விகாரி வருடம் - ஆவணி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன்3 -13 மகம் - சிம்மம்.14 - 26 பூரம் - சிம்மம். 27 - 30 சித் - சிம், 31 - கன்னி.
சந்திரன் - பூரட்டாதி - அசுவினி
செவ் - 2 – 11 மகம், 12 பூரம் - சிம்மம்.
புதன் - 1 பூசம் - கடகம், 2 – 8 ஆயில்யம் – கடகம், 9 – 15 மகம் – சிம்மம், 16 – 22 பூரம் 23 வரை சிம்மம், 23 – 29 உத்ரம், 24 - கன்னி. 30 அஸ்தம் கன்னி.
குரு - கேட்டை 2 விருச்சிகம்.
சுக்கிரன் - 2 - 9 மகம் – சிம்மம். 10 – 20 பூரம் சிம்மம் 21 – 22 உத்ரம் சிம்மம். 23 உத் கன்னி.
சனி - 1 – 14 பூராடம் 3, 15 ல் வக்ர நிவர்த்தி பூராடம் 2 தனுசு.
ராகு - 1 – 24 புனர்பூசம் 1, 25 திருவாதிரை 4 மிதுனம்.
கேது - 1 – 24 பூராடம் 3, 25 பூராடம் 2 தனுசு.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தந்தை, அவர் வழி மூதாதையர் வகையில் தொல்லைகள், தன் வாக்கினால் இடையூறுகள் ஏற்படுதல், செலவினங்கள், திடீர் பயணங்கள் ஏற்படுதல், வர வேண்டிய இலாபம், தொழில் முடக்கம் இதில் தடைகள் இருப்பது ஆவணி 15 க்கு மேல் விலகும். எனினும் நேர்மையாய் இருப்பது மிகவும் அவசியம். அளவு கடந்த சோதனைகள் இருக்கும். புத்திரர், களத்திரம், வளர்ச்சி முன்னேற்றம், இளைய சகோதிரம் வழி மகிழ்வான நிகழ்வுகள், தனது செயலினால் உடல், வம்பு, வழக்கு, கடன் வகையில் சில அவமானங்கள் ஏற்படும். இரத்த அழுத்தம், நரம்பு தொல்லை தொடர்ந்த உடல் உபாதை ஏற்படும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த இலாபம் அமைதல், மகிழ்ச்சி, முன்னேற்றம், ஆடை ஆபரணங்கள் சேர்தல், சுப மகிழ்வான நிகழ்வுகள், தாய், சாதகர் உடல் நலனில் முன்னேற்றம், சுப செலவினங்கள் அமைதல், புதிய வாகனங்கள் அமைதல், வெளியூர்ப் பயணங்கள் செலவுடன் அமைதல், தந்தையுடன் கருத்துப் பிணக்குகள், பல் வலி, விடம் தொடர்ந்த கண்டங்கள் அமைதல், வயிற்று வலி, மர்ம உறுப்பு, இரத்த அழுத்த மாறுபாடு, கருமகாரிய நிகழ்வுகள் அமைதல் ஆகிய இவை தொடர்ந்த வலி அமையும். தொழிலில் இருந்த இடையூறு விலகும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
எடுத்த காரியங்களில் தடை, வளர்ச்சி, முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் யாவும் இம்மாதம் 15ம் தேதிக்குப் பின் அமைதியான நிலை திரும்பி மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும். இளைய, மூத்த சகோதிரம், புத்திரர் வகையில் ஆதாய அனுகூலங்கள், இலாபங்கள், சுப செலவினங்கள், வெளியூர்ப் பயணங்கள், நல்ல தனவரவு, புதிய வாகனங்கள் தவணை முறையில் வாங்குதல் முதலியன அமையும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரர், தொழில், குடும்பம், மூத்த, இளைய சகோதிரர் வகையில் மகிழ்வு, சில சிரமங்கள், சிறந்த தனவரவு, ஆடை ஆபரணச் சேர்க்கை, இலாபத்தில் தடைகள், அவமானங்கள், உறக்கமின்மை, விடகண்டங்கள், வழக்கினில் வில்லங்கங்கள் ஆகியன அமையும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பணியில் புதிய தலைமைப்பதவி, பொறுப்புகள் கூடுதல், பெற்றோரால் ஆதாயம், மண்மனை வாங்குதல், தொழிலில் மாற்றங்கள், முன்னேற்றங்கள், புத்திரர், மூத்த