* நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!
* கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல. உன்னைத் தூங்க விடாமல் செய்வதேக் (இலட்சிய) கனவு.
* நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
* நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.
* ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல... உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே.
* அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையைப் பாழாக்கி விடும். கடமையைப் பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
* ஒரு முட்டாள், தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால், ஒரு புத்திசாலி, தன்னைப் புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்.
* கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டும் காண்பவர்கள்தான் தோற்கிறார்கள்.
* கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே, அது உன்னைக் கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார், அதை வென்றுவிடலாம்.
* உன் கை ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே... ஏனென்றால், கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.
* வாய்ப்புக்காக காத்திருக்காதே; வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்!
* ஒரு முறை வந்தால் அது கனவு, இரு முறை வந்தால் அது ஆசை, பல முறை வந்தால் அது இலட்சியம்.
* துன்பங்களைச் சந்திக்கத் தெரிந்தவனுக்குத் தோல்வியே இல்லை!
* கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை. நிச்சயம் எதுவும் இல்லை.
* வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறச் சிறந்த வழி.
* உலகம் உன்னை அறிவதற்கு முன் உன்னை உலகுக்கு அறிமுகம் செய்துகொள்.
* சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே சில திறமைகளும் வெளிப்படுகின்றன.
* சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை!
* நீங்கள் வெற்றி பெற்றவர்களின் சரித்திரங்களைப் படிக்காதீர்கள். அதிலிருந்து வெறும் தகவல்களைத்தான் பெற முடியும். தோல்வியடைந்தவர்களின் சரித்திரங்களைப் படியுங்கள் அதிலிருந்துதான் வெற்றிக்கான வழி கிடைக்கும்.
* கனவு காண்பவர்கள் அனைவருமேத் தோற்பதில்லை. கனவு காணுங்கள், திட்டமிடுங்கள், செயல்படுங்கள் கனவு மட்டுமே காண்பவர்கள் தோற்கின்றனர்.
* தனது இலக்கை குறிவைத்துத் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும் பெரும்புள்ளிதான்.