இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
சமூகம்

பெரம்பலூர் வட்டார நரிக்குறவர்களின் வாழ்வும் வரலாறும்

முனைவர் த. தியாகராஜன்


முன்னுரை

நாடோடிகளின் நாகரிகம், வரலாறு, வாழ்வு இவற்றைப் பற்றி அறிந்து கொள்வது இன்றளவில் கடினமானது எனினும், அதனை அறிந்து கொள்ள இரண்டு நிலைகள் உள்ளன. அதனை எழுதப்பட்ட நிலை, எழுதப்படாத வாய்மொழி நிலை என்று இரண்டு நிலைகளின் அடிப்படையில் தெரிந்து கொள்ள முடியும். இதன் அடிப்படையில், பெரம்பலூர் வட்டார நரிக்குறவர்களின் வாழ்வும் வரலாறும் ஆராயப்பட்டுள்ளது.

நரிக்குறவர் இனத் தோற்றம்

நரிக்குறவர்களைப் பற்றி பல்வேறு வரலாறும் வாழ்வியல் உண்மைகளும் செவிவழிச் செய்தியாக வந்த வண்ணம் இருந்தாலும், அவை அனைத்தையும் மெய்ப்பிக்கும் கருத்தாக பேசப்படுவது ஒன்றுதான் இந்த நரிக்குறவர்களுக்கும் தமிழ் இலக்கியங்களில் பேசப்பட்டக் குறவர்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. தற்சமயம் நாடோடிகளாக இருக்கும் குறவர்கள் சங்ககாலக் குறவர்கள் அல்லர். இவ்வாறிருக்க, இன்று நாம் காணும் இவ்வின மக்கள் நகரங்களில் வாழ்ந்த ‘சத்ரபதி ’ என்று வீரத்துடன் அழைக்கப்படும் சிவாஜி மன்னனின் படையில் படைவீரர்களாகப் பணியாற்றியவர்கள் என்கின்றனர். சிவாஜி மன்னனுக்கும், முகலாய மன்னர்களுக்கும் இடையே ஏற்பட்டப் போரில் சிவாஜி தோற்கடிக்கப்பட்ட பின்பு, சிவாஜி ஆட்சி செய்த மராட்டியப் பகுதியில் முகலாயர்களுக்கு அடிமையாய் வாழ விரும்பாமல் நாட்டை விட்டு வெளியேறிக் காட்டை நோக்கிச் சென்றனர் என்றும், காடுகளில் மறைவிடமாக வாழ்ந்த இவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வழியாகத் தமிழகம் வந்து சேர்ந்தனர் என்றும், இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர் என்றும் தெரிகிறது.



இன அடையாளம்

* இவர்களைப் பார்த்ததும் தெரிந்துகொள்ள முடியும். இவர்களின் தோல், தலைமுடி, முகம், தலைப்பாகை இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

* கையில், துப்பாக்கி, கவட்டை, வலை போன்றவைகளை எப்பொழுதும் வைத்திருப்பார்கள்.

* இவர்கள் முகத்தில் நீண்ட தாடியும், மீசையும் அடர்த்தியாக வைத்திருப்பார்கள். தலைப்பாகை கட்டியிருக்கும் இவர்களின் தோற்றமே அவர்களை நரிக்குறவர்கள் என்று காட்டுவதாக அமைந்திருக்கும்.

* இவர்கள் எங்கும் கையில் பாசியும், கம்பியும் வைத்து அதனை மாலையாக கட்டிக்கொண்டே இருப்பார்கள்.

* திருவிழாக் காலங்களில் விளையாட்டுப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பொம்மைகள், பலூன், பச்சைக்குத்துதல் போன்ற பல வேலைகளைச் செய்கின்றனர்.

* பேருந்து நிலையங்கள், தொடருந்து நிலையங்கள் போன்ற பயணப் பொது இடங்களில் எப்போதும் இவர்களைப் பார்க்க முடியும்.

இவர்களுக்கு நிரந்தரமான குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், இவர்கள் நாடோடிகளைப் போலவே தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருப்பார்கள்.

நரிக்குறவர் பெயர் காரணம்

“தமிழகத்தில் ‘திருந்தாத நிலையில்’ நாகரிகம் அறியாமல் இருக்கும் பழங்குடி மக்களைப் பார்த்துத்தான் குறவர் என்று அழைத்தனர். அவ்வகையில் ஏறத்தாழ எழுபது வகையான குறவர்கள் இருக்கின்றனர். இருந்தாலும், இவர்களைத் தொழில் அடிப்படையில்,

* பூனை குத்தும் குறவர்

* உப்புக் குறவர்

* மலைக் குறவர்

என பல வகையினராகப் பிரித்திருக்கின்றனர்”

என்று இவர்கள் இனத்தைச் சேர்ந்த ‘துரைக்குட்டி’ என்பவர் கூறுகின்றார்.

அதிலும், நரியினை வேட்டையாடி அதன் இறைச்சியை உண்டு விட்டு, அதன் தோல் , பல், நகம், வால், கொம்பு போன்றவைகளைப் பதப்படுத்தி, அவற்றை ஊர் ஊராகக் கொண்டு சென்று விற்று வருவதால், இவர்களுக்கு நரிக்குறவர்கள் எனப்பெயர் வந்தது என்கின்றனர்.



