
கிரக பாதசாரங்கள்
சூரியன் 3 – 9 உரா, 10 – 22 திருவோணம், 23 – அவிட் - மகரம்.
சந்திரன் - சித்திரை – சுவாதி.
செவ்- 20 ல் ரோகிணி 3 ல் ரிடபம்.
புதன் - 11 – 20 பூராடம், 21 - 23 உத்திராடம் - தனுசு, 24 ல் மகரம்.
குரு - 7 ல் உத்திரட்டாதி 3 ல் மீனம். 25 உதி – 4.
சுக்கிரன் - 3 – 12 – அவிட்டம், மகரம். 8 ல் கும்பம். 13 – 23 சதயம் , 24 பூரட்டாதி.
சனி - 3 ல் அவிட்டம் 3 ல் கும்பம்.
ராகு - பரணி – 1 ல் மேடம்.
கேது - சுவாதி 3 ல் துலாம்.
குறிப்பு: கும்பச்சனி, கும்பச் சுக்கிரன் பலருக்கும் பெருத்த மாற்றங்களைச் செய்யும்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பூர்வ புண்ணியத்தானம் பலம் பெறுவதால் குடும்பம், தாயார், அறிவு வழி நன்மை அமையும். தலை சுற்றல், மயக்கம் இரத்த அழுத்த மாறுபாடுகள் ஆகியனவும் அமையும். சுகத்தானம், தாய்மாமன், வழக்கு, உடல் நலன் போன்ற இடங்களை குரு பார்வை இடுவதால் மிகுந்த நற்பலன்கள் ஏற்படும். தொழில், மூத்த சகோதர ஸ்தானம், இளைய தாரம், இளைய சகோதரி, ஆடை ஆபரணச்சேர்க்கை வழி நன்மை அமையும். வாழ்க்கைத் துணை, வளர்ச்சி வழி நன்மை, பெருத்த இலாபம் அமையும். கரும காரியம் நிகழும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கல்வி, வளர்ச்சி, வெளி நாடு தொடர்ந்த பயணங்கள், செலவினங்கள், தொழில், வளர்ச்சி தொடர்ந்த முயற்சி, பயணம் ஆகியன அமையும். இளைய சகோதிரத்தால், ஆடை, ஆபரணச்சேர்க்கை ஆகியவற்றினால் இலாபம், மூத்த சகோதிரம், அறிவினால் பயன், இளைய தாரத்தால் இலாபம் அமைதல், மகான்களின் ஆசி, செவ்விலங்குகளினிடத்தில் எச்சரிக்கையாய் இருத்தல், உறக்கமின்மை, பயணங்களில் அலைச்சல்,
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வளர்ச்சி, முன்னேற்றம், சிறப்பான தொழில், தொழிலில் உயர்வு, மேன்மை, சிறந்த தனவரவு, குடும்பத்தினரால் மகிழ்வு, சிறப்புகள், வாகனம், வீடு முதலிய தேவையானவை வாங்குதல், சாதகர், தாய்மாமன், வழக்கு, கலை, எழுத்துத்துறை இவற்றால் நன்மை, சிறந்த தனவரவு, மகிழ்வு, தாயாரால் மகிழ்வு, தாயார், தந்தை, தாய்மாமன், கடன், வழக்கு வழி நன்மை, ஆதாயம், இலாபம் ஆகியன அமையும். தந்தை, புத்திரர் வழி வெளியூர்ப்பயணங்களில் செலவினங்கள், மனமகிழ்வு, மூத்த சகோதரி, இளைய தாரம் ஆகியவற்றால் மனமகிழ்வு ஆகியன அமையும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மகான்களின் ஆசி கிடைக்கும். பெயர், புகழ், கௌரவம், வளர்ச்சி, முன்னேற்றம் அமையும். தந்தை, தாய்மாமன், கடன், வழக்கு வழி நன்மை அமையும். அவர் வழி நன்மை ஆகியன அமையும். சிலருக்கு புத்திரப்ராப்தம், புத்திரர்கள் வழி மகிழ்வு, மூத்த சகோதரி, இளைய சகோதிரம், இளைய தாரம், ஆடை ஆபரணச் சேர்க்கை வழி நன்மை அமையும். வெளியூர்ப் பயணங்களில் செலவினங்கள் அமையும். கரும காரியம் நிகழும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, மேன்மை, வளர்ச்சி நிலைகள் ஆகியன வழி நன்மை அமையும். சில மகிழ்வான உல்லாச வெளியூர்ப்பயணங்களில் மகிழ்வு, செலவினங்கள் ஆகியன அமையும். மூத்த சகோதிரம், இளைய சகோதிரம், இளைய தாரம், அவர் வழி நன்மை, ஆதாயம், இலாபம், தனவரவு ஆகியன அமையும். தாய்மாமன், வழக்கு, கலை, எழுத்துத்துறை, களத்திரம், இளைய சகோதிரம், தொழில், ஆடை ஆபரணச்சேர்க்கை வழி நன்மை அமையும். தந்தையார் வழி பிணக்கு, பீடை காட்டும். தாயார் வழி நன்மை அமையும். கரும காரியம் நிகழும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், கல்வி வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், இளைய சகோதரி, ஆடை ஆபரணச் சேர்க்கை, ஆகியன சிறப்புடன் காணப்பெறுதல். அவர் வழி நன்மை அமையும். மூத்த