இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுவர் பகுதி
தகவல்

கிண்டர்கார்டன் பள்ளிப் படிப்புகள்


தமிழ்நாட்டில் தமிழ் மொழி வழியிலான கல்வித் திட்டம் மட்டும் நடைமுறையில் இருந்த போது, ஐந்து வயது நிறைவடைந்த குழந்தைகளே முதல் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதனால், குழந்தைகள் ஆறு வயதில் தங்களது கல்வியைத் தொடங்கும் நிலை இருந்தது. ஆங்கில வழிக் கல்விப் பள்ளிகளின் தோற்றமும், அதன் வளர்ச்சியும் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், மூன்று வயது நிறைவடைந்த குழந்தைகளெல்லாம் எல்கேஜி, யுகேஜி என்று சொல்லப்படும் வகுப்புகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். தற்போது மூன்று வயதும், அதற்குக் குறைவான வயதுக் குழந்தைகளும் கூட பிரி.கேஜி எனும் வகுப்பில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜி எனும் படிப்புகள் குழந்தைகளுக்குத் தேவைதானா? ஐந்து வயது நிறைவடையாத குழந்தைப் பருவத்தினரிடம் படிப்பு எனும் பெயரில் கல்வித் திணிப்பு செய்வது சரிதானா? என்பது போன்ற இப்படிப்புகள் தொடர்பான எதிர்க்கருத்துகள் இருக்கத்தான் செய்கின்றன. இருப்பினும், மிகக் குறைவான வருவாய் கொண்ட கூலித் தொழிலாளர்கள் கூட, தங்களது குழந்தைகளை ஆங்கில வழிப் பள்ளிகளில் தொடர்ந்து படிக்க வைக்க முடியாவிட்டாலும், பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜி எனும் படிப்புகளில் மட்டுமாவது சேர்க்க வேண்டுமென்று விரும்புகின்றனர். இதற்காகவே, ஆங்கிலப் பள்ளிகள் தவிர்த்து, குறைவான கட்டணத்தில் ஆங்காங்கே சில மழலையர் பள்ளிகளும் கூடத் தொடங்கப் பெற்றிருக்கின்றன.

பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜி எனும் மழலையர்களுக்கான படிப்புகள் எப்படித் தோற்றம் பெற்றன? இந்தப் படிப்பில் அப்படி என்னதான் இருக்கின்றன? என்பது குறித்து அறிந்து கொள்வோம்… வாருங்கள்…


கிண்டர்கார்டன் (Kindergarten) படிப்புகள் என்று அழைக்கப்படும் இப்படிப்பு முதன் முதலில் ஜெர்மனியில்தான் தொடங்கப் பெற்றது. ஜெர்மானியக் கல்வியாளரான பிரெட்ரிக் புரோபல் (Friedrich Fröbel) என்பவர், தனது குழந்தைப் பருவ அனுபவங்கள் மகிழ்ச்சியானதாக அமையாததை எண்ணி வருத்தமடைந்தார். இனி வரும் காலங்களில் குழந்தைப் பருவக் காலத்தைச் சிறப்புடையதாகவும், அதனைக் கல்வியுடன் தொடர்புடையதாகவும் மாற்றியமைக்கவும் விரும்பினார். அதன் தொடர்ச்சியாக, அவர் உருவாக்கிய குழந்தைகளுக்கான கல்வி முறையே ‘கிண்டர்கார்டன்’ என்று அழைக்கப்படுகிறது. கிண்டர்கார்டன் என்பது ஜெர்மனியின் இடாய்ச்சு மொழிச் சொல். இச்சொல்லுக்குத் தமிழில் ‘மழலைத் தோட்டம்’ அல்லது ‘குழந்தைத் தோட்டம்’ என்று பொருள்.

தான் உருவாக்கிய குழந்தைகளுக்கான கல்வித்திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கத்தில், 1837ம் ஆண்டில் பிரெட்ரிக் புரோபல் ஜெர்மனியிலுள்ள 'ப்ளாக்கென்பர்க்' எனும் நகரில் கிண்டர்கார்டன் எனும் பெயரில் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். இந்த கிண்டர்கார்டன் பள்ளிக்கான பாடத்திட்டத்தில், குழந்தைகளை மகிழ்விக்கும் பாடல்கள், கதைகள், விளையாட்டுகள், பரிசுகள், செயல்பாடுகள் போன்றவைகளே அதிக அளவில் இடம் பெற்றிருந்தன.

பாடத் திட்டத்திலிருந்த பாடல்களும், கதைகளும் குழந்தைகளின் கற்பனை ஆற்றலைப் பெரிதும் வளர்ப்பதாக அமைந்திருந்தன. அந்தப் பாடல்கள் மற்றும் கதைகளிலிருந்த கதாப்பாத்திரங்களின் வழியாக, அவர்களுக்குப் பழங்கால வீரர்களைப் பற்றியும், அவர்களது பண்பாடுகளைப் பற்றியும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற ஆர்வம் அதிகரிப்பதாக இருந்தன. விளையாட்டுகள், குழந்தைகளின் உடல்நலத்திற்கு உதவும் வகையில் அமைந்தது மட்டுமின்றி, சமூகத்தில் மற்றவர்களோடு இணைந்து செயல்படும் திறனை வளர்ப்பதாகவும் இருந்தன.

