ணயம் பகுதியில் உதய லக்னம் கன்னியாக அதில் புதனும், சூரியனும் இருக்க பாக்கிய ஸ்தானமாகிய ரிடபத்தில் இலாபாதிபதியாகிய சந்திரன் உச்சம் பெற்றிருக்க இராகு, சனி இவ்விருவரும் கும்பத்தில் இருந்தால் அந்த ஜாதகி வெகு சாமார்த்தியமாய் அனைவரும் ஆச்சரியப்படும் படியாக வெகு பொருள் தேடி வெள்ளி, பொன் ஆபரணாதிகளுடன் அரச வாழ்க்கை வாழ்வர் என்றும் குறிப்பிடுகின்றது. (மே, ப.361)


குரு உச்சம்

அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் குரு உச்சம் பெற்றிருந்தால் கல்வி அறிவு நுட்பமுள்ளவராக இருப்பர். நல்ல குணமுள்ளவர். பெருமையாக வாழக் கூடியவராக இருப்பர். அஷ்டமா சித்துக்களையும் வென்றவராக இருப்பர். புத்திர பாக்கியம் இருக்கும். பிறருக்கு உபதேசம் செய்பவராகவோ அல்லது தலைமை ஸ்தானம் பெற்றவராகவோ இருப்பர் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.70)

பெரிய சோதிடச் சில்லரைக் கோவை - நவக்கிரகமாலை குரு கடகத்தில் உச்சம் பெற்றால் அரசயோகமாய், வாழ்ந்திருக்கும் படியான நன்மையையும், பொன், பொருள், ஆகிய அனைத்து வகைச் செல்வமும், புத்திர லாபமும், வித்யாபி விருத்தியும், உத்தியோக வளர்ச்சியும், பெற்று நலமாய் வாழ்ந்திருப்பதற்காகும். ஆனால் சூரியன், சனி, ராகு, கேது இவர்கள் பார்த்தாலும், சேர்ந்தாலும், பலவிதமாகிய மனத்துன்பமும், கவலையும் உண்டாகும் என்று குறிப்பிடுகின்றது. (மே.ப. 115) மேலும், மேடத்திலாவது, விருச்சிகத்திலாவது செவ்வாய் இருந்தால் மிகவும் மேன்மையான தனலாப யோகம் இருக்கும். ஆனால் கடகத்தில் குரு உச்சம் பெற்று ஐந்தாம் பார்வையாக விருச்சிகச் செவ்வாயைப் பார்த்தால் பொன், பொருள், பூமி இலாபம், புகழ், தனம் தான்யம், செல்வம் விசேடமாய் பெருகி உறவு, நட்பு, மனைவி, மைந்தருடன் எப்போதும் மகிழ்வாய் வாழ்ந்திருப்பார்கள். இலக்கினக் கணிதத்தைப் பார்த்துக் கணக்கெடுத்து இராசி கணிதமும் ஆராய்ந்து நட்சத்திர பாகத்தின்படியே திசாபுத்தி பிரித்து பலன் சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. (மேலது, ப.121)


சுக்கிரன் உச்சம்

அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால் சங்கீதம், நாட்டியம் போன்ற கலைத்துறையில் ஈடுபாடு கொண்டவராக இருப்பர். வசதி நிறைந்த வாழ்க்கையும் மதிப்பும் கௌரவமும் இருக்கும். பெண்களால் நேசிக்கப்படுவர். களத்திரம் நல்ல முறையில் அமையும். ஆடை ஆபரண சேர்க்கை மிகும். அயல் நாட்டுப் பயணம் ஏற்படும். தெய்வ வழிபாடும் செய்வர். வாகன யோகம் உண்டு என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.74)

