இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுவர் பகுதி
கதை

ஆக்சிஜன் இல்லாத உலகம்

கார்ஜெ


சலசலவென்று ஒரே சத்தமாக இருந்தது. சில இடங்களில் இரகசிய வாக்குப் பதிவு போல இருந்தது. யாருடைய கருத்துக்குச் செவி சாய்ப்பது என்ற குழப்பத்தில் சலசலப்பு நீண்டது.

ஆமா நீங்க எல்லாம் என்ன நினைச்சுகிட்டிருக்கீங்க? உங்களிடம் கட்டுரை எழுதச் சொல்லி அரை மணி நேரம் ஆகுது. என்னப் பண்றீங்க.

எங்கும் மயான அமைதி.

அந்த அமைதியை விரும்பாத அரசி எழுந்தது. வணக்கம் அரசனே. நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் என்ன செய்வதென்று கட்டுரை எழுதச் சொன்னீர்கள். ஆனால் அப்படி நிகழ வாய்ப்புள்ளதா அரசனே?

ஏன் வாய்ப்பில்லை. காற்றில்லாத இடமாக மாற இந்த மக்களே போதும். உன்னையும் என்னையும் மறந்தவர்கள். நம் பகைவர்களை ஆரத்தழுவ நினைப்பவர்கள். பகைவரின் மூலம் தீமை நிகழ்வதை உணராதவர்கள். அப்படி இருக்கும் போது பற்றாக்குறை நிகழ ஏன் வாய்ப்பில்லை.

அதெல்லாம் சரி அரசனே. அப்படி பற்றாக்குறை நிகழ்ந்தால் நம்மைத் தேடி மக்கள் வருவார்கள்தானே?

நிச்சயம் வந்துதானே ஆக வேண்டும். அவர்கள் சந்தோசமாக இருக்க என்னெல்லாமோ கண்டுபிடித்தார்கள். ஆனால் கண்டிபிடித்தவன் தம்மை இழக்கிறான் அல்லது அழிக்கிறான்.

அதோடு மட்டுமா அரசே! தற்கொலையும் செய்து கொள்கிறான். ஆமாம் அரசனே .இதெல்லாம் எப்படி சரி செய்வது என்று யோசித்து மக்களிடையே நேரடிக் கருத்துகணிப்பு நிகழ்த்தலாமா?

வேண்டாம் அரசியே. நாம் போவதை விட அவர்களே நம்மைத் தேடி வரவேண்டும்.

எப்படி சாத்தியம் அரசே?

கட்டுரை எழுதுவதை விட, நாமே நேரில் போய்ப் பார்க்கலாமா அரசே?

அதற்கு முன்பு நாம் ஒன்று செய்ய வேண்டும். எல்லோருக்கும் நான் அரசன் என்பதால் நம்மைச் சார்ந்த அனைவரையும் முதலில் சந்திப்போம். பாதிபேர் இங்கேதான் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

இதைக் கேட்ட மற்றவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

அரை மணி நேரத்தில் அனைவரும் அரசன் அரசி முன்பு வந்து சேந்தார்கள்.

தாங்கள் அனைவருக்கும் சொல்லப்படுவது என்னவென்றால் இன்னும் அரை மணி நேரத்தில் மக்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை நாம் ஏற்படுத்த வேண்டும். நானும் அரசியும் மட்டும் இந்த முடிவை எடுக்க முடியாது. தங்களின் கருத்துகளைத் தெரிந்து கொள்வதற்கே இந்தச் சந்திப்புக் கூட்டம். உங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

அரசே தாங்கள் மேற்கொண்டுள்ளது நல்ல முடிவா? இதனால் மக்கள் பாதிக்கப்படமாட்டார்களா? குழந்தைகள் நிலை என்னாவது? வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் எல்லோரும் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டி வருமே!

