பிலவ வருடம் - கார்த்திகை மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் 3 - 15 அனுடம், 16 – 28 கேட்டை, விருச், 29 மூலம் தனுசு.
சந்திரன் - அசுவினி – பரணி.
செவ்- 4 – 22 விசாகம், 17 வரை துலாம், 18 ல் விருச்சிகம்.
புதன் - 3 -7 விசாகம் 5 ல் விருச், 8 – 15 அனுடம், 16 – 23 கேட்டை விரு, 24 – மூலம் – தனுசு.
குரு - 4 – 29 ல் அவிட்டம் 3 - கும்பம். 30 ல் அவிட்டம் 4 - கும்பம்.
சுக்கிரன் 2 – 15 பூராடம் - தனுசு, 16 – 22 உத்திராடம் - தனுசு. 23 ல் மகரம்.
சனி - 22 ல் திருவோணம் 2 ல் மகரம்.
ராகு - 22 ல் கிருத் 3 ல் ரிடபம்.
கேது - 22 ல் அனுடம் 1 ல் விருச்சிகம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
திருமணம், வளர்ச்சி முன்னேற்றங்கள் அமைதல், தொழிலில் கடினநிலை, அதிக முயற்சி எடுத்தல், அதற்கான இலாபம் அமைதல், வாக்கில் நிதானமுடன் இருத்தல் நன்மை தரும். குடும்பம், வளர்ச்சி, வாழ்க்கைத்துணை வழி நன்மை அமைதல், இளைய சகோதிரம், ஆடை ஆபரணச்சேர்க்கை, இதன் வழி சில அவமானம், இழப்பு, உடலில் சில நரம்பு பலகீனம், சுகக்குறைபாடுகள், தொழில் நிலை, மூத்த சகோதிரம், இளைய மனைவி வழி, புத்திரர் வழி அவமானம், அனுபவ ஞானம் அமையும். கரும காரியம் நிகழும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கல்வி, வளர்ச்சி நிலை, திருமணம், தனவரவு, எதிரி, கடன், வழக்கில் இருந்து விடுபடல், ஆகிய இவற்றின் வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். தந்தை, தொழில் வழி நன்மை அமையும். சில அவமானங்கள் ஏற்படும். குடும்பம், புத்திரர், அறிவுநிலை தடுமாற்றங்கள், தாய், அவர் வழி, சிரமங்கள், பிணி, பீடைகள், எடுக்கும் முயற்சிகளில் தடை அமையும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மூத்த சகோதிரம், இளைய தாரம், கடன், எதிரி, வழக்கு வழி ஆதாயம், நன்மை அமையும். இளைய சகோதிரத்தால் நன்மை, பொன், பொருள், ஆடை முதலானவற்றால் நன்மை அமையும். தந்தை அவர் வழி நன்மை, சில சங்கடங்கள் நிகழும். மகப்பேறு, அவர்களால் மகிழ்ச்சி, வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் சிறப்பாய் அமையும். உறக்கமின்மை, பயணங்களில் வீண் அலைச்சல் காணப்படும். இளைய சகோதிரத்துடன், குடும்பத்தார், தாய் ஆகியோருடன் பிணக்குகள் காணப்படும். கரும காரியம் நிகழும். செவ்விலங்குகளினால் ஆபத்து, தலைசுற்றல், மயக்கம், மகான்களின் தரிசனம் அமையும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தார், இளைய சகோதிரம், தந்தை வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். எடுக்கும் முயற்சிகளில் தடை, அவமானம், சிரமம் காணப்படும். சிலருக்கு சிறப்பாய் மகப்பேறு. குழந்தைகள் வழி மகிழ்வு, தொழில், தொழிலில் முன்னேற்றம், பதவியில் மேன்மை, சிறந்த தனவரவு, மூத்த, இளைய சகோதிரத்தால், இளைய தாரத்தால் சிரமங்கள் ஆகியன அமையும். சில அவமானம், கரும காரிய நிகழ்வு அமையும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மூத்த சகோதிரம், இளைய தாரம், இலாபம் ஆகியவற்றால் நன்மை அமையும். வீட்டு வாகனப்பொருட்கள் வாங்குதல், தொழில், பெற்றோர்கள், இளைய சகோதிரம், ஆடை ஆபரணச்சேர்க்கை, மன மகிழ்வு ஆகியவற்றால் நன்மை அமையும். கரும காரியம், புத்திரர்கள் வழி அவமானம், இழுக்கு ஆகியன நிகழும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பம், தந்தையார், சிறப்பான தொழில், பதவி உயர்வு, மேன்மை, முன்னேற்றம் ஆகியவற்றினால் நன்மை, செல்வம், மகிழ்வு