இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

உடல் உறுப்புகளின் துடிப்புகளும், பலன்களும்

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை


அபிதான சிந்தாமணி துடி, துடிநுால், துடியின் குணாகுணங்கள் பற்றி பின்வருமாறு விளக்கம் தருகின்றது.

துடி

கால தசப் பிரமாணத்துள் ஒன்று. இது நிமிடம் எட்டுக் கொண்டது, கால நுட்பம். இது பழைய கால அளவு.

துடிநூல்

தேக அங்கத் துடிப்பினால் வரும் சுக துக்கம் அறிவிக்கும் ஓர் சாஸ்திரம். உடலின் துடித்தலையும் அதன் பலத்தையும் பற்றிக் கூறும் நூல். சோதிட சாத்திரத்தில் இதுவும் ஒன்று.

துடியின் குணாகுணங்கள்

இது மனித தேகத்தில் உண்டாம் உறுப்புகள் துடிப்பதனால் உண்டாகும் நன்மை தீமைகளைத் தெரிவிப்பது.

* உச்சித் துடிக்கில் இடர் நீங்கும். அதன் வலப்பாகம் துடித்தால் அச்சம். அதன் இடப்பாகம் துடித்தால் பெருமை. பின் தலை துடித்தால் சத்துருக்கள் உண்டாம். தலை முழுவதுந் துடித்தால் சம்பத்து உண்டாம். இடது நெற்றி துடித்தால் சம்பத்து, வலது நெற்றி துடித்தால் பிணி நீங்கும்.

* வலப்புருவம் துடித்தால் பெருமை. இடப்புருவம் துடித்தால் தீய வார்த்தை, இரண்டு புருவங்கள் துடித்தால் பெருமை. வலதிமை துடித்தால் வழக்கு நேர்ந்து விலகும். இடக்கண்ணின் மேல் இமை துடித்தால் விசனம் வந்து மாறும். கண்ணின் முன் குவளை துடித்தால் புகழும் செல்வமும் உண்டாம், வலக்கண்ணின் கீழிமை துடித்தால் துணைவனுக்குத் துன்பம். வலது கண் முழுதும் துடித்தால் பிணி வந்து மாறும், இடக்கண் முழுதும் துடித்தால் செல்வம் மிகும்.

* கழுத்து முழுதும் துடித்தால் மரணந் தெரிவிக்கும்.

* வலது மூக்கு முழுதும் துடித்தால் சம்பத்து உண்டாம், இடது மூக்கு துடித்தால் சர்வம் எய்தும்.

* மேலிதழ் துடித்தால் இனிய வார்த்தை, கீழிதழ் துடித்தால் தின்பண்டங்கள் உண்டாம்.

* பிடரி வலம் துடித்தால் நன்மை, இடம் துடித்தால் பெருமை உண்டாம்.

* முதுகு துடித்தால் செல்வந் தரும், வலது புஜம் துடித்தால் வழக்கு ஜெயிக்கும்.

* இடது புஜம் துடித்தால் தூரச் செய்தி, இடது மார்பும் புஜமும் துடித்தால் சாச்செய்தி.


* வலது கண்டக்கை துடித்தால் தோடந் தீரும், வலது முழங்கை துடித்தால் தவப்பயனாம். இட முழங்கை துடித்தால் தனஞ்சேரும். அகங்கை வலம் துடித்தால் ஈனம், இட அகங்கை துடித்தால் இலாபம், வலப்புறங்கை துடித்தால் வழக்கு, இடப்புறங்கை துடித்தால் துன்பம், கையில் பெருவிரல் சுட்டு விரல் இலாபம் துடித்தால் நடுவிரல் துடித்தால் நல்ல செய்தி, மோதிர விரல் துடித்தால் பெருமை, சிறு விரல் துடித்தால் மரணம், வலக்கை அடி துடித்தால் எடுத்த காரியம் முடியும், இடக்கையின் பெரு விரல் துடித்தால் நிறையுண்டாம், சுட்டு விரல் துடித்தால் இராஜ நோக்காம், நடுவிரல் துடித்தால் பெருமை உண்டாம், மோதிர விரல் துடித்தால் நன்மை சாரும், சிறு விரலாயின் சாவில்லை.

* நெஞ்சு துடித்தால் நோக்காடு, வலது முலை துடித்தால் சா, இடது முலை துடித்தால் பிரியம்.

* தொப்புள் துடித்தால் விசனம், வயிறு துடித்தால் நோய் வந்து நீங்கும்.

* வலப்புற முதுகு துடித்தால் நோய் வந்து தீரும். இடதுபுறம் துடித்தால் குடியிருந்த வீட்டை விட்டு நீங்குவான், முதுகு துடித்தால் நோய் நீங்காது, வலது செட்டை துடித்தால் புது வஸ்திரம் கிடைக்கும், இடது துடித்தால் பிரிய வார்த்தை, செட்டைகள் இரண்டும் துடித்தால் துன்பம்.

