இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
சமூகம்

இனவரைவியல் நோக்கில் தமிழர் உணவுகளில் பசுவின் பங்களிப்பும் அரசியலும்

பெ. இசக்கிராஜா


முன்னுரை

மனிதனின் பசியின் தேவை கருதி எடுத்துக் கொண்ட உணவு ஒரு வகையான உணர்வு நிலைதான். உலகிலுள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவு என்பது இன்றியாமையாததாகும். மனிதத் தோற்றம் முதலே பசியின் தேவையினால் உணவின் ஒவ்வொரு பொருட்களும் காலத்தின் கட்டாயத்தில் படிமலர்ச்சியின் நிமித்தமாக வெவ்வேறு பண்டங்களாக மாற்றம் பெற்றுக் கொண்டேதான் வந்திருக்கின்றன. வேட்டையாடுதல் முறையே பசியின் தேவை என்பது எவ்வளவு நிதசர்னமோ அதே போலத்தான் ஒவ்வொரு உயிரினமும் தேவை கருதியே தனக்கான உணவைத் தானே தீர்மானிக்கத் தொடங்கின எனலாம். இந்தியப் புவியில் தகவமைப்பில் தமிழ் நிலப்பரப்பு என்பது ஐந்திணையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளதாகும். குறிஞ்சி நிலத்தகவமைக்கான உணவும், அதன் தேவை எவ்வளவு என்பது போல மற்ற நான்கு திணைகளின் உணவு விளைச்சல், பண்பாடு முதலியன எல்லாம் அந்தந்த திணையின் மூலம் அல்லது நிலத்தில் விளையும் உணவுப் பொருட்களின் அடிப்படையிலேயே அந்தந்த திணைகளின் உணவுப் பண்பாடு என்பது உருவாக்கப்படுகின்றன. ஒரு நிலத்திலிருந்து அல்லது கண்டம் விட்டு கண்டம் தாண்டிய மிளகு கூட உணவின் பண்டமாற்று முறையும் கூட மனித உணர்வின் வெவ்வேறான உணவு வகைகளைத் தேடியவற்றுள் ஒன்றாகவே இருக்கமுடியும். பண்டமாற்று முறை ஐந்திணை அமைப்பில் கிழங்கு, பழம் முதலானவை இன்னொரு மாற்று திணையான நெல், உப்பு, மீன் இவ்வாறு மாற்றுதலில் வெவ்வேறு வகையான உணவினை தேடுதல் என்றே குறிப்பிட்டுச் சொல்லி விடமுடியும். இவ்வாறான தமிழர் உணவு முறைகளில் இன்று தீட்டாகவும், பசுவின் இறைச்சியை உண்பவர்களைத் தீண்டத்தகாதவர்களாகவும் அடையாளப்படுத்தப்படுகின்ற தவறான நிலையினையும், பசுவின் இறைச்சி தமிழர்களின் அன்றாட வாழ்வின் உணவு முறைகளில் இயல்பாகவே இருந்துள்ளதனையும் அது எவ்வாறு அரசியல் விபரீதத்தில் புனிதப்படுத்தப்பட்ட நிகழ்வினையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.



வழிபாடுகளில் உணவு

சமயம் மற்றும் வழிபாட்டு முறைகளிலும் உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதான நீண்டநாள் நெடிய வரலாறு நம் புவிச்சூழலுக்கு உண்டு. ஆகையில், சமய வழிபாடு, இயற்கை முதலான எல்லா வழிபாடுகளிலும் உணவுப் பண்பாடென்பது முக்கிய அங்கமான ஒன்றாகவே கருதப்படுகின்றதையும் அறியலாம். சைவம், அசைவம் எனப் பிரிக்கப்பட்ட உணவு முறைகளில் முதலில் மனிதனின் உணவுப் பண்பாடு சைவத்தை அதாவது பழங்கள், காய்கறிகள்தான். பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பென்ற ஒன்று கண்டறியப்பட்டதன் தொடர்ச்சியே அசைவ உணவின் ஆரம்பம் என்பதும், எந்த உணவினை எந்தத் தெய்வத்திற்குப் படைத்தல் என்பதில் இருந்தே ஆரம்பமாகின்றது. எந்தத் தேவையினைக் கொண்டு உருவானது என்பதும் தெரிவது சாலச் சிறந்ததாகும்.

