இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுவர் பகுதி
கதை

செல்லம் கொடுத்த மகன்...?

சரஸ்வதி ராசேந்திரன்


வீடு இரண்டு பட்டுக்கொண்டிருந்தது சுந்தரம்தான் ‘லூட்டி’ அடித்துக் கொண்ருந்தான். சாமிநாதன் வீட்டுக்குள் நுழைந்தார் சுந்தரம்.

அவர் அழைப்பில் என்னதான் மந்திர சக்தி இருந்ததோ தெரியவில்லை சுந்தரம் விளையாட்டை நிறுத்தி விட்டு அப்பாவிடம் ஓடி வந்தான். அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினான்.

அப்பாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது வாரி அணைத்து முத்தம் கொடுத்தார்.

இப்போது அப்பா எனக்கு இனிப்பு வாங்கி வந்திருப்பாரே!

சுந்தரம் நினைத்தது வீண் போகவில்லை மேசை மேல் வைத்த பைக்குள் ராமநாதனின் கைகள் ஜாங்கிரி, பெப்பர்மின்ட் சாக்லேட் என்று ஒவ்வொன்றாக வெளியே எடுத்து சுந்தரம் உனக்குத்தான் எல்லாமும்’ என்றார் சாமிநாதன்.

மனதில் ஆசைமேலிட இனிப்பு பண்டங்களை ஆசையுடன் வாங்கிக் கொண்டான் சுந்தரம்.

“நன்றி அப்பா”

சுந்தரம் சாமிநாதனின் செல்ல பையன் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படிச்செல்லம் பாராட்டுகிற அப்பாவுக்கு மகனாகப் பிறந்ததை தன் பாக்கியமாக நினைத்து மகிழ்ச்சியில் திகைத்தான் அவன்.

சுந்தரம் ஒரு நாள், “அப்பா எனக்கு உல்லன் பாண்ட் வேணும்” என்பான்.

அடுத்த அரைமணி நேரத்தில் உயர்ந்த விலையில் கண்ணைப் பறிக்கிற நிறத்தில் ரெடிமேட் உல்லன் பாண்ட் அவன் உடம்பை அலங்கரிக்கும்.

இன்னொரு நாள் –

எனக்கு சைக்கிள் வேணும் என் நண்பர்கள் அனைவரும் வைத்து இருக்கிறார்கள் என்பான் -

அன்று மாலையே புதிய சைக்கிளுடன் வருவார் சாமிநாதன்.

சுந்தரம் சைக்கிளை ஜாக்கிரதையாக மெதுவாக ஓட்ட வேண்டும். தெருவில் ஓரமாக போக வேண்டும் என்று கூறினார் சாமிநாதன்.

‘என்னத்துக்கு அப்பா இவ்வளவு அவசரம் சைக்கிள் வாங்க! மெதுவாகவே வாங்கியிருக்கலாம்.

“அதென்னவோ உன் ஆசையை உடனே நிறைவேற்றி விடவேண்டும் என்று நினைத்தேன் அதுதான். நாட்கள் மெதுவாக நகர்ந்தன சாமிநாதனுக்கு மகன் மீதிருந்த பாசம் அதிகமாயிற்று. வயது ஏற ஏற சுந்தரத்தின் ஆசைகளும் அளவு கடந்தன. நினைத்ததை சாதித்துக் கொண்டே ஆகவேண்டும் என்ற பிடிவாதமும் அவனிடம் வளர்ந்தது.

சாதாரணமாக ஒரு தந்தை மகனிடம் செலுத்துகிற பாசத்தை விட எத்தனையோ மடங்கு உயர்ந்தது அல்லவா, சாமிநாதன் மகனிடம் கொண்டிருந்த பாசம். ஆனால் ‘கண் மூடித்தனமாக செல்லம் கொடுத்தார் அவனுக்கு ‘ஆனாலும் ஆண் குழந்தைக்கு நீங்க இவ்வளவு இடம் கொடுக்கக் கூடாது என்று அவர் மனைவியும் சுட்டிக் காட்டினாள், ஆனால் அவர் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

அன்று மாலை சற்று சோகத்துடன் வீடு திரும்பினார் சாமிநாதன். வழக்கமாக கலகலப்பு அவர் முகத்தில் குடிகொண்டு இருக்கவில்லை. அவர் வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக, “குட் ஈவினிங் டாடி” என்றான் சுந்தரம்.

