பிலவ வருடம் - சித்திரை மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் 4-13 அசுவினி, 14–27 பரணி, 28 கிருத், மேடம்.
சந்திரன் - பரணி - மிருகசீரிடம்.
செவ்- 10 வரை மிருகசீரிடம். 11 திருவாதிரை – மிதுனம்.
புதன் - 3 - 8 அசுவினி, 9- 15 பரணி, 16 கிரு – மேடம், 17 – கிருத், 19 – 22 கிருத், 23 – ரோகிணி - ரிடபம்.
குரு - 17 அவிட்டம் 4 – கும்பம்.
சுக்கிரன் - 2 – 6 அசு, 7 - 17 பரணி – மேடம், 18 – 28 கிருத் 21 ல் ரிடபம், 29 ரோகிணி – ரிஷபம்.
சனி - திருவோணம் 3 ல் மகரம்.
ராகு - ரோகிணி 3 ல் ரிடபம்.
கேது - கேட்டை 1 ல் விருச்சிகம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
திருமணம், குடும்பத்தில் சுப நிகழ்வுகள், வளர்ச்சி நிலைகள், முன்னேற்றம், உயர்ச்சி, பணியில் வளர்ச்சி, மேல் படிப்பில் முன்னேற்றம், ஆடை ஆபரணச்சேர்க்கை. இளைய சகோதிரத்தால் நன்மை முதலானவை இம்மாதம் 20 தேதிக்கு மேல் நடைபெறும். புத்திரப்பேறு, புத்திரர் வகையில் மகிழ்வான நிகழ்வுகள் ஆகியன அமையும். எப்போதும் போல் குடும்பத்தில் இடையூறுகள், சண்டை, சச்சரவுகள் இருக்கும். வயிறு, வெப்பம் தொடர்ந்த தொல்லைகள், கடன், வம்பு வழக்குத் தொல்லைகள், குடும்பம், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்ற நிலையில் சில தடைகள் இருக்கும். இருப்பினும் நன்மையாய் அமையும். இரத்த அழுத்த மாறுபாட்டால் உடல் நலிவு முதலியவை ஏற்படும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிலருக்கு திருமணம், இரண்டாம் திருமணம், குடும்பத்தில் சுப நிகழ்வுகள், மன மகிழ்வான நிகழ்வுகள், வாக்கு வாதங்கள், முன்கோபம், குடும்பம், தாயார், புத்திரர் வகை செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் ஆகியன காணப்படும். தந்தையார், தொழில் வழி ஆதாய அனுகூலங்கள் நடைபெறும். சிலருக்கு பணியில் மாறுதல் ஏற்படும். குடும்பத்தில், தாயார் உடல்நலம், வீட்டில் மகிழ்வு, வாகன வசதிகள் கடன் வம்பு, வழக்குகள் தீரல் ஆகியவை நிகழும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்படல், குடும்பத்தில் கருத்துப்பிணக்குகள், மூத்த, இளைய சகோதிரம், புத்திரர், தாயார், குடும்பம், பெண்கள் வகையில் மனமகிழ்வுகள், இலாபங்கள், வளர்ச்சி நிலைகள் சிறப்பாய் அமையும். இளைய தாரத்தால் மகிழ்வு அமையும். அரசாங்க ஆதாயங்கள் அமையும். மகான்களின் ஆசி சிறப்பாய் அமையும். தந்தையார் வழி இன்னல் இருப்பினும் நன்மையே. உறக்கமின்மை, உடல் அசதி, நரம்புப்பலகீனம் காணப்படும். அரசாங்க ஆதாயங்கள், முன்கோபம், மூத்த சகோதிரத்தால் நன்மை, ஆடை ஆபரணச்சேர்க்கை ஆகியன அமையும். தந்தை, அவர் வழி, ஆயுள் முதலியனவற்றில் இடர் ஏற்படினும் நன்மையே.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரர், தொழில், குடும்பம், தாயார், மூத்த சகோதிரம், இளைய தாரம் ஆகியன தொடர்ந்த செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் நிகழும். கடன், வம்பு, வழக்குகள், தாய்மாமன், தந்தை அவர் வழி இடர்ப்பாடுகள் ஆகியன நிகழும். குடும்பத்தில் தனவரவு, மகிழ்ச்சி நிலவும். தாயார் உடல் சுகம், அவர் வழி நன்மை ஆகியன அமையும். களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றங்களில் இடர்ப்பாடுகள் காணப்படினும் நன்மையாய் முடியும். கருமாதி நிகழ்வுகள் நடைபெறும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்பாடு ஆகியவை மேம்படும். களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், திருமணம் ஆகியவற்றில் தடைகள் இருப்பினும் சிறப்பாய் நன்மையாய் முடியும். மூத்த சகோதிரத்தால், இளைய தாரத்தால் ஆதாயம், நன்மை, பெற்றோர்கள் சுகம், அவர்களால் நன்மை, ஆடை, ஆபரணச்சேர்க்கை அகியவை சிறப்பாய் அமையும். பணியில் மாற்றங்கள் நிகழும். தனவரவில் கவனம் தேவை. கருமாதி நிகழ்வுகள் நடைபெறும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழில், சாதகர், குடும்பம், தந்தை ஆகிய வகையில் நட்டத்துடன் கூடிய வெளியூர்ப்பயணங்கள், பெருத்த அவமானங்கள், செலவினங்கள் ஆகியன