
கிரக பாதசாரங்கள்
சூரியன்- 4 - 17 பூசம், 18 – ஆயில்யம் – கடகம்.
சந்திரன் - சதயம் – இரேவதி..
செவ்- 4 - 19 வரை பரணி, 20 – 24 கிரு – மேடம், 25 – கிரு – ரிஷபம்.
புதன் - 2 - 7 வரை பூசம், 8 – 14 வரை ஆயில்யம் – கடகம். 15 – மகம் – சிம்மம்.
குரு - உத்திரட்டாதி 4 – மீனம். 13 ல் வக்ர ஆரம்பம்.
சுக்கிரன் - 2 – 12 திருவாதிரை, 13 – 20 புனர், மிது, 21 - 23 புனர், 24 பூசம் - கடகம்
சனி – அவிட்டம் 2 – மகரம். (வக்ரம்)
ராகு - பரணி 4 - மேடம். 31 ல் பரணி 3.
கேது - விசாகம் 2 - துலாம். 31 ல் விசாகம் 1.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வீட்டில் சிறப்புகள், தாய்மாமன், வழக்கு, கடன் வழி ஆதாய நன்மைகள், திடீர் அதிர்ஷ்டங்கள், நன்மைகள் அமையும். அதே சமயத்தில் குழந்தைகட்குக் குறைபாடுகள், இடையூறுகள், இளைய சகோதரம், தாய்மாமன், வழக்கு, எதிரி, கடன், வில்லங்கம் வழி சிரமங்கள், தடைகள் ஏற்பட்டு பின்னர் விலகும். ஏற்கனவே இருந்து வந்த தொழிலில், இலாபத்தில் தடைகள், முடக்கம் ஆகியன யாவும் ஆவணி 13 வரை சற்று சிரமத்துடன் நீடிக்கும். சனீஸ்வரர், சிவன் வழிபாடு சிறந்தது. அதிக தலைசுற்றல், மன அழுத்தம், இரத்த அழுத்தம் மாறுபாடு இருக்கும். மிகவும் மன அமைதியாய், பொறுமையுடன் இருப்பின் நன்மையாய் முடியும். பிதுர் வழி, பயணங்கள் வழி அலைச்சல், தடைகள், செலவினங்கள் இருக்கும். இளைய சகோதிரத்தால் நன்மை, தீமை ஆகிய இரண்டும் அமையும். மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி தீமைகள், சங்கடங்கள் ஆகியன அமையும். கரும காரியம் நிகழும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
உல்லாசம், கல்வி, நண்பர்கள், சன்மானங்கள், உயர் சன்மானங்கள், விருதுகள் வழி, வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், மகிழ்வுகள், கேளிக்கைகள் ஆகியன சிறப்பாய் அமையும். தந்தையுடன், தொழில் தொடர்ந்த நிலையில் கருத்துப் பிணக்கு இருக்கும். தாயாரால் பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, மேன்மை ஆகியன யாவும் மிகவும் சிறப்பாய் அமையும். தனவரவில் சில தடைகள் இருப்பினும் மேன்மை, மகிழ்வாய், சிறப்புடன் அமையும். மகான்களின் ஆசி கிடைக்கும். உறக்கமின்மை, சற்று அலைச்சல் காணப்படும். உடல் நலனில் கவனம் தேவை. மூத்த சகோதிரம், இளைய தாரத்துடன் கருத்து மாறுபாடு இருக்கும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரர்கள் வழி அதிக செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள், மகிழ்வுகள் ஆகியன அமையும். தாயாரால் மகிழ்வு, சுகம், பெயர், புகழ், கௌரவம் மேம்பாட்டில் சில குறைகள் இருப்பினும் யாவும் நன்மையாய் முடியும். புத்திரர்கள் வழி சில தடைகள், சங்கடங்கள் இருக்கும். தாயாருக்கு சில உடல் சுகவீனங்கள் அமையும். தந்தை, தொழில் வழி சில தடைகள், குறைகள் இருக்கும். சிலருக்கு கடும் வாக்குவாதங்கள், கருத்துப்பிணக்குகள் ஆகியன இருக்கும். கடன் வழி பண உதவிகள் அமையும். மூத்த சகோதிரத்தால், இளைய தாரத்தால் நன்மை அமையும். சிலருக்கு