இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

திதிகள்

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை


திதி - பஞ்சாங்க உறுப்பில் ஒன்று. இது சந்திர நாள். திதி, கிரகம், திசை, திசையை உடையது. சந்திரனாள், அது பஞ்சாங்க உறுப்பின் ஒன்று, சிராத்தம். நாள். திதி - 15 - பிரதமை -1, துவிதியை -2, திரிதியை -3, சதுர்த்தி - 4, பஞ்சமி -5 , சட்டி - 6, சத்தமி - 7, அட்டமி - 8, நவமி - 9, தசமி - 10, ஏகாதசி - 11, துவாதசி - 12, திரயோதசி -13, சதுர்த்தசி - 14, இவற்றிற் சுக்கில பக்கத்திற் சுத்தமென்றுங் கிருட்டின பக்கத்திற் பகுளம் என்றுங் கூட்டுக. பதினைந்தாம் திதியாவது சுக்கில பக்கத்திற்குப் பௌர்ணமி, கிருட்டிணபக்கத்திற்கு அமாவாசியை. பக்கம். சந்திரனாள் அஃது பஞ்சாங்க உறுப்பின் ஒன்று சிராத்தம், திதியென்னேவல் ஆகும்.

பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, பௌர்ணமி அல்லது அமாவாசியை ஆக 15. பதினைந்தாம் திதி கிருஷ்ண பலத்தின் இறுதியாயின் அமாவாசையும் சுக்கில பலத்தின் இறுதியாயின் பௌர்ணமியும் வரும். இதில் சந்திரன் தோன்றும் முதல் பலம் சுக்கில பலம் என்றும், சிநிவாலி என்றும் பெயர். சந்திரன் குறையும் பிற்பக்கம் கிருஷ்ண பலம் எனவும் குகு எனவும் பெயர் பெறும்.

இவற்றில்;

பிரதமை, சஷ்டி, ஏகாதசி மூன்றும் நந்தை எனப்படும்.

துவிதியை, சப்தமி, துவாதசி மூன்றும் பத்திரை எனப்படும்.

திரிதியை, அஷ்டமி, திரயோதசி மூன்றும் சயை எனப்படும்.

சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி மூன்றும் இருத்தை எனப்படும்.

பஞ்சமி, தசமி, பௌர்ணமி மூன்றும் பூரணை எனப்படும்.

இவற்றுள் நந்தையும், பத்திரையும் சுப காரியங்கள் செய்ய ஆகாது.

சிநிவாலி, குகு, சயை, நந்தை, பத்தரை, இருத்தை, பக்கச்சித்தரை ஆகியனவும் திதிகளினைத்தான் குறிக்கும்.


இருத்தை

இருத்தை - இருபத்து நாலு நிமிடங் கொண்ட ஓர் நாழிகை, சந்திரன் நாலு, ஒன்பது, பதினோராம் பக்கம். இருபத்து நாலு நிமிடங் கொண்ட ஒரு நாழிகை, சந்திரன் நான்காம் பக்கம், ஒன்பதாம் பக்கம், பதினான்காம் பக்கம். ஒரு பெண் தேவதை இவள். சுபங்கள் எல்லாவற்றையும் கெடுப்பவளும் காலதூதியும், நெஞ்சில் சற்றேனும் இரக்கமில்லாதவளும் ஆவாள். இவள் சிறப்பில்லாத துகிலையும், சிவந்த கண்ணையும், நெருங்கிய வலிய வெண் பல்லினையும், முழு அளவு கண்ட நகத்தினையும் உடையவள். இவள் காலம் இரண்டு பலங்களிலும் உள்ள சதுர்த்தி, சஷ்டி, நவமி, துவாதசி, சதுர்த்தசியுமாம். இவை சுப கருமங்களுக்கு ஆகாவாம். இவற்றைப் பக்கச்சித்தரை என நீக்கினார்கள். ஆகாது என்ற பட்சங்களில் தோடமான நாழிகை சதுர்த்தி 9, நவமி 25, சஷ்டி 9, அஷ்டமி 14, துவாதசி 10, சதுர்த்தசி 5, இந்நாழிகைகளைக் கழித்தால் இத்திதி நன்றென்க. சந்திரன் சிங்கத்தினின்று, குரு உதயத்தினிற்க உச்சம் எய்தில் சுப கருமஞ் செய்யலாம். (அ.சி, ப.244) இருபத்து நாலு நிமிடம் கொண்ட ஒரு நாழிகை. இரு பட்சங்களிலும் வரும் சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி ஆகிய திதிகளாம். நாழிகை வட்டிலுக்கும் பெயர்.

