இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
தொடர்

ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்!

முனைவர் தி. கல்பனாதேவி


16. சடங்குகள் (தொடர்ச்சி)


சடங்குகள் தமிழர் வாழ்வினில் இன்றியமையாதது. பழங்காலத்திலும், இன்றும் இவை இம்முறையிலேயேப் பின்பற்றப் பெறுகின்றன.

திருமாங்கலி, சப்தபதி, சிராவணம், நாகப்பிரதிட்டை குழந்தைப்பேறு சடங்கு, கர்ப்பாதானம், கர்ப்பாதானத்திற்குரிய நாள்கள், புங்ஸவனம் - பும்சவனம், சீமந்தம் - முதுகு நீரிடுகை, சாதகன்மம் - புத்திர தரிசனம் செய்வது - ஜாதகர்மம், விதானமாலை, மைந்தர் வினைப்படலம் தரும் செய்திகள், பஞ்சாயுதம் - (அரைஞாண் - இடுப்பில் கட்டும் கயிறு) நாமகரணம் - பெயர் சூட்டுதல், தொட்டிலேற்றல், பால் பருகுதல், கன்னவேதை - கன்னவேதை - காது குத்துவது, சூரியவலோகனம், சூரிய சந்திர கோதரிசனம், நிஷ்கரமணம், சந்திர கோதரிசனம், சந்தி மிதித்தல், அன்னப்பிராசனம் - அமுது ஊட்டுதல், ஆண்டு நிறைவு, சௌளம் அல்லது சூடாகரணம் - காது குத்துதல், அட்சாரம்பம் - அட்சரம் - எழுத்து, கல்வி பயிற்றுவித்தல் ஆரம்பம், வித்தியாரம்பம், உபநயனம் - பூணூற் கலியாணம் - உபநயனச் சடங்கு, நால் வருணத்தார்க்குரிய மாதங்கள், உரிய நட்சத்திரங்கள், திதிகள் நிலை, கிரகங்கள் நிலை, நட்சத்திரங்கள் நிலை, வேதாரம்பம் - காண்டோபக்கிரமணம் - வேதாத்தியயனம் ஆரம்பிக்கும் கிரியை, உபாகன்மம், சமாவர்த்தனம் - பிரமசாரி விரதத்தை முடித்தல், கிருகப்பிரவேசம் - புதிய இல்லம் குடி புகுதல், நவபூஷணம் - ஒன்பது இரத்தினங்கள் - ஆண்கள், பெண்கள் அணிதல், நவவஸ்திரம் பூண - ஒன்பது ஆடைகள் - ஆண்கள், பெண்கள் அணிதல், உபதேசம், சதாபிஷேகம், சோடகம் - பதினாறு. சோடசகிரியையாவன, சிராத்தம் - சிரார்த்தம், அகராதி தரும் செய்திகள், பிதுர்க்கள், மகாலய அமாவாசை, மஹாமகம், மஹோதயம், மகோதயம் ஆகிய சடங்குகள் குறித்தவற்றினைப் பற்றிக் காண்போம்.

திருமாங்கலி

திங்கள், புதன், வியாழன், வௌ்ளி - வாரங்களும், பிரதமை, சதுர்த்தி, அட்டமி, நவமி, சதுர்த்தசி, பூரணை, அமாவாசியை ஒழிந்த திதிகளும், அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திரத்திரயம், அத்தம், சுவாதி, அனுடம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களும், விருடபம், மிதுனம், கர்க்கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் இராசிகளும், எட்டாமிடம் சுத்தமுமாக ஸ்திரீ புருடர்களுக்கு - பெண், ஆண்களுக்கு நன்மையான நட்சத்திரங்களிலேத் திருமாங்கலியத்திற்குப் பொன் உருக்க நன்று.


