இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

புரட்டாசி மாத பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை


கிரக பாதசாரங்கள்

சூரியன் - 1 - 9 உத்ரம், 10-23 - அஸ்தம், 24 -30 சித்திரை -கன்னி, 31 - துலாம்.

சந்திரன் - ஆயில்யம் - பூரம் வரை.

செவ் - 1 - 21 பூரம், 21 -26 - உத்ரம் - சிம்மம், 27 -31 கன்னி.

புதன்- 1 -7 பூரம் -சிம்மம். 8 -10 சிம்மம், 10 -15 கன்னி, 16 -22 - அஸ்தம் - கன்னி 23 - 26 சித்திரை - கன்னி, 27 -30 - துலாம், 31 - சுவாதி -1 விருச்சிகம்.

குரு -12 வரை சித்திரை 4 துலாம், 28 ல் சுவாதி -1 ல் துலாம்.

சுக்கிரன் - 1-9 மகம், 10 -19 பூரம் - சிம்மம், 20 -30 உத்ரம், 31 அஸ்தம் - கன்னி.

சனி - கேட்டை - 4 விருச்சிகம்.

ராகு - ஆயில்யம் - 4 கடகம்.

கேது - அவிட்டம் 2 மகரம்.

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

மேட லக்னத்தாருக்கு எண்ணங்களில் ஏற்படும் குறுக்குச் சிந்தனைகளால் அரச தண்டனை, அதற்கு நிகரான தண்டனை, மனைவி அல்லது கணவன் வகையில் அவப்பெயர்கள், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், சிறைத் தண்டனைகள், சிறைவாசம், எதிர்பாராத உடல் நலக்குறைவு, அசிங்கம், பெருத்த அவமானங்கள், வழக்கு, நோய் தொடர்ந்த பெரிய தொல்லைகள், கருமம் காரியம் ஏற்படுதல், மகவுகளின் வகையில் பெருத்த அவமானங்கள், 28 வரை மிகவும் மோசமான நிலைகள், தொழிலில் பெருத்த அவமானங்கள், சங்கடங்கள், 9 வரை பின்பும், தொல்லைகள், எடுத்த நினைத்த முயற்சிகளில் தோல்வி, வீண் விரயங்கள், அதனால் அவமானங்கள், நற்பெயர் கெடுதல் ஆகியன ஏற்படும். மனைவியின் உடல் நலம் கெடுதல், அறுவை சிகிச்சை மற்றும் தற்கொலைக்கான எண்ணங்கள், முயற்சிகள், மரண கண்டங்கள் நிகழ வாய்ப்புண்டு. களத்திராதி செவ்வாய், புதனுடன் இணைவதால் குடும்பம், மனைவி, கடன், எதிர்பாராத விபத்துகள், குடும்ப கௌரவம் கெடுதல், வண்டி வாகனங்களில் தடைகள், விபத்துகள், வேலையில் கேட்பார் பேச்சைக் கேட்டதினால் ஏற்பட்ட நிலையிலும், பெண்கள் சம்பந்தப்பட்ட நிலையிலும் அவப்பெயர்கள், கீழ்த்தர மக்கள் வகையில் தொழில், இலாபம் தொடர்ந்த நிலையில் அவமானங்கள் ஆகியன ஏற்படும். விரயத்துடன் கூடிய இலாபங்கள் ஏற்படும். புத்திர வகைகள், மனைவி, பெண்கள், கடன் வம்பு வழக்கு ஆகியவற்றில் விரயங்கள், தொல்லைகள், புத்தி தடுமாற்றம் ஆகியன ஏற்பட்டுப் பின்னர் தெய்வ வழிபாட்டினால் யாவும் சரியாகும். குருவின் பார்வையினால் பூர்வ புண்ணியத்தினால் விடுபட்ட சொத்து வகையில் இலாபம், அவமானங்கள் தொடர்ந்த வகையில் மண் மனை ஆதாயங்கள், வழக்குகளில், புத்திர வகையில் இலாபம் ஏற்படும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இது உங்களுக்கு மிகவும் யோகமான காலம். கல்வி வளர்ச்சி, சுகத்தானம் பலம் பெறல், வேலையில்லாதவர்க்கு அரசு அல்லது சிறந்த தொழில் அமைதல், செல்வவளம் ஏற்படுதல், சிறந்த புத்தி சாதுர்யம், குடும்பத்தில் மகிழ்வு, வேறு வீடு குடி புகுதல், இடமாற்றம் ஆகியன ஏற்படும். வேலை இல்லாதவர்கட்கு சிறந்த பணி அமைதல், பணியில் பதவி உயர்வு, வாக்குச் சாதுர்யம், எடுத்த காரியத்தில் வெற்றி, நிலைத்த தீர்மானமான முடிவுகள், பிதுர் வாழ்த்துக்கள், உயரிய வாகனங்கள் அமைதல், அரசாங்க ஆதாய அனுகூலங்கள் பெருகுதல், மேடைப்பேச்சு, பேச்சாற்றல், சிறந்த பொலிவு, புகழ், நற்பெயர், கடன், எதிரிகள், நோய் ஆகியவற்றில் இருந்து விடுபடுதல், வழக்குகளில் வெற்றி, வீட்டில் சுப நிகழ்வு, சுப பயணங்கள், இளைய சகோதர வகையில் இடர்ப்பாடுகள் தோன்றி விலகுதல் ஆகியன ஏற்படும். பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து 9,10க்குடையவன் பார்வையால் வாழ்க்கையில் கடினப்பட்டதற்கான பலன்கள் கிடைக்கும். உடல் நலனில் இரத்த அழுத்தம், நரம்பு பலகீனங்கள், மர்ம உறுப்புக்கள் பாதிப்படைதல், அறுவை சிகிச்சை, கரும காரியம் செய்தல் ஆகியன ஒரு சிலருக்கு ஏற்படும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வாக்கில் ராகு நிற்பதால் பெண்கள் சம்பந்தப்பட்ட வகையில் கலகம் ஏற்பட்டு நன்மையிலேயே முடியும். சகோதர வகையில் ஆதாய அனுகூலங்கள், அறிவு மேம்பட்ட நிலை, ஐந்தில் குரு மிஞ்சு பலன் செய்வான்! ஐந்தாமிட குருவினால் சுபம், தொழில் தொடர்புடைய இலாபம், சனியினால் வளர்ச்சி, முன்னேற்றம், வீட்டில் சுப, அசுப மகவு வகை செலவினங்கள், சுப அசுப பயணங்கள், விட கண்டப் பீடைகள், கடல் கடந்த வெளிநாடு வருமானங்கள், தந்தையினால், தாயினால் நன்மை, பெயர், புகழ் முன்னேற்றம் ஆகியன ஏற்படல், சிறந்த தொழிலின் வழி நல்ல இலாபங்கள், சில இடையூறுகள், குடும்பம், சகோதரம் வகையில் உடல், மருத்துவம் தொடர்பான அசுப செலவினங்கள், பணியில் பெயர், புகழ், கௌரவம், மேன்மை நிலை, அதிகாரத் தன்மை, சில இடையூறுகள், தைரியம், இலாபங்களை தொழிலில் முதலீடு செய்தல் ஆகியன ஏற்படும். யாவும் வாக்கில் எப்போதும் சத்தியம் இருப்பின் வெற்றி நிச்சயம்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