சகோதிரர் வழி சில சிரமங்கள், தலை சுற்றல், மயக்கம், இரத்த அழுத்த மாறுபாடு, நரம்புகளில் அசதி ஆகியன அமையும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கல்வி, வளர்ச்சி, தொழில் முன்னேற்றங்கள், சிலருக்கு திருமணம் திடீரென கூடி வருதல், புத்திரர், கடன் வம்பு வழக்கு எதிரி வகையில் தொல்லைகள், கரும காரிய நிகழ்வுகள், சாதகர்க்கு உடல் உபாதை, தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. தந்தை, இளைய சகோதிர வகையில் அதிகச் செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் ஆகியன அமையும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பம், வளர்ச்சி, முன்னேற்றம் வழி சிறந்த இலாபம், வீட்டில் மன மகிழ்வு, தொழிலில் மாற்றம், தந்தை, இளைய சகோதிரம், சாதகர் வழி அதிகச் செலவினங்கள், மருத்துவச் செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் ஆகியன அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தில் சில இடையூறுகள், தொழிலில் பெருத்த மாற்றங்கள், சிறந்த இலாபம், அவை தொடர்ந்த செலவினம், பணியில் சுமை, பொறுப்புகள் கூடுதல், கல்வி, பணி, துணை, வளர்ச்சி, முன்னேற்றம் தொடர்ந்த வெளியூர்ப் பயணங்கள் ஆகியன அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சோம்பல், தடைகள் நிலவி வந்தவை இம்மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு விலகும். மாற்றங்கள் நிகழும். தந்தையார், மூத்த சகோதிரர் வகையில் ஆதாயங்கள் கிடைக்கும். புத்திரர் ஆகிய இவை தொடர்ந்த வகையில் செலவினங்கள், குடும்பத்துடன், தனது பணி தொடர்பாகவும் ஆக வெளியூர்ப் பயணங்கள் அமையும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
உடல் நலனில் மாற்றங்கள் நிலவும். 15 ஆம் தேதிக்குப் பிறகு பின் பணியில், தனவரவில் மகிழ்வான நிலை காணப்படும். வளர்ச்சி, முன்னேற்றங்கள் காணப்படும். இளைய சகோதிரர் வகையில் வர வேண்டியவை கிடைக்கப் பெறும். ஆடை ஆபரணங்கள் முதலானவை அமையும். பதிப்பு, பணி, புத்திரர், மூத்த சகோதிரர், உயர் அரசாங்க அதிகாரி ஆதாயங்கள், தந்தை வழி வகையில் வர வேண்டியன மேலும் கூடுதலாய் தனவரவில் சிறிது சிரமத்தின் பேரில் அதிக இலாபத்துடன் இம்மாத இறுதியில் கிடைக்கப்பெறும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பணி தொடர்ந்த சிறப்புகள் கௌரவமாய் அமையும். அரசாங்கச் சிறப்புகள் கிடைக்கும். புத்திரர் வகைச் செலவினங்கள் உண்டு. சிறந்த தனவரவு, வாகன சுகம், வளர்ச்சி முன்னேற்ற மரியாதை, பெற்றோரால் ஆதாயங்கள், இரத்த அழுத்த மாறுபாடு ஆகியன கிடைக்கும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கரும காரிய இடையூறுகள், தொழிலில் கடின சுமை இருந்து வந்த யாவும் 15 ஆம் தேதிக்குப் பிறகு விலகி நன்மை அமையும். கடன், வம்பு வழக்குகள் வலிமை பெறுலதால் கவனம் தேவை. வயிறு, இரத்த அழுத்தம், மர்ம உறுப்பில் பாதிப்பு ஏற்படலாம். பணியில் புதிய மாற்றங்கள், வளர்ச்சி, முன்னேற்றங்கள், தாய் மற்றும் குடும்பத்தினரால் நன்மை ஏற்படும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.