விகாரி வருடம் - மாசி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் 1 - 3 பூரட்டாதி, 4 – 16 உத்திரட்டாதி, 17 – 30 ரேவதி – மீனம், 31 அசுவினி – மேடம்.
சந்திரன் - விசாகம் – பூராடம்.
செவ்- 4 – 8 உத்திராடம் – தனுசு, 9 – 22 உத்திராடம் – மகரம். 23 – திருவோணம்.
புதன் - 4 – 17 சதயம், 18 – 24 பூரட்டாதி – கும்பம், 25 – 26 பூரட்டாதி மீனம், 27 – உத்திரட்டாதி மீனம்.
குரு - 16 உத்திராடம் 2 மகரம்.
சுக்கிரன் - 2 – 10 பரணி, 11 -14 கிருத்திகை – மேடம், 15 – 25 கிருத், 26 ரோகிணி - ரிடபம்.
சனி - 21 உத்திராடம் 4 மகரம்.
ராகு - 5 திருவாதிரை 1 மிதுனம்.
கேது - 5 மூலம் 3 தனுசு.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தார், களத்திரத்தால், வளர்ச்சி முன்னேற்றத்தால் மகிழ்ச்சி, சுகங்கள் அமையும். நிலைத்த நிரந்தர இலாபம், தொழிலில் திடீர் முன்னேற்றம், இடர்ப்பாடு, அலைச்சல், பணிச்சிக்கல், சங்கடங்கள், கடின முயற்சி, சிலருக்கு பணியை விட்டு விலகல், மாற்றம் முதலியனவும் நிகழும். இளைய சகோதிரத்தால், கடன், வங்கி, வழக்கு ஆகிய இவற்றினால் இலாபம், தாயார், குடும்பத்தால், வீடு, வண்டி வாகன சுகங்கள், மண், மனை ஆதாயங்கள் சிறப்பாய் அமையும். புத்திரர்கள் வகையில் செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் ஆகியன அமையும். தந்தைக்கு உடல் நலிவு, சிலருக்கு இழப்பு, நட்டம், சோகங்கள், உடல் தொடர்ந்த நிலையில் செலவினங்கள், பழைய வீட்டினை சரி செய்தல், புதுப்பித்தல் பணி நடைபெறும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம் மேம்படுதல், ஆடை ஆபரணச்சேர்க்கை அமைதல், சிலருக்கு புத்திரப்ப்ராப்தி சிறப்பாய் அமையும். முன்னேற்றம், குடும்பம், மூத்த சகோதிரம், உடல் நலிவு, சோகம், நட்டம்,இழப்பு, களத்திரம் தொடர்ந்த சிறப்பான செயல்கள், வெளியூர் உல்லாசப்பயணங்கள், மகிழ்ச்சி ஏற்படும். வாகன சுகங்கள், தாயாரால், புத்திரரால் மகிழ்ச்சி, ஆதாயம், இலாபம், சிறந்த இலாபம் ஆகியன அமையும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தில் சில சிக்கல்கள், கடும் வாக்கு வாதங்கள், களத்திரம், தொழில், இவற்றில் இழப்பு, நட்டம், நலிவு, தந்தை, மூத்த சகோதிரத்தால் ஆதாயம், இலாபம், இலாபத்தில் சில தடைகள், சில சங்கடங்கள், போராட்டங்கள், வில்லங்கங்கள் ஆகியன நிலவும். தாயாரால் ஆதாயம், ஆடை ஆபரணச்சேர்க்கை, இளைய சகோதிரத்தால் தொழிலில் மேன்மை, திடீரென பொறுப்பான பதவிகள் வகிக்கும் நிலை ஆகியன அமையும். புத்திரர்களினால் செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள், மகிழ்வுகள், வீடு வாகன சுகங்கள் ஏற்படும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வழக்கு, கடன் எதிரி, இளைய சகோதிரம், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், தந்தை வகையில் செலவினங்கள், சில சோகங்கள், இழப்புகள், வெளியூர்ப்பயணங்கள் அமையும். முன்னேற்றங்களில் மாறுபாடு காணப்படும். நிறந்த தனவரவு, ஆடை ஆபரணச்சேர்க்கை காணப்படும். குடும்பத்தில் புகழ், கௌரவம் மேம்படும். தாயார், மூத்த சகோதிரத்தால் மகிழ்ச்சி, ஆதாயம், இலாபம், புத்திரர்கள், தொழிலினால் மேன்மை, நன்மை இடர்ப்பாடுகள் இருப்பினும் சிறப்பாய் அமையும். கரும காரியம் நிகழும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெற்றோர், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், புத்திரர்கள், வழக்கு தொடர்ந்த நிலையில் சில செலவினங்கள், எதிர்பாராத வெளியூர்ப்பயணங்கள், சில இழப்புகள், சோகங்கள் அமையும். தனவரவு, இலாபம் இவற்றில் சில தடைகள் காணப்படும். இம்மாத இறுதியில் சரி நிலை பெறும். சிறப்பாய் இருக்கும். இளைய சகோதிரம், தொழில் தொடர்ந்த நிலையில் மகிழ்வு, சுகங்கள், ஆடை ஆபரணச்சேர்க்கைள் அமையும். வீடு, வாகன சுகங்கள் சிறப்பாய் இருக்கும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த இலாபம், பெயர், புகழ், முன்னேற்றம், வளர்ச்சி நிலை மேம்படும். தொழில் வளர்ச்சி நிலைகள் தடைகள் காணப்படினும் நன்மை