விகாரி வருடம் - புரட்டாசி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன்3 - 9 உத், 10 – 23 அஸ்தம், 24 – 29 சித் கன்னி, 30 துலாம்.
சந்திரன் - அசுவினி – கிருத்திகை.
செவ் - 2 – 7 உத் - சிம்மம். 8 – 22 உத், 23 – அஸ்தம் கன்னி.
புதன் - 6 அஸ்தம் கன்னி, 7 – 11 சித், 12 - 15 சித் துலாம், 16 – 25 சுவாதி, 26 விசாகம்
குரு - 1 – 7 கேட்டை 2, 8 – 29 வரை கேட்டை 3, 30 கேட்டை 4 விருச்
சுக்கிரன் - 10 அஸ்தம், 11 – 15 சித் கன்னி, 16 – 21 சித், 22 ல் சுவாதி துலாம்.
சனி - 1- 16 பூராடம் 2, 17 முதல் பூராடம் 3 தனுசு.
ராகு - திருவாதிரை 4 மிதுனம்.
கேது - பூராடம் 2 தனுசு
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழில், தந்தை, மூதாதையர் வகை, சொத்து, வழக்கு, வில்லங்கங்கள், இளைய சகோதிர வகை ஆகியவற்றில் இடையூறு, குடும்பம், வளர்ச்சி, முன்னேற்றம், தாயார், வாகனம், புத்திரர் ஆகிய நிலைகளில் செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் அதிகமாக ஏற்படும். திடீர் சண்டை சச்சரவுகள் ஏற்படும். களத்திரத்துடன் கருத்து மாறுபாடு அதிகமாய்க் காணப்படும். உடல் நலனில் அதிகக் கவனம் தேவை. இரத்த அழுத்த மாறுபாடு, நரம்பு பலகீனங்கள், காயங்கள் மர்ம உறுப்பு பாதித்தல் ஆகிய இவற்றில் செலவினங்கள், இவை தொடர்ந்த பயணங்கள் அமையலாம்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாயார், சாதகர் முயற்சி, களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், புத்திரர், குடும்பத்தின் வழி பெருத்த நன்மைகள், இலாபங்கள் அடைவீர். மகிழ்ச்சிகரமான பயணங்கள், செலவினங்கள் ஆகிய இவை தொடர்ந்தனவாய் அமையும். குடும்பத்தில் எப்போதும் இடையூறுகள் இருக்கும். இருப்பினும் தந்தையார் வழியில், பணி, இலாபம் ஆகியவற்றில் கடின நிலை காணப்படினும் மிகுந்த இலாபம், நன்மை இருக்கும். சாதகருக்கு, வளர்ச்சி, முன்னேற்றம், ஆடை ஆபரணச் சேர்க்கை ஆகியன அமையும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
எஎடுக்கும் காரியங்களில் தடை இருப்பினும் முயற்சியும் வெற்றியும் நன்மை தரும். அதற்கான செலவினங்கள், இலாபங்கள் கிடைக்கும். பணியில் பல மாறுதல், இலாபம் கூடுதல், கூடுதல் பணிப் பளு அமைதல், சிலருக்கு அரசாங்க உத்தியோகம் கூடி வருதல், புத்திரர்களினால் குடும்பத்தில் மகிழ்வான செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் ஆகியன அமையும். களத்திரத்துடன், தந்தையாருடன் கருத்து மாறுபாடு காணப்படும். அலைச்சல், மனத்தெளிவின்மை, மிகுந்த கோபம் காணப்படும். நிதானம், அமைதி தேவை.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
அலைச்சலுடன் கூடிய அதிகப் பயணங்கள், செலவினங்கள், வீண் அலைச்சல், உறக்கமின்மை, களத்திரம், வளர்ச்சி முன்னேற்றத்தில் கருத்து மாறுபாடான நிலை, பிணக்குகள், இளைய சகோதிரம், குடும்பம் வகை மகிழ்வுகள், செலவினங்கள், சிரமங்கள், புதிய ஆடை ஆபரணச் சேர்க்கைகள், தந்தையார் வழி ஆதாயங்கள், நன்மை, சிறந்த இலாபங்கள், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி ஆகியன அமையும். மூத்த சகோதிரம், தாயார், குடும்பம் வகையில் இழப்புகள், செலவினங்கள் அமையும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரர், புத்தித்தடுமாற்றம், மூத்த சகோதிரம் வகை சங்கடங்கள், வீட்டில் சிறந்த தனவரவு, அதனால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், துன்பங்கள், இளைய சகோதிரம், பணி தொடர்ந்த நிலையில் தனவரவுடன் சங்கடங்கள், இழப்புகள், குடும்பம், பெற்றோர், வாகன வகையில் மகிழ்வு, சுப வெளியூர்ப் பயணங்கள், செலவினங்கள், மூத்த சகோதரம் வழி இலாபம் இருப்பினும் சிரமம் ஆகியன அமையும். இழப்புக் காப்பீடு, ஒறுத்தல் முதலான வருமானம் கிடைக்கப்பெறும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். தொழில் நிலையில் உயரிய வளர்ச்சி நிலை காணப்படும். தலைமைப்பதவி, சில கூடுதலான பொறுப்புகள் ஏற்றல், தந்தை, குடும்பத்தின் வழி அதிக ஆதாயம், இலாபம், நன்மை கிடைக்கப் பெறும். பலத்த அவமானங்கள், சிரமங்கள் சேர்ந்து காணப்படும். 