“நாம் பயன்படுத்தும் பொருட்கள் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகள் என்ற பொதுப்புரிதலிலிருந்து விடுபட்டு, மற்ற பண்பாடுகளிலிருந்து நாம் எவ்வாறு வேறுபட்டு நிற்கிறோம் என்பதைப் பொருட்களே வெளிப்படுத்துகின்றன. அதனைக் காலங்காலமாகவே நிலைப்படுத்தியும் வருகின்றன” (தொ.பு.பக்தவச்சல பாரதி.2011.16)

ஒவ்வொரு உணவுப் பொருட்களும் ஒவ்வொரு பண்பாட்டு தளங்களின் வெவ்வேறான பாதைகளில் பயணிக்கக் கூடியதாகவே இருக்கின்றன. இது எல்லாப் புவிவியல் சூழலுக்குப் பொருந்துமா என்றில்லாமல் அந்தந்த புவியியல் தகவமைப்பிற்குத் தகுந்தாற்போல் பண்பாட்டின் அடிப்படையில் மாற்றம் இருக்கவே செய்யும் என்பதில் ஐயமில்லை. அதே போலத்தான் தமிழர் உணவுப் பண்பாடு என்பது கூட பொதுவாக அடையாளம்தான் என்பதை,

“இன்று தமிழகத்தில் 364 அகமணச் சாதிகள் உள்ளன. இச்சாதிகளின் தமிழரல்லாத சாதிகளின் எண்ணிக்கை 155 ஆகும். மீதமுள்ள 209 அகமணச் சாதிகளே தமிழ்ச் சாதிகள் என்று சொல்ல வேண்டும். இந்தியச் சமூகம் சாதியச் சமூகம் என்பதால் இந்தியப் பண்பாட்டைச் சாதியப் பண்பாடாகவே காணவேண்டிய ஒரு வரலாற்று நெருக்கடி நமக்குண்டு” (தொ.பு.பக்தவச்சல பாரதி.2011.17)

மேற்கண்ட பக்தவத்சல பாரதியின் கூற்று, மீதமுள்ள 209 சமூகத்தின் உணவுப் பண்பாடென்பது உண்ணுதல், சமைத்தல் முறை என்பன போன்ற ஒவ்வொன்றிலும் தனித்தனியான பண்பாடாகவே தெரியும். ஆனால் இவையெல்லாம் ஒரு புள்ளியில் போய் சங்கமிக்கும் இடம்தான் தமிழர் உணவுப் பண்பாடாகும்.



மதமும் பசுவும்

வேதகாலங்களிலும் புராண காலங்களிலும் பசுவின் இறைச்சி என்பது பலியிடப்படுகின்ற ஒரு பொருளாக இருந்தது என்பதைப் புனிதம் இல்லாத தன்மையினையும் நமக்குத் தருகின்றன. காரணம் என்னவெனில் தங்களுக்கும் வேதகால இறைவர்களுக்கும், பசுவின் இறைச்சி என்பது மிகவும் விரும்பிய உணவாக இருந்திருக்கின்றது என்பதில்,

தொடக்கால வேத நூல்களிலும், பிற்கால வேத நூல்களிலும் இடம் பெற்றுள்ள ஏராளமான குறிப்புகளைப் பார்க்கும் போது பசுக்கள் பலி தரப்படுவது வேள்விகளில் மிக முக்கிய அம்சமாக இருந்திருக்கின்றது என்ற செய்தி வெளிப்படையாகவே தெரிகின்றது. வேள்வியில் பலியிடப்படும் பசு மிக நல்ல உணவு என்றும் நூறு காளைகளை உயிர்ப்பலி தந்ததற்காக அகஸ்தியரைப் போற்றியும் தைத்தீரிய பிராமணம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

