இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
சமூகம்

ஆவியுலகவாதம்: ஒரு மானிடவியல் நோக்கு

செல்வி. ராஜேந்திரன் கிருஷிகா
தற்காலிக உதவி விரிவுரையாளர்,
சமூக விஞ்ஞானங்கள் துறை (சமூகவியல் மற்றும் மானிடவியல்),
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை


ஆய்வுச்சுருக்கம்

சமூக மானிடவியல் நோக்கில் சமயம் சார் கோட்பாடுகளும் அதனை ஒட்டி அமைகின்ற சடங்குகளும், அதன் நிமிர்த்தமான வழிபாட்டு முறைகளும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும், சமூகத்திற்கும் ஏதோவொரு உட்பொருண்மையை உணர்த்துவதாக அமையும். சமயம் என்பது மனித நடத்தைகளை வழிப்படுத்தத்தக்கதும், மனித வாழ்க்கைக்கு அர்த்தம் வழங்கத்தக்கதுமான அதீத நம்பிக்கை சார்ந்த சில புனிதக் கூறுகளின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்ட நம்பிக்கைகள், குறியீடுகள் ஆகியவற்றின் கூட்டிணைப்பு என வரையறுக்கப்படுகின்றது.

சமயத்தின் தோற்றம் பற்றி பல்வேறு கோட்பாடுகள் சமூகவியலிலும், மானிடவியலிலும் விளக்கி நிற்கின்றன. இவ்வகையிலே இவ்வாய்வுக் கட்டுரையானது சமயம் சார் சமூகவியல் பார்வையில் ஆவியுலக வழிபாடு பற்றிய எண்ணக்கருசார் விளக்கத்தையும், அதன் தோற்றத்தையும், சமயத்தோடும் சமூகத்தோடும் கொண்டுள்ள தொடர்பையும் விளக்குவதாக அமைந்துள்ளது.

திறவுச் சொற்கள்

சமயம், ரூபவ் கோட்பாடு, ஆவி உலகம், வழிபாடு, நம்பிக்கை, சடங்குகள்


அறிமுகம்

ஆரம்பகால மனிதன் இயற்கையோடு பின்னிப் பிணைந்தவனாகவும், இயற்கைச் சூழலிலிருந்து தனது தேவைகளை பூர்த்தி செய்பவனாகவும் காணப்பட்டான். இதனால் தமது வழிபாட்டம்சங்கள் அனைத்திற்கும் இயற்கையேக் காரணம் என நம்பி இயற்கையை வழிபடத் தொடங்கினான். இதனடிப்படையில் தொல்மனிதன் இயற்கையிடம் கொண்ட அச்சம், மனித உடலின் இறப்பு, பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வழிபாடுகள் தோன்றியுள்ளது.

அந்த வகையில், இறைபேற்றிற்குரிய வழியை அடைவதற்கு மனிதன் மேற்கொள்ளும் செயல்முறைகளே வழிபாடாகும். தனக்கு நலன் அளிக்கவும், தனக்கு வரும் தீமைகளை அழிக்கவும் வல்ல ஆற்றல் தனக்கு அப்பால் உள்ளது என்ற நினைவின் அடிப்படையில், இயற்கை வழிபாடு, ஆவி,வழிபாடு, முன்னோர் வழிபாடு, போலிப் பொருள் வழிபாடு, குலத்துக்குரிய வழிபாடு, நடுகல் வழிபாடு, பல கடவுள் வழிபாடு, ஒரு கடவுள் வழிபாடு என பல்வேறு வழிபாட்டு முறைகள் ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை பரிணாமம் அடைந்து வந்துள்ளது.

