இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
சமூகம்

பண்டைய மட்டக்களப்புத் தேசத்தில் தமிழ் சிங்கள சமூகங்கள் - மீள்பார்வை பகுதி-1

கவிக்கோ வெல்லவூர்க்கோபால்


பண்டைய மட்டக்களப்புத்தேசம் இலங்கையின் கிழக்குப் பகுதியில் வடக்கே வெருகலாறு தொடக்கம் தெற்கே கதிர்காமத்து மாணிக்கக் கங்கை வரையும் வியாபித்து இருந்ததைப் பல்வேறு சான்றுகள் சுட்டி நிற்கின்றன. கி.பி 1ம் நூற்றாண்டில் காணப்பட்ட மட்டக்களப்பின் தென்பிரிவுக் குறுநில அரசான உன்னரசுகிரியின் தெற்கெல்லையாக மாணிக்கக் கங்கை குறிப்பிடப்படுகின்றது. அப்போதிருந்த குறுநில மன்னர்கள் மாணிக்கக் கங்கையிலிருந்து வாய்க்கால் வெட்டி வயல் நிலங்களுக்குப் பாசனம் செய்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. சோழராட்சிக் காலத்தில் மட்டக்களப்பின் ஆட்சிப் பிரதிநிதிகளில் ஒருவன் கட்டகாமத்தில் இருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. கி.பி 13ம் நூற்றாண்டுக்கு உரியதான குளக்கோட்டன் கல்வெட்டு பாடலில் (கலிங்க மாகோன் காலம்) அவனால் மானியங்கள் வழங்கப்பட்ட பண்டைய மட்டக்களப்பு பிரதேச ஆலயங்களுள் மாணிக்கக் கங்கை என்று கதிர்காமம் குறிப்பிடப்படுகின்றது. மாகோன் வகுத்த மட்டக்களப்பின் ஏழு வன்னிமைப் பிரிவுகளின் ஒன்றான நாடுகாடுப் பற்றின் வடக்கு எல்லையாக நாதனையும் (வெல்லாவெளி) தெற்கெல்லையாக கதிரமலையும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலம் வரை பதவி வகித்த மட்டக்களப்பு வன்னியர்களின் தங்குமிடமாகவும் சுற்றுலா வாசஸ்தலமாகவும் கட்டகாமம் வன்னியர் வீடு விளங்கியமை அறியப்பட்டதாகும். 1824ல் மேற்கொள்ளப்பட்டு 1827ல் இலங்கை நிருவாக அறிக்கையில் வெளியிடப்பட்ட இலங்கையின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கட்டகாமம் மட்டக்களப்பின் வேகம் - விந்தனைப் பற்றில் இடம் பெற்றுள்ளது.



பொதுவாகப் பண்டைய மட்டக்களப்பின் எல்லைகளாக வடக்கே வெருகல் ஆற்றையும் தெற்கே மாணிக்கக் கங்கையினையும் கிழக்கே வங்காள விரிகுடாவினையும் மேற்கே ஊவா மலைத் தொடர் - வெல்லசைப் பிரிவினையும் கோடிடலாம். இப்பிரதேசமானது சுமார் 150 மைல் நீளத்தையும் சராசரியாக 48 மைல் அகலத்தையும் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுள் கொண்டிருந்தது. நெய்தல், மருதம், முல்லை, குறிஞ்சி ஆகிய நானில அமைப்போடு கூடிய இயற்கை வளம் மிக்க பிரதேசமாக இது விளங்கியது.

இலங்கையின் தென்கிழக்காக ஒரு பரந்துபட்ட நிலப்பரப்பைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய பண்டைய மட்டக்களப்புத் தேசத்திற்கு மிகுந்த உணர்வுப்பூர்வமான மாந்தர்கள் வாழ்ந்து மடிந்த ஒரு அகண்ட வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு. கி.மு 500 முதலே இதன் நாகரிகம் மிக்க வரலாற்றுக்காலம் தோற்றம் பெறுவதை அண்மைய ஆய்வுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இவ்வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்தே கற்கால மனிதர்கள் இங்கு வாழ்ந்துள்ளமையை கதிரவெளி மற்றும் கதிர்காமப் பகுதிகளின் அகழ் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.