அரசாங்கப்பணம் முறையான வழியிலும் அமையும். சிலருக்கு வேறு வித தனவரவு அமையும். கவனம் தேவை. மனைவி, வளர்ச்சி நிலை, தொழில் ஆகியவற்றில் சிலருக்கு தடைகள் காணப்படும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம், வெளியூர்ப்பயணங்கள், தனவரவில் தடைகள், செலவினங்கள் இருப்பினும் சிரமத்திற்குப் பின் நன்மையாய் அமையும். தாயார், மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி நன்மை, உல்லாச பயணங்கள், செலவினங்கள், மன மகிழ்வுகள் ஆகியன அமையும். தாயாருக்கு சில உடல் சுகக் குறைபாடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றத்தில் குறைபாடுகள், சில தடைகள் ஏற்பட்டு விலகும். தாய் மாமன், வழக்கு, கடன், தந்தையார் வழி சில சங்கடங்கள் நிலவும். கரும காரியம் நிகழும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தன வரவில், பெயர், புகழ், கௌரவக்குறைவு ஆகியனவற்றில் தடைகள், சில அவமானங்கள் காணப்படும். பின்னர் விலகி நன்மையைத் தரும். மூத்த சகோதிரத்தால், தனவரவால் சில தடைகள், வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் இருக்கும். தாய்மாமன், வழக்கு, கடன், வளர்ச்சி, முன்னேற்றம், புத்திரர்கள் வழி சில தடைகள் இருக்கும். இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு நிலவும். தந்தையாருக்கு உடல் நலிவு, சிலருக்கு அறுவை சிகிச்சை, அதனால் செலவினங்கள், ஆலயங்கள், அரசாங்க சன்மானங்கள் ஆகியனவும் சிறப்பாய் வந்தமையும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தனவரவு, தந்தை, தொழில், மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி அதிக இலாபங்கள், நன்மைகள், மன மகிழ்வுகள் ஆகியன அமையும். தொழில், பெயர், புகழ், கௌரவம், முன்னேற்றத்தில் ஏற்கனவே இருந்து வந்த தடைகள் விலகி நன்மை ஏற்படும். சிறிது கால தாமதம் ஆகும். குடும்பத்தில் சில வாக்குவாதம் நிலவும். விரதம், தெய்வ கோரிக்கைகள் நன்மை தரும். சிலருக்கு அறுவை சிகிச்சை, ஆயுள் மரண கண்டங்கள், கடன், பெருத்த அவமானங்கள் ஏற்பட்டு விலகி நன்மை ஆகியன பின்னர் அமையும். புத்திரர், தாய்மாமன், கடன், வழக்கு, தாயார், குடும்பம், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் வழி பல தடைகள், அதிக அளவில் மன சலனங்கள், மாறுபாடுகள் ஏற்பட்டு பின்னர் நன்மையாய் அமையும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சில தடைகள் ஏற்பட்டு நன்மை பல நடைபெறும். தொழிலில் சில மேன்மை, பணிநிலை உயர்வு, மாற்றங்கள், தனவரவு, தந்தையால் ஆதாயம், நன்மை, ஆகியன சில தடைகளுக்குப் பின்னர் அமையும். இளைய சகோதிரத்தால், தாய்மாமன், கடன், வழக்கினால் சில சிக்கல்கள் ஏற்பட்டுப் பின்னர் நன்மையாய் முடியும். தாய், குடும்பம், குழந்தைகள் வழி சில இடர்ப்பாடுகள் அமையும். முறையான சில இலாபங்கள் அமையும். தொழில், தந்தை வழி பயணங்கள், செலவினங்கள் ஆகியன நன்மையாய் அமையும். கரும காரியம் நிகழும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், முன்னேற்றம் ஆகியன அமையும். தொழில், மூத்த