அமையும். வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். புத்திரர்கள், மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி நன்மை, இலாபம் அமையும். இளைய சகோதிரத்துடன் கடும் வாக்குவாதம், அவமானச்செயல், தந்தையாருடன் கருத்துப்பிணக்கு, அவருக்கு உடல் நலிவு ஆகியன வந்து விலகும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வளர்ச்சி, முன்னேற்றங்கள், மேன்மை அமையும். தந்தை வழி நன்மை, மகிழ்வு, மூத்த சகோதிரத்தால், இளைய தாரத்தால் சில சங்கடங்கள், விட கண்டங்கள், சில அவமானங்கள். வெளியூர்ப்பயணங்களினால் செலவு ஆகியன நிகழும். இருப்பினும் நன்மை, ஆதாயம், இலாபம், செல்வவளம், மகிழ்வு ஆகியன அமையும். கரும காரியம் நிகழும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வாழ்க்கைத்துணை, கல்வி, வளர்ச்சி நிலை, தாயாதியர், சுப நிகழ்வு ஆகியவற்றின் வழி தடைகள் இருப்பினும் தனலாபம், வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், மன மகிழ்வுகள் ஆகியன அமையும். இளைய சகோதிரம், ஆடை, ஆபரணம், தாயார் வழி நன்மை அமையும். தொழிலில் மேன்மை, சிறப்பு, கௌரவம் அமையும். மூத்த சகோதிரம், இளைய தாரம், இலாபம் ஆகிய இவற்றில் தடைகள், அவமானம் காணப்படும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
திருமணம், சிலருக்கு இரண்டாம் திருமணம், வீட்டில் சுப நிகழ்வுகள், வளர்ச்சி, முன்னேற்றங்கள், தனவரவு, குடும்பத்தில் தடைகள் இருப்பினும் சிறப்பாய் அமையும். மகிழ்வு, இளைய சகோதிரத்தால் நன்மை, மூத்த சகோதிரம், இளைய தாரம், இலாபம் ஆகியவற்றில் நன்மை அமையும். விட கண்டங்கள், வாழ்வில் பற்றற்ற நிலை, தொழில், புத்திரர், வளர்ச்சி வழி ஆன்மீக வெளியூர்ப்பயணங்கள், நேர்த்திக்கடன்கள் செலுத்துதல் முதலானவை அமையும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
முன்னேற்றங்களில் கடினம் இருப்பினும் நன்மை, இலாபம், தனவரவு முதலானவை சிறப்பாய் அமையும். திருமணம், சிறந்த வாழ்க்கைத்துணை, வளர்ச்சி முன்னேற்றங்களில் நன்மை யாவும் எப்போதும் நீடித்த பலன் தருவதாய் சிறப்பாய் அமையும். தொழில், தாயார், மூத்த சகோதிரம் ஆகியவற்றால் நன்மை அமையும். சிலருக்கு இரண்டாவது திருமணம், இளைய தாரத்தால் நன்மை அமையும். இளைய சகோதிரம், புத்திரர், தொழில் வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் ஆகியன அமையும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வளர்ச்சி, முன்னேற்றம், மகப்பேறு, புத்திரர்களினால் மகிழ்வு, திருமணம் முதலிய சுப நிகழ்வுகள் வீட்டில் அமையும். இளைய சகோதிரம், ஆடை ஆபரணச்சேர்க்கை, தொழிலில் மேன்மை, முதலியவற்றால் நன்மை அமையும். தொழிலில் சங்கடம் இருப்பினும் நன்மை அமையும். குடும்பம், மூத்த சகோதிரம், இளைய தாரம், பெற்றோரினால் இலாபம், மன மகிழ்வு சிறப்பாய் அமையும். கரும காரியம் நிகழும். தாயார் உடலில் சுகக்குறைவு ஏற்படும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழிலில், முன்னேற்றத்தில் சோம்பல், மந்தநிலை, தடை, இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு ஆகியன இருக்கும். மூத்த சகோதிரம், இளைய தாரம், இரண்டாம் திருமணம், இலாபம், தனவரவு ஆகியவற்றில் நன்மை, அதே சமயத்தில் வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் எளிமையாய் அமையும். தாயார், கடன், வழக்கு, எதிரி, அவமானங்கள் ஆகியவற்றில் இருந்து விடுபடுவீர்கள்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.