நன்றியறிதல்

நன்மை செய்தவர்க்கு நன்மை செய்யாதிருப்பது மனித குணத்திற்கு விரோதம். நன்மை செய்தவர்க்குத் தீமை செய்வது பேய்க் குணமாகும்.
- ஸெனீக்கா

செய்நன்றி செலுத்த அதிகமாய் ஆத்திரப்படுவதும் செய்நன்றியைக் கொலை செய்வதில் ஒரு வகையாகும்.
- ரோஷிவக்கல்டு

நன்றி செய்தாயா? அதைப் பற்றிப் பேசற்க. நன்றி பெற்றாயா? அதைப் பற்றிப் பேசுக.
- ஸெனீக்கா

பெற்ற நன்றியை மறப்பவனும், பிறரிடம் மறைப்பவனும், கைம்மாறு செய்யாதவனும் செய்நன்றி கொல்லும் பாதகர்கள் இவர்களில் பெரிய பாதகன் நன்றியை மறப்பவன்.
- ஸிஸரோ

நன்றியறியாமையில் சகல இழிதகைமைகளும் அடங்கும். இதர துர்க்குணங்களோடன்றி அது ஒரு பொழுதும் தனியாகக் காணப்படுவதுமில்லை.
- புல்லர்

நன்றியறியாமை ஒரு வித பலவீனமே. பலமுடையவர் நன்றியறியாதிருக்க நான் பார்த்ததில்லை.
- கதே

நன்றியறிதலைப் போன்ற இன்பகரமான மனோதர்மம் வேறொன்றுமில்லை. இதர அறங்களைக் கடைப்பிடிப்பதில் கடினம் உண்டு. இதிலோ அணுவளவு கடினமும் கிடையாது.
- அடிஸன்

நண்பர்களின் உதவியை நாம் மிகைப்படுத்திக் கூறுவதற்குக் காரணம் நம்முடைய நன்றியறிவுடைமையன்று. நம்முடைய தகுதியைப் பிறர்க்கு அறிவிக்க வேண்டுமென்ற ஆசையேயாகும்.
- ரோஷிவக்கல்டு

நன்றியறிதல் அறங்களில் குறைந்தது. நன்றியறியாமை மறங்களில் கொடியது.
- பழமொழி

சரியாய் மெச்சக் கற்றுக்கொள். வாழ்வின் பேரின்பம் அதுவே. பெரியோர் மெச்சுபவைகளைக் கவனி; அவர்கள் பெரிய விஷயங்களையே மெச்சுவர். தாழ்ந்தோரே இழிவான விஷயங்களை மெச்சவும் வணங்கவும் செய்வர்.
- தாக்கரே

வீசு, குளிர்காற்றே! வீசு. மனிதனுடைய நன்றியறியாமைப் போல நீ அவ்வளவு அன்பற்றவன் அல்ல; உன் மூச்சு சீறினாலும் உன் பற்கள் கூரியதாயில்லை.
- ஷேக்ஸ்பியர்

நன்றியறிதல் என்பது அதிகக் கவனமாய் உண்டாக்க வேண்டியப் பயிராகும். அதைக் கீழோரிடையேக் காண முடியாது.
- ஜான்சன்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.