
கிரக பாதசாரங்கள்
சூரியன்- 3 – 6 சித், 7 -18 சுவாதி, 19 விசாகம் – துலாம்.
சந்திரன் - பூசம் – ஆயில்யம்.
செவ்- 13 ல் மிருகசீரிடம் 3 ல் (வக்ரம்) 28 – மிருக 2 ரிஷபம்.
புதன் - 1 - 4 அஸ்தம், 5 - 8 சித் கன்னி, 9 -12 சித், 13 – 20 சுவாதி, 21 – விசாகம் – துலாம்.
குரு - (வ) 2 ல் உட் 1 ல் மீனம்.
சுக்கிரன் - 1 - 5 சித். 6 - 16 சுவாதி, 17 – 25 விசாகம், துலாம், 26 – 27 விசாகம், 28 ல் அனுடம் விருச்சிகம்.
சனி – அவிட்டம் 1 மகரம்.
ராகு - பரணி – 2 மேடம்.
கேது - சுவாதி 4 துலாம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வளர்ச்சியில் மந்த நிலை, தலைசுற்றல், மயக்கம், முன்னேற்றத்தில் தடைகள் பல இருப்பினும் யாவும் விலகி நன்மையாய் முடியும். புத்திரர்களின் சுகக்குறைவு, அல்லது இழப்பு, உடல் வெப்ப நிலை, உயர் இரத்த அழுத்தம் இறக்கத்தில் காணப்பெறுதல் ஆகியவை இருக்கும். வீட்டில் சுப நிகழ்வுகள், வீடு வாகனம் முதலிய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குதல், தாயாரால் சுகம், நன்மை, மகிழ்வு, தாய்மாமன், வழக்கு, கலை, எழுத்துத்துறை வழி நன்மை, ஆதாயம், இலாபம் ஆகியன அமையும். தாய்மாமன், வழக்கு, கலை, எழுத்துத்துறை வழி நன்மை, ஆதாயம், இலாபம் ஆகியன அமையும். முயற்சியில் சில மாறுபாடான நிலைகள், மூத்த சகோதரியால் இலாபம், மகிழ்வு, இளைய மனைவி வழி ஆதாயம், நன்மை, வெளியூர்ப் பயணங்களில் மகிழ்வு, செலவினங்கள் ஆகியன அமையும். கரும காரியம் நிகழும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குதல், சிலருக்கு திருமணம், வளர்ச்சி, மேல்நிலை, முன்னேற்றங்கள், புத்திரப்ராப்தம், புத்திரர்கள் வழி மகிழ்வு, வீட்டில் சிறப்புகள், உறக்கமின்மை, வெளியூர்ப்பயணங்களில் அலைச்சல், தாய்மாமன், கடன், வழக்கு ஆகியவற்றில் தொல்லைகள், விட கண்டங்கள், மகான்களின் தரிசனம், குடும்பத்தில் கடும் கோபம், வாக்குவாதம், வாழ்க்கைத் துணையுடன் பிணக்கு, தந்தை, தொழில் வழி நன்மை ஆகியவை நிகழும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தில் மன மகிழ்வு, தாயால் மகிழ்வு, பணியில் மாறுபாடு, வளர்ச்சி, முன்னேற்றங்களில் தடைகள், விலகல், மூத்த சகோதிரம், இளைய தாரம் இவற்றால் சிரமங்கள், இலாபத்தில் தடை, வீட்டில் சுப நிகழ்வுகள், வீடு வாகனம் முதலிய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குதல், தாயாரால் சுகம், நன்மை, மகிழ்வு, அமையும். தாய்மாமன், வழக்கு, கலை, எழுத்துத்துறை வழி நன்மை, ஆதாயம், இலாபம் ஆகியன சில தடைகள், சிரமங்கள், கடும் வாக்குவாதங்கட்குப் பின்னர் சுகமாய் அமையும். திருமணத்தில் இடையூறுகள், தடைகள் அமையும். தந்தையாரால் மகிழ்வு, நன்மை அமையும். புத்திரர்கள் வழி சிரமங்கள், மூத்த சகோதிரம், இளைய தாரம், இளைய சகோதிரம் வழி இடையூறு ஆகியன அமையும். கரும காரியம் நிகழும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், வளர்ச்சி, முன்னேற்றம், சிலருக்கு புத்திரப்ப்ராப்தம், இளைய சகோதிரத்தினால் நன்மை, பொன், பொருள், ஆடை ஆபரணச் சேர்க்கையினால் நன்மை, புத்திரர்களால் மகிழ்வு, அவர்கள் வழி நன்மை, அவர்களுடன் கருத்து, மாறுபாடு, உடல் நிலையில் மாற்றம், அலைச்சலுடன் கூடிய வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், கரும காரியம் நிகழ்வு, மூத்த சகோதரம், இளைய தாரம், இலாபம் ஆகியவற்றால் தடைகள், குறைகள் காணப்படும். களத்திரத்தால் நன்மை காணப்பெறும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வெளியூர்ப்பயணங்கள், சுப செலவினங்கள், குடும்பத்தில் மன மகிழ்வு, பெற்றோரால் சிரமங்கள் அமையும். தாய்மாமன், வழக்கு, கலை, எழுத்துத்துறை வழி நன்மை, ஆதாயம், இலாபம், வாழ்க்கைத் துணையால் நன்மை ஆகியன அமையும். புத்திரர்களால் கருத்து, மாறுபாடு, சிரமங்கள் அமையும். கரும காரியம் நிகழும். தந்தையுடன் கருத்துப்பிணக்கு, தந்தைக்கு கண்டம், இளைய சகோதிரத்துடன் கருத்துப் பிணக்கு, முன்னேற்றத்தில் தடைகள், உடல் இரத்த அழுத்தம் மாறுபாடு ஆகியன