அமையும். கரும காரியம் நிகழும். புத்திரர்கள், இளைய சகோதிரத்தால் இடர்ப்பாடுகள் இருப்பினும் நன்மை ஏற்படும். தாயார், குடும்பம், களத்திரம் உடல் நலிவு, பீடை காட்டும். வீண் செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள், அலைச்சல்கள் காணப்படும். குடும்பம், தந்தையால் சங்கடங்கள், ஆதாயம், மகிழ்வு, இலாபம், ஆடை ஆபரணச்சேர்க்கை ஆகியன காணப்படும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம், கடன், எதிரி, வழக்கு, வில்லங்கங்கள், தாய்மாமன் ஆகியோர்களினால் இலாபத்தினால் செலவினங்கள், சுப, அசுப வெளியூர்ப்பயணங்கள், நட்டங்கள், இழப்புகள் அமையும். குடும்பம், களத்திரம், மண் மனை ஆதாயங்கள், வீடு வாங்குதல், கட்டுதல், புதுப்பித்தல் பணி, புத்திரர்களால் மகிழ்வு, சிறந்த தனவரவு ஆகியன அமையும். சிலருக்கு சிறப்பாய் அரசு தொழில் அமையும். கரும காரியம் நிகழும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிலருக்கு திருமணம் வெகு சிறப்பாய் எதிர்பார்த்தபடி கூடி வெகு புகழாய் நடைபெறும். ஆலயம், பூர்வ புண்ணியப்பலன்கள், தந்தையினால் ஆதாயம், நன்மை உண்டு. புத்திரர்கள், தாயார், குடும்பம், இளைய சகோதிரத்தால் ஆதாயம், நன்மை, சிறந்த தனவரவு, வழக்கினால், கடன் போன்றவற்றில் ஆதாயம், நன்மை, தொழிலில் சிறந்த முன்னேற்றம், இலாபம், நன்மை, ஆடை ஆபரணச்சேர்க்கை, மூத்த சகோதிரம் வகையில் இழப்பு, நட்டம், இலாபம் காணப்படும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம், குடும்பம், புத்திரர்கள், தாயார் ஆகியோரால் புகழ், கௌரவம், சிறந்த தனவரவு, மகிழ்ச்சி, இலாபம், வெளியூர் உல்லாச பயணங்கள் காணப்படும். தந்தையால் நன்மை, புகழ் ஏற்படும். வழக்கு, கடன் எதிரி தொல்லைகள் யாவற்றிலும் வெற்றி கிடைக்கும். ஆடை ஆபரணச்சேர்க்கை காணப்படும். மூத்த சகோதிரத்தால் ஆதாயம், இலாபம் நன்மை கடைக்கும். தொழிலில் தலைமைப்பதவி, முன்னேற்றங்கள் காணப்படும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாயார், குடும்பம், புத்திரர்கள், தொழில், மூத்த சகோதிரம் ஆகியோர்களினால் மிகுந்த பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்படுதல், தந்தை தொழிலில் பிரபல்யம், சிறப்பு நிலை பெறுதல், வெகுபுகழ், அரசு வகை ஆதாயங்கள், வளர்ச்சி, முன்னேற்றங்கள், சிறந்த தனவரவு, இலாபம், பதிப்பு, அச்சுத்துறை, வளர்ச்சிநிலை ஆகியவை சிறப்பாய் காணப்படும். நகைகள் இழப்பு, அல்லது தொலைந்து பெறுதல், இளைய சகோதிரம், உடல் நலிவு, நட்டம், இழப்பு, பயணத்தினால் செலவு, இழப்பு, நட்டம், அலைச்சல், ஆன்மீகப்பயணங்கள், மகான்கள் தரிசனம் ஆகியவை காணப்படும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
முன்னேற்றம், வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், அலைச்சல்கள், குடும்பம், மூத்த சகோதிரம், இலாபம் ஆகிய இவற்றில் ஏதேனும் இழப்பு, உடல் நலிவு, நட்டம், உறக்கமின்மை காணப்படும். குடும்பம், பெற்றோரால் மனமகிழ்வு, ஆடை ஆபரணச்சேர்க்கை, தனவரவு, நன்மை ஏற்படும். தொழில், இளைய சகோதிரம் தொடர்ந்த நிலையில் வளர்ச்சி, முன்னேற்றம், வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். அரசு ஆதாயத் தொடர்புகள் அமையும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிலருக்கு திருமணம், மேல்நிலைகல்வி, வளர்ச்சி, முன்னேற்றம் சிறப்பாய் அமையும். முன்கோபம், அதிகாரம் காணப்படும். குடும்பம், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்ற நிலையில் செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் காணப்படும். சிறந்த தனவரவு, ஆதாயம், இலாபம், மூத்த சகோதிரர், தந்தை வகையில் இலாபம் காணப்படும். சாதகர் முயற்சி, தொழிலில் இழப்பு, நட்டம், உடல் நலிவு, பீடை, எடுக்கும் முயற்சி தோல்வி ஆகியன காட்டும். இளைய சகோதிரர் வகையில் நன்மை ஏற்படும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். தாயாருக்கு உடல் நலிவு காட்டும். கரும காரியம் நிகழும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.