இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Book Review
புத்தகப் பார்வை

திருக்குறள் - காமத்துப்பாலில் இலக்கிய நயம்


ஆசிரியர் ‘இலக்கியத் தேனீ’துரை. தனபாலன்
பிரிவு திறனாய்வு
பக்கங்கள் 144
பதிப்பு ஜூலை’ 2015
ISBN 978-81-930722-4-0
விலை ரூ.150/-
பதிப்பகம் ஓவியா பதிப்பகம்
முகவரி 17-16-5A, கே.கே. நகர், வத்தலக்குண்டு - 642 202, திண்டுக்கல் மாவட்டம்.
தொலைபேசி எண் 04543 - 262686
அலைபேசி எண் 7667557114, 9629652652.

புத்தகப் பார்வை:


திருக்குறளில் மற்ற இரண்டு பால்கள் படித்து விட்டு காமத்துப்பால் மட்டும் படிக்காமல் விட்டு விடும் பலர் உண்டு. இந்த நூல் படித்தால் படித்த அனைவரும் மூன்றாம் பாலான காமத்துப்பாலை விரும்பிப் படிப்பார்கள் என்று உறுதி கூறலாம்.

நூலாசிரியர் துரை. தனபாலன் இலக்கியத் தேனீ பட்டம் பெற்றுள்ளார். பொருத்தமான பட்டம் தான். காமத்துப்பாலில் உள்ள தேனை சேகரித்து வழங்கி உள்ளார். ஓவியா பதிப்பக உரிமையாளர் இனிய நண்பர் மகாகவி மாதஇதழ் ஆசிரியர் வதிலை பிரபா அவர்களின் பதிப்புரையும், மிக நேர்த்தியான பதிப்பும் நன்று. திரு. எம். முத்துக்கிருஷ்ணன், கவிஞர் சொ.நா. எழிலரது (எ) இராசாமணி ஆகியோரின் அணிந்துரை நன்று.

அவருக்கு வந்த நூலை மதிப்புரைக்காக எனக்கு அனுப்பி உதவிய முத்துக்கமலம் இணைய இதழ் ஆசிரியருக்கு நன்றி. திருக்குறளுக்கு உரை பலர் எழுதி விட்டனர், எழுதி வருகின்றனர், எழுதுவார்கள், முப்பால் நூலான திருக்குறள் முக்காலமும் பொருந்தும் நூல் என்பதால் முக்காலமும் உரைகள் வரும். பல நூல்களில் உரை படித்து இருந்த போதும் இந்த நூலில் உரையும், திருக்குறளின் நயமும் மிக வித்தியாசமாக எழுதி உள்ளார் நூலாசிரியர் இலக்கியத் தேனீ துரை. தனபாலன். திருக்குறளை ஆழ்ந்து படித்தால் மட்டுமே இது போன்ற நயம் எழுத முடியும்.

பொதுவாக கவிஞர்களின் முதல் கவிதை காதல் கவிதையாகவே இருக்கும். பின்னர் தான் சமுதாய சீர்திருத்தக் கவிதைகள் எழுதுவார்கள். ஆனால் திருக்குறளில் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களான அறம், பொருள் இரண்டும் முன்பாகவும், இறுதியாக காமத்துப்பாலும் இருக்கும். இன்றைய காதல் கவிஞர்கள் அனைவருக்கும் முன்னோடி திருவள்ளுவரே, இன்றைய திரைப்படப்பாடல்களில் வரும் காதல் பாடல்களுக்கு மூலம் திருவள்ளுவரின் காமத்துப்பால் தான். அவர் கூறாத எதையும் காதலில் மற்றவர் கூறி விட முடியாது என்பது உண்மை.

பதச்சோறாக நூலில் இருந்து சில வரிகள் இதோ :

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு. (குறள் எண் : 1088)

பொருள் :

போர்களத்திற்கு வந்து என் வலிமையைக் காணாத பகைவரும், வந்து அறிந்தவர் கூறக்கேட்டு அஞ்சுவதற்குக் காரணமான என் பெருவலிமை, ஐயோ! இவளது ஒளி வீசும் நெற்றியின் முன் தோற்று விட்டதே!

நயம் :

ஒரு மாபெரும் வீரன், தன்னைக் களத்தில் சந்திக்காமலேயே வலிமையைக் கேள்வியுற்றுப் பகைவர்கள் அஞ்சத்தகுந்த தன் பேராற்றலானது, ஓர் இளநங்கையின் ஒளி பொருந்திய நெற்றியழகின் முன் அவளது மதிமுகத்தின் முன் தோற்று விட்டதே என்று வருந்திப்புலம்புகிறான். எப்பேர்ப்பட்ட வீரனும், அவனது ஈடில்லாச் செருக்கும், மங்கையரின் அழகின் முன் மண்டியிட்டே தீர வேண்டும் என்று திட்டமாகச் சொல்லுகிறார் திருவள்ளுவர்.

