இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
சமூகம்

திரையில் திருநங்கைகள்

மா. பொன்மாரி


முன்னுரை

உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் முக்கியப் பொழுதுபோக்குச் சாதனமாக இருப்பது தொலைக்காட்சி ஆகும். இத்தொலைக்காட்சிகள் பெரும்பான்மையாகத் திரைப்படங்களையும், திரைத்துறையைச் சார்ந்துமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்களில் சமூகம் சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் கதைகளாக இடம் பிடித்திருக்கின்றன. இந்தக் கதைகளில் சமூகத்தின் பல்வேறு நிலையிலிருப்பவர்கள் குறித்த செய்திகளும் காண்பிக்கப்பட்டிருக்கின்றன. மூன்றாம் பாலினமாகக் கருதப்படும் திருநங்கைகள் குறித்தும் பல்வேறு காட்சிகள் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. இந்தியத் திரைப்படங்களில் திருநங்கைகள் மிக அரிதாகவே கண்ணியமானவர்களாகக் காண்பிக்கப் பெறுகிறார்கள். பல திரைப்படங்கள் இவர்களைக் கேலி, கிண்டலுக்குரிய பாத்திரமாகப் பதிவு செய்துள்ளனர். திரைத்துறையில் திருநங்கைகள் பதிவு பெற்றுள்ள விதத்தினை இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

நன்முறையில் காண்பிக்கப்பட்ட படங்கள்

திரையுலகில் திருநங்கைகளுக்கு நன்மதிப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் மணிரத்தினம் ஆவார். இவருடைய ‘பம்பாய்’ படத்தில் கலவரச் சூழலில் பிரிந்து வாடும் இரட்டைச் சகோதரர்களில் ஒருவன் தனியாகத் திகைத்து நிற்கும் வேளையில், அச்சிறுவனைக் காப்பாற்றுவது தெருவோரத்தில் வசிக்கும் திருநங்கை ஆவார். தொடர்ந்து வரும் காட்சியிலும் உயிரின் மதிப்பு குறித்து, கலவரக்காரர்களிடம் வீரவசனம் பேசுவதாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளது.

‘தெனாவட்டு’ படத்தின் தொடக்கத்தில் தமிழகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலைக் காட்டுகின்றனர். இறுதியில் வில்லனிடம் இருந்து கதாநாயகர்களைக் காப்பாற்றுபவர்களாகப் பதிவு செய்யப் பெற்றுள்ளது.

‘சித்திரம் பேசுதடி’என்னும் திரைப்படத்தில் நற்குணமுள்ள கதாப்பாத்திரமாகத் திருநங்கை படைக்கப்பெற்றுள்ளார். துணி தேய்ப்பவரிடம் காசுகேட்டுக் கொண்டிருக்கின்ற திருநங்கையிடம் கதாநாயகி, கதாநாயகன் சென்ற வழியைக் கேட்கிறாள். அதற்குத் திருநங்கை கதாநாயகன் சென்ற வழி தெரியவில்லை என்று பொய் கூறுகின்றாள். அவ்வாறு கூறுவதற்குக் காரணம் கதாநாயகன் பாலியல் தொழில் நடைபெறும் வீட்டிற்குச் செல்கிறான். பெண்கள் அவ்விடத்திற்குச் செல்லக்கூடாது என்பதற்காக ஆகும்.



மருத்துவத் துறையில் நடக்கும் திரைமறைவு, பொருளாதார அரசியலை முதன்முறையாகச் சுட்டிக் காட்டிய திரைப்படம் ‘ஈ’ ஆகும். அப்படத்தின் ஒரு பாடலில் ஓரமாக ஆடிவிட்டுச் செல்லும்படிதான் திருநங்கை காட்டப்பெற்றுள்ளதைத் தவிர அருவருப்பாகக் காட்டப்படவில்லை.

‘வானம்’ திரைப்படத்தில் திருநங்கை அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்ய பெருந்துன்பத்தை அனுபவிக்கின்றதை எடுத்தியம்புகின்றது.

ஒட்டுமொத்தத் தமிழ்த் திரைப்படச் சூழலில் இது போன்ற குறைந்த படங்கள் மட்டுமே திருநங்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளன. இத்திரைப்படங்களின் வரிசையில் ‘காஞ்சனா’ திரைப்படம் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். திருநங்கைகளின் மன உணர்வுகளை எடுத்துக்காட்டுவதோடு அவர்கள் கல்வி கற்று முன்னேற வேண்டியதன் அவசியத்தையும் எடுத்தியம்புகின்றது. இப்படத்தில் ஒரு திருநங்கை மற்றொரு திருநங்கையைத் தத்தெடுத்து வளர்ப்பதும், அவளை மருத்துவராக்கி, அவளுக்கென்று ஒரு மருத்துவமனை கட்டிக் கொடுப்பதும் அவளின் கனவாக உள்ளது. இறுதியில் அத்திருநங்கை மருத்துவராக ஆவதைக் காண்பித்தல் சிறப்புக்குரிய ஒன்றாகும்.