சப்தபதி

கல்யாணத்தின் முந்திய நாளில் நடத்தும் சடங்கு. இது மணப்பெண்ணின் கையைப் கணவன் பிடித்துக் கொண்டு இருவருமாக விவாக்னியை ஏழு முறை வலம் வந்து நீ என்னுடன் 7 அடிகள் நடந்து வந்தமையால் நாம் இருவரும் தோழர்களானோம் எனும் கருத்துள்ள மந்திரத்தைக் கூறுவது. (தைத்திரீயம்)

சிராவணம்

ஆவணி மாதம், திருவோணம் நட்சத்திரம். ஆவணி மாதத்துத் திருவோண நட்சத்திரத்து அனுட்டிக்கும் ஒரு வைதிக காரியம். ஆவணி மாதத்துத் திருவோணம், நட்சத்திரத்திலே இரு பிறப்பாளர் மூவராலும் அநுட்டிக்கப்படுவதாகிய ஒரு வைதிக் கிரியை. அது பதினான்கு வித்தைகளையும் சிரவணஞ் செய்யத் தொடங்குதற்குரிய கிரியை.

நாகப்பிரதிட்டை குழந்தைப்பேறு சடங்கு

நாக விக்கிரப் பிரதிட்டை. ஒரு கருங்கல்லில் ஒரு படம், இரு படம் உள்ளனவாகப் பாம்புகள் எழுதி அச்சிலையை முதனாள் நீரில் இருக்கச் செய்து அச்சிலையை அன்றிரவு தம்பதிகள் உப்பில்லா விரதம் இருந்து மறு நாள் பாம்பு சிலைக்குப் பூசை முதலியன செய்து அரச மரத்தினடியில் அதற்குரிய விதிப்படி அதனை நிறுவி, வலம் வந்து வணங்கி, உறவினர்களுடன் அந்தணர்களுக்கு உணவு அளிப்பதால் குழந்தைப் பேற்றினைப் பெறுவர் என்றும், பெண் குழந்தைகளேப் பிறக்கும் நிலையும் மாறி ஆணாகப் பிறக்கும்.

கர்ப்பாதானம்

இது பிண்டோற்பத்தி செய்தற் பொருட்டு விவாகமான பெண் பூத்த நாள் நான்கிற்கு மேல் பதினாறு நாள்களுக்குள் செய்யும் கிரியையாம்.

விதானமாலை இருதுவான நாள் முதல் 4 நாளும் கற்பாதானம் செய்தல் ஆகாது. அப்படிச் செய்தால் முதல் நாள் கணவனுக்கும், 2 ஆம்நாள் பெண்ணுக்கும், 3 ஆம் நாள் கர்ப்பத்துக்கும், 4 ஆம் நாள் பிறந்த புத்திரனுக்கும் துன்பம் உண்டாகும். ஆகையால் கர்ப்பாதானம் செய்தல் ஆகாது. நீராடிச் சுத்தமான 5 ஆம் நாள் முதல் 12 ஆம் நாள் அளவும் இச்சடங்கு செய்யப்படும் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 1, பக்கம்.99)

கர்ப்பாதானத்திற்குரிய நாள்கள்

திருவோணம், அத்தம், அனுஷம், இரேவதி, சோதி, சதயம், உத்திரத்திரயம், உரோகிணி, மூலம் இவை உத்தமம். சித்திரை, மிருகசீரிடம், அசுவிணி, அவிட்டம், புநர்பூசம், பூசம் இவை மத்திமம். பக்கச்சித்திரை ஒழிந்த திதிகளிலே கர்க்கடகம், மிதுனம், மீனம், துலாம், இடபம், தனுசு, சிங்கம், கன்னி இவை உதயமாக இந்தச் சடங்கு செய்யலாம் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 2, பக்கம்.100)

ஏனைய இராசிகளுதயமும் பகலும் தவிர்க்கப்படும். உதயமும் 8 ஆம் இடம் சுத்தமாக ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய இந்த கிழமைகளின் இரவு அமாவாசி, பூரணை இவை ஒழிந்த நாட்களில் இந்தச் சடங்கு செய்யலாம் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 3, பக்கம்.100)

ஆதித்தியனும், சந்திரனும், செவ்வாயும், சுக்கிரனும் தத்தம் அம்சங்களில் நிற்க, வியாழன் இலக்கினத்திற்கு 5, 9 ஆகிய இவ்விடங்களில் நிற்கக் கர்ப்பாதானம் செய்தால் அந்தக் கர்ப்பம் முழுமையாக வளர்ந்து ஆண் பிள்ளையாகப் பிறக்கும். இந்த யோக மலடியான திரியிடத்தில் பயன்படாது என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 4, பக்கம்.100)


