இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுவர் பகுதி
சம்பவங்கள்

வாழ்க்கையில் தவறான முடிவு எடுக்கலாமா?


கி.மு 4ஆம் நூற்றாண்டு.

கிரேக்க நாட்டை இரண்டாம் பிலிப் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவருடைய மகன்தான் அலெக்சாண்டர். மன்னர் பிலிப்பிற்கு மிகவும் பிடித்த மகனும் அலெக்சாண்டர்தான்.

அதனால், “அலெக்சாண்டர்தான் தங்களது நாட்டின் அரசியல் வாரிசு” என்ற யூகம் எல்லோருக்குமே இருந்தது.

அதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. அது வேறொன்றுமில்லை, அலெக்சாண்டருடைய தந்தையும் தாயும், வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள்.

அந்தக் காரணத்தால், கிரேக்க அரசாங்கத்தைச் சார்ந்த பல நிர்வாகிகளுக்கு அலெக்சாண்டரைப் பிடிக்காது. கிரேக்க நாட்டுக்கு அவர் ஒரு முறையான வாரிசு இல்லை என்றே அவர்கள் நினைத்தனர். அவன் சிறுவனென்றும் பாராமல், பல முறை வார்த்தைகளாலும், செயல்களினாலும் அவரைக் காயப்படுத்தினார்கள். நேரடியாகவும், மறைமுகமாகவும் வெறுப்பைக் காட்டினார்கள்.

என்னதான் மனதளவில் அலெக்சாண்டர் உறுதியா இருந்தாலும், அவனால் எவ்வளவு வெறுப்பைத்தான் தாங்க முடியும்? கொஞ்சம் கொஞ்சமாக, அந்த வெறுப்பு அலெக்சாண்டரை பாதித்தது, மனக்குழப்பதையும் உருவாக்கியது. சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், தவித்துக் கொண்டிருந்தார்.

அந்நிலையில், அவரது தந்தையான, மன்னர் இரண்டாம் பிலிப்பிற்கு புதிதாக ஒரு திருமணம் நடந்தது. பலதார மனம் வழக்கிலிருந்த அந்தக் காலந்த்தில், திருமணத்தில் கலந்து கொண்டவர்களில் பலரும் தம்பதிகளை வாழ்த்தினர். அரசாங்க நிர்வாகிகளாக இருந்த சிலர், "இனியாவது இந்தத் தேசத்திற்கு முறையான வாரிசுகள் பிறக்கட்டும்" என்றனர்.

அதைக் கேட்ட அலெக்சாண்டர் மிகுந்த ஆத்திரமும் கோபமும் அடைந்தார். அது தனக்கும், தன் தாய்க்கும் ஏற்பட்ட அவமானமாகக் கருதினார். தன்னுடைய அம்மா மற்றும் சகோதரர்களை அழைத்துக் கொண்டு அந்த அரண்மனையை விட்டே வெளியேறினார். தனியான ஒரு இடத்தில் வாழ ஆரம்பித்தார்.

மன்னர் பிலிப், இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தனது நண்பர்களையும், நலம் விரும்பிகளையும் அனுப்பி, அலெக்சாண்டரை அழைத்து வரச் சொன்னார். ஆனால், யார் அழைத்தும் அலெக்சாண்டர் திரும்பி வரவில்லை. இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார் மன்னர் பிலிப்.


இந்தச் சூழ்நிலையில்தான், அலெக்சாண்டர் இருந்த இடத்திற்கே வந்து, அவரைச் சந்தித்தார், அவருடைய ஆசிரியரான அரிஸ்டாட்டில்.

ஆசிரியரை வரவேற்ற அலெக்சாண்டரிடம், "நீ எதற்காக இப்படித் தனியாக வந்து உட்கார்ந்திருக்கிறாய்?" என்று கேட்டார் அரிஸ்டாட்டில் .

