இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
சிறப்புப் பக்கங்கள்

தமிழ் எண் கணித பலன்கள்

வேந்தன் சரவணன்


எண் கணித பலன்கள் அறியும் முன்...

ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோள்களின் ஆதிக்கமுடையவை. இந்த கோள்களின் செயல்பாட்டிற்கேற்ப அந்த எண்களுக்கு உரியவர்களின் வாழ்க்கையில் பொதுவான குணங்களும், நிகழ்வுகளும் அமைகின்றன என்கிறது எண் கணித சாஸ்திரம்.

ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட எண்கள் என்று எப்படி தேர்வு செய்யப்படுகிறது? ஒவ்வொருவர் பிறந்த தினத்தின் கூட்டுத்தொகையைக் கொண்டு அதற்கான எண்கள் கண்டறியப்படுகிறது. உதாரணமாக, முத்துக்கமலம் பிறந்த நாள் 21-03-1999 என்று வைத்துக் கொள்வோம்.

முத்துக்கமலத்தின் பிறந்த நாள் 21 என்பதால் இவரின் பிறந்தநாளின் கூட்டுத்தொகை 3.

பிறந்த நாள் வழியிலான எண் - 3

முத்துக்கமலம் ஆங்கில எழுத்துக்களின்படி MUTHUKAMALAM பெயரின் கூட்டு எண் - 5

4+6+4+5+6+2+1+4+1+3+1+4 = 41 = 5

ஆங்கிலப் பெயர் வழியிலான எண் - 5

ஆங்கில எழுத்துக்களுக்கான எண்கள்

A, I, J, Q, Y - 1

B, K, R, - 2

C, G, L, S - 3

D, M, T - 4

E, H, N, X - 5

U, V, W - 6

O, Z - 7

தமிழ் நியுமராலஜி

தமிழ் நியுமராலஜி என்பது தமிழில் எழுதப்பட்ட ஆங்கில எண்கணித முறை அல்ல. முழுக்க முழுக்க தமிழ் முறைப்படி எழுதப்பட்ட எண்கணிதம் ஆகும். உலகிலேயே முதல் முறையாக ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் எழுதப்பட்ட எண்கணித முறை தமிழ் எண்கணித முறை ஆகும். இது தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் விசயம் ஆகும். ஆங்கில எண்கணித முறை தவறானது என்று இங்கே நிறுவப்பட்டுள்ளது. தமிழ் எண்கணித முறை எவ்வாறு சரி என்பதும் இங்கே விளக்கப்பட்டுள்ளது. ஆங்கில எண்கணிதம் முறையினை இதுநாள் வரையிலும் பின்பற்றி வந்த தமிழ் மக்கள் அனைவரும் அந்த தவறை மேலும் செய்யாமல் நமது பண்பாட்டிற்கு ஏற்ற தமிழ் எண்கணிதத்தினை பின்பற்றுவதே அறிவுடைமை ஆகும்.

ஆங்கில எண்கணிதமுறையின் தவறுகள்

இம்முறையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எவ்வித அடிப்படையும் இன்றி மதிப்பெண்களை வழங்கி உள்ளனர். ஆங்கில எழுத்துக்களுக்கு மேல்நாட்டு அறிஞர்கள் பலரும் பலவிதமான மதிப்பெண்களை வழங்கி உள்ளனர். நாம் பயன்படுத்துகின்ற ஆங்கில எண்கணித முறையான சீரோ எண்கணித முறையிலும் கூட மதிப்பெண்கள் எவ்வித அடிப்படையும் இன்றி எதேச்சையாக வழங்கப்பட்டு உள்ளன. சான்றாக 'b' க்கு மதிப்பு 2 ஆகவும் 'l' க்கு மதிப்பு 3 ஆகவும் கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு கொடுத்ததற்கு எவ்வித அடிப்படை விதிகளும் பின்பற்றப் படவில்லை. சரியான அடிப்படை இல்லாததால் இம்முறையினை போலியான முறை என்று கூறலாம்.

ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களுக்கு இம்முறையில் ஒரே மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது. சான்றாக, வெற்றியும் தோல்வியும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஆனால் இம்முறையில் இந்த இரண்டு சொற்களுக்கும் ஒரே மதிப்பெண் (26) வருகிறது. இது இம்முறையில் உள்ள குளறுபடியினைத் தெளிவாகக் காட்டுகிறது.

ஒரே இடத்தில் பிறக்கின்ற வேறு வேறு ஒலிகளுக்கு வேறு வேறு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன. சான்றாக 'l' உம் 'n' உம் ஒரே இடத்தில் பிறப்பவை. இவற்றுக்கு வேறுவேறு மதிப்பெண்கள் வழங்கி உள்ளனர். இது தவறாகும். ஏனென்றால் ஒரு உண்மையான தாய் தனக்குப் பிறந்த எல்லா குழந்தைகளையும் ஒன்றாகவே மதிப்பாள். அடிப்படை மட்டுமின்றி வழங்கிய முறையிலும் தவறு உள்ளது என்பதற்கு இது சான்றாகும்.