கடக ராகு நன்மையைச் செய்பவனே! அரவுகளின் பார்வை வருடக்கணக்கில் பிரிந்த தம்பதியினரை ஒன்று சேர்க்கும். குடும்பத்தில் பிரிவிற்கான காரணங்களைச் சுட்டி விளக்கிப் பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்காமல் சேர்த்து வைக்கும். நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்தும். கணவன் அல்லது மனைவியின் சொற்படியே மிகுந்த நன்மை ஏற்படும். நேர்மையான நல்ல கணவன் அல்லது மனைவி, நல்ல குடும்பம், ஆகிய இவற்றினால் எப்போதும் நன்மை. இடையறாத உழைப்பினால் சரியான இலாபங்களும், முதலீடுகளும், அதன் வழி சில இடையூறுகளும், தீர்வுகளும் ஏற்படும். பல இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள். பூர்வ புண்ணியாதியின் பார்வை படும் இடங்களினால் கண்டங்கள் விலகுதல், ஆயுள் நலம் பெறுதல், தொழிலில் மேன்மையான நிலை, ஆலயம் தொடர்பான சுப பயணங்கள், வாக்குத்தானம் பலம் பெறுவதால் மிகுந்த நற்பலன்கள் ஆகியன ஏற்படும். சிறந்த தைரியம். நல்ல மேன்மையான நிலை, தெளிவு, குழந்தைகளினால் மிகுந்த நற்பெயர், பெண்கள் வகையில் ஆதாய அனுகூலங்கள், வாகன வசதிகள் ஏற்படல், நல்ல இலாபங்கள் ஈட்டுதலில் கடின முயற்சிக்கு ஏற்றபடி சிறப்பாய் அமைதல், மிகுந்த அதிட்டம் அமைதல், வேலையில்லாதவர்க்கு அரசு அல்லது சிறந்த தொழில் அமைதல், செல்வவளம் ஏற்படுதல், சிறந்த புத்தி சாதுர்யம், குடும்பத்தில் மகிழ்வு, வேறு வீடு குடி புகுதல், இடமாற்றம் வேலை இல்லாதவர்கட்கு சிறந்த பணி அமைதல், பணியில் பதவி உயர்வு, ஆயுள் நலம் பெறுதல், மகான்கள், தீர்க்கத்தரிசிகளின் ஆசிகள் ஆகியன ஏற்படும். வாகனங்களில் செல்லுகின்ற போது கவனம் தேவை. பெண்கள், குடும்பம் தொடர்ந்த அவமானங்கள், வம்பு, வழக்குகள், ரத்த அழுத்த மாறுபாடுகள், அதனால் விரயங்கள் ஆகியன ஏற்படும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறுதல், அரசு தொடர்ந்த ஆதாய நன்மைகள். மருத்துவம், கணிதம், இராணுவம் ஆகிய துறை தொடர்ந்த வாய்ப்பு எதிர்பார்த்தவர்கட்குக் கல்வி, கல்லூரி, பணி சார்ந்த நிலையில் அவரவர் விரும்பும்படி அமையும். தொழிலில் சிறந்த வளர்ச்சி, மேன்மைகள், முதலில் கடினப்பணி, பின்னர் நன்மை, பொன், பொருள், ஆடைகளை அணிதல், வாங்குதல் ஆகியன ஏற்படும். சிறந்த இலாபங்கள், சகோதர, சகோதரிகளினால் ஆதாய அனுகூலங்கள் ஆகியன ஏற்படும். நீர் ராசியில் ராகுவினால் வெளிநாடு செல்லும் யோகம் சிறப்பாய் அமையும். 3 ல் குரு மறைந்தாலும் தன் பார்வையினால் மிகுந்த நன்மையைச் செய்கின்றார். நல்ல செல்வ வளம் அமையும். சிறந்த நேர்மையினால் மிகுந்த நற் பலன்களை அடைவீர்கள்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தந்தை, இளைய சகோதரர், தொலை தொடர்புகள், காது மந்தம், தொழில் தொடர்ந்த செலவினங்கள், அறுவை சிகிச்சைகள், ஆகியன ஏற்படும். பின்னர் இவற்றினால் மேன்மையும், புகழும், கௌரவமும் ஏற்படும். இருப்பினும் தன் வளர்ச்சி, வீட்டில் சுப நிகழ்வினால் செலவினங்கள் ஆகியன ஏற்படும். கடன்கள், நோய், வம்பு, வழக்குகளில் இருந்து விடுபடுதல், தொழிலில் மேம்பட்ட நிலை அமையும். நல்ல குடும்பம், குடும்பத்தில் மகிழ்வு, அமைதி, வாக்கு பிரசித்தி பெற்று நிற்றல், பூர்வ புண்ணிய பலன்கள். புத்திர வகை பலன்கள், ஆயுள் நலம் பெறல் ஆகியன வெகு சிறப்பாய் அமையும். தந்தைக்கு ஆபத்து, உடல் நலிவு முதலியன ஏற்பட்டு பின்னர் அவர்களினால் நன்மை ஏற்படும். 15 ற்குப் வெகு சிறப்பான இராஜயோகப் பலன்கள் பெயர், புகழ், கௌரவம், வளர்ச்சி, சன்மானம், விருதுகள், தொழிலில் மேன்மை, உயர் கல்வியில் மேன்மை, எவ்வகைச் செயலிலும் மிகுந்த இலாபங்கள், அரவுகளுக்கு சாந்தி செய்தல், மிகுந்த நன்மை தரும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெயர், புகழ். கௌரவம், மரியாதை ஆகியன ஏற்படும். சிறந்த புத்தி மேன்மை, வீட்டில் சுப நிகழ்வுகள், கல்வி, கல்லூரி, பணி ஆகிய வாய்ப்புகள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அமையும். மூத்த சகோதரர்களினால் செலவினங்கள் ஏற்படும். பூர்வ புண்ணியம் பலப்படுவதால் இம்மாதம் வெகு சிறப்பாய் எண்ணியது ஈடேறும். இலாபத்தில் கிரகங்கள் இயங்குவதால் மிகுந்த இலாபங்கள், நற்பயன்கள், சுப விரயங்கள், கண் பாதிப்பு அடைதல், அதே சமயத்தில் அசிங்கம், அவமானங்கள், அலைச்சல்கள் ஆகியனவும் ஏற்படும். தொழில் ஸ்தானத்தில் ராகு நிலவுவதால் கடல் கடந்த, வெளிநாடு முதலியவற்றில் எதிர்பார்த்தவருக்கு ஏற்றபடி நன்மையைத் தருவான். இருப்பினும் குடும்பத்தில் குதர்க்கம், பிரச்சினைகள் எப்போதும் இருக்கும். தொழிலில் வருமானம் அற்ற நிலையில் நற்பெயர், கௌரவம், புகழ் ஆகியவற்றைச் சில நாட்களுக்கு ஏற்படுத்துவார். பின்னர் நல்ல வருமானம் ஏற்படும். வீட்டில் சில பிரச்சினைகள், எளிய வகை உணவுகள், விரதம் அல்லது வீணாய்ப் பட்டினியாய் இருக்கும் நிலை, பொருளாதாரத்தில் சிக்கலான நிலை ஆகியன நிலவும். இருப்பினும் குரு கடாட்சம் பரிபூரணம் பாக்கியத்தானம் பலப்படுவதால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடுதல், தந்தை வகையினில் பெருத்த நன்மை, செலவினங்கள் ஏற்படல் ஆகியன அமையும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சோம்பல், மந்தத்தனம், நற்பெயர் வாங்குதல், அமைதியான நல்ல குடும்பம், வாக்குவாதங்கள், எதிரிகள் தொலைதல், நல்ல பதவி சிறப்பாய் அமைதல் ஆகியன ஏற்படும். பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுதல், தொழிலில் நன்மையும், அவமானமும், சிக்கல்களும், தொலைதூர ஆன்மீகப் பயணங்களும், மனைவி, மக்களுடன் வெளியூர் பயணங்களும் அமையும். மிகுந்த நல்ல இலாபம், தொழிலில் மேன்மை, சுப விரயங்கள், வளர்ச்சி முன்னேற்றங்களில் சில தடைகள், கால்நடை, வாகனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குதல், எதிரி, நோய், கடன், வம்பு வழக்குகளில் இருந்து விடுபடுதல், அசிங்கம், அவமானங்கள், ஆயுள் கண்டங்களில் ஆகிய இவற்றில் இருந்து விடுபடுதல் ஆகியன அமையும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