"ஏன் ? தங்களுக்குத் தெரியாதா ? நான்தான் முறையான வாரிசு இல்லையே! அங்கே, எல்லாரும் என்னை வெறுக்கத்தான் செய்கிறார்கள். நான் அங்கே இருந்து என்ன செய்யப் போறேன்? எனக்கு மரியாதை இல்லாத இடத்தில், எனக்கென்ன வேலை?" என்று குமுறினார் அலெக்சாண்டர்.

அந்த பதின்மூன்று வயதுப் பையனுடைய மனநிலை, அரிஸ்டாட்டிலுக்கு நன்றாகப் புரிந்தது.

"இவனுக்கு அறிவுரை சொல்லிப் புரிய வைக்கமுடியாது. செயல்பாட்டின் மூலம்தான், புரிய வைக்க வேண்டும்" என்று தன் மனதுக்குள் முடிவு செய்து கொண்டார்.

அந்த ராத்திரியிலேயே, அலெக்சாண்டரை மாறு வேடம் போட வைத்து, தன்னுடைய நண்பர் ஒருவர் வீட்டு விருந்துக்கு அழைத்துச் சென்றார்.

பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருந்தது அந்த விருந்து.

அங்கே சென்றதும், தன் நண்பரை அழைத்துப் பேசிய அரிஸ்டாட்டில், "இந்த விருந்தில் என்ன சிறப்பம்சம் ? எதாவது விசேஷ உணவுப்பொருள் உண்டா?" என்று கேட்டார்.

அந்த நண்பரும், "இந்தமுறை புதிதான ஒரு இனிப்புப் பதார்த்தத்தைச் செய்திருக்கிறோம். அரிதாகக் கிடைக்கும் அத்திப் பழங்களாலான இனிப்பு வகை அது. இதோ நீயும் சுவைத்துப் பார்" என்று அரிஸ்டாட்டிலிடம் ஒரு கிண்ணத்தை நீட்டினார்.

அரிஸ்டாட்டில், அதை சுவைத்துப் பார்த்தார். மிகவும் அருமையாக இருந்தது.

உடனே, மாறுவேடத்தில் இருந்த அலெக்சாண்டரை அழைத்து, "இதைச் சுவைத்துப் பார்" என்றார்.

அலெக்சாண்டரும் சாப்பிட்டுப் பார்த்தார். தான் இதுவரை சுவைத்திராத, ஆனால் நல்ல சுவையாக அது இருந்தது.

இப்போது அரிஸ்டாட்டில், ஒரு அகன்ற தட்டை எடுத்து அலெக்சாண்டரிடம் கொடுத்தார். அந்தத் தட்டில் நிறையக் கிண்ணங்களும், அந்தக் கிண்ணங்களில் அத்திப்பழ இனிப்பும் இருந்தன.

"இதை, இங்கிருக்கிற எல்லோருக்கும் கொண்டுபோய்க் கொடு" என்று சொன்னார் அரிஸ்டாட்டில்.

தன் ஆசிரியர் சொற்படியே, அதை அந்த விருந்தில் கலந்து கொண்டிருந்த ஒவ்வொருவரிடமும் கொண்டு போய்க் கொடுத்தார் அலெக்ஸாண்டர்.

ஒரு சிலர், ஆகா, ஓகோவென்று பாராட்டினார்கள். வேறு சிலர், "இது பார்ப்பதற்கே நன்றாக இல்லை. வேண்டாம்" என்று சொல்லிவிட்டார்கள்.

இன்னும் ஒரு சிலர், சுவைத்துப் பார்த்துவிட்டு, "என்ன கண்ராவி இது" என்றும் கூடச் சொன்னார்கள்.

கொடுத்து முடித்துவிட்டுத் திரும்பி வந்த அலெக்ஸாண்டரிடம் அரிஸ்டாட்டில், "எல்லாருக்கும் கொடுத்தாயிற்றா?" என்று கேட்டார்.

"ஆம்" என்றார் அலெக்சாண்டர்.

"சரி. எல்லாருக்கும் அது பிடித்திருந்ததா?" என்று மறுபடியும் கேட்டார் அரிஸ்டாட்டில்.