இருத்தை (இரித்தை) -1.நாழிகை. இருத்தை --- நாழிகையாகும். (பிங்.நி.282.) கடிகை நாழிகையாம் கன்னல் இருத்தையுமதுவே காட்டும் (சூடா.நி.1,79.) கடிகை பதமுட னிருத்தை கன்னலோர் ஐந்துமே நாழிகை (ஆசி.நி.31.) ஏது இலாநிசிக்கு இருத்தை மூவைந்தாய் (தேம்பா.1.10.96.) 2.நாழிகை வட்டில் (மதுரை.அக.) 3. சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி என்னும் திதிகள் (செ.ப.அக.)

நந்தை, பத்திரை, சயை, இருத்தை, பூரணை

சூடாமணி உள்ளமுடையான் எனும் நுால் இவை குறித்து நந்தை - பிரதமையும், சட்டியும், ஏகாதசியும் என்றும், பத்திரை - துவிதிகை, சப்தமி, துவாதசி என்றும், சயை - திரிதிகையும், அட்டமியும், திரயோதசியும் என்றும், இருத்தை - சதுர்த்தியும், நவமியும், சதுர்த்தசியும் என்றும், பூரணை -பஞ்சமியும், தசமியும், உவாவும் என்றும் குறிப்பிடுகின்றது.

”வினவின்முதல் திதியாறு பதினொன்றும் நந்தை
மேலிரண்டேழ் பன்னிரண்டும் விளங்கியபத் திரையாம்
மினியவொரு மூன்றெட்டுப் பதிமூன்று சயையாம்
இருத்தையென்பர் நான்கினுடன் நவமிபதி னான்கை
புனைகுழலாய்! பஞ்சமியும் பத்துமூவர் தானும்
பூரணமென மறியலவன் கோல்மகரம் சரமாம்
தனிவிடைதேள் குடம்சிங்கம் நிலைராசிதானும்
தனுமிதுனங் கன்னிமீனம் உபயமெனத்தகுமே”

சான்று பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது. (சத்தியபாமா காமேஸ்வரன், சூடாமணி உள்ளமுடையான், பாடல்.58, பக்கம்.26)


பக்கச்சித்தரை

பக்கச்சித்தரை குறித்து விதானமாலை பஞ்சாங்கப்படலம் திதிகளிற் பூருவபக்கம் உத்தமம். அபரபக்கம் மத்திமம், அதமம், அதமாஅதமம் என்று சொல்லப்படும். இவ்விரண்டு பக்கத்தில் பக்கத்தில் சதுர்த்தியும், நவமியும், சட்டியும், அட்டமியும், துவாதசியும், சதுர்த்தசியும், பக்கச்சித்திரை என்று தவிரப்படும் என்பதனை,

”வளர்பிறையுத்தம மற்றைப்பிறைமத்திமமதமந்
தளர்வுறு பொல்லாங்குமென்பர் தடங்கட்டிருவனையா
யளவுறுநான்கொன்பதாறெட்டீராறீரே ழான பக்கம்
விழைவுறு தீப்பக்கச் சித்திரையென்று விதித்தனரே”

