ஒரு சிறு பையன் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கும் தனது தந்தையைப் பார்ப்பதற்காகச் சுரங்கத்தின் வாசலில் காத்திருந்தான்.
வேலை முடிந்து சுரங்கத்திலிருந்து ஆட்கள் வெளியே வரத் தொடங்கினார்கள்.
அப்பொழுது ஒருவர், “தம்பி, இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்.
அப்போது அவன், “என் அப்பா வேலை முடித்து வருவதற்காகக் காத்திருக்கிறேன்” என்று பதிலளித்தான்.
“உங்கள் அப்பாவை உன்னால் கண்டுபிடிக்க முடியாது, நிலக்கரித் தூசியால் முகம் கருப்படைந்து இருக்கும். தலையில் தலைக்கவசம் அணிந்து சுமார் 700 பேர் வருவார்கள். உன்னால் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியாது. நீ வீட்டுக்குப் போ” என்றார்.
அதற்கு அச்சிறுவன், “இருக்கலாம். என்னால், அவரைக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், எங்க அப்பாவுக்கு என்னை நன்றாகத் தெரியும். அவர் என்னை அடையாளம் கண்டு விடுவார்” என்று பதிலளித்தான்.
அந்தச் சிறுவனின் அறிவு கண்டு வியந்தார் அவர்.