சகோதரி, இளைய தாரம் வழி இலாபம், நன்மை அமைதல், குடும்பத்தாருடன் பற்றில்லாது மனம் இருத்தல், தனவரவில் பீடை, புத்திரர், தாய்மாமன், கடன், வழக்கு, குடும்பத்தார், தந்தையார் வழி நன்மை ஆகியன அமையும். கரும காரியம் நிகழும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிலருக்குச் சிறப்பாகத் தொழில் அமையும். வாழ்வினில் பற்றற்று இருத்தல், மகான்களின் ஆசி கிடைக்கும். இளைய சகோதிரம், தந்தையாருடன், தனவரவில், வளர்ச்சி, முன்னேற்றத்தில், களத்திரத்தில், மூத்த சகோதிரம், இளைய தாரம் ஆகியோரால் சில தடைகள், கருத்து மாறுபாடு, பிணக்குகள், தாயார், புத்திரர் வழி நன்மை, பெற்றோர், வாழ்க்கைத் துணை, வளர்ச்சி வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், சிறந்த தனவரவு, மகிழ்வு ஆகியன அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தந்தையாரால் மேன்மை, அவர் வழி ஆதாயம், நன்மை, இளைய தாரம், மூத்த சகோதரி வழி நன்மை, ஆதாயம், இலாபம் ஆகியன அமையும். குடும்பத்தார், குழந்தைகள் வழி நன்மை அமையும். சிலருக்கு விசேட புத்திரப் ப்ராப்தம், புத்திரர் வழி நன்மை, மகிழ்வு, ஆதாயம் ஆகியன அமையும். உறக்கமின்மை, வாழ்வில் பற்றற்று இருத்தல், தொழிலில் சில சங்கடங்கள் நிலவும். இளைய சகோதரி, தாயாரால் நன்மை அமையும். கரும காரியம் நிகழும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கல்வி, வளர்ச்சி, தொழில், முன்னேற்றம், தாயார் வழி நன்மை சிறப்பாய் அமையும். தனவரவு, இளைய, மூத்த சகோதரி, இளைய தாரம் வழி நன்மை, ஆதாயம், ஆடை ஆபரணச் சேர்க்கை ஆகியன அமையும். தொழில், மூத்த சகோதரி, இளைய தாரம், தந்தையார், புத்திரர் வழி சோகம், இடையூறு, பீடை ஆகியன காட்டும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
நல் தேகம், கடும் பலித வாக்கு, குழந்தைகள் வழி அரசாங்க நன்மை, தொழில், கல்வி வழி உயரிய விருதுகள், தனவரவு, இலாபம் அமைதல், பெயர், புகழ், கௌரவம், வளர்ச்சி, முன்னேற்றம், இளைய சகோதிரம், புதிய ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை, புதியதாய் வாங்குதல், சிலருக்குத் திருமணம், சுக போகங்கள், சுப நிகழ்வுகள், புத்திரர்கள் வழி நன்மைகள், கௌரவம், மேன்மை, பதவி உயர்வு, அரசாங்க ஆதாயங்கள், நன்மை, மேன்மை, தனவரவு, இலாபங்கள், கடன் வழி உதவி ஆகியன அமையும். கரும காரியம் நிகழும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெற்றோர், சாதகர், வாழ்க்கைத் துணை, வளர்ச்சி வழி தொடர்ந்த சுப வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், சிரமங்கள், நன்மைகள், இலாபங்கள் ஆகியன அமையும். தாய்மாமன், கடன், வழக்கு வழி நன்மை அமையும். சிலருக்குச் சிறப்பாகத் தொழில், வளர்ச்சி, மேன்மை ஆகியன அமையும். தந்தையார் வழி கண்டம், பீடை காட்டும். இளைய சகோதிரம், தொழில் வழி நன்மை, சில கருத்துப்பிணக்குகள், செலவினங்கள் அமையும். குழந்தைகள், வளர்ச்சி வழி, மூத்த சகோதிரம், இளைய தாரம் ஆகியன வழி நன்மை அமையும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சாதகர், வளர்ச்சி, முன்னேற்றம், தொழில், புத்திரர்கள், சிலருக்குத் திருமணம், ஆடை ஆபரணச் சேர்க்கை, உயரிய சன்மானம், விருது ஆகியன சிறப்பாய் அமையும். தாய்மாமன் வழி கருத்துப்பிணக்குகள், கடன், செலவினங்கள், பீடை காட்டும். பெற்றோர் வழி நன்மை அமையும். மூத்த, இளைய சகோதரி, இளைய தாரம் வழி நன்மை, வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். தனவரவில் திடீர் மாற்றங்கள் காணப்படும். எச்சரிக்கை, கவனம் தேவை. தாய்மாமன், கடன், வழக்கு வழி சில சிரமங்கள் அமையும். கரும காரியம் நிகழும்.
* * * * *