இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
சமூகம்

வரலாற்று நோக்கில் புறநானூற்று அறச்சமூகம்

முனைவர் சு. மாதவன்
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை.


முன்னுரை

கி.மு. 3ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி.1ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் படைக்கப்பட்டவை சங்க இலக்கியங்கள் என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாற்று உண்மையாகும். இந்தக் காலகட்டம் என்பது சிற்றரசுகளை அழித்துப் பேரரசுகள் உருவாகிக் கொண்டிருந்த காலகட்டமாகும். சமூகவியல் பார்வையில் சொல்வதானால், இனக்குழுச் சமூகம் அழிந்து நிலவுடைமைச் சமூகம் கட்டமைக்கப்பட்ட காலகட்டமாகும். சமூக வாழ்நிலையில், பரத்தையர் ஒழுக்கம் போன்றவற்றால் தனிமனித, குடும்ப நெறிச் சிதைவுகளும் போர், நிலையற்ற ஆட்சி போன்றவற்றால் அரசியல், சமூக நெறிப் பிறழ்வுகளும் அரங்கேறிக் கொண்டிருந்த காலகட்டம் அது. இத்தகைய தனிமனித, அரச, சமூக நெறிச் சிதைவுகளிலிருந்து சமூகக் கட்டமைப்பைக் காப்பாற்ற முனைந்தனர் சங்கப் புலவர் பெருமக்கள். அவர்கள் தங்கள் அறநெறிக் கருத்துக்களை வலியுறுத்திச் சொல்லாமல், அறிவுறுத்திச் சொல்லும் பாங்கைக் கைக்கொண்டனர். அறந்தலைப்பட்ட சமூகம் அமைய புறந்தலைப்பட்ட சமூகத்தின், குறிப்பாக அரச சமூகத்தின் போர்வெறியும் வேள்விநெறியும் குறைய வேண்டியது அவசியமாகிறது.

சமூக நிறுவனங்கள் அனைத்தும் அரச சமூகத்தின் கருத்தியலால் ஆளப்படும் சமூக அமைப்பில் சங்கச் சமூகக் கோட்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டால்தான் தனிமனிதர்களின் நீரோடை போன்ற இயங்குதலைப் பெறும். இத்தகைய கண்ணோட்டத்தில், சங்ககாலப் புறநானூற்றுப் புலவர்கள் அறச் சமூக உருவாக்கத்துக்கு ஆற்றியுள்ள கருத்தியல் - கோட்பாட்டுக் கொடைகளை மறுபரிசீலனை செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சங்க இலக்கியத் திணை, துறை மரபுகள்

சங்க இலக்கியங்கள் எனப்படும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களுள் இலங்கும் சிந்தனைகள் பன்முகப் பரிமாணங்கள் கொண்டவை. அவற்றைத் தொகுத்தாரின் பரிமாணங்கள் கொண்டவை. அவற்றைத் தொகுத்தாரின் பொதுப்பார்வையில் அவை அகம், புறம் எனப்பட்டன. அக மாந்தர்கள்தான் புற மாந்தர்களாகவும் செயலாற்றியுள்ளனர் என்ற நோக்குநிலையில் பார்த்தால் ஒன்று மற்றொன்றின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்குரவுகளைப் புரிந்து கொள்ளலாம். இந்த அடிப்படையில், சங்க இலக்கியத் திணை, துறை மரபுகளை எண்ணிப் பார்க்கலாம்.

சங்க இலக்கியங்களுகான திணை, துறை பாகுபாடுகள் முற்றிலும் புறப்பொருள் வெண்பா மாலையின் இலக்கப்படிச் செய்யப்பட்டுள்ளன. வேறுவகையில் சொன்னால், தொல்காப்பிய இலக்கண வரையறைகளுக்கு அப்பாற்பட்ட திணைகளும் துறைகளும் சங்க இலக்கியங்களுக்குள் உள்ளன. திணை என்பது ஒழுக்கம். ஆகலின், அகத்திணை, புறத்திணை என்பன அவ்வத்திணைக்களுக்கேயுரிய ஒழுக்கலாற்று வரையறைகளைக் குறிக்கின்றன.