* வலவிலா துடித்தால் விசனம், இடவிலா துடித்தால் மனை இழப்பாம்.

* இடை துடித்தால் புகழுண்டாம், கோசம் துடித்தால் தூரத்தாரால் விசனம், கீழ்க்கோசந் துடித்தால் நன்மை.

* வலது பீஜம் துடித்தால் யானை, குதிரையேறுவான், இடது பீஜம் துடித்தால் நோயாகும், இரண்டும் துடித்தால் வழக்கு.

* வலத்தொடை துடித்தால் வழக்குண்டாகி வெல்லும், இடைத்தொடை துடித்தால் இனிய வார்த்தை, இரு தொடைகளும் துடித்தால் செம்பொனுண்டு.

* வல முழந்தாள் துடித்தால் கோபம், இடமுழந்தாள் துடித்தால் பந்து சேரும், இரண்டு முழந்தாள்களும் துடித்தால் சம்பத்து உண்டாம்.

* வலது கணைக்கால் துடித்தால் சம்பத்து, இடது கணைக்கால் துடித்தால் சாவார்த்தை.

* வலது கண்டைக்கால் துடித்தால் அடிமையாவான், இடது கண்டைக்கால் துடித்தால் நோய் - துன்பமும் உண்டாம், இரண்டு கணைக்காலும் துடித்தால் பிரயாணம்.

* வலப்புறவடி துடித்தால் நோய், இடப்புறவடி துடித்தால் வழக்காகி வெல்லும்.

* வலது உள்ளங்கால் துடித்தால் பொருள் கை கூடும், இடது உள்ளங்கால் துடித்தால் பிணி வந்து நீங்கும், கால் விரல்கள் துடித்தால் செல்வமும் நன்மையும் உண்டாம்

என்று துடித்தலுக்குப் பலனினைக் குறிப்பிடுகின்றது. (அபிதான சிந்தாமணி பக்கங்கள், 1051 -1052)


கண்துடித்தல்

கண் இமைத்தல் என்பது இயல்பான ஒன்று. கண் இமை துடித்தல் என்பது எப்போதாவது நிகழ்வது. பெண்களுக்கு இடக்கண் துடித்தால் நன்மையைத் தரும். வலக்கண் துடித்தால் தீமையைத் தரும் என்றும், ஆண்களுக்கு வலக்கண் துடித்தால் நன்மையைத் தரும். இடக்கண் துடித்தால் தீமையைத் தரும் என்றும், பொதுவாக இடப்பாகம் பெண்களுக்கு நன்மை தரும் என்றும், ஆண்களுக்கு வலப்பாகம் நன்மை தரும் என்றும் சோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. இதனைப் பறை சாற்றும் வகையில் பழந்தமிழ் இலக்கியங்கள் சான்று பகர்கின்றன.

இடந்துடித்தல்

பெண்டிர்க்கு நன்மையும், ஆடவர்க்குத் தீமையும் எனக் கருதும் வகையில் இடக்கண் அல்லது இடத்தோள் துடித்தல். ஈண்டு தாம் இடந்துடிக்குமால் அஞ்சல் (கம்பரா. 5,3,35.) இடந்துடித்த காரணம் சொல். (தெய்வச். விறலி. தூது 126.) என்று தமிழ் இலக்கியம் பறை சாற்றுகின்றது.

கலித்தொகைப் பாடலில், பிரிவுத் துன்பத்தில் வருந்தும் தலைவிக்கு ஆறுதல் கூறும் தோழி, இடக்கண் துடிக்கின்றது. தலைவன் வருதல் உறுதி என்று நிமித்தம் கூறி ஆற்றுவித்ததை, நன்மனையிடத்துப் பல்லியும் நன்றாகிய இடத்தே அவர் வரவுக்குப் பொருந்திக் கூறின. நல்ல அழகையுடைய மையுண் கண்ணும் இடந்துடித்து நின்று நன்மை பயப்பதை,

”பல்லியும் பாங்கொத் திசைத்தன
நல்லெழி லுண்கணு மாடுமாலிடனே”(நச்சினார்க்கினியர், கலித்தொகை, பாடல்.11, அடிகள் 20 - 22)

என்று சான்று தெரிவிக்கின்றது.

மாதவிக்குப் பிரிவும், கண்ணகிக்குக் கூட்டமும் நிகழும் என்பதை,

”கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
எண்ணுமுறை இடத்திலும், வலத்தினும் துடித்தன” (சிலப்பதிகாரம், கா.5. 237 -239)

என்று சிலம்பின் அடிகள் நன்மையும், தீமையும் மாறி விளைந்ததை சான்று பகர்கின்றன.

இவ்விதம் துடித்தல் பலன் பார்க்கப் பெறுகின்றது.

*****




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/general/p52.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License