இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

யோகினி

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை


நிர்வாணி, நிர்வாணி நிலை, யோகினி - யோகினி வடிவம், யோகினிகள், யோகினி அறிதல், யோகினி திசை - யோகினி வரும் திசை, நித்த யோகினி நிலை ஆகியவற்றைப் பற்றிக் காண்போம்.

நிர்வாணி - அமங்கலை, யோகினிக்கும் பெயர்.

நிர்வாணி நிலை

ஞாயிறு, வியாழன் - தென்கிழக்கு, திங்கள், வௌ்ளி - தென்மேற்கு, செவ்வாய், சனி - வடமேற்கு, புதன் - வடகிழக்கு. இவள் பின் நிற்கும் திக்கில் பயணத்திற்கு நன்று. எதிர் நிற்கும் திசையின் நேரில் போகலாகாது. ஞாயிறு, வியாழம் - தென் கிழக்கு, திங்கள், வௌ்ளி - தென் மேற்கு செவ்வாய், சனி - வட மேற்கு புதன் - வடகிழக்கு இவள் பிரயாணத்தில் பின்னால் நன்று, முதற் பக்கந் தீது இவள் நிற்குந் திசையில் போகல் ஆகாது.

யோகினி - யோகினி வடிவம்

காளி, சன்மினி, சூர்மகள், நிர்வாணி, இவள் நிர்வாணமும், விரித்த தலையும், தேகத்தில் வெண்ணீறும், சங்காபரணம் முதலிய அமங்கலமும், இரத்த நிறமும் உடையவள். ஒரு பெண் தேவதை. இவள் நிர்வாணி. விரிந்த கேசமும், தேகம் முழுவதும் வெண்ணீற்றுப் பூச்சும், மங்கல ஆபரணம் இன்றிச் சங்காபரணமும், கையில் வெறித்த கபாலமும், தீரா அமங்கலான சிவந்த வர்ணமும் உடையவள்.

யோகினி வடிவமாவது நிருவாணமும், விரிந்த கேசமும், சருவாங்கமும், வெண்ணீற்றுப்பூச்சும் மங்கலாபரணமின்றிச் சங்காபரணமும், கையில் வெறிய கபாலமும், தீராத மங்கலமான சிவந்த வருணம் உடைய யோகினி ஆனவள் முன்னும், இடப்புறமும் ஆகாது. பின்னும் வலப்புறமும் நன்று என்று தெரிவிக்கின்றது. ஆகாயம், பூமி, மத்திமம்.

“நக்கம்விரித்ததலைவெள்ளை பூசிநாணாரமின்றி
யக்கையணிந்து வெற்றோடேந்தியாறாவமங்கலியாஞ்
செக்கர்நிறத்தொருசேயிழையோகினிதீயள்முன்னும்
பக்கத்திடத்தும்வலத்துடன்பின்னும் பலந்தருமே” (விதானமாலை, செ.43, ப.176)

எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.


யோகினிகள்

ஒரு வித மயக்கும் சக்திகள். இவர்கள் 64 கோடியர். இவர்களைச் சங்கரித்தனர். அவர்களுள் சிலர் காளியிடம் ஏவல் செய்து இருக்கின்றனர். அவர்கள் 64 - திவ்ய யோகி, மகாயோகி, சித்தயோகி, கணேஸ்வரி, பிரோதாசிபிகினி, காள ராத்திரி, நிசாசரி, ஜங்காரி, ஊர்த்துவ வேதாளி, பிசாசி, பூதடாமரி, ஊர்த்துவகேசி, விரூபாட்சி, சுஷ்காங்கி, நரபோஜனி, ராட்சசி, கோர ரக்தாட்சி, விஸ்வரூபி, பயங்கரி, வீரகௌமாரி, கீசண்டி, வராகி, முண்டதாரணி, பிராமரி, ருத்ர வேதாளி, பீஷ்கரி, திரிபுராந்தகி, பைரவி, துவம்சனி, குரோதி, துர்முகி, பிரேத வாகினி, கட்வாங்கி, தீர்க்கலம் போஷ்டி, மாலினி, மந்திர யோகினி, காலாக்னி, கிறாமணி, சக்ரி, கங்காளி, புவனேஸ்வரி, பட்காரி, வீரபத்ரேசி, துாம்ராட்சி, கலகப்பிரியை, கண்டகி, நாடகி, மாரி, எம துாதி, கராளினி, கௌசிகி, மர்த்தனி, எட்சி, ரோமஜங்கி, பிரஹாரிணி, சகஸ்ராட்சசி, காமலோலா, காகதமிஷ்டரி, அதோமுகி, துார்ஷசடி, விகடி, கோரி, கபாலி, விஷ்லங்கினி ஆகியோர் ஆவர்.