சகோதிரம், இளைய தாரம், தந்தை வழி, இலாபங்கள், இடர்ப்பாடுகள் அமையும். இளைய சகோதிரம், தாயார் வகை இடர்கள் அமையும். கடன், வழக்கு, விட விலங்குகளினால், எதிரிகளினால் தொல்லைகள் ஆகியன இருக்கும். பின்னர் நன்மையாய் யாவும் வெற்றிகரமாய் முடியும். குடும்பத்தார், குழந்தைகள் வழி சில இடர்கள் ஏற்பட்டு விலகும். வாழ்வில் பற்றற்ற நிலை இருக்கும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, தாயார், குடும்பம், இளைய சகோதிரம் வழி சில குறைகள், தொல்லைகள் தலைதுாக்கி பின்னர் நன்மையாய் முடியும். குழந்தைகள் வழி இடர்கள் ஏற்படும். சிலருக்கு அறுவை சிகிச்சை, விபத்துகள் ஏற்படும். அரசாங்கச் சன்மானம், பரிசுகளும் அமையும். சிலருக்குத் தொழில், வெளியூர்ப் பயணங்கள், செலவினங்கள் ஆகியன அமையும். ஆன்மீக வழியிலான பெயர், புகழ் அமையும். மூத்த சகோதரி, இளைய தாரத்தால் நன்மை அமையும். கரும காரியம் நிகழும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
நீண்ட நாட்களாய் உடல் நரம்பு பலகீனங்கள், சிலருக்கு தலைசுற்றல், மயக்கம், இரத்த அழுத்த மாறுபாடு, இரத்த அணுக்கள் ஏற்ற, இறக்கம் மாறுபாடு ஆகியன இருந்தன. அவற்றில் இருந்து சிலருக்கு படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றில் இருந்த தடைகள் கொஞ்சம் கொஞ்சமாய் விலகும். சில படிப்பினைகள் அமையும். கண்டங்களில் இருந்து விலகுவீர். தந்தையார்க்கு கண்டம் அமையும். இருப்பினும் யாவும் நன்மையாய் முடியும். தொழில் வழி பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, மேன்மை ஆகியன அமையும். கரும காரியம் நிகழும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழில், முன்னேற்றம், பெயர், புகழ் ஆகியவற்றில் மந்த நிலை, வெளியூர்ப்பயணங்களினால் அலைச்சல், செலவினங்கள், சோம்பல் ஆகியன காணப்படும். குடும்பத்தார், மூத்த சகோதிரம், இளைய தாரத்தால் சில சங்கடங்கள் நிலவும். பின்னர் விலகி நன்மையாய் அமையும். தந்தையாருக்கு கண்டம், அறுவை சிகிச்சை, அவர் வழி கருத்துப்பிணக்குகள் முதலியன அமையும். குழந்தைகள், வளர்ச்சி, முன்னேற்றம், தாய்மாமன் வழி இடர்கள் ஏற்படினும் பின்னர் நன்மையாய் முடியும். சிலருக்கு சிறப்பாகத் தொழில் பல தடைகளுக்குப் பின்னர் அமையும். இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, திடீர் ஆதாய இலாபங்கள், எதிர்பாரா அதிர்ஷ்டங்கள், நன்மைகள், சிலருக்குக் கண்டங்கள், விபத்து, அறுவை சிகிச்சைகள் கூட அமையலாம். கரும காரியம் நிகழும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, தொழில், இலாபம், மூத்த சகோதிரம், இளைய தாரம் ஆகிய இவை தொடர்ந்த நிலையில் பல தடைகள், இடர்ப்பாடுகள் இருக்கும். பின்னர் யாவும் விலகி நன்மையாய் அமையும். குடும்பத்தில் கடும் வாக்குவாதங்கள், விட கண்டங்கள், சில எதிர்பாரா விபத்துகள் ஆகியன அமையும். பற்கள் தொல்லை முதலியன இருக்கும். தாயார், குடும்பம், வளர்ச்சி, முன்னேற்றம், தாய்மாமன், வழக்கு, கடன் வழி தடைகள் ஏற்பட்டு விலகி நன்மையாய் முடியும்.
* * * * *