எமைல்டுர்கைமின் (Emile Durkheim) இன் கருத்துப்படி சமயம் என்பது “புனிதமான ஒன்றைப் (Sacred thing) பற்றிய நம்பிக்கைகளும் செயல்முறைகளும் அடங்கிய ஓர் ஒழுங்கமைந்த முறை என்கிறார். சமயத்தின் தோற்றமானது மக்கள் புனிதம் (Sacred), புனிதம் சாராதது (Profane) பற்றிச் சிந்திக்கத் தொடங்கியதால் ஏற்பட்டது என்கிறார். சமயம் பற்றி ஒடியா என்பவர் கூறும் கருத்தை நோக்கும் போது, பகுத்தறிவிற்கு எட்டாததும் (Non-rational), செயலறிவிற்கு உட்படாததுமான (Non-Empirical) ஓர் உலகத்துடன் தொடர்பு கொள்ள மக்கள் ஏற்படுத்திக் கொண்ட முறையே சமயமாகும். இதனடிப்படையில் சமயத்தின் தோற்றம் குறித்தும், தொன்மைச் சமயம் (Primitive religion) தோன்றிய முறையை விளக்க முற்பட்ட முதல் மானிடவியல் கோட்பாடே ஆவியுலகவாதம் (Animism) ஆகும். இக்கோட்பாட்டை 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலேய மானிடவியலாளரான எட்வேர்ட் வேர்னெட் டைலர் (Edward Burnett Tylor 1832-1917) என்பவர் உருவாக்கினார். இவர் 1817ம் ஆண்டு இரண்டு தொகுதிகளாக வெளியிட்ட தொன்மைப் பண்பாடு (Primitive Culture) எனும் நூலில் எஞ்சி நிலைத்தவை கோட்பாடு (Theory of Survivals), ஆவி வழிபாடு (Theory of Animism) பற்றி விளக்கியுள்ளார்.

வழிபாடு, மனிதனுடைய அச்ச உணர்ச்சியில் இருந்தும், குற்ற உணர்ச்சியில் இருந்தும் தோற்றம் கொண்டது என சிக்மண்ட் பிராய்டு கருதுகிறார். அச்சமும், நன்றி உணர்ச்சியுமே மனித சமூகத்தில் இறைவுணர்வைத் தோற்றுவித்தன என்பது, தெய்வம் குறித்த சிந்தனையில் முதன்மையாக இருக்கிறது. இச்சிந்தனையே, வழிபாட்டு மரபுகளையும் தோற்றுவித்தது. இச்சிந்தனையே சமயத்தின் அடியோட்டங்களை வழங்கியது.

தொல்சமயத்திலும் சரி, சமயத்திலும் சரி, வழிபாடு என்பது நம்பிக்கை சார்ந்து மேற்கொள்ளப்படும் சடங்காகும். இந்த வகையில், தீமை புரிபவற்றில் இருந்து காத்துக் கொள்வது அல்லது தீமையைக் குறைத்துக் கொள்வது. நன்மையும் வளத்தையும் வழங்குபவற்றுக்கு நன்றி செலுத்துவது என்ற இருமுனைப்பட்ட வழிபாட்டு மரபு, தொன்மைக் காலம் முதல் இன்று வரையிலான வழிபாடு மரபின் வேர்களாக நீடித்துள்ளது.

நன்மை தீமைகளை அடையாளம் காட்டுவதில், ஆவியுலகக் கோட்பாடு முதன்மையான இடத்தை வகிக்கிறது. ஆவி வழிபாட்டை மையப் புள்ளியாகக் கொண்டு, அதன் முன் பின் கோட்பாடுகளைக் காணலாம். இது, தொன்மைச் சமயத்தின் பன்முகப்பட்ட அடையாளங்களை நமக்கு வழங்கும். அதனூடே இன்று வரை நீடித்துத் தொடரும் மரபுகளையும், மரபுகளின் எச்சங்களையும் கண்டறியவும், சமயங்களில் அவற்றின் இடத்தையும் அறியவும் உதவும்.


