
கிரக பாதசாரங்கள்
சூரியன் 1 - 10 உத்திராடம், 11 – 23 திருஓணம், 24 – அவிட்டம் மகரம்.
சந்திரன் - ரோகிணி – மிருகசீரிடம்.
செவ்- 3 – 20 – மூலம், 21 – பூராடம் மாசி 8 வரை (தனுசு).
புதன் - 1 ல் வக்ரம். 8 வரை திருஓணம், 9 – உத்திராடம் 22 ல் வக்ர நிவர்த்தி, மகரம்.
குரு - சதயம் - கும்பம்.
சுக்கிரன் - (வக்ரம்) பூராடம், 16 ல் வக்ர நிவர்த்தி தனுசு.
சனி - திருவோணம் 3 ல், தை 7 முதல் மாசி 4 வரை திருஓணம் 4 ல் மகரம்.
ராகு - கிருத் 3 ல், தை 26 ல், கிருத்திகை 2ல் ரிடபம்.
கேது - கார் 22 ல், அனுடம் 1 ல், தை 26 ல் விசாகம் 4ல் விருச்சிகம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வீட்டில் சுப நிகழ்வு அமையும். மூத்த சகோதிரத்தால், இளைய தாரத்தால் நன்மை அமையும். சிலருக்கு பல தடைகளின் பேரில் உயர் கல்வி நிலை, திருமணம், பரிகாரத்தின் பேரில் புத்திரப்ப்ராப்தி அமையும். தன ஸ்தானத்தில் சில தடைகள், குடும்பத்தில் சில சிரமங்கள், இளைய சகோதிரத்துடன், தாய்மாமன், வழக்குகளில் சில இடையூறுகள், புத்திரர்களுடன் கருத்து மாறுபாடு, பணியில் கூடுதல் சுமை காணப்படும். களத்திரத்துடன் மன ஸ்தாபம், அவமானம், உயிர் கண்டங்கள் இலாபத்தில் தடைகள், தந்தைக்கு கண்டம் முதலியவை ஏற்படும். கரும காரியம் நிகழும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தன ஸ்தானம், தாயார் உடல் நலத்தில் சில சுகவீனங்கள், களத்திரம், கல்வி, வளர்ச்சி முன்னேற்றம், வெளியூர்ப்பயணங்கள் ஆகியவற்றில் சில தடைகள், தலைசுற்றல், மயக்கம், உடல் அசதி உறவுகளால் சில அவமானங்கள், இலாபம், மூத்த சகோதிரத்தால் சில சிரமங்கள் ஆகியன அமையும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், பதவி, புகழ், கௌரவம் ஆகியவற்றில் இருந்து வந்த சில தடைகள் இம்மாத இறுதியில் விலகும். செவ்விலங்குகளினால் ஆபத்து ஏற்படும். மூத்த சகோதிரம், இளைய தாரம், புத்திரர்கள், புத்தித் தடுமாற்றம், வெளியூர்ப் பயணங்களில் சில இடையூறுகள், தடைகள், அலைச்சல், அவமானம் ஆகியவை காணப்படும். இளைய சகோதிரம், காது தொல்லை, சீதள உபாதைகள், உறக்கமின்மை, உடல் சுகமின்மை ஆகியவை காணப்படும். கரும காரியம் நிகழும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தில் மகிழ்வு, சில தன லாபங்கள், வீட்டில் சில சுப நிகழ்வுகள், சுப காரியங்களில் பல தடைகள், தாயார், மூத்த சகோதிரம். இளைய தாரத்தில் சில சங்கடங்கள் ஆகியன அமையும். இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, காது உபாதை, வெளியூர்ப் பயணங்களில் சில தடைகள் அமையும். முறையற்ற இலாபங்கள், மன மகிழ்வுகள், இலாபத்தில் சில தடைகள், உடல், மன தடுமாற்றங்கள் அமையும். புத்திரர்களுடன் கருத்து மாறுபாடு, மனத்தடுமாற்றங்கள் ஆகியன அமையும். புத்திரர், தொழில் வழி மன உளைச்சல்கள் அமையும். தாயார், மூத்த சகோதிரம், இளைய தாரத்துடன் கருத்துப் பிணக்கு அமையும். கரும காரியம் நிகழும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தார், மூத்த சகோதிரம், இளைய தாரம், முன்னேற்றம் வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், சில சிக்கல்கள், சில தடைகள் அமையும். பெற்றோர் வழி நன்மை, தீமை இரண்டு நிலைகளும் அமையும். இளைய சகோதிரம், தொழில் நிலை வழி பல இடையூகள் இருக்கும். இருப்பின் இறை வழிபாடு நன்மையைத் தரும். வம்பு, வழக்குகளில் கவனம் தேவை.