இளைய சகோதர ஆதாயங்கள், குழந்தைப் பாக்கியம், புத்திரர் வகை நன்மைகள், சுபச் சடங்குகள், மனைவி, வளர்ச்சி, விருதுகள், சுப நிகழ்வுகள், விட கண்டங்கள், ஆயுள் கண்டப்பீடை, அரசாங்கம், தந்தையினால் நன்மை. மனைவி அல்லது கணவனுடன் மற்றும் தந்தையுடன் தொழில் சேர்ந்த நிலை, தொழில், குழந்தைகள், உடல் நலம், இலாபம், தொழில் நிலையில் சுக வாகனங்கள் வாங்குதல், வாகனங்களில் செல்லுதல், அலைச்சல், வீண் விரயங்கள், குடும்பம், இளைய சகோதரம் தொடர்ந்த பயணச் செலவினங்கள், எதிரிகள், நோய், கடன், வம்பு, வழக்குகள் ஆகியன வலுப்படல், கருமத்தானம் வலுத்திருப்பதால் இறப்பு, கரும காரியம், குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படும்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குரு செய்யும் தொழிலில் முதலில் பறித்து அதை விட வேறு நன்மையும், இலாபமும் தரத்தக்க சுப செலவினங்களுடன் கூடிய நல்ல பொறுப்புள்ள பதவியைத் தருவான். பதவியில் ஏற்பட்ட சிக்கல்களை விலக்குவான். சிறந்த இலாபங்களும், எண்ணியதைச் சாதித்தலும், விசம் மற்றும் விசம் தொடர்புடைய பூச்சிகளினால் கண்டங்களும், பூசை சிறந்த வழிபாடுகள், பணி நிலையில் நல்ல பெயர், புகழ், கௌரவம், சிறந்த பதவி ஆகியன ஏற்படல், அதனால் நல்ல ஊதியம் தொடர்ந்த உயர்ந்த நிலை, தைரியத்தானம் வலுப்பதால் தைரியம், பேச்சாற்றல், மிகுந்த புத்திக்கூர்மை ஆகியன ஏற்படும். தனாதி இலாபத்தில் இயங்குவதால் கடினப்பட்டதற்கான இலாபங்கள் ஆகியன அமையும். செல்வவளம், குடும்பத்தில் வீட்டு உபயோகப்பொருட்கள், வீடு மாறுதல். எதிரிகள் தொல்லை, வழக்கு, நோய் முதலானவற்றில் இருந்து விலகி நன்மை அடைவர். சிரமப்பட்டதிற்கான பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, இலாபம் ஆகியவை மேம்படும். சோதிடம், ஆன்மீகம், மருத்துவம் சார்ந்த துறையினர் வெகு பிரசித்தி பெறுவர். ஆன்மீகச் சிந்தனைகள் மிகுந்த நற்பலன்கள் தரும். வளர்ச்சி முன்னேற்றங்கள், உடல் நலத்தில் முன்னேற்றங்கள் காணப்படும். பூர்வ புண்ணியம் பலப்படுவதால் உயர் அதிகாரிகள் பாராட்டு, திடீர் தனம், விருதுகள், சன்மானங்கள் ஆகியன யாவும் பொன், வெள்ளி, பட்டு முதலிய உயரிய வகைப் பொருட்கள், உயரிய மரியாதை, களங்கப்பட்ட அவமானத்தின் வழி குடும்பம், குழந்தைகள், தொழில், வெளிவட்டாரம் ஆகிய எல்லாவற்றிலும் இவர்களின் உண்மையான நற்செயல்கள் யாவும் வெளிப்பட்டு வெகு புகழ் பெறுவர். இவர்கள் பெற வேண்டிய நற்பலன்கள் யாவும் வெகு சிறப்பாய் பெறுவர்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

