இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுவர் பகுதி
கதை

விடை தேடும் கேள்விகள்

முனைவர் பி. வித்யா


மீனா. துறுதுறுப் பெண், குறும்புக்காரி, எதையும் கற்றுக் கொண்டே இருக்கத் தூண்டும் அவளின் மூளை. பரபரப்போடு சுற்றிக் கொண்டிருக்கும் இதயம், பற்ற வைக்கும் முன்னே பற்றிக் கொள்ளவும், புள்ளி ஒன்று இடும்போதே அதற்கான எல்லைகளைக் கண் கொண்டே காற்றில் வரையவும் பயணிக்கும் அவளது கால்கள். அவள் நினைக்கும் இடத்தை நாசாவின் ராக்கெட்டுகளாலும் எட்டிவிட முடியாது. அத்தனை ஆசைகள், கனவுகள் என்று அடுக்கிக் கொண்டு, பார்ப்பவை யாவற்றையும் பகுத்தறிவின் பாதை கொண்டு ஆராய முற்படும் திண்டுக்கல்லின் சிற்றருவி என்று அவளைச் சொல்லலாம். கல்லூரியின் மகுடம் என்றும் சொல்லலாம்.

எல்லாப் போட்டிகளிலும் இவளின் பங்களிப்பு இருக்கும். வெற்றி பெறுவது முக்கியமில்லை. அந்தப் போட்டி குறித்த தனது பார்வை அல்லது கொடுக்கப்பட்ட அத்தனை தலைப்புகளிலும் தனது யோசனை என்ன என்று புரிந்து கொள்ளவே முயற்சிப்பாள். அத்தனைப் போட்டிகளிலும் அவள் பெயர்தான் முதல் பெயராய் இருக்கும்.

அவள் அப்பா பகுத்தறிவுச் சிந்தனைவாதி, தான் பெற்ற அத்தனை அனுபவங்களையும் தடைகளையும் அவளுக்குக் கற்றுக் கொடுத்துதான் வளர்த்தார். நிறைய தனது படிப்பு சாராத பல புத்தகங்களை வாசிக்கவும் ஊக்கமளித்தார்.

ஆனால், ஒருநாள் அவள் மீது ஒரு புகார் வந்தது. பள்ளியின் தாளாளர்தான் அழைத்தார்.

“அப்பா, நாளைக்கு உங்கள ஸ்கூல்ல வரச் சொல்லியிருக்காங்க”

“ஏன் என்ன காரணம்?” என்றார் அவர்.

“தெரியலப்பா, உங்ககிட்டதான் சொல்வாங்களாம்” என்றாள் தலையைக் கவிழ்ந்து கொண்டு,

மறுநாள் பள்ளி சென்றதும் மீனாவை அழைத்துக் கொண்டு, தாளாளர் அறைக்குச் சென்றார் மீனாவின் அப்பா.

“வாங்க சார், உட்காருங்க சார்”

“சொல்லுங்க சார், என்ன பிரச்சனை?”

“பிரச்சனை பெரிசா ஒன்றுமில்லை சார். இப்பொழுது, மீனா படிப்பது பத்தாம் வகுப்பு. மதிப்பெண் அதிகம் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம்…”

“ஆமாம் சார் கண்டிப்பாக…”

“ஆனால் உங்கள் பொண்ணு அப்படியில்ல, நேற்று சமூக அறிவியல் பாட வேளையில் புத்தகத்திற்குள்ளே வைரமுத்துவின் , ‘வடுகபட்டியிலிருந்து வால்கா வரை’ என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்திருக்கிறாள். ஆசிரியர் பார்த்ததும் மறைத்திருக்கிறாள். இப்படிச் செய்யலாமா நீங்களேச் சொல்லுங்க சார்” என்றார்.


உடனே ஈஸ்வரன் தாளாளரைப் பார்த்து மெதுவாகப் புன்னகைத்துவிட்டு, நான் மீனாவுக்கு எது நல்லதுன்னு கண்டிப்பா எடுத்துச் சொல்றேன் சார். நீங்களும் சொல்லுங்க சார்” என்று சொல்லிவிட்டு மீனாவை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.

அப்பா திட்டப் போகிறார் என்று பயத்தில் மீனாவின் கண்களில் நீர் தழும்பி நின்றது.