புங்ஸவனம் - பும்சவனம்

ஆதித்திய கெதியான 3 ஆம் மாதத்தில் திருவோணத்தில் ஆதல் பூசத்தில் ஆதல் சுபயோகமான தினத்திலே சந்திரோதயத்துச் சுக்கிரன் பார்வை உண்டாக கர்க்கடகங் கன்னி மிதுனம் ஒழிந்த இராசி உதயங்களில் அட்டம சுத்தி உண்டாகப் புங்சவனஞ் செய்யலாம். (விதானமாலை, பாடல் 1, பக்கம்.104)

இது பிண்டம் அசைவு அடைதற்கு முன்பே இரண்டாவது அல்லது மூன்றாவது மாதத்தில் தரித்த கரு ஆண் மகவாக வேண்டிச் செய்யுங் கிரியையாம். கருப்பத் திருத்தமில்லாத பிள்ளை விராத்தியனாம்.

இது கர்ப்பிணிகள் ஆண் சிசு பெறும்படி செய்யுங் கிரியை. கர்ப்பம் வியக்தமாவதற்கு முன் முதல் மாசத்தில் பூசம் நட்சத்திரத்தில் பொன், வௌ்ளி, இரும்பு இவை முதலியவற்றால் சிறு புருட உருச்செய்து அக்னியிற் சிவக்கக் காய்ச்சி நான்கு பலம் பாலில் தோய்த்து அப்பாலைக் கர்ப்பிணிக்கு அருத்துவது. வெளுத்த தண்டோடு கூடிய நாயுருவி வேர், ஜீவகம், ரிடபகம், முள் ஐவனம் இவைகளை அரைத்துத் தண்ணீரிற் கலக்கி அருந்தச் செய்யுங் கிரியை.

சீமந்தம் - முதுகு நீரிடுகை

இது நாலாம் மாதம் முதல் ஒன்பதாம் மாதம் வரையில் அவரவர் மரபின் வழக்கப்படி செய்யுங் கிரியையாம். கருப்பத் திருத்தமில்லாத பிள்ளை விராத்தியனாம்.

கருப்பம் தரித்த ஆறாம் மாதம் உச்சி வகிர்ந்து, செய்யும் ஓர் சடங்கு. முதுகு நீரிடுகை. முது நீர்ச்சடங்கு - சீமந்தச் சடங்கு. முதுகு நீர்ச்சடங்கு - சீமந்தச் சடங்கு.

கருப்பதான முதலிய கருமம் பதினாறில் ஒன்று. அஃதாவது ஆறாம் மாதத்திலாவது, எட்டாம் மாதத்திலாவது, கருப்பத்தில் இருக்கின்ற சிசுவின் ஆயுள் விருத்தியின் பொருட்டு மனைவியின் தலைமயிர் வகிர்தலைக் குறித்துக் கணவன் செய்வதோர் சடங்கு.

விதானமாலை ஆதித்திய கெதியால் வந்த 4 ஆம் மாதம், 6 ஆம் மாதம், 8 ஆம் மாதத்திலே புநர்பூசம், பூசம், இரேவதி, திருவோணம், உரோகிணி, உத்திரத்திரையம், அத்தம், மிருகசீரிடம் ஆகிய இந்நாட்களிலே விரிச்சிகம், சிங்கம் ஒழிந்த இராசிகளில் அட்டம சுத்தி உண்டாக முன் சொன்ன பஞ்சாங்க யோகம் நன்றாகயிருக்கச் சீமந்தம் செய்தல் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 2, ப. 105)

சாதகன்மம் - புத்திரதரிசனம் செய்வது - ஜாதகர்மம்

குழந்தை பிறந்து நீராடினவுடன் கொப்பூழ்க் கொடி அறுப்பதற்கு முன் செய்ய வேண்டிய கிரியையாம். அதாவது, புதல்வன் பிறந்த மாத்திரத்தில் தந்தை தரித்திருக்கின்ற வஸ்திரத்தோடு ஸ்நானஞ் செய்து பொன், வௌ்ளி தானியங்களைத் தானஞ் செய்த பின் பொன், தேன், நெய் சேர்த்திழைத்துச் சிசுவுக்குச் செவ்வெண்ணெய் புகட்டுதலுடன் பிதுர்க்களுக்கு இரண்ய சிரார்த்தஞ் செய்தலாம்.