எனும் பாடலும் மேலும் பக்கச் சித்திரை என்ற பக்கங்களில் தோடமான நாழிகை, சதுர்த்திக்கு ஒன்பது, நவமிக்கு இருபத்தைந்து, சட்டிக்கு ஒன்பது, அட்டமிக்குப் பதினாலு, துவாதசிக்குப் பத்து, சதுர்த்தசிக்கு ஐந்து இந்த நாழிகைகளைக் கழித்தால் இத்திதிகள் நன்று என்க என்றும், பிரதமை முதலாக நந்தை, பத்திரை, சயை, இருத்தை, பூரணை என்றடைவே பெயராகப் பதினைந்து பக்கமும் மூன்று பரிவிருத்தியாக என்னப்படும் என்பதனை,

”ஒன்ப திருபத்தைஞ் சொன்பதுபன்னான்கும் பத்துமைந்தும்
வந்திடு நாழிகை சித்திரைக்காதியில் வாட்டநன்றா
நந்தையும்பத்திரைச் செ… யநல்லி நத்தை வளர்ச்சியென்று
குந்தியபக்க முதன்முறை யேமொழி மொய்குழலே”

எனும் பாடலும் அனைத்து மங்கல காரியத்திற்கும், பக்கச்சித்திரை ஒழிந்த திதியும், பூரணையும் நன்றாம் என்றும், பூருவ பக்கத்துப் பிரதமை முதல் பஞ்சமியறுதியும் அபர பக்கத்து ஏகாதசி முதல் அமாவாசையறுதியும் தவிரப்படும் என்பதனை,

”சிறந்தநன் மங்கல காரிய மயாவிற்குஞ்சித்திரைநீத்
தறைந்தபக்கத்துநற்பக்கமிடையுவாநன்றதனி
னிறைந்தபக்கத்து முன்னைஞ்சுந்நிறைவேல் பொருதகண்ணாய்
குறைந்தபக்கத்துக் கடையுற்றவஞ்சுஞ் குணமில்லையே”

எனும் பாடலும் சிலர் சுப கருமங்கட்கு இரண்டு பக்கத்தும், ஒற்றித்த பக்கத்துப் பிரதமையும், பௌரணையும், நவமியும் ஒழிந்த திதிகள் நன்று என்றும், இரட்டித்த திதிகளில் தசமியும், துதிகையும், ஒழிந்தனவும் என்பதனை,

”ஒற்றித்த பக்கத்திலாதியு மந்தமுமொன்பதுமே
குற்றமுடைத்தல்லவைநன் றிரட்டையிற்கூறுமீரைந்
துற்றவிரண்டுநன்றல்லவை தீதொள்ளியவினைக்குச்
சொற்றிலர் கல்விக்குப்பன்மூன்றொடேழையுஞ் சோதிடரே”

எனும் பாடலும் சான்று பகர்கின்றது. பூருவ பக்கத்துப் பஞ்சமியும், அபர பக்கத்து ஏகாதசியும் முக்கியம் என்பர். (நாராயணசுவாமிகள், விதானமாலை மூலமும் உரையும், பாடல் எண்கள். 1 - 5, பக்கங்கள். 16 - 18)


திதி அமுத யோகங்கள்

ஞாயிற்றுக்கிழமையில் பிரதமையும். சஷ்டியும் திங்கட்கிழமையில் துவிதியையும் சப்தமியும், செவ்வாய் கிழமையில் சதுர்த்தசியும், புதன் கிழமையில் அஷ்டமியும், திரிதியையும் திரயோதசியும், வியாழக்கிழமையில் நவமியும், வௌ்ளிக்கிழமையில் ஏகாதசியும், சனிக்கிழமையில் சதுர்த்தசியும் வருவன.

இவ்விதம் இந்த திதிகளைப்பற்றி பழம் சோதிட நுால்கள் சான்றாதாரம் தெரிவிக்கின்றன.

*****




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/general/p63.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License