பெயர், புகழ், அந்தஸ்து, தைரியம், தன்னம்பிக்கை, ஆடை ஆபரணச் சேர்க்கைகள், குழந்தைகளினால் நன்மை, குழந்தைப்பேறு, எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு, எதிரிகள் தொல்லை, நோய், கடன், வம்பு வழக்குகள் பின்னர் அவர்களினால் நன்மை, வளர்ச்சி முன்னேற்றங்களில் சில தடைகள், மிகுந்த தைரியம் ஏற்படல், தொழிலில் பணி உயர்வு ஏற்பட்டு சில இடையூறுகள், கருமம் காரியம் தொடர்ந்த செலவினங்கள், தாயாருக்கு உடல் நலிவு, வனவாசம், வாழ்க்கையில் பற்றற்ற நிலை, தெய்வீகச் சிந்தனைகள், அலைச்சல்கள், தொழில் தொடர்ந்த ஆன்மீக பயணங்கள், பதவியில் நற்பெயர், முன்னேற்றம், தொழில், கௌரவம், இளைய சகோதர வகையில் இடர்ப்பாடுகள், செலவினங்கள், சிக்கலுடன் கூடிய வருமானங்கள், ஆன்மீகம் தொடர்ந்த பயணங்கள், வழிபாடுகள் ஆகியன அமையும். குருவின் பார்வையால் நன்மை அடைவர்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