நரிக்குறவர்களின் மொழி

நரிக்குறவர்கள் இனம் நாடு முழுவதும் பரவலாக இருந்து வருகின்றனர். இவர்களுடைய மொழியைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்த வண்ணமே உள்ளனர். எனினும், இம்மொழி எழுத்து வடிவம் இல்லாத மொழியாக, பேச்சு வழக்கில் மட்டும் இருக்கும் மொழியாகவே இருக்கிறது. இவர்கள் ஓரிடத்தில் வாழாமல் வேட்டையாடுவதற்கும், பாசிமணிகளைக் கோர்த்து விற்பனைச் செய்வதற்கும் இடமிட்டு இடம், ஊர் விட்டு ஊர், மாநிலம் விட்டு மாநிலம் என்று இடம் பெயர்ந்து கொண்டே இருப்பதால் இவர்கள் கலாச்சாரம், பண்பாடு, மொழி அனைத்திலும் இவர்கள் செல்லும் பகுதியில் பேசப்படும் பல்வேறு மொழிகள் கலந்த நிலையே இருக்கிறது. இவர்கள் மொழியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, உருது, குஜராத்தி என 24 மொழிகளின் கலப்பு இருப்பதாகக் கூறுகின்றனர். எனினும் ‘பத்மபாரதி’ என்பவர் தனது ஆய்வில் ‘தமிழ், தெலுங்கு, ஹிந்தி’ என்ற 3 மொழியின் கலப்பில் இவர்கள் மொழியினைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றார்.

இதனடிப்படையில் பெரம்பலூர் வட்டார நரிக்குறவ மக்களிடம், அவர்கள் பயன்படுத்தும் மொழியைப் பற்றிக் கேட்ட போது அவர்களும் இதனையே கூறுகின்றனர்.

நரிகுறவர்கள் பேசும் மொழி ‘வாக்ரிபோலி’ என்றும், அவர்கள் பேசும் மொழி ஒரு கலப்பு மொழி என்றும் அறிய முடிகிறது. இந்த மொழி இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. தமிழ் பேசும் மக்களுக்கு இம்மொழி இன்னும் புரியாத மொழியாகவே உள்ளது என்று ‘சீனுசர்மா’ என்பவர் கூறுகின்றார்.

பெரம்பலூர் வட்டார நரிக்குறவரின் வாழ்வு

பெரம்பலூர் வட்டார நரிக்குறவர்கள் தமது வாழ்விடங்களைச் சுற்று வட்டார பகுதி முழுவதும் அமைத்துள்ளனர். எனினும், இவர்கள் பெரம்பலூர் வட்டாரத்தில் காரை, எரையூர், சிறுவாச்சூர், பெரம்பலூர், மலையளப்பட்டி, மலையப்பாநகர், அல்லிநகரம் போன்ற பகுதிகளில் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். காரை கிராமத்தில் இருக்கும் நரிக்குறவர்களை அவர்கள் வழிபடும் தெய்வங்கள் வழியாக;

* காளிதேவியை வழிபட்டு எருமையைக் காணிக்கையாக பலியிடுபவர்கள்.

* மீனாட்சி தேவியை வழிபட்டு ஆட்டைக் காணிக்கையாக பலியிடுபவர்கள்.

என்று இரண்டு பிரிவினராகப் பிரிக்கின்றனர் என்பதை இந்தச் சமூகத்தைச் சேர்ந்த ‘ஆதிமுலம்’ என்பவர் கூறுகிறார்.

இந்தக் கிராமத்தில் உள்ள ஆண்கள் வேட்டையாடுதலை விட்டுவிட்டனர். இவர்கள் பொதுவாகப் பாசிமணிகளைப் பின்னி வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து பொருளீட்டி வருகின்றனர். பெண்கள் பாசிமணிகளைப் பின்னுவதிலும், குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதிலும் ஈடுபடுகின்றனர்.

பெரம்பலூர் வட்டாரத்தில் வசிக்கும் இம்மக்களின் குழந்தைகள் கல்வி கற்கப் பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர். இவர்களும் விடுமுறை நாட்களில் பாசிமணிகள் பின்னுகின்றனர்.அதனை விற்பனை செய்வதோடு மட்டுமல்லாது படிப்பிலும் கவனம் செலுத்துவதைக் காணமுடிகின்றது. இங்கு இவர்கள் படிப்பதற்காக சிறுவாச்சூரில் அரசு பள்ளி செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற நிகழ்வுகளின் மூலம் இவர்களின் வாழ்வில் இன்று பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளதைக் காணமுடிகின்றது.



முடிவுரை

பெரம்பலூர் வட்டார நரிக்குறவர்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் கூறுகள் பற்றியும், இம்மக்களின் தோற்றம், தொன்மை வரலாறு, இவர்களுக்கு நரிக்குறவர் என்று பெயர் தோன்ற காரணம், இவர்களின் தொழில், தொழில் சார்ந்த பழக்கமுறைகள், இன்றைய நிலையில் இவர்களின் கல்விச்சூழல் போன்றவற்றை மேலும் விரிவாக ஆராய முற்பட வேண்டும். மேலும் இம்மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வகையான செயல் திட்டங்களை அரசு செய்து வருகிறது. அதனை, அவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு திட்டமு, இவர்களுக்கு முழுமையாகச் சென்றடையாத நிலையை இவர்களை சந்தித்த போது, நம்மால் உணர முடிந்தது. இதனடிப்படையில் இவர்களின் வாழ்வியல் தரம் இன்றளவும் மேம்படாத நிலையில் பின் தங்கியே உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

பார்வை நூல்

1. நரிக்குறவர் இனவரைவியல் - கரசூர். பத்மபாரதி, புதுவை மொழியால் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி, பதிப்பு - 1978 2. நரிக்குறவ பழங்குடி இன மக்கள் - சீனுவாசவர்மா.கோ, சிதம்பரம், அண்ணாமலை நகர், பதிப்பு - 2004 3. தமிழக நாட்டுப்புறவியல் - சற்குணவதி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/community/p15.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License