ஆவியுலகவாதம் (Animism)

ஆவியுலகக் கோட்பாட்டின் மையக் கருத்தை டைலர் குறிப்பிடும் போது “சமயத்தின் தொடக்கம் ஆவிகளின் பால் ஏற்பட்ட நம்பிக்கையிலிருந்து தோன்றியது” என்கிறார். Animism என்பது anima என்ற இலத்தீன் மொழியிலிருந்து தோன்றியது. Anima என்பது ஆன்மா, ஆவி (soul), ஆன்மீக உடல் என்பவற்றின் அடிப்படையில் ஆவி உலகத்தை உள்ளார்ந்த ரீதியான நம்பிக்கையின் அடிப்படையில் வழிபடும் முறையாகும். இது பிரபஞ்சத்தில் உள்ள இயற்கைப் பொருட்கள் அடங்கிய ஆன்மாவைக் குறிக்கும் கோட்பாடாகும்.

தொன்மை மக்கள், இயற்கையின் சீற்றத்துக்கும், கனவில் வந்து போகும் வியத்தகு நிகழ்ச்சிகளுக்கும், எதிரொலிப்பு எழுவதற்கும், அந்தந்தப் பொருள்களில் உறைந்துள்ள ஆவிகளேக் காரணமென நம்பினர். அதாவது, உலகில் உள்ள சடப்பொருள் மற்றும் உயிர்ப்பொருளில் தங்கும் ஆவியே, மனித,கள், விலங்குகள், சுற்றியுள்ள உலகப்,பொருள்களின் மீதும் பாதிப்பைச் செலுத்துகின்றன என்று அம்மக்கள் நம்பினர். இந்நம்பிக்கையில் இருந்து உலகில் உள்ள எல்லாச் சடப்பொருள்களும், உயிர்ப்பொருள்களும் ஒன்று அல்லது பல ஆவி அல்லது ஆன்மாக்களைக் கொண்டிருக்கிறது என்ற ஆவியுலக வாதத்தின் அடிப்படையை உருவாக்கியது.

ஆவியுலகக் கோட்பாடு என்பது, ஆவிகளின் மேல் மனிதன் நம்பிக்கை வைத்து அது உயிருள்ள பொருட்களின் மேலும், சடப்பொருட்களின் மீதும், ஆவி அல்லது ஆன்மா உறையும் என்ற நம்பிக்கையிலிருந்து தோன்றியது. இறந்த முன்னோர்களைத் தெய்வமாக வழிபடுதல், சிறு தெய்வ வழிபாடு, இறந்தோர் கல்லறை வழிபாடு, இறந்தவருக்கு உணவு படைத்தல், மிருகங்களை வழிபடுதல், ஆவியின் எழுப்புதல் கூட்டங்கள், பொட்டு வைத்தல், பேயாட்டம், சாமியாடுதல், கிணறு வெட்டும் போது பலி கொடுத்தல் போன்ற பல சடங்குகளும் அவை சாரந்த நம்பிக்கைகளும் ஆவியுலகக் கோட்பாட்டிலிருந்து தோன்றியதாகும்.

தொன்மை மக்களின் நம்பிக்கை ஏன் ஆவிகளோடு தொடர்புடையதாக இருந்தது என்பதற்கு டைலட் நீண்ட விளக்கத்தினை முன்வைக்கிறார். தொன்மைமக்கள் அவர்களைச் சுற்றிலும் கண்ணுக்குப் புலனாகாத எண்ணற்ற ஆவிகள் அவட்களின் செயல்களைச் செயற்படுத்துகின்றன என உறுதியாக நம்பினர். அவ்வகை நம்பிக்கை அவட்களிடம் வேரூன்றக் காரணம், அவர்கள் தம் புறச்சூலில் நிகழ்ந்த இயற்கையின் விளைவுகளுக்கான காரணத்தை அறியும் பொருட்டு அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட காரண காரிய விளக்கங்களேயாகும்.

ஆதிகால மனிதனால் இயற்கையில் ஏற்பட்ட மின்னல், இடி, மழை, தீ, சூறாவளி, நோய்கள், விபத்துக்கள் போன்றவற்றால் வெற்றி கொள்ள முடியவில்லை. இவ்வாறான நிகழ்வுகளுக்கு விடை காண அறிவியலும், தொழில்நுட்பமும், புராதன சமுதாயத்தில் வளர்ச்சியடையவில்லை. இயற்கை சக்திகள், கருவிகளில் இருக்கும் ஆற்றல், நீர்நிலைகளில் அவர்கள் குனியும் போது தோன்றிய நிழல், கனவுகள் ஏற்படக் காரணம் போன்ற பல செயல்களுக்கு விடையளிக்கும் விதத்தில் மக்களால் உருவாக்கப்பட்ட சிந்தனையே ஆன்மா (Soul), அல்லது ஆவி (Spirit) என்பதாகும்.