பெரிய சோதிடச் சில்லரைக் கோவை - நவக்கிரகமாலை சுக்கிரன் மீனத்தில் உச்சம் அடைந்திருந்தால் சுகபோகமும், செல்வமும், புகழும் பெற்றிருப்பதுடன், உத்தியோக செல்வத்தினாலும், வியாபார செல்வத்தினாலும், பொருள் சேகரஞ் செய்து மேன்மை அடைந்திருக்கும்படிச் செய்வார். ஆனால் சூரியன், செவ்வாய், இராகு, கேது சேர்ந்திருந்தால் துன்பமும், கவலையும், வறுமையும், வியாதியும், எதிரிகளின் கலகமும், பயங்கரமும் பொருந்தி துன்புறச் செய்யும் என்று குறிப்பிடுகின்றது. (மே. ப.116) மேலும் மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று இருக்கும் போது, குரு ஆட்சியாய் சேர்ந்திருந்தாரானால் அந்த சாதகன் வித்யாபிவிருத்தி அடைந்தவனாய் நான்கு வேதம் உணர்ந்த சிறந்த சாஸ்திர ஞானியாய் உவகத்தில் உள்ள மாணாக்கர்களுக்கு ஞான உபதேசம் செய்யும் குருவாய் விளங்கி மிகுந்த புகழுடன் வெகு பொருள் தேடி செல்வந்தனாய் ஆசாரக் குணத்துடன் வாழ்ந்திருப்பதற்காகும். ஆனால் சூரியனும், செவ்வாயும், சுக்கிரனுடனே சேர்ந்து இருந்தால் மந்தப் புத்தியும், கெட்டக் குணமும் பொருந்திய உலுத்தனாய் எல்லோருக்கும் பகையாகி வறுமையாளனாய் இருப்பதற்காகும் என்றும் குறிப்பிடுகின்றது. (மே, ப.123)

சனி உச்சம்

அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் சனி உச்சம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் பேச்சு வன்மை மிக்கவராக இருப்பர். வசதியுடன் வாழ்வார். தீர்க்காயுள் உள்ளவர். வாழ்க்கையில் முன்னேற்றம், மதிப்பு இருக்கும். தைரியம் மிக்கவர். இரும்பு எந்திரம் தொடர்பான தொழிலில் சிறப்பு உண்டு. கன்னிப் பெண்களிடம் ஆசை மிகக் கொண்டவராக இருப்பர் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.79)

பெரிய சோதிடச் சில்லரைக் கோவை - நவக்கிரகமாலை சனி துலாத்தில் உச்சம் பெற்று இருந்தால் மகா திறமையும், மன தைரியமும், உற்சாகமும் பொருந்தி வித்யாபி விருத்தியும், உத்தியோக மேன்மையும், புகழும், தனந்தான்ய செல்வமும், பெருமையும், பொருள் சேர்க்கையும் புத்திர மித்திராதி களத்திராதி லாபமும் கிடைத்து ஆனந்தமாய் இருக்கச் செய்யும். ஆனால், அந்தச் சனியுடன் சூரியன், செவ்வாய், இராகு, கேது சேர்ந்தாலும், பார்த்தாலும் பலவிதமாகிய துன்பமும், கவலையும் உண்டாவதுடன் வியாதியும், துயரமும் உண்டாகும் என்றும் குறிப்பிடுகின்றது. (ப.116)

ராகு உச்சம்

அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் ராகு உச்சம் பெற்றிருந்தால் கல்வியில் சிறப்பு உண்டு. தைரியம் மிக்கவராகவும் இருப்பர். செல்வம், செல்வாக்கு பெற்றிருப்பர். தந்தை வழி உறவினர் சுபீட்சமாகவும் உதவிகரமமாகவும் இருப்பர். விளை நிலங்களால் நன்மை உண்டு என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.83)


இராகு - கேது உச்சம்

இராகு - விருச்சிக இராசியில் பலன்- இராகு- சூரியன் - சந்திரன் தொடர்பானால் பலன்:

பெரிய சோதிடச் சில்லரைக் கோவை நவக்கிரக மாலை இராகு விருச்சிகத்தில் உச்சமாய் இருப்பின் மிகு திறமை, கல்வி வளர்ச்சி, மனமகிழ்ச்சி, பணி வளர்ச்சி, வியாபார இலாபம், தனந்தான்யம் முதலியன பெற்று புகழுடன் வாழ்வர். இராகுவுடன் சூரியனும், சந்திரனும் தொடர்பானால் பலவகையான மன சஞ்சலமும், அதிர்ச்சியும் பயங்கரமும், கொடிய துன்பமும், நோயும் அடைவர் என்றும் இந்நூல் குறிப்பிடுகின்றது. (நவக்கிரக மாலை, பா.எ.8, ப.116)

