விளம்பி வருடம் - ஐப்பசி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் - 1-7 சித், 7-20 சுவாதி, 20-30 விசாகம், துலாம்.
சந்திரன் - திருவோணம் முதல் அவிட்டம் வரை.
செவ்- 2-8 திருவோணம், 8-20, அவிட்டம், மகரம், 20 முதல் கும்பம்
புதன் - 8 வரை விசாகம் துலாம், 9-12 விசாக, விருச்சிகம், 12-24 அனுடம், 24 முதல் கேட்டை விருச்சிகம்.
குரு - 0 வரை விசாக 4, 10 முதல் அனுடம் விருச்சி
சுக்கிரன் - 12 வரை சுவாதி துலாம். 13 முதல் சித், துலாம். 30 வக்ர நிவர்த்தி.
சனி - 4 முதல் மூலம் 4 தனுசு.
ராகு - 14 வரை பூசம் 2, 15 முதல் பூசம் 1 கடகம்.
கேது - 14 வரை உத்திராடம் 4, 15 முதல் உத்திராடம் 3 மகரம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சுப வெளியூர் பயணங்கள், சிறந்த தனவரவு, வீட்டில் தொல்லைகள் இருந்தாலும் நல்ல மகிழ்வு, வண்டி வாகன வசதிகள், மகிழ்வான நிலை, இலாபங்கள், வர வேண்டிய நிலுவைத் தொகை, மனைவி, புத்திரர்களுடன் கருத்து மாறுபாடு, கௌரவ பகட்டான ஆடம்பரச் செலவினங்கள், குடும்பத்தில் பிணக்கு, எதிரி கடன் தொல்லை, கரும காரியம் நிகழ்தல், சாதகருக்கு உடல் பீடை தருதல் ஆகியன நிகழும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
எதிர்பார்த்த சிறந்த இலாபம், கடன் உதவி பெறுதல், பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்படுதல், இளைய சகோதரத்தினால் தொல்லைகள் இருந்த போதும் நன்மையே. ஆடை, ஆபரணம் சேர்க்கை ஏற்படும். தந்தையுடன் கருத்துப்பிணக்கு, பணியில் கடின நிலை, சிறந்த தைரியம், குடும்பத்தாரால் சுபச்செலவினம், வெளியூர் பயணம், வயிற்று வலி, தந்தையார் வகை கரும காரியம் நிகழ்தல், வெப்பம் தொடர்ந்த தொல்லைகள், குறைந்த இரத்த அழுத்தம், மயக்கம், அலைச்சல் ஆகியன ஏற்படும். உடலில் கவனம் தேவை.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
உடல் தளர்ச்சி, சோர்வு, தந்தையார் உடல் நலிவு, புத்திரச்சோகம், வீட்டில் வாக்குவாதம், தொல்லைகள், சிறந்த பணி அமைதல், சுப வெளியூர் பயணங்கள், வழக்கில் வெற்றிக்கான சூழல், எதிரிகள் பலமிழத்தல், உடல் அறுவை சிகிச்சை, எதிர்பாராத வகையில் தலையில் காயம் அல்லது அடி ஏற்படல் கவனம் தேவை. நரம்பு புதிய வகை நோய் தாக்கல், பல் வலி, பல் சொத்தை ஆகியன ஏற்படும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வழக்கில் இன்னல், தண்டம் கட்டுதல், தண்டனை அமைதல், சிலருக்குச் சிறைவாசம் அமைதல், கடினமான நிலைமை, தொழிலில் சிறப்பாய் பொறுப்புகளுடன் கூடிய உயர் பதவி நிலை, அதனால் இலாபங்கள், தந்தை வகையில் ஆதாய அனுகூலம், விட கண்டங்கள், முன்னேற்றத் தடைகள், மனைவி, உடல் பாதிப்பு, வழக்கு இவற்றின் வழி எதிர்பாராத செலவினங்கள், தாயாரால் மிகுந்த நன்மை, இரண்டாம் தர வண்டி வாகனங்கள், பழைய வீடு வாங்குதல், புதுப்பித்தல், அரசாங்கத்தால் சொத்து அமைதல், சிறந்த நற்பலன்கள் ஆகியன அமையும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழிலில் சிறப்பாய் பொறுப்புகளுடன் கூடிய உயர் பதவி நிரந்தரமாய் அமைதல், பெரியோர், மகான், ஞானிகளின் ஆசி கிடைத்தல், செவ்விலங்குகளினால் ஆபத்து, வீட்டில் மகிழ்வு, வண்டி, வாகன வசதிகள் கடனில் சிறப்பாய் அமைதல், குழந்தைகளினால் சிறு தொல்லைகள், உறக்கமின்மை, அலைச்சல், நிம்மதியின்மை, அலைச்சலுடன் கூடிய வெளியூர் ஆன்மீகப் பயணங்கள் ஆகியன அமையும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த இலாபம் அமைதல், திருமணம் கூடுதல், வீட்டில் சுப நிகழ்வு, தந்தையால் ஆதாய அனுகூலம், முத்த சகோதரத்தால் அதிக நன்மை, பணியில் கடினமான நிலைமை, பொறுப்புக்கள் அமைதல், அதனால் நற்பெயர் ஏற்படல், அனல், எதிரி வகையில் கவனம் தேவை.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