ஆவி வழிபாட்டிலிருந்தே சமயம் தோன்றியது என்று கூறும் டைலர், அக்கோட்பாட்டில் இறப்பு, கனவு ஆகியவற்றோடு தொடர்புடைய ஆன்மாக் கோட்பாடும் அடங்கும் எனக் கூறுகிறார். இயற்கையின் சீற்றத்திற்கும், கனவின் வியத்தகு நிகழ்ச்சிகளுக்கும், எதிரொலி கேட்டதற்கும், அந்தப் பொருள்களில் உறையும் ஆவிகளேக் காரணம் என நம்பத் தொடங்கிய தொன்மை மக்கள் வாழ்வுக்கும், இறப்புக்கும் ஆவிகளேக் காரணமெனக் கருதினார். கனவிலும், தூக்கத்திலும் இறந்த மூதாதையர்களையும் பல்வேறு செயல்களையும் கண்டனர். இவ்வாறான கனவுகளின் அடிப்படையில் தமது வாழ்வில் ஏற்படும் தோல்விகள் அனைத்திற்கும் தமது உறவுகளின் ஆவி, அவர்களது குறைபாடும் காரணம் எனக் கருதினான். இறந்தவர்கள் ஆவி வடிவில் வாழ்வதாகக் கருதி அவர்களை வழிபட முற்பட்டதன் விளைவால் முன்னோர் வழிபாடும் தோன்றியது. குறிப்பாக, இறந்தவர்களின் ஆவிகள் பெருந்துன்பத்தைத் தந்தன என நம்பிய நிலையில் அவற்றை அமைதிப்படுத்தும் முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட சடங்கியல் நிகழ்த்துகையே ஆவியுலகக் கோட்பாடாகக் காணப்படுகின்றது. எனவே டைலர் இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிபௌதீத சக்திகளின் கூட்டிணைப்பே ஆவியுலகவாதம் என்கிறார்.

Tim Ingold இன் கருத்துப்படி ஆவியுலகம் என்பது தனிப்பட்ட ஆன்மாக்கள் மீது ஆழ்ந்த நம்பிக்கையை உருவாக்கி பல்சமயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துவதோடு வாழ்க்கையை நிலை நிறுத்துவதற்கான திறவுகோல் என்கின்றார்.

Jean Piaget என்பவரின் கருத்துப்படி ஆவியுலகக் கோட்பாடானது நம்பிக்கையிலிருந்து தோன்றியதாகும். குழந்தைகள் ஒரு உள்ளார்ந்த ஆன்மீக உலகக் கண்ணோட்டத்துடன் பிறந்து பின்னர் காணும் பொருட்களைப் பயம் கலந்த நம்பிக்கையுடன் வழிபட்டதன் விளைவால் தோன்றியதே இவ்வாதமாகும். Margaret Mead இவரது கருத்துக்கு மறுப்பு தெரிவித்து, குழந்தைகள் பிறக்கும் போது ஆன்மீக உலக நோக்குடன் பிறக்கவில்லை. சமுதாயத்துடன் தொடர்பு கொள்ளும் போது தோன்றியதே ஆவியுலக வாதமாகும்.

இவ்வாறு பல அறிஞர்கள்களும் ஆவியுலகவாதம் பற்றிய கருத்துக்களை முன்வைத்த போதும் டைலரின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.


ஆவியுலக வழிபாட்டின் தன்மைகள்

1. இறந்த அல்லது உயிரோடு இருக்கும் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் ஆவி மீது நம்பிக்கை கொண்டு வழிபடுதல்.