பொருள் இலக்கணம் என்பதுள் உள்ள ‘பொருள்’ என்பது வாழ்க்கை என்னும் பொருளடையது. எனவே, வாழ்க்கையின் பொருளை, வாழ்க்கைக்கான பொருளை எடுத்துரைப்பதே அகம், புறம் என்பன. இவற்றோடு ‘திணை’ என்னும் வாழ்வியலொழுகலாறு - வாழ்வியல் ஒழுக்கம் இணையும் போது அகத்திணை, புறத்திணை எனப்படுகின்றன. இத்திணைகளின் உள் இயல்புகளைத் தனித்தனி அலகுகளாக விவரிப்பன துறைகள் எனப்படுகின்றன. இதை,

“பொருள், பொதுவான பாடுபொருள், அல்லது
நுவல்பொருள், திணை - பாட்டுச் சூழல், மற்றும்
துறை - பாட்டின் அடிக்கருத்து” (கைலாசபதி., க.2006: 261)

எனப் பாகுபடுத்தி விளக்குகிறார். க. கைலாசபதி இந்தப் புரிதலோடு மேலும் நுட்பமாக நோக்குகையில், பொருள் என்பது வாழ்க்கை, திணைகள் என்பவை வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சிக் கூறுகள் துறைகள் என்பவை திணைகளின் பரிமாணக் கூறுகள் என்பதும் தெரிய வருகிறது.

உலகில் தமிழில் மட்டுமே பொருள் இலக்கணம் உள்ளது. தமிழில் மட்டுமே திணைகளை மலர்களின் பெயரிட்டு அழைக்கும் வழக்கம் உள்ளது; தமிழில் மட்டுமே மலர்சூடிப் போரிடும் வழக்கமும் உள்ளது. அகவாழ்க்கையில் திணை என்பது நிலத்தைக் குறிக்கிறது. புறவாழ்க்கையில் திணை என்பது உள்ளத்தை குறிக்கிறது. நிலம், நிலத்தில் விளையும் உற்பத்திப் பொருள்கள், இதனடிப்படையிலான உற்பத்தி உறவுகள் அனைத்தும் சேர்ந்து அந்தந்த நிலங்களுக்கேயுரிய வாழ்வியலால் கோட்பாடுகளை உருவாக்குகின்றன. இவற்றில், நிலம் முதற்பொருள்; உற்பத்திப் பொருள்கள் கருப்பொருள்கள், வாழ்வியல் கோட்பாடு உரிப்பொருள் என்பது அகத்திணை வாழ்வியல். இதே முதற்பொருளில் ஆளும் மாந்தர் - அவர் சீறூர் மன்னரோ முதுகுடி மன்னரோ, குறுநில மன்னரோ, வேந்தரோ - யாராயினும் அவர் வாழும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைகளின் உற்பத்தி உறவுகளில் விளையும் வெட்சி முதலான அவ்வத் திணைகள் துறைகளின் நோக்குநிலைகளே புறவாழ்வியல்.

உலகியல் வாழ்க்கை பொருளியலை அடிப்படையாகக் கொண்டது. பொருளியல் வாழ்க்கை அரசியல் போக்கின் அடிப்படையில் உருவாவது. எனவே, அரசியல் போக்கை அறவியல் நோக்கு நிலையில் அமைத்தால்தான் சமூக வாழ்வியல் சுமூக வாழ்வியலாய் அமையும் என்பதைப் புறநானூற்றுப் புலவர் பெருமக்கள் தங்கள் பாடல்களின் அடிநாதமாக அமைத்துள்ளனர். போர் நிகழ்த்தும் நெறிகளை - போருக்கான படிநிலை வளர்ச்சிக் கூறுகளை - போரின் பரிணாம வளர்ச்சி நிலைகளை வெட்சி முதலான புறத்திணைகள் பாடுகின்றன. போரின் பரிமாணங்களை அவ்வத் திணைகள் சார்துறைகள் எடுத்துக் காட்டுகின்றன. இத்திணைகளைப் பாடுவதிலும், எந்தத் திணைகள் சமூக வாழ்நிலையைச் செம்மைப்படுத்துவனவோ அந்தத் திணைகளையே அதிகம் பாடியுள்ளனர் என்பது புறநானூற்றுப் புலவர்களின் சமூகநலச் சிந்தனைப் பார்வையைத் தெளிவுபடுத்துகின்றது.



புறநானூற்றுத் திணை, துறை மரபுகள்

புறம் என்றாலே போர், வீரம் என்ற ஒரு பொதுக்கருத்து மக்களின் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டுவிட்டது. போரையும் வீரத்தையும் தவிர்த்துப் புற இலக்கியங்களில் எவ்வளவோ சமூகச் சிந்தனைக் கூறுகள் உள்ளன என்பதை அழுத்தந் திருத்தமாகச் சொல்ல வேண்டியுள்ளது. போர்ச்சிறப்பு, வெற்றிச் சிறப்பு, வீரச்சிறப்பு ஆகியவற்றைப் பாடியுள்ளதே புறநானூறு, மிஞ்சிப் போனால் கூடுதலாகக் கொடைச் சிறப்பும் இடம் பெற்றுள்ளது என்பது ஒரு பொது நோக்கு நிலை. ஆனால், இவ்வாறு சில அலகுகளுக்குள் அகப்படாத ஏராளமான சமூக அலகுகளின் எண்ணம், சிந்தனை, எதிர்பார்ப்பு, ஏக்கம், சோகம். அழுகை, கோபம், ஏமாற்றம், இலக்கு எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாகப் புறநானூறு விளக்குகிறது.