ஒரு தலையசைப்புடன் மகனின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட தந்தை அலுப்புடன் சோபாவில் சாய்ந்தார். தொழிலில் ஏதேதோ சிக்கல்கள் அவருக்கு மனமே சரியில்லை அதனால் ஆசை மகனின் நேசக்குரல் கூட அவருக்கு எட்டிக் காயாய்க் கசந்தது.

அப்பாவின் முகத்திலிருந்து அவர் வருத்தமாயிருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டான் சுந்தரம் வாயால் எதுவும் பேசாமல் செய்கை மூலம் அவரைச் சிரிக்க வைக்க திட்டமிட்டான் அதை உடனேயே நிறைவேற்றினான்.

சுந்தரம் கையில் கொடுத்த காகிதத்தை பிரித்துப்பார்த்தார் சாமிநாதன். அதில் கண்டிருந்த விஷயம் அவன் எதிர்பார்த்த மாதிரி அவருக்கு சிரிப்பு மூட்டவில்லை மாறாக கோபத்தைத்தான் தூண்டிவிட்டது.

‘அப்பா காலையில் குலாப்ஜாமுன் வாங்கி வரும்படி நான் கண்டித்துச் சொல்லியிருந்தும் நீங்கள் வாங்கி வரவில்லை என்று தெரிகிறது. நீங்கள் வாங்கி வராததை மறைக்க என்னிடம் பேசவும் பிடிக்காத மாதிரி சிடு மூஞ்சித்தனமாக இருக்கிறீர்கள்! என்பதே காகிதத்தில் எழுதப் பட்டிருந்த விஷயம்.

கோபத்தில் தேகம் படபடவென்று துடிக்க முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கக் காகிதத்தை சுக்கு நூறாக கிழித்தெறிந்தார் சாமிநாதன். எறிந்து விட்டு, ‘விறு விறு’ வென்று எழுந்து தம் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டார்.

சுந்தரத்துக்கு உடம்பே ஆடியது அப்பாவின் செய்கையைக் கண்டு. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை அவன் இதுவரை அனுபவித்ததில்லை என்றைக்கும் இல்லாதபடி அப்பாவுக்கு இன்று என்ன வந்தது? கோபமே கண்டறியாத அவர் முகம் அனலாய்க் காய்கிறதே!

“அப்பா” என்று அறைக் கதவைக் தட்டினான் சுந்தரம்.

“என் கஷ்டத்தை நஷ்டத்தை உணராமல் மன நிலையைக் கொஞ்சம்கூடப் புரிஞ்சிக்காமல் உன் ஆசையை பெரிசாய் நினைக்கிற நீ என்னை இனிமேல் அப்பா என்றே கூப்பிட வேண்டாம்! உன் முகத்தில் விழிக்கவும் எனக்கு இஷ்டமில்லை.



நான் இனிமேல் உனக்கு எதுவும் வாங்கித் தரவும் போவதில்லை! சாமிநாதனின் கோபாவேசம் சுந்தரத்தை மட்டுமல்ல அவன் அம்மாவையும் அதிர வைத்தது.

சுந்தரத்துக்கு நெஞ்சை அடைத்தது நான் அப்படி என்ன மன்னிக்கமுடியாத தவறு செய்து விட்டேன்!” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

நினைவு தெரிந்த நாளிலிருந்து இப்படி ஒரு சம்பவம் நேர்ந்ததேயில்லை. இதற்கு முன் எப்போதாவது அப்பா இப்படி நடந்து இருந்தால் அவன் எச்சரிக்கையாய் இருந்திருப்பான்.

அன்று இரவு அம்மா எத்தனை வற்புறுத்தியும் சுந்தரம் சாப்பிடவில்லை. அப்பாவும் அவனை சமாதானப்படுத்தாமல் விட்டுவிட்டார். சுந்தரம் விக்கி, விக்கி அழுதான் அப்படியே தூங்கிப் போனான் சாமிநாதன் இரவு முழுவதும் உறக்கம் இல்லாமல் தவித்தார். மெத்தென்றிருந்த படுக்கை முள் போல் உறுத்தியது, அவருக்கு. அதற்குக் காரணம் அவர் மனதில் வீசிய புயல்தான் அன்று மாலையிலிருந்து நடந்த சம்பவங்கள் அவர் மனத்திரையில் நிழலாயின.