அமையும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியன சிறப்பாய் காணப்பெறும். குடும்பத்தில் சண்டை, கடும் வாக்குவாதம், வெளியூர்ப்பயணங்களினால் நட்டங்கள், இழப்பு, சில சுகக் குறைபாடுகள், இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, மூத்த சகோதரம், இளைய தாரம், இலாபம் ஆகியவற்றால் மனமகிழ்வு, இலாபம் ஆகியன அமையும். கரும காரியம் நிகழும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றில் சில தடைகள், மூத்த சகோதரம், இளைய தாரம், இலாபம் ஆகிய இவற்றில் இழப்பு, நட்டம், மனக்கசப்பு, கருத்து மாறுபாடுகள், தந்தையாரால் மனமகிழ்வு, மகான்களின் ஆசி, வெளியூர்ப்பயணங்களில் செலவினங்கள், மனமகிழ்வு ஆகியன அமையும். சிறப்பான தொழில், பணியில் மனமகிழ்வு, சிறந்த தனவரவு, இலாபம் ஆகியன அமையும். கரும காரியம் நிகழும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றில் சில தடைகள், தாய்மாமன், கடன், வழக்கு, களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றத்தில் சில தடைகள், விட கண்டங்கள் காணப்படும். உறக்கமின்மை, வெளியூர்ப்பயணங்களில் அலைச்சல், தொழிலில் இழப்பு, நட்டம், மனக்குறைகள் காணப்படும். மூத்த சகோதிரம், இளைய தாரம், இவர்களால் நன்மை, இலாபம் ஆகியன மகிழ்வாய் அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தனவரவு, சிறந்த இலாபங்கள், மனமகிழ்வு, நன்மை ஆகியன அமையும். பெயர், புகழ், கௌரவம், வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றில் சில தடைகள், புத்திரர் இழப்பு, அவர்களால் சில தடைகள், குறைகள் இருப்பினும் நன்மையாய் அமையும். மூத்த சகோதிரத்துடன், இளைய தாரத்துடன் கருத்துப்பிணக்கு, கண்டங்கள், இலாபத்தில் தடைகள் ஆகியன அமையும். சிலருக்கு சிறப்பாக தொழில் அமையும். எழுத்துத்துறை, வக்கீல், பேச்ச முதலிய கலைத்துறைகளில் நல்ல பெயர், புகழ், சன்மானம், கௌரவம் முதலானவை கிடைக்கும். எழுத்துறைகளிலும் பிரசித்திப் பெறுவார்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், வளர்ச்சி, முன்னேற்றம், தனவரவு, சிறந்த இலாபங்கள், மனமகிழ்வு, நன்மை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, வீட்டில் சுப நிகழ்வுகள், மூத்த சகோதரியால் இலாபம், மகிழ்வு, இளைய மனைவி வழி ஆதாயம், நன்மை, தந்தை, தாய்மாமன், வழக்கு, கலை, எழுத்துத்துறை வழி நன்மை, ஆதாயம், இலாபம், சிலருக்கு திருமணம், வளர்ச்சி, மேல்நிலை, முன்னேற்றங்கள், உயரிய சன்மானம், கௌரவ விருதுகள் ஆகியன சில தடைகள் காணப்பெறினும் சிறப்பாய் அமையும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வளர்ச்சி, முன்னேற்றத்தில் தடைகள், தவிர்க்க முடியாத சில வெளியூர்ப்பயணங்கள், தாய்மாமன், வழக்கு, கலை, எழுத்துத்துறை வழி நன்மை, ஆதாயம், இலாபம் ஆகியன அமையும். தந்தையாருடன், இளைய சகோதிரத்துடன், மூத்த சகோதிரத்துடன், இளைய தாரத்துடன் கருத்துப்பிணக்கு, கண்டங்கள் ஆகியன அமையும். வாழ்க்கைத்துணை, வளர்ச்சி, முன்னேற்றத்தில் பெருத்த சரிவு, நட்டம், இழப்பு ஆகியன ஏற்படும். பணியில் சுமைகள், சிலருக்கு பணி மாறுதல், அலைச்சல், சிரமங்கள் ஆகியன அமையும். இருப்பின் இறுதியில் வெற்றி கிடைக்கும். கரும காரியம் நிகழும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், வளர்ச்சி, முன்னேற்றம், புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குதல், சிலருக்கு திருமணம், புத்திரப்ராப்தம், புத்திரர்கள் வழி மகிழ்வு, வீட்டில் சிறப்புகள், தொழில், பணி, வளர்ச்சி, முன்னேற்றத்தில் சில தடைகள் அமையும். கரும காரியம் நிகழும். குடும்பத்தில், தாயாருடன், இளைய சகோதிரத்துடன் கடும் வாக்குவாதம் நிகழும். இரத்த அழுத்தம் மாறுபாடு ஏற்படுவதால் திடீரென இரத்த அணுக்களில் ஏற்ற இறக்கம் காணப்படும். தாய்மாமன், வழக்கு, கலை, எழுத்துத்துறை வழி இழப்பு, சிரமம் காணப்படும். மூத்த சகோதரியால் இலாபம், மகிழ்வு, இளைய மனைவி வழி ஆதாயம், நன்மை, வெளியூர்ப் பயணங்களில் மகிழ்வு, செலவினங்கள் ஆகியன அமையும்.
* * * * *