எனவே வேதகாலகட்டத்தில் பசுக்கள் மற்ற விலங்குகள் போலவே மிகவும் சாதாரண புனிதப்படுத்தாத தன்மையிலே இருந்திருக்கின்றதனை உறுதி செய்யும் விதமாக மேற்கண்ட கூற்று உறுதிப்படுத்தப்படுகின்றது. ஆனால் பசு எப்போது புனிதமாக்கப்பட்டது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டிய சூழலில் மத்திய காலகட்டத்தினை பார்க்கும் போது,

“மத்திய காலத்தைச் சேர்நத சில சாஸ்திர ஆசிரியர்கள் பசுவைக் கொன்றவனை தீண்டத்தகாதவனாகவே பார்த்தனர். அவனோடு பேசுவது கூட பாவமாகக் கருதப்பட்டது. இருப்பினும். ஒரு சில ஆசிரியர்கள் இதை (பசு வதையை) சிறு குற்றமாகவே பார்த்தனர் என்பது சுவையான செய்தியாகும்” (டி.என்.ஜா.2006.ப.97)

வேள்வியின் தேவையற்ற நிகழ்வுகளால் அதிகமாக கால்நடைகளான பசுக்களும், காளைகளும் தொடர்ச்சியாகப் பலியிடப்பட்டு வந்ததால் வேளாண்மைக்கு மிகவும் பெரிய பாதிப்புகள் வந்திருக்கலாம் ஆகையால் வேளாண்மைக் காலகட்டத்தில் பசுக்கள், காளைகள் பொருளாதாரத்தின் நிலையைச் சுட்டுவதாகவும் அதற்கு அன்றைய அதிகாரங்களில் இருந்தவர்களாலும் புனிதமானவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களாலும் புனையப்பட்ட ஒன்றாக இருக்க முடியும் என்பதில் உண்மையைத் தவிர வேறென்ன இருக்க முடியும்.

“பௌத்த நூல்களிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்கள், புத்தரின் காலத்திலும் கூட மாட்டிறைச்சி உள்பட விலங்குகளின் இறைச்சி உண்ணப்பட்டு வந்ததைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. வேதகாலத்துக்குப் பிந்தையதும், மெளரியர்களுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்ததுமான தர்மச் சூத்திரங்களிலும், கிரகச் சூத்திரங்களிலும் விதிக்கப்பட்டிருந்த தடை காரணமாக இவ்வழக்கம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்ததையும் இவை எடுத்துக்காட்டுகின்றன.” (டி.என்.ஜா.2006.ப.44)

பௌத்தர் காலத்திலும் பசு பொதுவாக எல்லோராலும் உண்ணப்படடு வந்துள்ளதனை அறிந்து கொள்ள மேற்கண்ட சான்று ஏதுவாக அமைகின்றது. புத்தரின் சமயக் கொள்கைகளில் உயிர்ப்பலி கூடாது தனிப்பட்ட ஒருவருக்காக விலங்கு வதைகளும் இறைச்சியும் தவிர்த்தல் என்பதும் அக்காலகட்டத்தில் நிலவிய உயிர்ப்பலிகளால் ஏற்பட்ட சிந்தனையாகவே இருக்க முடியும்.

“இறைச்சி உண்பதும், உணவுக்காகக் கால்நடைகள் கொல்லப்படுவதும் இயல்பான வழக்கமாக குப்தர் காலத்திலும், அதற்குப் பின்னரும் நீடித்து வந்திருக்கின்றது என்பதற்குப் போதுமான ஆதாரங்களைப் புராணங்களிலும், காவியங்களிலம் பார்க்க முடிகிறது. ஈமச்சடங்கின் போது பார்ப்பனர்களுக்கு மாட்டிறைச்சி விருந்து தரப்பட்டதற்கான ஆதாரங்களைப் பல்வேறு புராணங்களில் பார்க்க முடிகிறது” (டி.என்.ஜா.2006.ப.94)

இன்றைய சூழலில் மாட்டுக்கறி என்பது ஒரு அரசியலாக்கப்பட்ட வினையுடன் இருக்கின்ற பொழுதில், பார்ப்பனர்களின் முக்கியமான, அதுவும் அவர்களின் கௌரவ உணவுப் பட்டியிலில் பசுவின் இறைச்சி இடம் பெற்றிருந்ததை,