“ நீ உண்மையிலேயே அப்படிச் செய்தாயா மீனா?” என்றதும் அழுதே விட்டாள்.

“அழாதே மீனா, நீ செய்ததில் தவறொன்றும் இல்லை. பள்ளியில் படிப்பதைத் தவிர வேறு புத்தகங்களைப் படிப்பது மிகவும் நல்ல விசயம்தான். ஆனால் எங்கு, எந்த நேரத்தில் என்பதுதான் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது? நிறைய புத்தகங்களைப் படி, சந்தேகங்கள் இருந்தால் என்னிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ கூட வகுப்பல்லாத நேரங்களில் கேட்கலாம். படிப்பதைக் தொடரு” என்று தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

அது இப்பொழுது அவளது வேட்கைக்கு உணவாகி வேட்கையோடு சேர்ந்து அவளும் வளர்ந்து கொண்டே இருக்கிறாள். வருகிற மார்ச் 8 மகளிர் தினத்திற்கானப் பேச்சுப் போட்டிக்கு பெண்ணியம் சார்ந்த கருத்துகளைப் பேசத்தான் யோசித்துக் கொண்டு இருந்தாள் மீனா.

அந்தி வானம் சிவப்புச் சூரியனை விழுங்கக் காத்துக் கொண்டிருந்த மாலை அது. கொடியினில் காய்ந்து கொண்டிருந்த ஆடைகளுக்குள்ளாக அவள் சிந்தனை ஊடாடியது. அங்கு எத்தனை விதமான வண்ண வண்ண உடைகள் சிறியதும் பெரியதுமான உடைகள். பெண்கள், ஆண்கள் சிறார், சிறுமியர் ஆடைகள் என்று எத்தனை விதமான ஆடைகள், காற்று வரும்போதெல்லாம், நானும் இருக்கிறேன் என்று அவை அவளைப் பார்த்துத் தலையாட்டிக் கொண்டிருந்தது.

அவளின் சுடிதாரைப் பார்த்த போது, அதனை வாங்க எத்தனைப் பாடு என்று நினைத்த போது சிரிப்பு வந்தது. அது ஒரு சிலீவ்லஸ் சுடிதார். இந்தக் காரணத்திற்காகவே அது அம்மாவால் வாங்கக் கூடாது என நிராகரிக்கப்பட்டது.

அதற்கு அம்மா சொன்ன காரணம்,

“இப்படி டிரஸ் போட்டுத் தெருவில நடந்தா, எல்லாரும் என்ன நெனப்பாங்க.”

அதோடு விட்டுவிடவில்லை அம்மா,

“வீட்ல ஒழுங்கா வளர்த்திருக்காங்களா பார். பெத்தவளச் சொல்லணும்னு என்னதான் முதல்ல திட்டுவாங்க” என்றாள் மீனாவின் அம்மா சாந்தி.

இன்னொரு முறை மனதினுள் முள் தைத்ததைப் போன்று இருந்தது.

“இப்படி டிரஸ் பண்ணா தப்பான பொண்ணுன்னு நெனப்பாங்கடி.” என்று பல்லைக் கடித்ததில் எனக்குப் பயமே வந்துவிட்டது. கை தைத்துக் கொள்கிறேன் என்று சொன்னதன் பின்புதான் அந்த சுடிதார் வீடு வந்து சேர்ந்தது.

யோசனை செய்து கொண்டிருந்த மீனாவின் முன்னே ஒரு மின்னல் கீற்று உண்டானது. உண்மையில் இந்த உடை போடக்கூடாது என்பது என் அம்மாவின் எண்ணமா? அல்லது நான்கு பேர் தவறாக நினைப்பார்கள் என்பதாலா? அதையும் தாண்டி குழந்தைகளுக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்கிற பரிதவிப்பா?


குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவதுதான் எல்லாப் பெற்றோர்களின் எண்ணமாக இருக்கிறது. அப்படியானால் இது மாதிரியான உடைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனரா? இல்லை பார்க்கப்படும் உடைகளில், பார்க்கும் பார்வையில் தான் பிழையா? இதற்குச் சரியான பதிலைச் சொன்னாலும், எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் யாருக்கும் புரிவதாக இல்லையே? ‘சேலை மேல் முள் தைத்தாலும், முள் மேல் சேலை விழுந்தாலும் சேதாரம் சேலைக்குத்தான் என்று பழமொழிகள் வேறு’.. என்ன செய்ய?