சுந்தரம் எவ்வளவு வாஞ்சையுடன் எனக்கு குட் ஈவினிங் சொன்னான்! நான் திரும்பி, குட் ஈவினிங் சொல்லவில்லை. வெறுமனே தலையை ஆட்டினேன் என் கோபத்தைக் கண்டு பயந்து போய்த்தானே, பேசாமல் எழுதிக் காட்டினான் குழந்தை. எவ்வளவு அழகாக விஷயத்தை காகிதத்தில் புகுத்தி விட்டான். அதில் கொஞ்சம் கர்வமும் அகம்பாவமும் இருந்தது என்னவோ உண்மைதான், ஆனால் அவன் விருப்பத்தையெல்லாம் தட்டாமல் நிறைவேற்றி வைத்தது நான்தானே, அந்தக் கர்வத்தையும் அகம்பாவத்தையும் வளர்த்து விட்டேன் அவனைத் திருத்த நான் இப்படி ஒரு கொடிய முறையைக் கையாண்டது சரியா?

விடியற்காலையில் ஃபோன் ஒலித்தது ரிஸிவரை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டார் சாமிநாதன் அவரது பிஸீனஸில் ஒரு திருப்பம் நஷ்டம் பெரிய அளவு இல்லையாம் நல்ல சமாச்சாரம் தான் கேட்டது.

பொழுது விடிந்தது.

சீக்கிரமாக எழுந்துவிடும் சுந்தரம் குப்புற படுத்தபடி விசும்பிக் கொண்டிருந்தான், அவன் முகம் அழுது அழுது வீங்கியிருந்தது.

சுந்தரம் ... இந்தக் குரலைத் தொடர்ந்து அவன் உடம்பிலே பட்ட அந்தக் கரங்கள் அப்பாவினுடையவை அல்லவா? அப்பா என்று கூப்பிட வேண்டாம் என்றவர் அவன் முகத்தில் விழிக்க வேண்டாம் என்று விரட்டியடித்தவர் புலி மாதிரி சிலிர்த்தெழுந்தது ஆத்திரம். ஆனால் அவன் கன்னத்தில் வந்த விழுந்த சூடான கண்ணீர்ச் சொட்டுக்கள் எங்கிருந்து வந்தன?

சுந்தரம் நிமிர்ந்து பார்க்கிறான் அப்பாவா அழுகிறார், அப்பா...? ஆதரவுடன் அவர் கழுத்தை கட்டிக் கொண்டான் அவனது தீர்மானம் – திட முடிவு – சபதம் எல்லாம் காற்றில் பறந்தன!

என் கஷ்டத்தில் உன் மனதைப் புண்படுத்தி விட்டேண்டா சுந்தரம் – அப்பா கோபமாகப் பேசினதை மறந்திடுடா”

நான் சதா என்னைப்பத்தியே நெனச்சிக் கிட்டு இருந்தேன். உங்களுக்கு கஷ்டம் நஷ்டம் ஏற்படறதைக் தெரிஞ்சுக்கவில்லை. இன்னைக்கு தெரிஞ்சுக்கிட்டேன். இனிமே ‘அதுவேணும் இது வேணும்னு கேட்க மாட்டேம்பா’ நீங்கள் கோபமாய்ப் பேசினதும் நல்லது தாம்பா!”

‘அப்பிடீன்னா உனக்கு என் மேலே இன்னும் கோபம் நீங்கலேன்னு தெரியுது அப்படித்தானே?’

“அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா இத்தனை நாளா உங்க கஷ்டம் எதுவும் தெரியாதபடி, எனக்கு வேணும் என்கிறதை வாங்கி தந்து எவ்வளவு பிரியமா வெச்சிருந்திங்க அப்படிப்பட்ட நீங்க ஒரே ஒரு நாளில் என்னைக் கடிந்து பேசக் கூடாதா? நான் இதுக்காக வருத்தப்படவே மாட்டேம்பா”

“என்ன ராஜா சொல்றே?’

“ஆமாம்பா, நீங்க எப்பவுமே அன்பாதான் இருக்கீங்க எவ்வளவோ காலத்துக்கு அப்புறம், இன்னைக்கு வந்ததே அது மாதிரி அபூர்வமாத் தான் உங்களுக்கு சிடுசிடுப்பு வரும் அதுவும் வெயில் பட்ட பனி மாதிரி உடனே மறைந்து விடும்”

“இப்படியெல்லாம் பேச எங்கிருந்துடா கத்துக்கிட்டே நீ?”

எங்க டீச்சர்தாம்பா ‘ஆறுவது சினம்’ என்கிற ஆத்திச்சூடி வரியை சொன்னாங்க! “என் ராஜா விஷயத்தை எவ்வளவு அழகாப் புரிஞ்சுகிட்டே நீ அறிவாளிதான்!”

மகனை வாரி அணைத்துக் கொண்ட சாமிநாதனின் விழிகள் ஆனந்த மிகுதியில் கண்ணீர் சிந்தின.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/children/story/p8.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License