"அது எப்படி எல்லாருக்கும் பிடிக்கும்? ஒரு சிலருக்கு பிடித்திருந்தது. வேறு ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை" என்று பதிலளித்தார் அலெக்சாண்டர்.


"ஏன் பிடிக்கவில்லை? எனக்கும் உனக்கும் பிடித்திருந்ததே!! அப்படியெனில், அந்த உணவு சுவையில்லாததா? இல்லை இங்கிருப்பவர்களுக்கெல்லாம் நாக்கு செத்துப் போய்விட்டதா ?" என்று கோபமாகக் கேட்டார் அரிஸ்டாட்டில்.

அரிஸ்டாட்டில் கோபக்காரர்தான். முன்னால் நிற்பவர் யாரென்றும் பாராமல், கடுமையான வார்த்தைகள் பேசுபவர்தான்.

அவர் கோபமறிந்து அலெக்சாண்டர், "அது எப்படி ஒரே உணவுப்பொருள் எல்லோருக்கும் பிடிக்கும்? அவரவருக்கென்று ஒரு ரசனை இருக்கிறதல்லவா? அதற்காக அந்த உணவுப்பொருள் மட்டமானதாக ஆகிவிடுமா?" என்று பதிலளித்தார்.

உடனே அரிஸ்டாட்டில், அலெக்சாண்டருடைய இரண்டு கரங்களையும் பற்றிக்கொண்டு சொன்னார்.

"ஒரு உணவுப்பொருளையே எல்லாருக்கும் ஒன்று போலப் பிடிக்காதென்றால், ஒரு மனிதனை மட்டும் எப்படி எல்லோருக்கும் பிடிக்கும்? உன்னை விரும்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறதென்றால், வெறுப்பதற்கும் ஒரு கூட்டம் இருக்குமல்லவா? உன் பிறப்பைக் காரணம் காட்டி ஒரு கூட்டம் உன்னை வெறுக்கிறதென்றால், அது அந்தக் கூட்டத்துடைய தவறா? உன்னுடைய தவறா? வா, அலெக்சாண்டர் வா... உன்னுடைய நாடும், உன்னுடைய ராஜ்ஜியமும் உனக்காக காத்துக் கொண்டு இருக்கிறது. போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற்றட்டும்... நீ வா"

அன்று அவருடன் கிளம்பி வந்த அலெக்சாண்டர், தன்னுடைய தேசத்தை மட்டுமல்லாது, இந்த உலக வரைபடத்தில் பாதிக்கும் மேலாக வெற்றி கொண்டது, நம் அனைவருக்குமேத் தெரியும்.

உங்களையும் யாராவது காரணமே இல்லாமல் வெறுத்து ஒதுக்கலாம். பிறப்பைக் காரணம் காட்டியோ, உருவத்தைக் காரணம் காட்டியோ, நிறத்தைக் காரணம் காட்டியோ, வசதிகளைக் காரணம் காட்டியோ இழிவாய்ப் பேசலாம்.

அதனியெல்லாம் கண்டு கொள்ளாது, உங்கள் மீது என்ன தவறென்பதை யோசித்துப் பாருங்கள். நாம் நேர்மையாகத்தான் இருக்கிறோமா என்று சீர்தூக்கிப் பாருங்கள். நாம் சரியாகத்தான் இருக்கிறோம் என்று தோன்றினால், எதையும் கண்டு கொள்ளாமல் உங்கள் வழியில் சென்று கொண்டேயிருங்கள்...


இந்த வெருப்புகளாலும், குழப்பங்களினாலும், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கவேண்டிய முடிவைத் தவறாக எடுத்துவிடாதீர்கள்.

எல்லா நேரத்திலும், ஒரு அரிஸ்டாட்டில் வந்து உங்களை காப்பாற்ற முடியாது.

வெறுப்புகளை உதறித்தள்ளி, நேரான பாதையில் செல்லுங்கள். வெற்றி உங்களுடையதுதான்...!

*****

- மு. சு. முத்துக்கமலம்


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/children/incident/p105.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License