திடீரென்று மீனா என்றோ படித்தது ஒன்று, அவள் மூளையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடியது. ஏதோ ஓர் இடத்தில் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண்கள் உடுத்தியிருந்த ஆடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டதாம். அதில் எல்லாவிதமான ஆடைகளும் இருந்ததாம், பெண் அணியும் நர்ஸ் யூனிபார்மில் தொடங்கி, நம்மைக் காவல் காக்கும் ஒரு பெண் போலீஸின் உடை கூட இருந்ததாம். இவற்றினும் மேலாக ஒரு பெண் குழந்தையின் பேம்பர்ஸ் (குழந்தைகள் நாப்கின்) கூட இருந்ததாம். முன் இருந்த ஆடைகளை கவர்ச்சியென வாதாடும் கூட்டம், இதனை எந்த வரிசையில் வைக்கப் போகிறது?

அவர்கள் உடைகளையா கண்டிருக்கிறார்கள்? அவர்கள் பார்த்தது பெண் என்பவளின் உடலைத்தானே? பெண், அவள் வயது என்ன? எப்படிப்பட்டவள்? என்ன நிலைமையில் இருக்கிறாள்? என்பதைப் பற்றிக் கவலையில்லை. அவள், ஒரு பெண் உடல், ஆண் போகிக்கும் ஒரு உடல், உடைமை என்பதில்தான் இது தொடங்கியிருக்கிறது.

இவைதான் அடிமட்டத் தாய்க்கும் அஞ்சுறுத்தும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. ஆடையற்றிருந்த ஆதித் தாய், பின் அங்கங்கே ஆடைகளால் மறைக்க வேண்டிய கட்டாயம் இப்படி ஒரு இக்கட்டால் ஏற்பட்டு இருக்கலாமோ? எனத் தோன்றுகிறது. பின் ஆடைகளின் நிறம்கூட பிரச்சனைதான், சரி எல்லோருக்கும் ஆடைகள் அணிய உரிமை இருந்ததா? என்றால் சில பெண்களின் தோள்களில் உடை ஏறவேப் பல வருடங்கள் உருண்டோடி விட்டது. பெண்களுள் ஒரு பிரிவினர் தங்களது மார்பை மறைத்துக் கொள்ள ஆடைகள் அணியத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையைப் படித்தது அவள் மனதில் உதித்தது. அவர்களின் உடையால் அவர்கள் மார்பை மறைக்க அவர்களுக்கே உரிமை இல்லை என்பது எத்தனைக் கொடுமை.

எத்தனைச் சிக்கல்களைக் கடந்து, இன்று எல்லோரும் பல வண்ணங்களில் தாராளமாக உடை உடுத்துகிறோம். அது தனிப்பட்ட ஒவ்வொருத்தரின் விருப்பம் என்பதை உணர்த்தவே பல வருடங்கள் கடந்துவிட்டது. இன்றும் ஒவ்வொரு உடையைத் தேர்ந்தெடுக்கும்போது, தன் விருப்பம் என்பதைத் தாண்டி அடுத்தவர் என்ன நினைப்பர் என்பதை அந்தப் பெண் மட்டுமல்ல, அவளைச் சுற்றி இருக்கும் அனைவரும் யோசிப்பதை நினைக்கையில் வேடிக்கையாய் இருக்கிறது. என்று தன்னை அறியாமலே நினைவின் வழியில் சிரித்துக் கொண்டாள் மீனா. பெண் உடையைத் தேர்வு செய்யவே இத்தனைக் காலம் என்றால், பெண்ணை உடலாகப் பார்க்காதே ,என்பதை உணர்த்த எத்தனை யுகங்கள் தேவைப்படுமோ?

“இந்தக் கொடியில் காயும் அத்தனை உடைகளையும் எல்லோராலும் அணிய முடியுமா? என்றால் நம்மை அறியாமல் பலரும் முகம் சுளிக்கிறோமே ஏன்? பெண்கள், இன்று அத்தனை உடைகளையும் உடுத்திப்பார்ப்பது என்று துணிந்து விட்டனர். சரி அது ஒரு புறம் இருக்கட்டும். இங்கு காயும் பெண்களின் உடைகளை அணிய எத்தனை ஆண்கள் முன்வருவர்? பெண்களே பலரும் இதற்கு போர்க்கொடி தூக்குவர் என்பது உறுதி. சரி ஏன் அணியக்கூடாது என்ற கேள்வியை முன் வைப்போம்.

