பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால் ஓடினான். தன் தாயை விட்டு வெகுதூரம் வந்து விட்டதை அப்போது தான் சிறுவன் உணர்ந்தான். யாருமே இல்லாத அப்பகுதியில் சிறுவனின் அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது.
"அய்யோ, வழி தெரியாமல் நெடுந்தூரம் வந்துவிட்டேனே... அம்மா... அம்மா... எங்கம்மா கிட்ட யாராவது கொண்டு போய் விடுங்களேன்!” என்று அவன கதறி அழுதான்.
அப்போது அவ்வழியே வந்த ஒருவன், சிறுவனின் அழுகுரல் கேட்டு அவனிடம் சென்றான்.
அவன், “தம்பி நீ யாரு... எதுக்கு இங்கு வந்து தனியாக நின்று அழுது கொண்டிருக்கிறாய்...?” என்று கேட்டான்.
அதற்கு அந்தச் சிறுவன், “நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடி வந்தேன். என்னுடன் வந்த என் அம்மாவைப் பிரிந்து வந்து விட்டேன். அவங்க வயல்ல வேலை செஞ்சிட்டு வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்காங்க... எனக்கு திரும்பிப் போக வழி தெரியவில்லை...” என்றான் சிறுவன்.
அவனைச் சமாதானப்படுத்திய அவன், "சரி தம்பி, பயப்படாதே... நான் உங்கம்மா கிட்ட கூட்டிகிட்டு போறேன்! உங்கம்மா எப்பிடி இருப்பாங்கன்னு சொல்றியா?" எனக் கேட்டான்.
அதற்கு "எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க... இந்த ஊருலயே அவங்க தான் அழகு!" என பெருமையுடன் சொன்னான் அந்தச் சிறுவன்.
சிறுவனை அழைத்துக் கொண்டு ஊரை நோக்கிச் சென்ற உழவன், எதிரில் மிகவும் அழகான பெண் நடந்து வருவதைக் கண்டார்.
உடனே அவன் "தம்பி, இவங்க ரொம்ப அழகாக இருக்கிறாங்க. இவங்க தானே உன் அம்மா? எனக் கேட்டான்.
அந்தச் சிறுவன், “என் அம்மா, இவங்களை விட இன்னும் அழகாக இருப்பாள்” என்றான்.
அந்தச் சிறுவனுக்கு மட்டுமில்லை, எல்லாச் சிறுவர்களுக்கும் அவர்களின் அம்மாதான் மிகவும் அழகு.