ஆங்கில எண்கணித முறையில் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் ஒரு ஆட்சிக்கோள் இருக்கும். சான்றாக எண் 1 க்கு சூரியன், 2 க்கு சந்திரன், 6 க்கு சுக்கிரன். ஆனால் கோளுக்கும் எண்ணுக்கும் உள்ள தொடர்பு வரையறுக்கப் படவில்லை. அதாவது எவ்விதமான அடிப்படையும் இன்றி கோள்களுக்கு எண்கள் வழங்கப்பட்டு உள்ளன. கோள்களின் ஆங்கிலப் பெயர்களின் அடிப்படையிலாவது எண்களை வழங்கி இருக்கலாம். சான்றாக சனி கிரகத்தின் ஆங்கிலப் பெயரான 'SATURN' என்பதில் உள்ள எழுத்துக்களின் மதிப்பெண்களைக் கூட்டினால் 21 அதாவது 3 வரும். எனவே சனி கோளுக்கு எண் 3 ஐ வழங்கி இருக்கலாம். இவ்வாறே ஏனைய கோள்களுக்கும் வழங்கி இருக்கலாம். ஆனால் அவ்வாறு வழங்கப் படவில்லை. எவ்வித அடிப்படையும் இன்றி கோள்களுக்கு எண்கள் வழங்கப்படிருப்பது ஆங்கில எண்கணித முறையின் 'கண்மூடித் தனமான' போக்கை காட்டுகிறது.

இம்முறையில் பெயரின் முதல் எழுத்தாக வரும் ஆங்கில எழுத்தின் வடிவத்தின் அடிப்படையில் அந்த எழுத்தை தனது பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுடைய குண நலன்கள் இன்னவாறு இருக்கும் என்றும் கூறியுள்ளனர். சான்றாக 'A' என்ற எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களின் குணங்கள் இவ்வாறு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும். ஏனென்றால் ஆங்கிலத்தில் ஒரு ஒலிக்கு இரண்டு வகையான வரி வடிவங்கள் உள்ளன. சான்றாக 'ஏ' என்ற ஒலிக்கு 'A' , 'a' என்று இரண்டு வரிவடிவங்கள் உண்டு. இவற்றில் ஒரு வடிவத்தின் அடிப்படையில் பலன்களைக் கூறினால் தவறாகும். இரண்டு வடிவங்களின் அடிப்படையில் இருவிதமான பலன்களைக் கூறுவது அறிவின்மை ஆகும். எப்படிப் பார்த்தாலும் இரண்டு வரிவடிவங்களைக் கொண்ட ஆங்கில மொழியில் வரிவடிவ அடிப்படையில் ஒருவரது குணநலன்களைக் கூறுவது பொருந்தா ஒன்றாகும்.

நடைமுறைச் சிக்கல்கள்

மேற்கண்ட தவறுகள் மட்டுமின்றி, தமிழர்கள் இம்முறையினை பின்பற்றுவதில் கீழ்க்காணும் நடைமுறைச் சிக்கல்களும் உள்ளன. தமிழ் எழுத்துக்கள் பலவற்றிற்கு சரியான ஆங்கில எழுத்துக்கள் இல்லை. சான்று: த்,ச்,ற்,ங்,ஞ்,ண்,ந்,ழ்,ள் ஆகியவற்றுக்கு சரியான ஒற்றை ஆங்கில எழுத்துக்கள் இல்லை. இந்த சிக்கல் இருப்பதால், தமிழ்ப் பெயர்களை ஆங்கில எழுத்துக்களில் எழுதி மதிப்பெண் வழங்குவதில் தவறு நேர்கிறது. சான்றாக, முத்துக்கமலம் என்ற தமிழ்ப் பெயருக்கு மதிப்பெண் காணலாம். முத்துக்கமலம் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது 'muthukamalam' என்று எழுதுகின்றனர். இது தவறாகும். ஏனென்றால் இந்த ஆங்கிலப் பெயரின் உண்மையான ஒலிப்பு 'முட்ஹுகமலம்' ஆகும். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணருங்கள். ஒலிப்பு தவறாகும் போது ஒலிகளின் மதிப்பும் தவறாகி பெயருக்கான மதிப்பெண் முழுக்க முழுக்க தவறாகி விடுகிறது. இவ்வளவு சிக்கல்கள் நிறைந்த போலியான ஒரு எண்கணித முறையினை நாம் இன்னமும் ஏன் பின்பற்ற வேண்டும்?. வாருங்கள், நமது பண்பாட்டிற்கு ஏற்ற தமிழ் எண்கணித முறையினைப் பற்றி காணலாம்.