எதிரி, கடன், நோய், வம்பு வழக்குகளில் இருந்து விடுபடுதல், வெற்றி பெறுதல், அதன் வகை ஆதாயங்கள், சிறப்பாய் தொழில் அமைதல், தொழிலில் பல மாற்றங்கள், முறையற்ற நிலைக்கும் தள்ளும் ஆதலின் நேர்மை மிக அவசியம். கவனம் தேவை. சிறைவாசம், அரசாங்கத் தண்டனை கிடைக்கும். தாயாருக்குக் கண்டம். சிறந்த தனவரவு, இலாபம், வீட்டில் மகிழ்வு, தந்தையால் ஆதாயம் ஆகியன அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வீட்டில் சுப நிகழ்வுகள், புத்திரர் உற்பத்தி, திருமணம் முதலிய நிகழ்வுகள், தந்தைக்கு கண்டம் வந்து விலகி அவரால் நன்மை கிடைத்தல், பணியில் அலைச்சல், வெளியூர் பயணங்கள், வீட்டில் சில தொல்லைகள், உடல் சோர்வு, பெயர், புகழ் மேம்படுதல், கடினமான நிலை, வயிற்று வலி, குறைந்த இரத்த அழுத்தம், மர்ம உறுப்புகள் பாதித்தல் ஆகியன ஏற்படும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சோம்பல், மந்தமான கடின நிலை, தளர்ச்சி, சிறந்த தைரியம், குடும்பத்தாருடன் சுப வெளியூர் பயணங்கள், தந்தையால் ஆதாயம், புதிய வண்டி வாகன வசதிகள், புதிய வீடு வாங்குதல் முதலியன சிறப்பாய் அமைதல், உடல் பீடை விலகுதல், சிறந்த இலாபங்கள் ஆகியன அமையும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பொன், வெள்ளி, ஆடை ஆபரணச் சேர்க்கைகள் முதலியன அமைதல், ஏழரைச் சனியின் பிடி இருந்தாலும் நேர்மையாய் இருப்பின் யாவும் நன்மையே. பயம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எதிரிகள், வழக்கு முதலியவை சாதகமாய் அமையும். வழக்கு வில்லங்கத்தினால் இலாபம், நன்மை ஏற்படும். நிதானித்த நல்ல ஆதாயத்துடன் கூடிய முடிவுக்கு வரும். பணி வளர்ச்சி நிலையில் இருந்த சிக்கல்கள் யாவும் விலகி எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு நல்ல இலாபத்துடன் அமையும். இளைய சகோதிர வகையில் சுப செலவினங்கள், அதனால் இலாப நன்மைகள் ஏற்படும். வீடு, மண், மனை முதலியன அமையும். சொந்த வீடு குடி புகல், அல்லது வேறு வீடு மாறுதல் அமையும். உடல் அசதி இருக்கும். காரியத் தடைகள் இருப்பினும் வீட்டில் சுப நிகழ்வுகள் ஏற்படும். உறவினர் தொடர்ந்த மகிழ்வான வெளியூர் பயணங்கள் அமையும். வர வேண்டிய நிலுவைத்தொகை வரும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வீட்டில் மகிழ்வு, இலாபத்துடன் கூடிய ஆன்மீகப் பயணங்கள், வண்டி வாகன வசதிகள் அமைதல், வழக்கில் பல இடையூறு இருப்பினும் வெற்றி பெறுதல், மனைவி, தாய், தந்தைக்கு கண்டம், பீடை, வளர்ச்சி நிலையில் தடைகள், விட கண்டங்கள், பணியில் பல சிக்கல், வேறு வேலை மாற்றி அமைத்தல் ஆகியன ஏற்படும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பணி, பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து சிறப்பாய் அமைதல், நல்ல முன்னேற்றம், எதிரிகளினால் ஆதாயம், தொழிலில் சிக்கல், செலவு இருப்பினும் நன்மையே. பொன், வெள்ளி, ஆடை ஆபரணச் சேர்க்கைகள் முதலியன அமைதல்,வீடு பழுது பார்த்தல், குடும்பத்தாருடன் சில பிணக்குகள், வீடு வேலை ஏதேனும் செய்தல், மிகுந்த பூர்வ புண்ணியப்பலன்கள் ஆகியன அமையும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.