புறப்பொருள் வெண்பாமாலை கூறும் பன்னிரு புறத்திணைகளுள் உழிஞைத் திணையைத் தவிர்த்த 11 திணைகளுக்கான பாடல்களைக் கொண்டுள்ளது புறநானூறு

வெட்சி - 5, வஞ்சி - 11, தும்பை - 27, வாகை - 77, காஞ்சி - 31, பாடாண் - 143, கரந்தை - 12, நொச்சி - 6, பொதுவியல் - 70, கைக்கிளை - 3, பெருந்திணை - 5 என ஆக மொத்தம் 398 பாடல்கள் புறநானூற்றில் அமைந்துள்ளன.

இவற்றுள் திணைகளில் பாடாண் திணையே மிகுதியாப் பாடப் பெற்றுள்ளது. புறநானூற்றில் இடம் பெற்றுள்ள 65, துறைகளிலும் பாடாண் திணை சார்ந்த இயன்மொழித் துறை மட்டும் 51 பாடல்களில் இடம் பெற்றுள்ளது. இத்திணைகளும் துறைகளும் தொல்காப்பியர் காலத்துக்கு முந்திய இலக்கணவாதிகளால் வீரம், போர் குறித்தன மட்டுமாகவே வரையறுக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியரும் அவருக்குப் பின்வந்த புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் ஐயனாரிதனார் போன்றோரும் ஒவ்வொரு திணையினது புழங்கு தளங்களை மறப் பொருண்மைகளிலிருந்து அறப்பொருண்மைகளை நோக்கி நகர்த்தியுள்ளனர். புலவர்களும் தங்கள் பாடல்களில் இத்தகைய மாற்றங்களைப் பதிவு செய்துள்ளனர். இந்த மாற்றங்கள் அனைத்தும் சமூக மாற்றத்தின் விளைவுகளாகும். இனக்குழுச் சமூகமாக இருந்த சங்கச் சமூகம் நிலவுடைமைச் சமூகமாக வளர்ந்து, அந்த நிலவடைமைச் சமூகம் வணிக சமூகம் வணிக சமூகத்தின் கருக்களைத் தன்னகத்தே வளர்த்துக் கொண்டிருந்தது. இத்தகையில் சமூக மாற்றப் படிநிலை வளர்ச்சிக் கூறுகளைத் தன்னகத்தேக் கொண்டிருந்த காலம் சங்க காலமாகும்.



ஒவ்வொரு சமூக அமைப்பின் பன்முக வளர்ச்சிக்கும், பங்களிப்புச் செல்வோரைப் பாராட்டுதல் இயல்பே. அவ்வாறு, பாராட்டப் பயன்பட்ட திணைதான் பாடாண் திணை. எனவேதான், இத்திணைப் பாடல் எல்லாப் பகுதியின் தலைவர்கள், வள்ளல்கள் மீதும் பாடப்பட்டனவாகத் திகழ்கின்றன. போர்ச்சிறப்பு, வெற்றிச் சிறப்புகளை மட்டுமே பாடப்பட்டுவந்த பாடாண் திணையின் துறைப்பாகுபாடுகளில் அன்பு, அருள், ஈகை போன்ற உயர்ந்த பண்பு நலன்களும் இடம் பெற்றிருப்பதை இத்தகைய கண்ணோட்டத்தில் காணலாம். அதிலும் - அதாவது துறைப்பாகுபாட்டிலும் இயன்மொழி அதிகமாக இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பாடப்படும் ஒருவரின் சிறப்புக்கும் இயல்புக்கும் அவர்களது முன்னோர்களின் மரபணு - இயல்புத் தொடர்ச்சி என்பதை மனங்கொண்டு, முன்னோர்களின் மேதக்க செயல்களை வீரன் ஒருவன் மீது ஏற்றிப் புகழ்வதே இயன் மொழி அதிகமாக இடம் பெற்றிருப்பதற்கான காரணமாகும்.



