இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுவர் பகுதி
கதை

குப்பையாகும் பணம்

சுபஸ்ரீ ஸ்ரீராம்


முகுந்தன் என்ற ஏழை விவசாயி இருந்தான். அவன் பிறந்ததிலிருந்தே பணக்கஷ்டத்தைத்தான் பார்த்து இருக்கிறான். அதனால் எந்த வேலையைச் செய்தாலும் மிகவும் கவனமாக சிக்கனத்துடன் வேலை செய்வான். அவனுக்குக் கடவுள் நம்பிக்கை மிக அதிகம்.

ஒவ்வொரு முறையும் சந்தைக்கு செல்லும் போது, அவன் ஊரில் உள்ள அரசமரத்துப் பிள்ளையாரிடம் தன் கஷ்டத்தைச் சொல்லிவிட்டுத்தான் செல்வான்.

இப்படியே பல நாட்கள் கடந்த நிலையில் ஒரு நாள் மனம் வெறுத்து அரசமரத்துப் பிள்ளையாரிடம் வந்து சத்தம் போட்டுக் கத்தினான்.

"ஏ கடவுளே எனக்கு விடியவே விடியாதா?. உன்னிடம் எத்தனை நாட்களாகப் புலம்பிக் கொண்டு இருக்கிறேன். உன் காதில் நான் சொல்வது எதுவும் விழவில்லையா?"

இதைக் கேட்ட பிள்ளையார் தீடீரென்று அவன் முன் தோன்றி உன் கஷ்டத்தைப் போக்க வந்துள்ளேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.

எனக்கு எப்பொழுதெல்லாம் பணம் தேவையோ அப்பொழுதெல்லாம் நீங்கள் பணம் தரவேண்டும் என்று கேட்டான். உடனே பிள்ளையாரும் அப்படியே ஆகட்டும் என்றார்.

உடனே அவன் "எனக்கு இப்பொழுது ஒரு ஐயாயிரம் தேவை. தாருங்கள்" என்றான். உடனே அவரும் கொடுத்தார்.

அவனுக்குப் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் ஒரு வாரமாக தூக்கம் வரவில்லை.

அந்த ஊரில் ஆனந்தன் என்ற அயோக்யனும் உள்ளான். அவன் மக்களுக்கு நன்மை செய்வதைக் காட்டிலும் நிறைய தீமைகள் அதிகமாக செய்து கொண்டு இருந்தான்.

முகுந்தனுக்கு வரத்தினால் பணம் கிடைத்த விஷயம் ஆனந்தன் என்ற கெட்டவனுக்கும் தெரிந்து விட்டது.



அவனும் அரசமரத்துப் பிள்ளையாரிடம் வந்து மனமுருகி பிரார்த்தனை செய்தான். "எனக்கும் ஏதாவது வரம் கொடுங்கள்." என்று வேண்டினான்.

உடனேப் பிள்ளையாரும் அவன் முன்னே வந்து, "உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!" என்றார்.

அவனும் "எனக்கு எப்பொழுதெல்லாம் பணம் தேவையோ அப்பொழுதெல்லாம் நீங்கள் பணம் தர வேண்டும்" என்று முகுந்தனைப் போலவே கேட்டான். பிள்ளையாரும் "சரி" என்றார்.

"எனக்கு இப்பொழுது ஒரு பத்தாயிரம் ரூபாய் தேவை தாருங்கள்" என்றான் அவன். உடனே அவரும் கொடுத்தார்.

ஆன்ந்தன் அந்தப் பணத்தைத் தாராளமாக செலவு செய்தான். ஒரு கட்டத்தில் இவன் கேட்க கேட்கப் பிள்ளையாரும் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

இந்த விஷயம் முகுந்தனுக்கு தெரிந்து விட்டது. அவனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. என்னடா இது நாம் இவ்வளவு நல்லவனாக இருக்கிறோம். நமக்கு கடவுள் வெறும் ஐயாயிரத்தை கொடுத்துட்டு பேசாம இருந்துட்டாரு. ஆனா ஆனந்தனுக்கு மட்டும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறாரு. இதை இப்படியே விட்டா நமக்கு ஒரு பணமும் இனிமே கிடைக்காது. உடனே பிள்ளையாரைப் பார்த்து ஒரு பிடி பிடிக்கணும் என்று சொல்லி அரசமரத்தடிக்குப் போனான்.



சத்தம் போட்டுக் கடவுளைக் கூப்பிட்டான். அவன் முன் பிள்ளையார் தோன்றினார்.

"ஏ கடவுளே நீ செய்யறது நியாயமா? ஆனந்தன் எவ்வளவு கெட்டவன். ஆனால் அவனுக்கு வாரிவாரிப் பணத்தைக் கொடுக்கிறாய். நான் எவ்வளவு நல்லவன். எனக்கு ஒரு நாள் கொடுத்ததோட சரி. அதுக்கப்புறம் நீ கொடுக்கவே இல்லை." என்றான்.

அதற்குப் பிள்ளையார், "ஏ முட்டாளே! முதலில் கொடுத்த பணத்தையே உனக்கு சரியானபடி செலவு செய்ய தெரியவில்லை. உனக்கு எப்படி மேற்கொண்டு கொடுக்கிறது?. ஆனா அவன் கெட்டவனா இருந்தாலும் அவன் கேட்கக்கேட்க நான் கொடுத்ததால் அவன் மனம் மாறி இப்போது மக்களுக்கு நல்லது செய்ய ஆரம்பிச்சுட்டான்."

முகுந்தன் பேசாமல் இருந்தான்.

பிள்ளையாரும் "இப்பவாவது புரிஞ்சுக்கோ. வாழ்க்கையில் கெட்டவனாகி விட்டவன் அப்படியே கெட்டவனாக இருப்பதில்லை. எப்படி கிணத்தில தண்ணீர் எடுக்க எடுக்க ஊருவது போல் பணத்தைப் பெறுகிறோமோ அதை நல்வழியில் செலவு செய்ய வேண்டும். நமக்குக் கிடைத்தது போதும் என்று உன்னைப் போல் அதைப் பயன்படுத்தாமல் இருக்கவும் கூடாது." என்றார்.

கதையின் நீதி:

பணம் அதிகமாகச் சேர்த்தால் தேவைக்கு ஏற்ப நல்வழியில் செலவு செய்யனும். இல்லை என்றால் அதைக் காப்பாற்ற வேண்டும் என்கிற மனத்துடன் இருந்த மனநிம்மதியும் போய்விடும். அதே போல் பொருளை அளவுக்கு அதிகமாக சேர்த்தால் அதற்கு மதிப்பும் போய் குப்பையாகி விடும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/children/story/p2.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License