15 ஆம் தேதிக்குப் பின்னர் நிலைமை மாறும். பணியில் பல இடையூறு இருப்பினும் பல வழிகளில் வருமானம் காணப்படும். குறுக்கு வழிகளில் செல்லாதிருத்தல் நன்மையைத் தரும். இல்லை எனில் அரசத் தண்டனை அமையும். வாகனங்களில் தடை, தாயாருடன் கருத்துப்பிணக்கு, அவருக்கு உடல் நலிவு, குடும்பத்தில், தந்தை வகையில் ஏதேனும் இழப்பு, கரும காரிய நிகழ்வு ஆகியன காணப்பெறும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தந்தையார் வகையில் அதிக இலாபம், நன்மை, வெளியூர்ப்பயணங்கள் அமையும். அவமானங்கள் சிரமங்கள் காணப்படும். வெளியில் தெரியாத வகையில் கௌரவம் பாதுகாக்கப்பெறும். இளைய சகோதிரம், தந்தையார் வகையில் சிரமங்கள், மருத்துவச் செலவினங்கள், இழப்புகள் காணப்படும். பாதி தேதிக்கு மேல் மாற்றங்கள் நிலவும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிலருக்குத் திருமணம் கூடி வருதல், வீட்டில் மகிழ்வான நிகழ்வுகள், சுபச்சடங்குகள், புத்த மேம்பாட்டுடன் காணப்பெறுதல், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் வழி சில எதிர்பாராத இழப்புகள், செலவினங்கள், தொழிலில் சிறந்த இலாபம், பொறுப்புகள் கூடுதல் ஆகியன அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழிலில் சிறந்த உயரிய பதவி, வளர்ச்சி, முன்னேற்றம், கடின நிலை, வெகு புகழ், பிரசித்தி ஆகியன கிடைக்கும். பலத்த உடல் அசதி, சோம்பல்தனம் இருப்பினும் அயராத உழைப்பினால் வெற்றி கண்டதன் பலன் அமையும். புத்திரர், களத்திரம் வகையில் மகிழ்வு, வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். கடன், மூத்த சகோதிரம், இலாபம் கருதிய வகையில் இழப்பு, நட்டம் ஏற்படும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மனம் அமைதியில் ஆழ்தல், பற்றற்ற நிலை, தெளிவுடன் காணப்பெறுதல், மகான்களின் தரிசனம், தான தர்ம கைங்கரியங்கள் செய்தல், புத்திரர், தொழில் வகையில் ஏதேனும் சங்கடங்கள், இழப்புகள், ஏதேனும் சில அவமானங்கள், கல்வி, தந்தை வகையில் உயரிய நிலை, ஆதாயங்கள், பெரியோர்கள் ஆசி ஆகியன கிடைக்கப்பெறும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
ஏதேனும் சில அவமானங்கள், பெற்றோர் வகையினில், வாகனம் முதலியவற்றில் இழப்பு, நட்டம், புத்திரர் வகையில் மகிழ்வு, சிறந்த மேன்மை, சில அவமானங்கள், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றத்தில் சில சங்கடங்கள், அவமானங்கள் காணப்பெறும். கடின முயற்சியினால் அதற்கேற்ற இலாபம், செலவினம், ஆன்மீகப்பயணம் அமையும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம், ஆடை ஆபரணம் ஆகியவற்றில் ஏதேனும் இழப்பு, நட்டம் ஏற்படுதல், தாயாரால் மேன்மை, அதிக இலாபம், புகழினை அடைதல், குடும்பத்தில் மிகுந்த மகிழ்ச்சி, வளர்ச்சி, முன்னேற்றம் உயரிய நிலை ஆகியன காணப்பெறும். தொழிலில் நேர்மையுடன் இருத்தல் மிக அவசியம். கடின நிலை காணப்பெறும். தாயாரின் உடல் நலனில் முன்னேற்றம் காணப்பெறும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.