2. பௌதீகப் பொருள்களின் மீது உறுதியாகத் தொடர்பில்லாத ஆவிகளின் மீது நம்பிக்கை கொண்டு வழிபடுதல்.

3. இயற்கைப் பொருள்களின் உறைந்த ஆவிகளின் மீது நம்பிக்கை கொண்டு வழிபடுதல்.

சமூகப் பரிணாம வளர்ச்சியும், ஆவியுலக வழிபாடும்

உயிரினங்களின் படிமலர்ச்சி போன்றே பண்பாட்டு படிமலர்ச்சியும் சிறிய, எளிய நிலையிலிருந்து எளிமையற்ற, சிக்கலான நிலையை அடைந்துள்ளது. டைலர் தம் படிமலர்ச்சித் திட்டத்தில் இன்றுள்ள அனைத்துச் சமூகங்களும் ஆவியுலகச் சமயம் என்னும் நிலையைக் கடந்தே வளர்ச்சி பெற்று வந்துள்ளன. அவற்றின் வளர்ச்சி ஆவியுலக நம்பிக்கை, பல கடவுள் வழிபாடு, ஒரு கடவுள் வழிபாடு என்ற வரிசையில் நிகழ்ந்துள்ளது. இன்றுள்ள பெருஞ் சமயங்கள் அனைத்தும் ஆவியுலக நம்பிக்கை எனும் நிலையினைக் கடந்தே வந்துள்ளன என்பதனால் அனைத்தும் குறைந்தபட்ச ஆவியுலக நம்பிக்கையாவது கொண்டிருக்கும் அல்லது எங்கெங்கு உயிர், ஆவி, பேய், பிசாசு, கடவுள் முதலானவற்றின் மீது நம்பிக்கையுள்ளதோ அங்கெல்லாம் குறைந்த அளவிலேனும் ஆவியுலக நம்பிக்கை இருக்கும் எனக் கூறியுள்ளார்.

ஆவியுலக நம்பிக்கையை டைலர் “கீழ்நிலை வழிபாடு (Lower animism), மேல்நிலை ஆவி வழிபாடு (Higher animism) என்னும் இரு நிலைகளாகப் பிரிக்கின்றார். ஆவி வழிபாடு என்ற தொல் நிலையில் தோன்றிய சமய நம்பிக்கை, மெல்ல மெல்ல அதன் படிவளர்ச்சி நிகழ்வில் இறுதியாக ஒரு கடவுள் வழிபாடு என்ற உச்ச நிலையை அடைந்தது. அவ்வளர்ச்சி நிலைகளுக்கேற்பவே மக்களின் வளர்ச்சி நிலையும் அமைந்துள்ளது என்பார் டைலர்.

ஆவியுலக வழிபாடும், சடங்கு முறைகளும்

ஆவி வழிபாட்டிலிருந்தே (doctrine of Spirits) சமயம் தோன்றியது என்று கூறும் டைலர், அக்கோட்பாட்டில் இறப்பு, கனவு ஆகியவற்றோடு தொடர்புடைய ஆன்மாக் கோட்பாடும் (doctrine of souls) அடங்கும் எனக் கூறுகிறார்.

தொன்மை மக்கள் ‘ஆவி-உடல்’ என்ற கருத்தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட பின்னர், அடுத்தக் கட்டத்தில் ‘உலவும் ஆவி’ (free soul), உடல் ஆவி (body soul) என்ற இரண்டு ஆவிகள் உடலில் உள்ளன என்று நம்பினர்.