தெரிந்ததுதான் நண்பர்களே! ஆனால், அறிவியல் முன்னேற்றமும், தொழில்நுட்பமும் உச்ச நிலையைத் தொட்டு மக்கள் இன்பத்தை அனுபவிக்கிறேன் என்ற மாயையில் நம்மை மறந்துவிட்டார்கள். அதோடு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நம்மைப் பேணி வளர்க்கவும் தவறிவிட்டார்கள். அழித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையை மக்களுக்குப் புரியவைக்க வேண்டியது நமது கடமை.

அரசனின் பேச்சில் உண்மை உள்ளதை மற்றவர்கள் புரிந்து கொண்டு தலையாட்டினார்கள்.

அரை மணி நேரம் ஆக்சிஜன் இல்லாத உலகமாக மாற்றப் போகிறோம். அதனால் நீங்கள் அனைவரும் மக்களையும், மற்ற உயிரினங்களையும் பார்வையிடுங்கள். நீங்கள் பார்வையிடுவது யாருக்கும் தெரியக் கூடாது. யார் தாங்க முடியாமல் திணறுகிறார்களோ தங்களைக் காப்பாற்ற வேண்டுமென நம்மைத் தேடுகிறார்களோ அவர்களை இங்கே அனுப்பி வையுங்கள்.


சரிங்க அரசே.

அரசனும் அரசியும் தவிர மற்ற எல்லோரும் கிளம்ப ஆயத்தாமானார்கள்.

கிளம்பியவர்கள் கொஞ்ச நேரத்தில் காற்றின் செயல்பாட்டைக் குறைக்க ஆரம்பித்தார்கள்.

சில நொடிகளில் ஒரு வீடு, இரண்டு வீடு, மூன்று வீடு, நான்கு, பத்து, நூறு, ஆயிரம்… கோடி என்று இப்படியேக் காற்றின் பற்றாக்குறையினால் மக்கள் ஸ்தம்பித்தனர்.

என்ன காற்று குறைகிறது. ஜன்னல் இருந்த வீடுகளில் ஜன்னல் திறக்கப்பட்டது. சில வீடுகளில் வெளியே வந்தார்கள். மொட்டை மாடிக்குப் போனார்கள். இந்த நிலையைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. குழந்தைகள் அழ ஆரம்பித்தார்கள் . வயதானவர்கள் மயங்க ஆரம்பித்தார்கள்.

காற்றில்லாமல் சுவாசிக்கச் சிரமப்பட்டார்கள். தொடர்ந்து மரங்களைத் தேடி ஓடினார்கள். ஆனால் அவர்கள் கண்ணில் பட்டது எல்லாமே பகைவர்கள்தான். அதனால் எந்தப் பயனும் இல்லை. உலகத்தின் கருவை அழித்துவிடும் போலிருக்கே!

கருவேலம் சிரித்தது. மக்கள் அழுதனர். அட முட்டாள்களே என்னையும் அழிக்கமாட்டீர்கள். மழை தரும் மரங்களையும் வளர்க்கவும் மாட்டீர்கள்.

மரம், செடி, கொடிகள் அசைவில்லை. என்ன செய்வது? பலர் மயங்கும் நிலை ஏற்பட்டது. மற்றவர்கள் அப்போதுதான் இயற்கையை நினைத்தார்கள்.

இயற்கை அன்னையே எங்கள் விழி மூடியே இருந்துவிட்டது. இயற்கையை மறந்துவிட்டோம். நாங்கள் மரணத்தின் பிடியில் நிற்கிறோம். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள். மூச்சுத்திணறல்கள், ஏக்கங்கள் போன்றவைகள் நிகழ, அப்போது அரசனின் உறவினர்கள், நீங்கள் அனைவரும் அரசன் அரசியிடம் செல்லுங்கள். உங்களின் உயிர் மூச்சு அங்கேதான் உள்ளது என்று கூறினார்கள்.

மக்கள் கூட்டம் கூட்டமாக உயிர் மூச்சின் நாதத்தை நோக்கி ஓடினார்கள்.