அவமானம் என்று நீங்கள் கூறினால், ஏன் அவமானம். பெண் உடை தறிப்பது ஏன் அவமானம். கேள்வி தொடுப்பது பெண் என்றால் மற்றுமொரு கேள்வி அப்படியானால் பெண்ணாய் பிறப்பது அவமானம் என்று நீங்களே நினைக்கிறீர்களா? ஆண் என்றால் உங்களிடம் ஒரு கேள்வி? நீங்கள் தாயாய், சகோதரியாய், புனிதமாய், கௌரவமாய் மற்றும் பலவாறாய் நினைப்பதாய் சொல்கிறீர்களே, அது எந்த அளவுக்கு உண்மை?

சரி மற்றொரு கேள்வி என்னுள்ளே கனன்று கொண்டிருக்கிறது அதையும் கேட்டு விடுகிறேன். இது ஆண் உடை? இது பெண் உடை என்று தீர்மானித்தது யார்? பெண் உடையை ஆணால் போட இயலாதா? சரி, ஒரு வேளை இவை ஆணின் உடைகளாக ஏற்கனவே சமூகத்தால் தீர்மானிக்கப்பட்டிருந்தால் எதை நீங்கள் உடுத்தியிருப்பீர்கள்? உங்களால் மாறிக் கொள்ள முடியுமென்றால் இப்பொழுது ஏன் உங்களால் தரக்குறைவாகக் கருதப்படுகிறது?

அப்படியானால் எது உங்களது உடை என்பதை யார் முடிவு செய்வது? இவை இப்படியானால் இன்னும் நம்மில் ஒரு பிரிவினரின் பிரச்சனைகள் இன்னும் கூடுதலாக இருக்கிறது. அவர்கள் உண்மையில் மனம் விரும்பும் ஆடைக்காக தன் உடலையே மாற்றிக் கொள்ளத் துணிந்தவர்கள். அவர்கள் அந்த சிறு விசயத்திற்கு ஆசைப்படும்போதே இச்சமூகம் அவர்களைக் கேலி செய்யத் தொடங்கி விடுகிறது. தான் பெண்ணாக உணருதலை முதலில் உடையிலும் நடையிலும்தான் உணர்கிறார்கள். அவர்கள் அதனை நோக்கிப் பயணிக்க எத்தனைத் தடைகள். ஏன் நமது பொதுப்புத்தியிலும் கூட அவர்களை வினோதமாகப் பார்ப்பது அன்றாடமாகிவிட்டதே.

உடல்களை மூடும் இந்த உடைகளால் தான் நாம் யாரென மற்றவர் கருதுகிறார் என்றால் சரிதானா?”


பல தெரிந்த கேள்விகளோடு விடை தெரியாக் கேள்விகளையும் எழுப்பி தன் உரை முடித்து அமர்ந்தாள் மீனா. மேடையில் சிலவற்றைப் பேசும் போது சிரித்தும், சில இடங்களில் ஆர்ப்பரித்தும் இருந்த கூட்டம், தற்போது ஆரவாரமற்று அவளின் கேள்விகளில் ஒடுங்கிக் கிடக்கிறது. இது ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தங்களது கருத்துக்களை எழுத வேண்டிய வினாத்தாள்தான். நீங்கள் என்ன பதிலை எழுதப் போகிறீர்கள்?

இவளின் பேச்சைக் கூட சிலர் நிறுத்த வேண்டும் என முயற்சிக்கலாம், கேள்விகள் தழும்பும் அவள் இதயத்தை கேள்விகள் கேட்கவே கூடாது என்று பிற்காலங்களில் பல காரணங்களால் முடக்கி வைக்கப்படலாம். ஆனால் கேட்கப்பட வேண்டியது கேட்கப்பட்டாயிற்று. நம் ஒவ்வொருக்கும் வினாத்தாள் கொடுக்கப்பட்டு விட்டது. ஒவ்வொருவரின் விடைகள் தான் கிடைக்கப் பெற வேண்டும்…

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/children/story/p26.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License