சாதகப்படலம் புத்திரன் பூமிகேதன்னான போதே தந்தையானவன் வடதிசையில் சென்று ஸ்நானம் - குளியல் செய்து வந்து தற்காலத்துச் சுபலக்கினத்திலே சாதகன்மம் செய்து தங்கள் வம்சத்தவர்கள் கூட விருந்து எள்ளும், நெல்லும், பொன்னும், பசுவும், கன்றும், நல்ல பூமியும், வஸ்திரமும் - துணியும் சுத்த பிராமணருக்குத் தானம் செய்து புத்திர தரிசனம் செய்வது என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 1, பக்கம்.106)

விதானமாலை, மைந்தர் வினைப்படலம் தரும் செய்திகள்

பஞ்சாயுதம் (அரைஞாண் - இடுப்பில் கட்டும் கயிறு)

பிள்ளை பிறந்த ஐந்தாம் நாள் பிள்ளையைச் சுத்த நீரினிலே முழுக்காட்டிச் சுபக்கோள் உதயமாகப் பஞ்சாயுத சூத்திரத்தை நாபி அளவாகத் தரித்துத் தெய்வம், அந்தணர் வாழ்த்து மந்திரத்தினாலே பூத பிசாசு வராதபடி காவல் செய்துக் காப்புத் தரித்துப் பின் (அரைஞாண் - இடுப்பில் கட்டும் கயிறு) இதனைக் கட்டும் சடங்கு செய்வர் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 1, பக்கம்.114)

நாமகரணம் - பெயர் சூட்டுதல்

இது பிறந்த மகவுக்கு 10 அல்லது 12, 16 வது நாள்களில் பிறந்த நட்சத்திரத்தைக் குறிக்கும். அட்சரங்களை முதலாகக் கொண்டு பெயரிடுவதாம். அல்லது பாட்டன் முதலானார் பெயரை இடுவதாம்.

பிராமணருக்குப் பிள்ளை பிறந்த 12-ம் நாளும், ஷத்திரியருக்கு 16-ம் நாளும், வைசியருக்கு 21-ம் நாளும், சூத்திரருக்கு 31-ம் நாளும் நாமகரணம் செய்ய வேண்டும். இந்த நாட் கழிந்தால் சுப தினங்களிலே ஸ்திரி ராசிகள் உதயமாக லக்கினம் 5-ம் இடம், 8-ம் இடம் சுத்தமாகப் பூர்வான்னத்திலே நாமகரணஞ் செய்ய வேண்டும்.

பிள்ளை பிறந்த பத்தாம் நாள் முதல் பன்னிரண்டாம் நாள் ஆதல் கிருகசுத்தி செய்துச் சுபக்கோள் உதயமாக நாமகரணஞ் செய்தல் - அதாவது பெயர் சூட்டுதல். இந்நாள் கழிந்தால் மிருகசீரிடம், சோதி, அவிட்டம், அத்தம், மகம், திருவோணம், சதயம், அனுஷம், உத்திரத்திரயம், புநர்பூசம், பூசம், உரோகிணி, மூலம், திருவாதிரை ஆகிய இந்த நாட்களிலே முன் சொன்னபடியேப் பஞ்சாங்க யோகம் நன்றாக திரராசி உதயமாக நாமகரணஞ் செய்வது. ஷத்திரயர் - 16 நாள். வைசியர் - 22 நாள். சூத்திரர் - 31 நாள் ஆகிய நாளில் பெயரிடுவது. இவ்விதம் செய்யும் இடத்து முன் சொன்ன நாளின் திர இலக்கினத்திலே 8 ஆம் இடமும், 5 ஆம் சுத்தமாக, சுபக்கோள் 7 ஆம் இடத்தாதல் நட்பாட்சி உச்சத்துச் சுபாங்கிசங்களிலேயாதல் நின்று திப்பப் பெயரிட்டால் நன்மை உண்டாகும். பகை நீசத்து நின்று திப்பப் பெயரிட்டால் தரித்திரமாதல், வியாதியாதல் உண்டாகும். பட்டப் பெயரிடுமிடத்தும் இந்நாளிலே இந்த யோகத்திலே கொள்வதும், நீசத்துக் கொள்ளாது ஒழிவதும் பெறப்படும் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 2 - 3, பக்கம்.115)