அரசனும் அரசியும் தம் முன் வந்த மக்களை நோக்கி ,சொல்லுங்கள்! என்ன வேண்டும் உங்களுக்கு? என்று கேட்டனர்.

அரசனே நாங்கள் சுவாசிக்கப் போதுமான அளவு காற்றில்லாமல் சாவின் தருவாயில் நிற்கிறோம். எங்களுக்குக் காற்று உடனடியாக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்கள்.

எழுநூறு கோடி மக்கள் இருக்கிறீர்கள் . பிற உயிரினங்கள் இருக்கின்றன. ஆனால் நீங்கள் எங்களைப் பன்மடங்கு அழித்துவிட்டீர்கள். அதோடு இயற்கையையும் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தி வருகிறீர்கள். உங்களில் ஐம்பது விழுக்காட்டினருக்கு மட்டும்தான் இப்போது உயிர் மூச்சாகிய காற்று கிடைக்கும். மற்றவர்கள் நிலை பரிதாபத்திற்குரியது.

எந்தப் பகுதியினருக்கு உயிர் மூச்சு வேண்டும் என்பதை முடிவு பண்ணுங்க. ஆனா அவங்க பகைவர்களை அழித்தவர்களாகவும், எங்களை அதிகம் வளர்த்தவர்களாகவும் இருக்க வேண்டும். அரசன் அரசியின் முழுப் பயனைப் பிறருக்குக் கூறியவர்களாகவும் இருக்க வேண்டும்.

நான் இருபத்தி நான்கு மணி நேரமும் ஆக்சிஜனைக் கொடுப்பேன். யாருக்கும் தீங்கு செய்யமாட்டேன். அதிகப் பயன்களைத் தருவேன். மனித உடலில் உள்ள பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பேன். முக்கியமா மன அமைதியைத் தருவேன். புத்தர் ஞானம் பெற்றது கூட என்னால்தான். அதிகமாக மழையைத் தரும் உயர்ந்த மரமாக விளங்கும் அரசமரத்தை அரசனாக பாவிப்பதுப் பற்றி கூறி இருக்க வேண்டும்.

இப்படியே அரசி வேம்புவும் தன்னைப் பற்றியும் தன் பயன்களைப் பற்றியும் கூறியது. தொடர்ந்து மற்ற மரங்களும் பேசின.

அங்கிருந்தவர்களில் சிலரைத் தவிர மற்ற அனைவரும் கேடு விளைவித்தவர்களாக இருந்தார்கள்.

அரசனிடம் இனி எங்க உயிர் மூச்சாக இருக்கும் உங்களைப் புறக்கணிக்க மாட்டோம். இந்த முறை மட்டும் எங்களுக்கு ஆக்சிஜனைக் கொடுங்கள். அனைவரும் மன்றாடிக் கேட்டார்கள்.


உங்களுக்கு உடனடியாகச் சுவாசிக்க ஆக்சிஜனைத் தருகிறோம். ஆனால், ஒவ்வொரு வருடமும் உங்களை இது போலத்தான் பரிசோதிப்போம். இனி எங்களைப் பாதுகாப்பவரே வாழ்வார்கள். தவறியவர்களுக்கு ஆக்சிஜன் இணைப்பு துண்டிக்கப்படும் என்று சொன்னது.

அரசனும் அரசியும் அவர்களது பிள்ளைகளும் செயல்பட ஆரம்பித்தார்கள்.

ஜனனி தான் கண்ட கனவிலிருந்து விழித்து எழுந்தாள்.

தான் கண்ட கனவு, மரங்களையும் சுற்றுச்சூழலையும் அழித்து வரும் அனைத்து மனிதர்களுக்கும் வர வேண்டும். அதன் பிறகாவது, அவர்கள் அனைவரும் திருந்த வேண்டும்... என்று நினைத்துக் கொண்டாள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/children/story/p21.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License