கேது உச்சம்

அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் கேது உச்சம் பெற்றவர் சுயநம்பிக்கை மிக்கவராக இருப்பர். கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறுவர். வைராக்கியம் மிக்கவர். ஆன்மீகத் துறையில் அதிக நாட்டம் கொள்வர். அதனால் மேன்மையும் பெறுவர் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.92)

உச்சம் - கேது - விருச்சிக இராசியில் பலன் - கேது, சூரியன், சந்திரன் தொடர்பானால் பலன்:

பெரிய சோதிடச் சில்லரைக் கோவை நவக்கிரக மாலை மேலும் இந்நூலில் கேது விருச்சிகத்தில் உச்சமாய் இருப்பின் கல்வியும், ஞானமும், புகழும், பெருமையும் பொருந்திக் கல்வி வளர்ச்சியும், பணி மேன்மையும், வியாபார இலாபமும் பெற்று, அனைத்து வகைச் செல்வமும், சுற்றமும், நட்பும் பெற்று மேன்மையாய் வாழ்வர். கேதுவுடன் சூரியன், சந்திரன் சேர்ந்திருந்தால் மனக்கலக்கமும், கவலையும் சோம்பலும், மனச்சோர்வும் பொருந்தி மன வெறுப்பாய் இருப்பார்கள். என்பதனை,

“கேதுபகவான் விருச்சிகராசி தன்னில்
கெம்பீரமாகவே உச்சமானால்” (நவக்கிரகமாலை, பா.எ.9, ப.117)

இப்பாடல் தெரிவிக்கின்றதால் அறியலாம்.

விருச்சிக இராசியில் இராகுவாகிலும் கேதுவாகிலும் உச்சமாய் இருக்கும் போது செவ்வாய் ஆட்சியாய் இருந்தால் மிகுந்த செல்வமும், பூமி ஆதாயமும், பொன், பொருள் முதலானவையும் பெற்றுப் புகழுடன் நலமாய் வாழ்வர்.

சூரியனும், சனியும் இராகு கேதுவுடன் சேர்ந்தால் பலவிதமான வம்பும், பகையும், சண்டை சச்சரவும், வழக்கும் துன்பமும், பிறவும் நேரிட்டுக் கலங்குவர். (நவக்கிரகமாலை, பா.எ.24, பக்.123-124)

கோவை நூலினுள் ஜெயமுனி சோதிட சூத்திரம் இராகு விருச்சிகம் இராசியில் உச்சம் என்றும் இடபம் இராசியில் நீசம் என்றும் குறிப்பிடுகின்றது.

“பாம்பது கன்னி செட்டி பார்தனுமகர கும்பம்
கோம்பிலா மீனம் நட்பு சோர்விலா மிதுன மாட்சி” (ஜெ.மு.சோ.சூ, பா.எ.8, ப.377)

“கேதுயாழ் விடையுங்கூட கெட்டியாஞ் செட்டி நட்பாம்
வாதைசெய் தேளு மீனம் மகர்தனு கன்னி ஆட்சி” (மேலது, பா.எ.9, ப.377)

எனும் பாடல்கள் சான்று பகர்கின்றன.

உச்சபங்க நீச யோகம் - ஆறு எட்டுப் பன்னிரண்டில் உச்சர் இருந்து, சத்துருவினால் பார்க்கப் பெற்று, சராங்கிசம் ஏறி இருந்தாலும், அல்லது சத்துருவைக் கூடி, உச்சமாயிருந்தாலும் இந்த யோகமாகும்.

இவ்விதம் கிரகங்களின் உச்சத்தினால் விளையும் பலன்களைப் பற்றி அறிந்தோம்.

நவகோள்களைப் போற்றுவோம்!

*****




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/general/p48.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License