“ரந்தி தேவரின் புகழ்பாடும் குறிப்புகளையும் மகாபாரதத்தில் பார்க்க முடிகின்றது. அவரின் சமையலறையில் தினந்தோறும் இரண்டாயிரம் பசுக்கள் கொல்லப்பட்டு வந்தன. தானியங்களோடு, இறைச்சியும் பார்ப்பனர்களுக்குத் தரப்பட்டு வந்தன.” (டி.என்.ஜா.2006.ப.95)

மேலும் இதற்கு வலு சேர்க்கும் விதமாக,

“பதினெட்டாம் நூற்றாண்டில் தஞ்சை மன்னரிடம் அமைச்சராகப் பணியாற்றி வந்த ஞானசியாமர், விருந்தினர்களைக் கௌரவிப்பதற்காக பசுக்களைக் கொல்வது பண்டைய விதி முறையாக இருந்தது என்று குறிப்பிடுகிறார்” (டி.என்.ஜா.2006.ப.96)

ஆக, பார்ப்பனர்களின் தேவையிலும் ஒரு வகையான சுயநலம் என்பது இன்றைய பசுவின் மீதான புனித அரசியலை வெளிப்படுத்தும் விதமாக உள்ளதனையும் அறிய முடிகின்றது மேலும் வாய்மொழிக் கதைகளும், தொன்மக் கதைகளும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக பார்ப்பனர்களால் வஞ்சிக்கப்பட்டு கீழ்நிலையாக்கம் செய்யப்பட்ட பறையர் இனத்தின் தொன்மக் கதை இதனை உறுதிப்படுத்தவே செய்கின்றது.

“தொடக்ககால இந்திய மருத்துவ நூல்களில் அசைவ உணவுப் பழக்க வழக்கங்களுக்கு ஒரு முக்கிய இடம் தரப்பட்டுள்ளது. இந்த நூல்களும், மநு, யாக்ஞவல்கியரின் சாஸ்திர நூல்களும், தொடக்ககாலப் புராணங்களும், இரண்டு காவியங்களும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் எழுதப்பவட்டவைதாம். மீன்கள், விலங்குகள் குறித்து சரகர், சுருதர், வாக்பதர் ஆகியோர் தரும் பட்டியல் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. மாட்டிறைச்சியின் மருத்துவக் குணங்கள் பற்றி இந்த மூவருமே பேசுகின்றனர்.” (டி.என்.ஜா.2006.ப.95)

எனவே மருத்துவத்துறையில் மாட்டுக்கறி முக்கியப் பங்கு வகிப்பதினையும் அறிந்து கொள்ள முடிகின்றது.



இறைச்சியால் சமூகக் கீழ்நிலையாக்கம்

அண்ணன் பறையன், தம்பி பார்ப்பான் என்ற தொன்மக் கதைகளில் வேண்டுமென்றே கீழ்நிலையாக்கம் செய்யப்படுவதற்கு எடுத்துக் கொண்ட கருவி தான் பசு. தமிழ்ச் சாதிகளில் ஒவ்வொரு சமூகத்திற்கான உணவு முறைகளில் பறையர் சமூகத்தினர் மடடுமே பசுவின் இறைச்சியோடு அடையாளப்படுத்தப் படுகின்றதையும் தமிழ்ச் சூழல் அறியாமல் இல்லை. எல்லா விலங்குகள் போல, இந்த விலங்கு சாதாரணமான முறையில் பார்க்கப்படாமல் அரசியலாக்கம் செய்யப்பட்டதன் நோக்கம். அந்த விலங்கினைப் புனிதப்படுத்தியது தான். அதற்கான காரணம் ஆய்வுத் தேடுகையில்,

