அணில்
எங்கள் வீட்டுத் தோட்டத்தில்
வந்து போகுது ஓர் அணில்
எந்தவித அச்சமுமின்றி
அழகாய் பழகுது அந்த அணில்.
சிதறி கிடக்கும் தானியங்கள்
கீழே கிடக்கும் தின்பண்டங்கள்
எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம்
தின்று மகிழுது அணில் பிள்ளை.
கொய்யா மரத்தில் கொய்யாப்பழம்
பப்பாளி மரத்தில் பப்பாளிப்பழம்
எது பழுத்தாலும் விடுவதில்லை
முழுதாய் எதையும் தின்பதில்லை.
தென்னை மரத்தின் நார்களையும்
கிழிந்து போன துணிகளையும்
கொண்டு கூடு கட்டியங்கு
குட்டியும் போட்டு வளர்க்கிறது.
குட்டியோடு வரும்போது
குதுகலிக்கிறது என் மனது
அழகு அணிலே வா வா
மனதிற்கு மகிழ்ச்சி தா தா.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.