தமிழ் எண்கணித முறை

இந்த முறைப்படி, தமிழ் ஒலிகளுக்கு கீழ்க்காணும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ - 3

எ, ஏ, ஒ, ஓ - 7

ஐ - 5

க், ர், ங், ஹ், ஃ - 1

ச், ஞ், ய், ஸ், ஷ், ஜ் - 7

ட், ண், ள் - 4

த், ழ், ந் - 8

ப், வ், ம், ஃப் - 6

ற், ல், ன் - 2

(* இரண்டு எழுத்துக்களால் எழுதப்படுவதால் 'ஔ' என்னும் எழுத்துக்கு மதிப்பெண் இல்லை. இதனை 'அவ்' என்று எழுதி மதிப்பிடலாம்.)

முத்துக்கமலம் = ம்+உ+த்+த்+உ+க்+க்+அ+ம்+அ+ல்+அ+ம்

= 6+3+8+8+3+1+1+3+6+3+2+3+6=53=8

முத்துக்கமலம் தமிழ் வழியிலான பெயர் எண்=8

மேற்காணும் மதிப்பெண்களின் அடிப்படையில் வாரக்கோள்களின் தமிழ்ப் பெயர்களுக்கு கீழ்க்கண்டவாறு மதிப்பெண்கள் அமையும்.

ஞாயிறு - ஞ்+ஆ+ய்+இ+ற்+உ - 7+3+7+3+2+3 = 25 = 7

திங்கள் - த்+இ+ங்+க்+அ+ள் - 8+3+1+1+3+4 = 20 = 2

செவ்வாய் - ச்+எ+வ்+வ்+ஆ+ய் - 7+7+6+6+3+7 = 36 = 9

அறிவன் (புதனின் தமிழ்ப் பெயர்) - அ+ற்+இ+வ்+அ+ன் - 3+2+3+6+3+2 = 19 = 1

அந்தணன் (வியாழனின் தமிழ்ப் பெயர்) - அ+ந்+த்+அ+ண்+அ+ன் - 3+8+8+3+4+3+2 = 31 = 4

வெள்ளி - வ்+எ+ள்+ள்+இ - 6+7+4+4+3 = 24 = 6

காரி (சனியின் தமிழ்ப் பெயர்) - க்+ஆ+ர்+இ - 1+3+1+3 = 8

ராகுவும் கேதுவும் நிழல் கோள்கள் என்பதால் அவற்றுக்கு வேறுமுறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இனி தமிழ் முறைப்படி,

எண் 1 க்கு ஆட்சிக்கோள் 'புதன்' என்றும்

எண் 2 க்கு ஆட்சிக்கோள் 'சந்திரன்' என்றும்

எண் 3 க்கு ஆட்சிக்கோள் 'கேது' என்றும்

எண் 4 க்கு ஆட்சிக்கோள் 'குரு' என்றும்

எண் 5 க்கு ஆட்சிக்கோள் 'ராகு' என்றும்

எண் 6 க்கு ஆட்சிக்கோள் 'சுக்கிரன்' என்றும்

எண் 7 க்கு ஆட்சிக்கோள் 'சூரியன்' என்றும்

எண் 8 க்கு ஆட்சிக்கோள் 'சனி' என்றும்

எண் 9 க்கு ஆட்சிக்கோள் 'அங்காரகன்' என்றும் அறிக.



அடிப்படைகள்

தமிழ் எண்கணித முறையானது கீழ்க்காண்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

1. தமிழ் ஒலிகளின் பிறப்பு முறைப்படி அவற்றுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன.

2. ஒரே இடத்தில் பிறக்கும் வல்லின,மெல்லின ஒலிகளுக்கு ஒரே மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது. சான்று: (க்-ங்),(ச்-ஞ்) முதலானவை.

3. இடையின ஒலிகளுக்கும் ஏவல் வினைகளில் அவற்றின் மாற்றாக வரும் வல்லின ஒலிகளுக்கும் ஒரே மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது. சான்று: (வ்-ப்), (ழ்-த்), (ய்-ச்) முதலானவை.

4. தமிழரின் காலமுறையான நாழிகைக் கணக்கினை இது அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.

ஆதாரங்கள்

தமிழ் எண்கணித முறையானது கீழ்க்காண்பவற்றை ஆதாரங்களாகக் கொண்டுள்ளது.

1. விண்வெளியின் பால் வீதி மண்டலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கோள்களின் இருப்பு நிலையினை இது முதன்மை ஆதாரமாகக் கொண்டுள்ளது.

2. கோள்களின் பண்பிற்கும் எண்களுக்குமான தொடர்பினை இது துணை ஆதாரமாகக் கொண்டுள்ளது.





இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/special/p2.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License