தொட்டிலேற்றல்

பிள்ளை பிறந்த 10 - ம் நாள், 12 - ம் நாள், 14 ம் நாள், 32 -ம் நாளாதல் சுபக்கிரகம் உதயமாகப் பஞ்சாங்கயோகம் நன்றாக ஊர்த்துவ முகராசி நட்சத்திரங்களிலே பிள்ளையைத் தொட்டில் ஏற்ற வேண்டும்.

பிள்ளை பூமிகேதனனான 10, 12, 16, 32 ஆகிய இந்நாட்களிலே சுபக்கிரகம் உதயமாக ஊர்த்துவ முக இராசி நட்சத்திரங்களில் பஞ்சாங்கயோகம் நன்றாகப் பிள்ளையைத் தொட்டிலில் ஏற்றுவது என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 4, பக்கம்.115)

பால் பருகுதல்

பிள்ளை பிறந்த முப்பத்தோராம் நாள் சந்திரனையும், பூமாதேவியையும் அர்ச்சனை - வழிபாடு செய்து சுபக்கோள் உதயமாகச் சங்கினில் பால் வார்த்துப் பருகச் செய்தல்.

மேலும் 31 ஆம் நாள் கழிந்தால் அத்தம், மகம், உரோகிணி, உத்திரத்திரயம், புநர்பூசம், பூசம், திருவோணம், சித்திரை, சோதி, அசுவதி, மிருகசீரிடம், சதயம், அவிட்டம், இரேவதி, அனுஷம் ஆகிய இந்த நாட்களிலே ஞாயிறு, செவ்வாய், சனி ஒழிந்த வாரங்களில் நல்ல திதிகளிலேயே யோகினி எதிரில் நிற்காதிருக்க மீனம், விருச்சிகம் ஒழிந்த ராசிகளில் குழந்தைக்கு சங்கில் பால் வார்த்துப் பருகுதல் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 5 - 6, பக்கம்.116)


கன்னவேதை - காது குத்துவது

பிள்ளை பிறந்த பன்னிரண்டாம் நாள் ஆதல், பதினாறாம் நாள் ஆதல், சாவணமாதவகையால் ஆறாம் மாதம், எட்டாம் மாதங்களிலே புநர்பூசம், பூசம், மிருகசீரிடம், சித்திரை, திருவாதிரை, திருவோணம், உத்திரத்திரயம், அத்தம், இரேவதி, அவிட்டம் ஆகிய இந்நாட்களில் சிங்கம், விரிச்சிகம், கும்பம் ஒழிந்த இராசிகளிலே பஞ்சாங்கயோகம் நன்றாகக் காது குத்துவது.

ஒரு வாரத்தில் பகலிலே இரண்டு நாளும், இரண்டு திதியும் வந்தால் அந்நாள் தவிரப்படும். அட்டம சுத்தி உண்டாக ஆபரணத்தாலேப் பஞ்சாங்கயோகம் நன்றாக ஊர்த்துவ முகமான இராசியும் நாளும் உத்தமமாகக் கொண்டு கன்ன வேதனம் செய்தல் என்று விதானமாலை குறிப்பிடுகின்றது. (விதானமாலை, பாடல் 7 - 8, பக்கம்.116 - 117)

சூரியவலோகனம்

அதாவது மூன்றாம் மாதத்தில் குழந்தை சூரியனைத் தரிசிக்கச் செய்தல்.

(கற்பித்தல் தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/serial/p16.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License