இனக்குழு அறச்சமூகம்

சங்கச் சமூகத்தின் தலைமை மாந்தர்களாக அறியப்படும் சிற்றூர் மன்னன், குறுநில மன்னர், முதுகுடி மன்னர், வேந்தர் ஆகிய நால்வரில் முதலிருவரும் இனக்குழுச் சமூகத்தவராவர், இறுதி இருவரில் ஒருவர் நிலவுடைமைச் சமூக அமைப்பின் தொடக்ககாலத்தவர், அடுத்தவர் நிலவுடைமை சமூக அமைப்பின் முதிர்நிலைக் காலத்தவராவர். இவர்களுள், இனக்குழுச் சமூகத்தவர் பெரும்பான்மையோர் குறிஞ்சி, முல்லை நிலங்களிலும், சிறுபான்மையோர் மருதம், நெய்தல் நிலங்களிலும் வாழ்ந்து வந்திருக்க வேண்டும். நிலவுடைமைச் சமூகத்தவர் பலரும் மருத நிலத்தின் பரந்த பகுதிகளிலும் சிலர், பிற நிலங்களிலும் வாழ்ந்து வந்தனர். கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில், புறநானூற்றின் 285 முதல் 335 வரையிலான பாடல்கள் சிற்றூர் மன்னர்களைப் பற்றியவை. இவர்கள் புன்செய் நிலப்பகுதியை ஆண்டவர்களாய்க் காணப்படுகின்றனர். 336 முதல் 335 வரையிலான பாடலக்ள் முதுகுடி மன்னர்களைப் பற்றியவை. இவர்கள் மருத நிலத்தை ஆண்டவராய் உள்ளனர். குறுநில மன்னர்கள் மலைக்குத் தலைவர்களாகவே உள்ளனர். வேந்தர்கள் பெரும்பான்மை மருத நிலப்பகுதிகளையும் சிறுபான்மை பிறநிலப் பகுதிகளையும் ஆண்டவர்களாகத் திகழ்கின்றனர். (மாதையன்., பெ.2004:14-23)

புறநானூற்றில் மிகச்சில பாடல்களே வெட்சி, கரந்தை, போர்களைப் பாடுவனவாய் உள்ளன. வெட்சிப் பாடல்கள் - 5, கரந்தைப் பாடல்கள் - 12, இவை அனைத்தும் பாடப்பட்டோர் பெயரில்லாப் பாடல்களாகவே உள்ளன. மூதின் முல்லை, வல்லாண் முல்லைப் பாடல்களும் பாடப்பட்டோர் பெயரில்லாப் பாடல்களாகவே உள்ளன. இவை அனைத்தும் சிற்றூர் மன்னர்கள் தமக்காக நிலங்கவர் போர்களில் ஈடுபட்டதாகச் சான்றொன்றும் இல்லை. ஆனால், வெட்சி, கரந்தைப் போர்களில் மிகுதியாக ஈடுபட்டுள்ளனர். போரிலும் ஈடுபடுவதிலும் வெட்சி, கரந்தைப் போர்களில் மட்டுமே ஈடுபடுவது என்ற அறத்தைப் பின்பற்றிய சமூகமாக இனக்குழுச் சமூகம் விளங்குகிறது என்பது தெளிவாகிறது.

இனக்குழுச் சமூகத் தொழில்கள்

இனக்குழுவாக இணைந்து ஓரிடத்தில் தங்கிக் கூடிப் பேசிப் பகிர்ந்து வாழ்வதற்கு முன்னர் மனித சமூகம் நாடோடி - வேட்டைச் சமூகமாக இருந்து வந்துள்ளது. வேட்டைச் சமூகத்தின் பண்புகளும் தொழில்களும் இனக்குழுச் சமூகத்திலும் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. வாழ்வியலோடு வயிற்றியலோடு தொடர்புடைய தொழிலாக இருந்த வேட்டையாடுதலைப் புறநானூறு பரக்கப் பதிவு செய்துள்ளது.

மனித சமூகத்தின் முதற்கருவி கற்கருவி, முதற்கலங்கள் மட்கலங்களாகும். இவற்றைப் பயன்படுத்தி வேட்டைச் சமூகம் தன் வாழ்வியலைத் தகவமைத்துக் கொண்டுள்ளது. வேட்டுவர்களின் தலைவனான வல்வில் ஓரியின் வில்லாற்றலை வன்பரணார் புறநானூற்றில் 152வது பாடலில் பாடியுள்ளார். வேட்டுவச் சிறார்கள், விற்பயிற்சி செய்தமையை ஆவூர் கீழாரும் (புறநா.322) ஆலத்தூர் கிழாரும் (புற நா.324) ஆழகுறக் காட்டியுள்ளனர். வேட்டுவர்களின் குடியிருப்புகளுக்கருகே எயினப் பெண்கள் பறவைகளை வேட்டையாடி அவற்றைச் சுட்டுச் சமைத்து உண்டு மகிழ்ந்தனர் என்பதை ஆலங்குடி வங்கனாரும் (புறநா.319), வீரை வெளியனாரும் (புறநா.320) பாடியுள்ளனர்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/community/p16.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License