இழிவுபடுத்தும் திரைப்படங்கள்

‘கட்டபொம்மன்’ திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி பெண்களை வேலைக்கு ஆள் தேர்வு செய்வதாக நகைச்சுவைக் காட்சி வருகின்றது. அக்காட்சிப்படி இரண்டு திருநங்கைகள் வேலைத் தேர்வுக்காகக் காத்திருக்கின்றனர். அவர்களைக் கவுண்டமணி கேலி செய்து, வேலைக்குத் திறமையற்றவர்களாகக் கருதி தரமற்ற மதிப்பீட்டுடன் வெளியேற்றுகிறார். இக்காட்சி ஒரு விதத்தில் திருநங்கைகளின் வேலையில்லா நிலையைக் குறிப்பிட்டுள்ளது.

ஆண்கள் திருநங்கையாக நடித்த படங்களில் குறிப்பிட வேண்டிய முக்கியப் படம், வசந்த் இயக்கத்தில் வெளிவந்த ‘அப்பு’ திரைப்படம் ஆகும். அப்படத்தில் திருநங்கையாகப் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். அப்படத்தில் பாலியல் தொழில் செய்பவளாக, இளம் பெண்களைத் துன்புறுத்தும் கதாபாத்திரமாகத் திருநங்கை படைக்கப்பட்டுள்ளார்.

‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் வையாபுரி முதலில் பெண் தன்மை உள்ள ஆணாக விஜயின் நண்பராக இருக்கின்றார். சிறிது காலம் கழித்து அவர் திருநங்கையாக மாறிவருவதை அப்படம் கேலியாகக் காண்பித்துள்ளது.

‘சில்லுனு ஒரு காதல்’திரைப்பட்த்தில் வடிவேல் பாலியல் தொழில் நடைபெறும் இடத்திற்குச் செல்கிறார். அங்கு உள்ளவர்கள் அனைவரும் திருநங்கைகளாக இருக்கின்றனர். அவர்கள் வடிவேலிடம் உள்ள பணத்தை ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டமாகச் சித்திரிக்கப் பெற்றுள்ளனர்.



‘திருடாதிருடி’ என்னும் திரைப்படப் பாடல் திருநங்கைகளைக் கேலி செய்யும் விதமாக அமைந்துள்ளது.

‘வேட்டையாடுவிளையாடு’ என்னும் திரைப்படத்தின் தொடக்கத்தில் திருநங்கை, காவல் அதிகாரியின் உதவியோடு பாலியல் தொழில் செய்பவராகக் காட்டப் பெற்றுள்ளது. மேலும் சிறைக் கைதிகளை வித்தியாசமான முறையில் தண்டிக்க திருநங்கைகள், கைதிகளுக்குப் பாலியல் தொந்தரவு தருவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

‘தில்’ என்னும் திரைப்படத்தில் திருநங்கைகள் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்யப்படும் துன்பத்தைக் குறிப்பிட்டுள்ளது.

திருநங்கைகளை மையமாகக் கொண்ட படங்கள்

‘கருவறைப்பூக்கள்’ என்னும் திரைப்படம் வீட்டை விட்டு வெளியேறும் திருநங்கையின் வாழ்க்கையையும், சமூகத்தால் ஏற்படும் கொடுமைகளை எதிர்த்துப் போராடுவதாகவும் அமைந்துள்ளது. இப்படத்தில் லிவிங் ஸ்மைல் வித்யா, பிரியா பாபு என்ற திருநங்கைகளே முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளனர். இதன் இயக்குநர் லூர்து சேவியர்.

‘நவரஸா’ என்னும் திரைப்படம் சந்தோஷ்சிவன் இயக்கத்தில் உருவாக்கப் பெற்றதாகும். இப்படத்தில் திருநங்கை பகலில் ஆணாகவும், இரவில் பெண்ணாகவும் வலம் வரும் காட்சி பதிவு செய்யப்பெற்றுள்ளது. மேலும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா சுட்டப் பெறுகின்றது.

‘நர்த்தகி’ திரைப்படத்தில் கல்கி என்னும் திருநங்கையின் வாழ்க்கை இடம் பெறுகின்றது. இப்படத்தில் தாயம்மா நிர்வாணம், மகளாகத் தத்தெடுக்கும் சடங்கு போன்றவை சுட்டப்பெறுகின்றன.

‘கிரிக்கெட் ஸ்கேண்டல்’ திரைப்படம் முதன்முறையாக திருநங்கையால் உருவாக்கப் பெற்றுள்ளது.



முடிவுரை

சமூகப் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டிய ஊடகங்களில் மிக முக்கியமான கருவி திரைப்படம். ஆனால் பல நேரங்களில் திரைப்படம் சுயலாபத்தை மட்டுமே எண்ணுகின்றது. எந்த உயிரினமும் தன் இனத்தின் ஊனத்தைக் குறை காண்பது கிடையாது. ஆனால் ஆறறிவு கொண்ட மனித இனம் மட்டுமே மனிதத் தன்மையற்று செயல்படுகின்றது. குடும்பத்தாலும், ஒட்டுமொத்த சமூகத்தாலும், பொதுவாழ்க்கையில் இருந்து புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு சமூகத்தில் சமமான இடம் கிடைக்க வேண்டியது அவசியம் ஆகும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/community/p10.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License