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழிலில் இடையூறு, தனலாபத்தில், முயற்சியில் சில தடைகள், நரம்பு பலகீனம், தந்தையார் வழி சுகமின்மை, கருத்துப்பிணக்குள், குடும்பத்தில் அமைதியின்மை, கரும காரியம் நிகழ்வு, புத்திரர் வழி இடையூறுகள், மன சலனங்கள், உறவுகளுடன் கூடிய வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் ஆகியன அமையும். இம்மாத இறுதியில் நன்மை அமையும். இழுபறியாய் இருக்கும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், வளர்ச்சி, முன்னேற்றங்கள், மேன்மை ஆகியன சிறப்பாய் அமையும். தந்தையார் வழி நன்மை, சிறந்த தனலாபம், மூத்த சகோதிரம், இளைய சகோதிரம், இளைய தாரம் வழி நன்மை, உடல் நலிவு, சில கண்டங்கள் வந்து விலகும். கரும காரியம் நிகழும். மனஉளைச்சல் காணப்படும். குடும்பத்தில் மூத்த சகோதரி, இளைய தாரம், தந்தையார் வழி சிரமங்கள் ஏற்படும்.15 தேதிக்கு மேல் நன்மை ஏற்படும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மனக்குழப்பங்கள், மனத்தடுமாற்றங்கள், அனைத்திலும் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். குடும்பத்தில் வாக்குவாதம், கடன், வழக்கு பளு, தாய்மாமன் இடையூறு ஆகியன அமையும். முயற்சிகளில் சில தடைகள் காணப்படும். தொழில், இலாபம் ஆகியவற்றில் சில தடைகள் இருக்கும். தொழிலில் சோதனை இருப்பினும் நன்மையே அமையும். குடும்பத்தாருடன் திடீர் வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், அலைச்சலுடன் அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வீட்டில் சுப நிகழ்வுகள், தனலாபம் ஆகியன சில இடையூறுகளுக்குப் பின் நடைபெறும். குடும்பத்தில் குளறுபடிகள், மனக்கசப்பு, கடுமையான வாக்கு வாதம், புத்திரர் வழி ஆன்மீக வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் ஆகியன அமையும். மனம் பற்றற்ற நிலையை நாடும். விட காய்ச்சல், விட கண்டங்கள், செவ்விலங்குகளினால் ஆபத்து, தந்தையாருடன் கருத்துப்பிணக்கு, களத்திரம், தொழில் வழி சிரமங்கள், மனசஞ்சலங்கள், சலனங்கள், மயக்கம், தலைசுற்றல், சித்தப்பிரமை ஆகியன அமையும். இறைவழிபாடு மிகுந்த நன்மையை அளிக்கும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
நிலைத்த நன்மைகள், தீவிர அனுபவ ஞானம், நரம்பு பலகீனங்கள், சாஸ்திர ஞானம், அதில் உன்னதமான பரிசு, உடல் சுகக்குறைபாடு, அசதி, கடன், தந்தை, நோய் வழி சில சிரமங்கள், உடல் வெப்ப நிலை மாற்றங்கள் ஏற்படல், இளைய சகோதிரம், பெரியோர் வழி தன லாபம், குடும்பத்துடன், கற்ற கல்வி நிலை வழி வெளியூர் ஆன்மீகப்பயணங்கள் அமையும். தொழில், புத்திரர் வழி அலைச்சல் ,பயணங்கள், செலவினங்கள், சில சங்கடங்கள், மனமகிழ்வுகள், அதனால் இலாபங்கள் ஆகியன அமையும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தில் மன மகிழ்வு, தன வரவில் இலாபம், மூத்த சகோதரி, இளைய தாரத்தால் மகிழ்வு ஆகியன அமையும். வளர்ச்சி, முன்னேற்றங்கள், களத்திரம், புத்திரர்கள், உடல் களைப்பு ஆகியவற்றினால் வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். கரும காரியம் நிகழும். சில தடைகளுக்குப்பின் திருமணம், வளர்ச்சி, முன்னேற்றங்கள், வீட்டில் சுப நிகழ்வுகள் ஆகியன அமையும்.தாயாருக்கு, குடும்பத்தில் பீடை காட்டும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழில், முன்னேற்றத்தில் மந்த நிலை, தடைகள், இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு
ஆகியன காணப்படும். கடன், நோய், வம்பு, தாயார், குடும்பம், களத்திரம், வளர்ச்சி முன்னேற்றங்களில் இடையூறுகள் காணப்படும். தந்தையார் வழி, தந்தைக்கு கண்டம், தோடம் ஆகியன நிலவும். தொழிலில் திடீர் செலவினங்கள், பயணங்கள் அமையும். மகான்களின், பெரியோர்களின் ஆசி கிடைக்கும்.
* * * * *