இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

இரேகைகளுக்கான பலன்கள்

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை


மனிதன் உடலில் நெற்றி, கை உள்ளிட்ட சில பகுத்களில் காணப்படும் இரேகைகளுக்கேற்றபடி அவர்களது வாழ்நாளில் சில பலன்கள் ஏற்படும் என்று அபிதான சிந்தாமணி எனும் சோதிட நூல் தெரிவிக்கின்றது.

நெற்றி இரேகை

நெற்றியில் நான்கு வரைகளும், கழுத்தில் மூன்று வரைகளும் இருந்தால் அவனுக்குத் தாரம் இரண்டு. பிதா - தந்தை வியாதியால் துன்புறுவன்.

நெற்றியில் 3, கழுத்தில் 2, ரேகைகள் இருந்து முதுகின் வலப்புறம் மறுவொன்று காணப்படின் ஒரு தாரம் கெடும். மறு தாரம் நிலைக்கும். வறுமை அடைவன்.

நெற்றியில் 2, ரேகைகளிருக்க இடப் பக்கம் மறுவுண்டாயின் மனைவி மக்கள் பகைமை கொண்டிருப்பர். பொருள் நட்டமாய் உதவியின்றி இருப்பன்.

நெற்றியில் ஐந்து வரைகள் இருக்கின் விசனம், பொருள் நில்லாது. நெற்றியிலும், கழுத்திலும் மும்மூன்று ரேகைகள் இருப்பின் பொருள் உண்டாகிக் கெடும். வேளாண்மையில் அவை பலன், நெற்றியில் மூன்று, ரேகைகளும் கழுத்தில் ஒன்றும் இருக்கின் ஜலபயம், (நீரினால்) பொருள் சேரும், இடரில்லை, அதியோகம், குழந்தைகள் உண்டாம். நெற்றியில் மூன்று, ரேகைகளிருக்கக் கண்கள் கறுத்து மூக்கு நீண்டிருக்கின், இரண்டு தாரம் உடையவன். சமர்த்தன் - திறமைசாலி. இவனுக்கு முப்பத்தொன்றாவது வயதில் நெற்றியில் மூன்று இரேகைகளும் இடது புறத்தில் மங்கு மறுவிருக்கின் பெருந்துயர், பொருள் நில்லாது, உயிர்ச்சேதம், மனைவி சேதம்,

நெற்றியில் நான்கு இரேகைகளும் வலப்புறத்தில் மங்கிருக்கின் துன்பம் நீங்கும். நெற்றியில் ஐந்து வரைகளும், கழுத்தில் மூன்று வரைகளும் மத்தகத்தில் மாலை போல் மூன்று வரைகளும் உள்ளனவாய்க் கன்னத்தில் மறுவுள்ளவன் விசனமும் அலைச்சலும் உள்ளவன் ஆவான். நெற்றியில் நான்கு மற்றும் இரண்டு வரைகள் துண்டித்து நிற்க உட்கழுத்தில் மூன்று வரைகள் உள்ளவன் பொருளற்றவன் ஆவான். நெற்றியில் நான்கு வரைகளும், கழுத்தில் ஒரு வரையும் உள்ளவன் கல்வி, பொருள் அற்றவனாய்க் கடனுள்ளவன் ஆவன். நெற்றியில் பொன் போன்றவரை நான்கில், ஒன்று துண்டாக நிற்கக் கழுத்தில் இரண்டு ரேகைகள் உள்ளவன் செல்வன், யோகவான், உபகாரி, சிறு வயதில் கண்டம். நெற்றியில் இரண்டு வரைகள் நிலை குலைந்து தோன்றில் பொருள் அற்றவனாவன்.


கைரேகைகள்

கையில் அன்னவரை மேலேறி அதனருகில் கறுத்தது போல் ஒரு ரேகை இருந்தாலும், இரண்டு வரைகள் இருந்தாலும், சிறு விரலில் நான்கு வரைகள் இருந்தாலும், ஓரங்குலத்தில் இரண்டு வரைகளிருந்தாலும் வறுமையால் வீட்டை விட்டு விலகுவன். முதலிற் பெண் பிறந்து மாயும். பிறகு செல்வம் உண்டாம்.

கையில் அன்ன வரை கீழ் நோக்க அதன் அருகில் இரண்டு வரைகளிருந்தால் பொருள் அற்றவன், கடனுண்டாம், விசனமுண்டு. மணிக்கட்டில் இரேகைகள் இரண்டு இருக்கின்றவன் இராஜ போகம் உள்ளவன். மூன்று இருக்கப் பெற்றவன் ஸ்திரிலோலன், நான்கு இருக்கப் பெற்றவன் பிரபுவாயிருப்பான். இவை கங்கண ரேகைகள் எனப்படும்.

அங்கை விரிவாய் ரேகைகள் அதிகமின்றி இருப்பின் தீர்க்காயுள் உள்ளவனும் போகியாயும் இருப்பன். அங்கை சிவக்கின் தனவான். பசந்திருப்பின் பெண் போகி. சுண்டு விரற்குச் சற்று இறக்கத்தில் உண்டாய் மேல் நோக்கும் இரேகை ஆயுட்ய ரேகை. அது சுட்டு விரலைத் தாண்டிச் செல்லின் அவனுக்குத் தீர்க்காயுள், அது எந்த விரல்களின் அடியில் நிற்கிறதோ அவ்விரல்களுக்கு 25வயதுகளாகக் கணித்துக் கொள்க. ஆயுட்யரேகை சிதறித் தடையுண்டு நிற்கில் வியாதி முதலானவற்றால் கண்டம்.