எதிரிகளின் தொல்லை, வலுத்துக் காணப்படுவதால் எச்சரிக்கை தேவை. கௌரவக் குறைவு, புத்தியின் மாற்றங்களை ஏற்படுத்தும். இருந்தும் கெடுதல் செய்யாது. மிகக் குறைந்த இலாபங்கள், தன் சொல்லே தனக்கு எதிரியாய் நிற்கும் நிலை, சுப செலவினங்கள், குடும்பம் அமைதல், திருமணம் அமைதல், வீட்டில் வண்டி வாகனம், வீடு மாறுதல், சுப அசுப பயணங்கள், பால், செல்வ வளம், சுப நிகழ்வுகள் ஆகியன சிறப்பாய் அமைதல், தந்தைக்கு உடல் நலிவு, இளைய சகோதர வகையில் பிரச்சினைகள், குடும்பம், தந்தை, தாய், கணவன் அல்லது மனைவி, வயிறு, வெப்பம், இரத்த அழுத்தம் தொடர்ந்த நிலையில் உடலில் சில தொல்லைகள், தந்தைக்கு, இளைய சகோதரருக்கு அறுவை சிகிச்சைகள், வளர்ச்சி முன்னேற்றங்களில் இலாபத்துடன் கூடிய செலவினங்கள் ஆகியன ஏற்படும். வளர்ச்சி முன்னேற்றங்களில் இருந்து வந்த தடைகள் யாவும் பின்னர் விலகும். தைரியம், புத்திச்சாதுர்யம், குடும்ப மேன்மை, தேகப் பொலிவு, ஆகியன ஏற்படும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/rasipalan/2017/purattasi.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License