உலவும் ஆவி உடலிலிருந்து வெளியேச் சென்று அன்றாட செயல்களோடு தொடர்புற்றுப் பிறகு மீண்டும் உடலுக்குள் வந்து உறைகிறது. ஆனால், உடல் ஆவி எப்போதும் உடலுக்குள்ளேயே உறைந்துள்ளது. அது எப்போது உடலை விட்டு வெளிப்படுகிறதோ அப்பொழுதே இறப்பு நிகழ்கிறது. அவர்கள் வழக்கில் ஆவி என்ற சொல் ‘நிழல்’ அல்லது ‘மறைவு’ என்பதைக் குறிக்கிறது என்றும், ஆவியின் தன்மையை அது தங்கும் உடல் என்னும் களத்தில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்றும் நம்பினர். அவர்கள் கனவில் நிகழ்ந்தவற்றையும், ஆவிகளின் பிற செயல்களையும் நேரடியாக உணர்ந்ததன் மூலம் மனிதனுக்கு ‘நிலையற்ற சதைப்பகுதி’, ‘ஆத்மீகமான ஆவி’ ஆகிய இரு உடற்கூறுகள் உள்ளன எனத் தீர்மானித்தார்.

மனிதனிடம் இவ்விரு உடற்கூறுகள் உள்ளன என்ற நம்பிக்கையால் விளைந்தவைவே ‘பச்சைச் சடங்கு’ (green funeral), உலர்ந்த சடங்கு (dry funeral) எனும் இரு வகை ஈமச் சடங்குகளாகும். இறந்தவுடன் பச்சைச் சடங்கையும், இறந்தவரின் ஆவி இனிமேல் திரும்பி வராது என முடிவு செய்த பின்னர் உலர்ந்த சடங்கையும் செய்தனர். பச்சைச் சடங்கானது உடல் ஆவி பிரிந்து இறப்புக்குள்ளான சதைப்பகுதிக்குச் செய்யப்பட்டது. உலர்ந்த சடங்கானது ஒருவருடைய ஆவி இறந்த பின்னும் சில காலம் வரை அவர்கள் பகுதிகளில் உலவும் என்றும், பின்னர் இறுதியாக ஓரிடத்தில் உறையும் என்றும் நம்பி அவ்வாறு உறைந்த பின்னர் அவரது ஆவிக்குச் செய்த சடங்காகும்.

நீலகிரி மலையில் வாழும் தோடர்கள் இறந்தவுடன் பச்சைச் சடங்கையும், ஓராண்டு கழித்து வரைதன் எனும் உலர்ந்த சடங்கையும் செய்கின்றனர். தமிழர்களின் வாழ்வியலிலும் இவ்வகைச் சடங்குகள் மேற்கொள்ளப்படுவதை காண்கின்றோம்.


முடிவுரை

தொகுத்து நோக்குமிடத்து ஆவியுலக வழிபாடு என்பதுஅதிபௌதீக்ச் நம்பிக்கைகளின் தொகுப்பாக காணப்படுகின்றது. மரணத்திற்கு பின்பு ஒரு வாழ்க்கை தொடர்வதாகவும் அத்தகைய உலகமே ஆவியுலகம் எனவும், அந்த உலகத்தில் உள்ளவர்களிடன் தொடர்பு கொள்ள சில சடங்கு முறைகள் பின்பற்றப்படுவதனையே ஆவியுலக நம்பிக்கை வெளிப்படுத்துகின்றது. பொதுவாக இயற்கை பொருட்களுக்கும், இயல் நிகழ்வுகளுக்கும் ஆன்மா உண்டு என்ற நம்பிக்கை கொண்ட சமயமே ஆவியுலக சமயமாகும். எனவே இவ்வாய்வுக் கட்டுரையானது சமயத்தின் தோற்றம், ஆவியுலகவாதம் பற்றிய விளக்கம், அதன் தன்மைகள், அதனோடு தொடர்புபட்ட சடங்கு முறைகளை விளக்குவதாக அமைந்துள்ளது.

உசாத்துணைகள்

1. பக்தவச்சல பாரதி (1990), “பண்பாட்டு மானிடவியல்”, மெய்யப்பன் பதிப்பகம், புதுச்சேரி.

2. பக்தவச்சல பாரதி (2005), “மானிடவியல் கோட்பாடுகள்”, வல்லினம் பதிப்பகம், புதுச்சேரி.

3.https://m.dinamani.com/tholliyalmani/yuththa-bhoomi/2018/ "அத்தியாயம் 67: திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தை தேடி”, 23-10-2022, 7.00a.m

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/community/p27.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License