எகிப்தியப் பேரழகி கிளியோபாட்ராவின் ஈடில்லா அழகின் முன், சீர்மிகு ரோமாபுரியின் சிங்க நிகர் மன்னன் சீசரும், அடலேறு ஆண்டனியும் அடிபணிந்த வரலாறு இந்த அவனியெல்லாம் அறிந்தது தானே!

இந்த ஒரு திருக்குறளின் உரையும், நயமும் படிக்கும் போதே நம் மனக்கண் முன்னே நாம் நேசிக்கும் பெண்ணோ அல்லது நாம் சந்தித்த காதல்களோ வந்து விடுவார்கள் என்பது உண்மை. எவ்வளவு பெரிய வீரனையும் வீழ்த்தும் ஆற்றல் பேரழகிற்க்கு உண்டு என்பதை திருக்குறளில் உணர்த்திய உணர்வை அவர் பார்த்த பார்வையோடு நின்று விடாமல் அதையும் தாண்டி அந்தக் குறளுக்குப் பொருத்தமாக சிந்தித்து ரோமாபுரி மன்னன் சீசர் கிளியோபாட்ரா இருவரையும் பொருத்திக் காட்டி திருக்குறளின் மேன்மையை உணர்த்திய நூலாசிரியர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

காமத்துப்பாலில் உள்ள திருக்குறள்களில் நூலாசிரியருக்கு மனம் கவர்ந்த பெரும்பாலான திருக்குறளை தேர்ந்தெடுத்து இலக்கிய விருந்து வைத்துள்ளார். இந்த நூல் படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் அவரவர் காதலை மலர்விக்கும் விதமாக திருக்குறள் நயம் நயம்பட எழுதி உள்ளார், பாராட்டுக்கள்.

திருக்குறளை வெவ்வேறு கோணத்தில் படம்பிடித்துக் காட்டி உள்ளார். திருக்குறளின் நுட்பத்தையும் நன்கு உணர்த்தி உள்ளார். நயத்தைப் படிக்கும் போது நமக்கு தொடர்புடைய திரைப்படப்பாடல்களும் நினைவுக்கு வருகின்றன.



மற்றொரு திருக்குறள் நயம் நூலிலிருந்து உங்கள் ரசனைக்கு இதோ!

பெண்னினால் பெண்மை உடைத்துஎன்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு. (குறள் எண் : 1280)

பொருள் :

பெண்கள் தாம் உற்ற காதல் நோயை தம் நெருங்கிய உறவான கணவனிடமும் வாய்விட்டுக் கூறாமல், கண்களால் வெளிப்படுத்தி அதை நீக்குமாறு கண்களாலேயே வேண்டுவது இயல்பான பெண்மைக்கு மேலும் பெண்மை சேர்த்தது போலச் சிறப்பானது.

நயம் :

தாம் உற்ற காம நோயைத் தன் காதல் கணவனிடம் கூட வெளிப்படையாகக் கூறாதிருப்பது பெண்ணின் சிறப்பு எனில், அக் காமநோய் உற்றதைக் குறிப்பால் உணர்த்தி, அதிலிருந்து தம்மைக் காக்குமாறு இருவிழியாலே இரந்து வேண்டுவது, பெண்மைக்கே பெண்மை சேர்க்கும் பெருஞ்சிறப்பு என்று கூறி, குறிப்பறிவுறுத்தலின் சிறப்பினைக் கூறுகிறார் திருவள்ளுவர்.

ஊடல் என்பது உணவில் உப்பு சேர்ப்பது போல அளவோடு இருக்க வேண்டும். ஊடலை, விரைவில் உடைத்து விட வேண்டும். பிறர் பார்வையால் எச்சலான காதலன் மார்பில் காதலி சாய மாட்டேன் என்பது தலைவன் சூடியிருந்த மலர் கண்டு காதலி சந்தேகிப்பது. இப்படி ஊடல், கூடல் என காதலின் அனைத்து பரிமாணங்களையும் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்த்திய உணர்வை, நயத்தோடு எழுதி, நமக்கும் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர், பாராட்டுக்கள்.

திருக்குறளில் இனி காமத்துப்பாலை தவிர்த்து விடாமல் அவசியம் அனைவரும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து வெற்றி பெற்றுள்ள நூலாசிரியருக்கும், நூலைப் பதிப்பித்த ஓவியா பதிப்பகத்துக்கும் பாராட்டுகள்.

- கவிஞர் இரா. இரவி.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/bookreview/p82.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License