ப்ரோபெல் தனது கிண்டர்கார்டன் பள்ளியில் வழங்கிய பரிசுகள் அனைத்தும் உருண்டை, கனசதுரம், உருளை போன்ற பல்வேறு வடிவங்களில் அமைந்திருந்தன. அதன் வழியாக, குழந்தைகளுக்குப் பல்வேறு வடிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதே போன்று, களிமண், மணல், அட்டை, குச்சிகள் போன்றவற்றைக் கொண்டு வீடுகள், கோட்டைகள், நகரங்கள், மலைகள் போன்றவை உருவாக்க எளிமையான பயிற்சியளிக்கப்பட்டன. இதன் வழியாக, குழந்தைப் பருவத்திலேயே எளிமையான செயல்முறைப் பயிற்சிகளை அவர்கள் கற்றுக் கொண்டனர்.

இப்பாடத்திட்டம் முழுவதும், குழந்தைகளைக் கவரும் வகையிலும், குழந்தைகளால் செய்யக்கூடியதாகவும், அதே வேளையில் எளிமையான முறைகளில் சிறந்த கல்வியைப் பெறுவதாகவும் அமைந்திருந்தன. அதனால் கிண்டர்கார்டன் கல்வி முறை, அங்கிருந்தவர்களிடையேப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, கிண்டர்கார்டன் கல்வி முறை ஜெர்மனி முழுவதும் பரவலாக்கப்பட்டது.


ஜெர்மனியிலிருந்து இடம் பெயர்ந்து அமெரிக்காவில் சென்று குடியேறியவர்கள், தங்கள் நாட்டில் பின்பற்றி வந்த கிண்டர்கார்டன் கல்வி முறையினை அமெரிக்காவிலும் செயல்படுத்தத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவிலும் கிண்டர்கார்டன் கல்வி முறை பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர், அமெரிக்கக் கல்வி முறையில் கிண்டர்கார்டன் கல்வி முறையும் ஒன்றாக இணைந்தது. அதனைத் தொடர்ந்து, இந்தக் கல்விமுறை ஜெர்மனி, அமெரிக்கா தவிர்த்த பிற நாடுகளிலும் பரவி, ஆங்கில வழிக் கல்வியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் ஆங்கில வழிக் கல்வி முறை பின்பற்றப்பட்ட போது, அதன் ஒரு பகுதியாக, கிண்டர்கார்டன் கல்வி முறையும் சேர்ந்து கொண்டது. குறிப்பாக, ஆங்கில வழிக் கல்வி முறையில், மழலையர்களுக்கு மட்டுமான கல்வியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. மூன்று வயது மற்றும் அதற்குக் குறைவான வயது குழந்தைகளுக்கு முன்னேற்பாடு மழலைத்தோட்டம் (Preparatory Kinder Garten - Pre.K.G) வகுப்பும், அதனைத் தொடர்ந்து, கீழ் மழலைத்தோட்டம் (Lower Kinder Garten - L.K.G) மற்றும் மேல் மழலைத்தோட்டம் (Upper Kinder Garten - U.K.G.) என்கிற இரு வகுப்புகளும் நடத்தப்பெற்று வருகின்றன.

இப்படிப்புகள் மழலைக் குழந்தைகளுக்கு எளிமையான வழிமுறைகளுடன் அடிப்படைக் கல்வியைப் போதிப்பதாக இருக்கின்றன. மேலும் அவர்களுக்கு, கல்வி கடினமானதல்ல, எளிமையாகக் கற்றுக் கொள்ளக்கூடியதுதான் என்று வழிகாட்டும் வகையில் அமைந்திருக்கின்றன என்று ஆங்கில வழிக் கல்வியைப் பின்பற்றும் பள்ளிகள் கருத்து தெரிவிக்கின்றன. தமிழ் வழிக் கல்வியில் இல்லாத இப்படிப்புகளே, ஆங்கில வழிக் கல்வி மேலான ஆர்வத்தை அதிகரிப்பதுடன், ஆங்கில வழிக் கல்வியேச் சிறந்த கல்வி எனும் தோற்றத்தையும் சாதாரணமானவர்களிடம் ஏற்படுத்தியிருக்கின்றன என்று மாற்றுக் கருத்து கொண்டவர்களும் இருக்கின்றனர். இவர்கள், தமிழ் வழிக் கல்வியிலும், கிண்டர்கார்டன் முறையினைப் பின்பற்றித் தமிழ் வழியிலான மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களைத் தவிர்த்து, இது போன்ற வகுப்புகளில் மழலைகளைச் சேர்த்து, ஐந்து வயது வரையிலான மழலைப் பருவத்தை மகிழ்ச்சியற்றதாக்கும் போக்கை மாற்ற வேண்டுமென்று எதிர்ப்பு தெரிவித்து வருபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

- மு. சு. முத்துக்கமலம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/children/tidbits/p32.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License