யோகினி அறிதல்

சுக்ல பட்சம் பிரதமை, ஏகாதசி, கிருஷ்ண பட்சம் சஷ்டி - கிழக்கு. சுக்கில பட்சம் திருதிகை, திரயோதசி, கிருஷ்ண பட்சம் அஷ்டமி ஆக்கினேயம். சுக்கில பட்சம் பஞ்சமி, பௌர்ணமி, கிருஷ்ணபட்சம் தசமி - தெற்கு. சுக்கில பட்சம் - சதுர்த்தி, சதுர்த்தசி, கிருஷ்ண பட்சம் நவமி - நிருதி. சுக்கில பட்சம் சஷ்டி. கிருஷ்ணபட்சம் பிரதமை, ஏகாதசி - மேற்கு. சுக்கிலபட்சம் சப்தமி, கிருஷ்ணபட்சம் துதியை, துவாதசி - வாயு, சுக்கில பட்சம் துதியை, துவாதசி, கிருஷ்ணபட்சம் சப்தமி - வடக்கு. சுக்கில பட்சம் அஷ்டமி, கிருஷ்ண பட்சம் திருதியை, திரயோதசி - ஈசான்யம். சுக்கில பட்சம் நவமி, கிருஷ்ணபட்சம் சதுர்த்தி, சதுர்த்தசி - ஆகாயம். சுக்கில பட்சம் தசமி, கிருஷ்ண பட்சம் பஞ்சமி, அமாவாசை - பாதாளம். இந்த யோகினியைப் பின் புறத்தில் வைத்துப் பிரயாணஞ் செய்ய நன்று. சுக்கில பட்சம் பிரதமை முதல் இஷ்ட தின திதி வரையில் எண்ணி வந்த தொகையைப் பத்தால் வகுத்த மிச்சம் 1 - க்குக் கிழக்கு, 2 - க்கு வடக்கு, 3 - க்கு தென்தெற்கு, 4 - க்கு தென்மேற்கு, 5 - க்கு தெற்கு, 6 - க்கு மேற்கு, 7 - க்கு வடமேற்கு, 8 - க்குக் வடகிழக்கு, 9 - க்கு ஆகாசம், 10 - க்குப் பூமி, வழக்கு, சூது, யுத்தம், யாத்திரை இவற்றிற்கு யோகினி பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.


யோகினி திசை - யோகினி வரும் திசை

யோகினி தேவதையா நடப்பது. யோகினி நிற்கும் திசை. விவரம்: பூர்வ பட்சத்திற்கு பிரதமை முதல் மேற்படி பூரணை வரை முறையே கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, தெற்கு, மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு, ஆகாசம், பூமி, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, தெற்கு ஆகிய இத்திசைகளில் நிற்கும்.

அமர பட்சத்திற்கு பிரதமை முதல் மேற்படி அமாவாசை வரை முறையே மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு, ஆகாசம், பூமி, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, தெற்கு, மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு, ஆகாசம், பூமி ஆகிய இத்திசைகளில் நிற்கும் என்பதாகும். மேற்கூறிய இரு பட்சத் திதிகளுக்கு உரிய எந்தத் திக்கில் யோகினி நிற்கின்றதோ, அந்தத் திக்கிற்கு எதிராகவும், வலப்பக்கமும், பிரயாணம் செய்யலாகாது.

யோகினி வரும் திசை

இது குறித்து விதானமாலை எனும் நுால் இந்திரன், குபேரன், அக்கினி, நிருதி, யமன், வருணன், வாயு, ஈசானன், ஆகாயம், பூமி என்னும் பத்துத் திக்குமடைவே பூருவ பக்கத்துப் பிரதமை முதல் தசமியந்தம் யோகினி வரும். பின்பு ஏகாதசி முதல் அபர பக்கப் பஞ்சமி அந்தம் இப்படியே வரும். பின்பு சஷ்டி முதல் இப்படியே வரும். சூது, வழக்கு, யுத்தம், யாத்திரை இவற்றிற்குத் திதி வாரநாட் பிரதானமல்ல. யோகினி பிரதானம் என்றும் குறிப்பிடுகின்றது.

“கொடிகரி துாமநாய் சீயங்கொடு விடைவாயுவீச
னெடுவிண்ணிரயமெனுமடைவேநிறைபக்கத்தாதி
யடைவின் வருமென்பயோகினியாந்திதிவாரநாளும்
வடுவென்பர்சூதுவழக்கொடுபோர்வழிபோதற்குமே” (விதானமாலை, செ.42, ப.176)

எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.


சூ. உ எனும் நுால் யோகினி குறித்து பிரதமையும், நவமியும் கிழக்கே நிற்கும். ஏகாதசியும், திரிதிகையும் தென்கிழக்கே நிற்கும். திரயோதசியும், பஞ்சமியும் தெற்கே நிற்கும். துவாதசியும், சதுர்த்தசியும் தென்மேற்கே நிற்கும். சதுர்த்தசியும், சட்டியும் மேற்கே நிற்கும். உவாவும், சப்தமியும் வடமேற்கே நிற்கும். தசமியும், திரிதிகையும் வடக்கே நிற்கும். அட்டமி வடகிழக்கே நிற்கும். இவள் முன்னும், இடமும் தீயவள். பின்னும் வலமும் நல்லது என்று தெரிவிக்கின்றது.

“கருதுமுதல் பட்சமுடன் நவமிகிழக் காகும்
களிப்புடைய பதினொன்று மூன்றும்தென் கிழக்காம்
தெரியிலொரு பதிமூன்றும் அஞ்சும் தெற்காம்
செப்பரிய பனிரெண்டும் நான்கும் தென்மேல்
மருவுபதி நான்காறு மேற்கு வாவேழ்
வடமேற்காம் தசமியுடன் இரண்டும்வடக் காகும்
உரியவிரு நான்குவட கிழக்கே உண்ணும்
யோகினிமுன் இடம்தீய ஒழிந்ததிசை நன்றே” (சூ.உ, செ.56, ப.25)

எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.

நித்த யோகினி நிலை

பகலை 8 பங்காக்கி 1 வது பங்கில் கிழக்கிலும், 2 வது வடமேற்கிலும், 3 வது தெற்கிலும், 4 வது வடக்கிலும், 5 வது மேற்கிலும், 6 தென்கிழக்கிலும், 7 வது வடக்கிலும், 8 வது தென் மேற்கிலும் நிற்கும். யாத்திரைக்கு இந்த யோகினி பின் பக்கமும், இடப் பக்கமுமாக இருத்தல் வேண்டும். இதனைப் பார்க்கும் இடத்துக் கிழக்கை முதலாகக் கொண்டு பார்க்க வேண்டும்.

இவ்விதம் யோகினி அறிதல் நலம்.




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/general/p78.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License