ஆயுட்ய ரேகையை அடுத்த ரேகை ஸ்திரி ரேகை - பெண்ரேகை. பெருவிரற்குக் கீழ் மணிக்கட்டிற்கு நடுவிற் பிறந்து மேலேறும் ரேகை புருடரேகை என்று பெயர். புருடரேகை, பெண் ரேகை இரண்டும் கலந்திருப்பின் தம்பதிகள் சிநேக பான்மையாய்க் கலந்திருப்பர். கலவாது இருப்பின் வியோகம் உண்டாம். புருட ரேகை அதிகமாகப் பெருகியிருக்கின் புருட சந்ததியாம். பெண்ரேகை, வளர்ந்திருப்பின் பெண்களுண்டாம். இப்புருட ரேகை பெண் ரேகைகள் இரண்டும் கலவாதிருப்பின் மணமாகாது. விவாகமாயினும் பலனில்லை. அங்கையில் ஆயுட்யரேகை புருடரேகை பெண் ரேகைகள் மூன்று மாத்திரம் இருக்கின் சம்பத்து உண்டாம். பல ரேகைகள் இருக்கின் வறுமை.

மணிக்கட்டின் நடுவிடத்திற் பிறந்து ஸ்திரீ புருட ரேகைகளுக்கு நடுவாக நீண்டு ஆயுட்ய ரேகைக்குக் குறுக்கில் செல்லும் ரேகை தனரேகையாம். அது செவ்வையாக மேற்சென்றிருக்கின் அவன் சீமானாய்ச் செல்வனாயிருப்பன். அது முதலில் வளைந்து புருட ரேகையுடன் கலந்திருப்பின் செல்வம் சுயார்ஜிதம். (பூர்வீகம் - பழமை) தனரேகையின் இடையில் தடையுள்ள ரேகைகள் வரின் செல்வம் கள்வராலும் செலவாலும் அழியும். நான்கு கத்திரி ரேகைகள் இருக்கின் தரித்திரனாவன். தனரேகை சிதறித் தோன்றின் அப்போதைக்கப் போது தன வருவாயுண்டாம். தனரேகை இல்லாதிருக்கின் வறியனாவன். சிறிதிருக்கின் கொஞ்சம் சம்பாதிப்பன்.


ஆயுட்ய ரேகைக்கு மேலாய்த் தனரேகைக்கு இடப்பக்கமாய் நீண்டிருக்கும் ரேகை வித்தியா ரேகையாம். அது எவ்வளவு பிரபலமாய் இருக்கிறதோ அவ்வளவிற்கு வித்வானாம். அங்கையின் விளிம்பில் ஆயுட்ய ரேகைக்கு மேலும் சுண்டு விரற்குக் கீழ்ப்பாகத்தில் நடுவிலுள்ள குறுக்கு ரேகைகளுக்குப் பத்தினி ரேகைகள் என்று பெயர். அவை ஒன்றுக்கு அதிகமாக இருக்கின் பத்னிகளே அன்றி விலைமாதரும் பலரிருக்கலாம். குதிரை, யானை சவாரி, குடை, கிரீடம், சங்கு, தாமரை, துவசம் இவை அங்கையில் இருக்கப் பெற்றவன் பிரபு ஆவன். சூர்யரேகை, சந்திர ரேகை இருக்கப் பெற்றவன் தெய்வ பக்தி உள்ளவனாய் லோக பூஜ்யனாவன்.

மச்ச ரேகையுள்ளவன் செல்வமுள்ளவனாய்ப் பலர்க்கு அன்னம் அளித்துப் புண்யவானாய்ப் புத்திர சந்ததி உள்ளவனாவன். தராசின் ரேகை உள்ளவன் பாக்யவான் ஆவன். விரல்களின் நுனியில் ஒரு சக்கரம் இருக்கப் பெற்றவன் போகியாவன். இரண்டு உள்ளவன் ராஜ பூஜிதனாவன். மூன்று சக்கரம் உள்ளவன் லோகம் - உலகம் சஞ்சாரியாவன். நான்கிருக்கப் பெற்றவன் பண்டிதனாவன்.

அங்கையின் பெரு விரலின் மேற்கணுவில் அரிசி போலவும், கோதுமை போலவும், உள்ள ரேகை யவரேகை என்று பெயர். அது பெற்றவன் தான்ய சம்பத்துள்ளவனாய்ப் போகத்தை அனுபவிப்பன். பெருவிரலின் நுனி சுட்டு விரலின் நடுக்கணுவைப் பொருத்தியிருப்பவன் சில்பம், சஸ்திரம், எழுத்து இவற்றில் பெயர் பெற்றவன் ஆவன். பெருவிரலின் புறத்தின் கணுவில் உள்ள ரேகைகள் புத்திர ரேகைகளாம். அவற்றில் கீறுள்ளவை பெண்கள். பின்னல் போன்றவை குமாரர்கள். அவற்றில் நீண்டவை தீர்க்காயுளுள்ளவை. பின்னல் போன்றவை குமாரர்கள். அவற்றில் நீண்டவை தீர்க்காயுள்ளவை. குறியவை அற்பாயுள் உற்றவை. அந்த ரேகைகள் இல்லா விடின் சந்தானம் இல்லை.

சுட்டு விரலின் அடியில் குறுக்காக இரண்டு ரேகைகளுள்ளவன் கார்ய சித்தியடைவன். நடு விரலடியில் அவ்வாறு பெற்றவன் தனம், ஸ்திரீ போகம், சந்தானம், செல்வம் உள்ளவனாவன். மோதிர விரலில் அவ்வாறு பெற்றவன் வித்வான் ஆவன். சுட்டு விரலடியிற் பெற்றவன் இளமையில் விளையாட்டால் சுகம் அடைந்தவன். (அபிதானசிந்தாமணி, பக்கம், 247 - 249)

*****




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/general/p54.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License