அமையும். கவனமுடன் இருத்தல் நன்மை. தந்தை, அவர் வழிவகையாருடன் கருத்துப்பிணக்குகள் ஏற்படும். புத்திரர், தாய்மாமன், கடன் வம்பு வகை வழி இன்னல்கள் ஏற்படினும் நன்மையாய் முடியும். சிலருக்குத் திருமணம் கைகூடி வரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம், தாய் மாமன், தாயார் வழி பெயர், புகழ், நன்மைகள் வெகு சிறப்பாய் அமையும். குடும்பம், புத்திரர் வகையில் சிரமங்கள் காணப்படினும் நன்மையாய் முடியும். சிலருக்கு திருமணம், இரண்டாம் திருமணம், குடும்பத்தில் சுப நிகழ்வுகள், குடும்பம், தந்தை வழி ஆதாயங்கள், வெளியூர்ப்பயணங்களினால் மகிழ்வு, வளர்ச்சி நிலை, கல்வி தொடர்ந்த முன்னேற்றங்கள் ஆகியன சிறப்பாய் அமையும். விட கண்டங்கள், இரத்த அணுக்கள் குறைதல் முதலான மாறுபாடுகள் காணப்படும். கருமாதி நிகழ்வுகள் நடைபெறும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிலருக்கு சிரமத்தின் பெயரில் செலவினத்துடன் கூடிய நிலையில் தொழில் அமையும். தாயார், குடும்பம், புத்திரர் வழி மகிழ்வுகள், தாய்மாமன், கடன், வம்பு, வழக்கு, சில கௌரவம் பெயர், புகழ், மூத்த சகோதிரத்தால், இளைய தாரத்தால் அவை தொடர்ந்த நிலையின் அவமானங்களில் இருந்து மயிரிழையில் விலகுதல், அதனால் செலவினங்கள், அவை தொடர்ந்த பயணங்கள் ஆகியன அமையும். தாயார், இளைய சகோதிரம் வழி சிரமம் காணப்படினும் நன்மையே.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பம், இளைய சகோதிரத்தால் எப்போதும் போல் இடர் இருப்பினும் நன்மையே. ஆடை ஆபரணச் சேர்க்கை, மனமகிழ்வுகள் அமையும். திருமணம், வளர்ச்சி, முன்னேற்றம், தந்தையார், புத்திரர் வகை ஆதாயங்கள், சுப செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள், வாழ்வில் பற்றற்ற நிலை, நிலைத்த சொத்துக்கள், மூத்த சகோதிரத்தால், இளைய தாரத்தால் ஆதாயம், நன்மை, மகிழ்ச்சி ஆகியன அமையும். சில உடல் உபாதைகள், கடன் தொல்லைகள் முதலியன நிலவும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
எப்போதும் நிதானமுடன் செயல்படுவது மிகுந்த நன்மையைத்தரும். நல்ல கடினப்பட்டதற்கான இலாபங்கள், ஆதாயங்கள் கிடைக்கும். எப்போதும் நேர்மை நன்மை தரும். இளைய சகோதிரம், வெளியூர்ப்பயணம் வழியில் தனலாபம், ஆடை ஆபரணம் சேர்க்கை, செலவினங்கள் அமையும். பெயர், புகழ், கௌரவம், குடும்பம், வளர்ச்சி, முன்னேற்றம், திருமணம் தொடர்ந்த நிலைகளில் மாறுபாட்டுடன் கூடிய நன்மை சில சிரமங்கள் இருப்பினும் அமையும். தாயார், அரசாங்கம், மூத்த சகோதிரம், இளைய தாரம், புத்திரர், தாய்மாமன், தொழில் தொடர்ந்த நிலைகளில் செலவினங்கள், சிரமங்கள், அவமானம், அவை தொடர்ந்த வெளியூர்ப்பயணங்கள் ஆகியன அமையும். கருமாதி நிகழ்வுகள் நடைபெறும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிலருக்கு திருமணம், இரண்டாம் திருமணம், வீட்டில் சுப நிகழ்வுகள் ஆகியன நடைபெறும். குடும்பம், இளைய தாரம், மூத்த சகோதிரம் தொடர்ந்த நிலையில் பெயர், புகழ், முன்னேற்றம் நன்மை ஏற்படும். இளைய சகோதிரம், பெற்றோர், புத்திரர், தொழில் வகையில், அவமானம், சிரமங்கள் காணப்படும். கருமாதி நிகழ்வுகள் நடைபெறும். அதே சமயத்தில் சுப நிகழ்வுகள், மன மகிழ்வுகள் ஆகியன அமையும். இலக்னாதி, சாதகர் தொடர்ந்த நிலையில் வெளியூர்ப்பயணங்கள், சில முக்கியமான செலவினங்கள், தாயார், குடும்பம் தொடர்ந்த நிலையில் கருத்துப்பிணக்குகள் ஆகியன அமையும். கருமாதி நிகழ்வுகள் நடைபெறும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், தொழில் தொடர்ந்த நிலைகளில் வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் ஆகியன அமையும். குடும்பம், தந்தை வழி நன்மைகள், மகிழ்வுகள், எதிரி, கடன் வகை வழி விடுபடுதல், மூத்த சகோதிரம், இளைய தாரம் வகையில் இலாபம், செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் அமையும். தந்தையார், தாயார், குடும்பம், வளர்ச்சி, முன்னேற்றம் வகையில் மகிழ்வுகள் அமையும். தொழிலில் மாற்றம், கருமாதி நிகழ்வுகள் நடைபெறும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.