பறையர்களின் தொன்மக் கதைகளில் பறையர் அண்ணன் பார்ப்பனர் தம்பி. அண்ணன் கோமாதாவின் ஒரு துண்டுக் கறியை தன் மனைவிக்குக் கொண்டு வந்ததால் பசு இறந்து விட்டது. ஆகையால் இறந்த பசுவை அண்ணனாகிய பறையர் திங்க வேண்டும் எனப் பணிக்கப்பட்டதால் கீழ்நிலையாக்கம் பெற்றனட் என்ற தொன்மக் கதையே ஆதாரமாய் விளங்குகின்றது. பசு எவ்வகையான அரசியலில் சிக்கிப் புனிதமானது என்ற வரலாற்று ஆய்வு மிகவும் முக்கியமாகும். ஏனெனில், மாட்டுக்கறி சாப்பிடுவதால் தீண்டதகாதவர் என்ற இழிவான ஒன்றை ஒரு சமூகம் காலங்காலமாகத் தன் மீது சுமந்து கொண்டே வருகின்றதனை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு முன்னர் உள்ள காலகட்டத்தில் சுவைக்காகவும், விருந்திற்காகவும் கொல்லப்பட்டதற்காக யாரையும் தீண்டத்தகாதவர்கள் என்ற எந்தவொரு சாட்சியும் இல்லை. மேலும் மநு என்ற மநுதர்மம் கூடப் பசுவைக் கொல்லுதல் தீண்டாமை என்பதனைப் பேசவில்லை என்று,

“அகிம்சையின் நற்பண்பை மநு (கி.பி.200-கி.பி.200) மேன்மைப்படுத்திப் பேசியிருந்த போதிலும். உண்ணத் தகுந்த விலங்குகளின் இறைச்சி குறித்த பட்டியலைத் தந்துள்ளார். உணவுக்காக ஒட்டகத்தைக் கொல்லக்கூடாது என்று விதிவிலக்குத் தரும் இவர் அந்தச் சலுகைகளைப் பசுவுக்குத் தரவில்லை... மேலும் மதுபானகம், சிரார்த்தம் ஆகிய சடங்குகளின் போது கால்நடைகள் கொல்லப்படுவதையும் மாட்டிறைச்சி உண்ணப்படுவதையும், மநு நியாயப்படுத்தினார் என்று யாராவது விளக்கம் அளித்தால் அது உண்மையாகவே இருக்கும்” (டி.என்.ஜா.2006.ப.94)

என்று மனித ஒழுக்கம் புகுத்திய மநுவே கூறியிருப்பதால் எவ்வாறு பசு மட்டும் புனிதமாக ஆக்கப்பட்டதென்பதை விரிவாக ஆய்வுக்கு எடுத்துச் செல்வதே சாலச் சிறந்ததாக இருக்கும்.

முடிவுரை

மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்துள்ளதனை மிகவும் எளிய முறையில் மேற்சொன்ன ஆதாரங்கள் நமக்கு விளக்குகின்றன. வேட்டைச் சமூகச் சூழலில் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டு வந்த ஆரியர்கள் கால்நடைகளை உணவாகக் கொண்டுள்ளனர் என்பதில் எவ்வித மறுப்பும் தெரிவிக்க முடியாத சூழலை நமக்கு வேதகால நூல்களும், புராணங்களும் தருகின்றன. ஆனால் எப்போது பசு என்ற சாதாரணமான கால்நடை விலங்கிலிருந்து புனிதப்படுத்தப்பட்டதென்று நோக்குகையில் நிலப்பிரபுத்துவக் காலகட்டம் தான் என்பதும், அதுவும், கி.பி. முதலாம் ஆயிரம் ஆண்டின் நடுப்பகுதியின் போது தர்ம சாஸ்திர நூலசிரியர் இதனை கண்டித்தனர் என்ற செய்தியும் நமக்குக் கிடைக்கின்ற போது, அதற்கு முன்னால் பசுவின் இறைச்சி உணவின் முக்கிய அங்கமாக இருந்திருக்கின்றன என்பதனை நிரூபிக்கின்றதனையும் அறிய முடிகின்றது. பசு பொருளாதாரமாகவும் வேளாண்மைத் தொழிலுக்காவும் முக்கியத்துவம் என்பது உழைக்கின்ற விவசாயிகளுக்குத்தான் தெரியும். உழைப்பற்றவர்கள் பார்ப்பணர்கள் அவர்கள் மத்திய காலத்தில் இதற்கு மறுப்பும் கண்டிப்பும் என்பது நமது கல்விச் சூழலையும் சேர்த்து விளக்குவதாகவே இருக்கின்றது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/community/p14.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License