மனிதன் எதில் சிக்கிக் கொள்வான்?

காண்பது அனைத்தையும் சந்தேகம் கொண்டு பார்.
- லெனின்

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
- பெர்னாட்ஷா

ஒரு மனிதனின் வாழ்க்கையில் நன்மை செய்தலே உண்மையான இன்பம் அளிக்கும் செயல்.
- சர் பிலிப்சிட்னி

ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும்.
- வில்லியம் ஹாஸ்விட்

மிக அற்பமான விஷயங்களைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.
- சாமுவேல் பட்லர்

மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும் குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை.
- ஆல்பர்ட் ஸ்வேசர்

கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை, இந்தமூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்.
- முகமதுநபி

வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள் உள்ளன. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள். பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
- வில்லியம் ஷேக்ஸ்பியர்

தங்கள் கால்களால் பறவை சிக்கிக் கொள்ளும்; தன் நாவினால் மனிதன் சிக்கிக் கொள்வான்.
- தாமஸ் புல்லர்

எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
- ஆப்ரகாம் லிங்கன்

உதவும் கரங்கள், ஜெபிக்கும் உதடுகளை விடச் சிறந்தது.
- அன்னை தெரஸா

சுவர்க்கத்தில் என்னைச் சிறை வைத்தாலும், நான் அதன் பளிங்குச் சுவர்களைத் தாண்டி வெளியேறவே விரும்புவேன். எனக்குச் சுதந்திரமே தேவை.
- டிரைடன்

ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; எதைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
- பைபிள்

மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல்.
- பைரன்

ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலை செய்வதுதான் கடினமானது.
- மெக்லாலின்

நட்பு என்பதும் நம்பிக்கை; கற்பு என்பதும் நம்பிக்கை; முயற்சி என்பதும் நம்பிக்கை; நாம் மூச்சு விடுவதும் நம்பிக்கை.
- கவிஞர் வைரமுத்து

எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்; எதிர்பார்த்தால் இறுதிவரை எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்!
- எட்மண்ட் பர்சி

மரியாதைக்கு விலை கிடையாது. ஆனால் அது அநேகரை விலைக்கு வாங்கும்.
- மாண்டேகு

ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூடத் தேக்கு விற்பான்!
- கவிஞர் வாலி

ஒருவன் கற்பிக்கும் போது, இருவர் கற்றுக்கொள்கின்றனர்.
- ராபர்ட் ஹாஃப்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.