மட்டக்களப்புத் தேசத்தினுடைய வரலாறு நம் முன்னோரால் கட்டமைக்கப்பட்ட விதம் பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டது. பிரதேச ஒருமைப்பாடும் சமுதாய நல்லிணக்கமும் அவர்களது வரலாற்றுப் பாதையில் ஒரு தெளிவினை ஏற்படுத்தியிருந்தன. இனம், மொழி, மதம் என்பவற்றின் மத்தியில் ஒரு சமரசத் தன்மையை நிலைநிறுத்தும் கோட்பாட்டினையே நமது முன்னோர்களது வாழ்க்கை முறையும் நடவடிக்கைகளும் கொண்டிருந்தன. இத்தன்மையே நாடு சுதந்திரமடையும் வரை - பிற சக்திகளின் ஊடுருவல் இங்கு நிலைகொள்ளாவரை - மட்டக்களப்பின் சிறப்பியல்பாக நிலவியது.



நமது பண்பாட்டில் - நமது முன்னோர்கள் அவர்களது கடந்த காலத்தில் வலிமையுடனும் ஆற்றலுடனும் வாழ்ந்த காலம் குறித்துப் பெருமைப்பட்டிருக்கின்றார்கள். நாம் இன்று வாழுகின்ற அவர்களது எதிர்காலம் குறித்து அன்றே அவர்கள் கவலைப்பட்டிருக்கின்றார்கள். ஆபத்துமிக்க இக் காலத்தை அவர்கள் எதிர்த்திருக்கின்றார்கள். நமது பண்பாட்டின் இன்றைய நிகழ்காலப் போக்கால் இத்தேசத்தினுடய எதிர்காலம் சிதறிப்போய் மொத்தமாய் அழிந்துவிடும் ஆபத்தையெண்ணி அன்றேயவர்கள் அச்சம் கொண்டிருக்கின்றார்கள். தாங்கள் கட்டிக்காத்து வந்த தங்கள் உயிர்ப்புமிக்க தேசம் பிற சக்திகளினால் சேதமடைந்து போய்விடக்கூடாது என்பதற்காகத் தங்களது சொத்து சுகங்களை இழந்ததோடு தங்களது இன்னுயிரையும் அதற்காக காவு கொடுத்திருக்கின்றார்ர்கள். நமது தேடலில் பிரதிபலிக்கும் கடந்த காலம் அழிந்து போன கடந்த காலமல்ல. ஒரு அர்த்தத்தில் - நிகழ்காலத்திலும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கடந்த காலமே இது.

பண்டைய மட்டக்களப்புத் தேசத்தே ஆதிச் சமூகங்களெனக் கண்டறியப்பட்ட இயக்கர் மற்றும் நாகரும் அவர்களது சமூகப் பிணைப்பின் எச்சங்களான வேடரும் தனித்துவத்தோடு வாழ்ந்த திமிலரும் தொடக்க சமூக நிலையை வெளிப்படுத்தும் தன்மையில் இரு இனக் குழுமங்கள் மொழிவழிப் பாரம்பரியத்தையொட்டி வெளிப்படுதலும் பின்னர் சமய நெறிமுறைகளின் வேறுபடுத்தலுக்கு உள்ளாக்கப்படுதலும் நிலைகொள்வதைக் காணமுடிகின்றது. இதுவே தமிழர், சிங்களவர் என இரு இனக் குழுமங்களின் வெளிப்பாடாகவும் தென்படுகின்றது. தமிழே இப்பிரதேசத்தின் முக்கியப் பேச்சு மெழியாக நிலவிய போதும் சிற்சில இடங்களில் இருமொழி பேச்சு வழக்கில் நிலவியுள்ளமையை அண்மைய கல்வெட்டாய்வுகள் வெளிப்படுத்தும் தன்மையில் அம்மொழிகளை திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழும் எலுவும் என ஆய்வாளர்கள் கருதவும் செய்கின்றனர்.



இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளிலே மிகப் பெரியதாகவும் தனியான பண்புகளைக் கொண்ட உணர்வுப்பூர்வமான தேசமாகவும் மட்டக்களப்புத் தேசம் விளங்கியது. இங்கு வாழும் தமிழர்களின் பேச்சு வழக்கு மிகவும் புராதானமாது. தமிழ் நாட்டில் வழக்கற்றுப் போய்விட்ட பல சங்கத் தமிழ்ச் சொற்கள் இன்னும் இம்மக்களிடையே பயின்று வருகின்றமை இதற்கோர் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.



இலங்கையில் பொதுவாகக் கிறிஸ்துவுக்கு முன் ஐந்தாம் நூற்றாண்டில் தமிழ்மொழி பரவிவிட்டமையும் அது பெருங்கற்காலமான ஆதி இரும்புக் காலப் பண்பாடு பரவியமையோடு தொடர்புபட்டது என்பதுவும் இதுவரை கண்டறியப்பட்டதாகும். மட்டக்களப்புத் தேசத்துக்குரிய மிகவும் பழைமையான தொல்பொருட் சின்னங்களை ஆய்வாளர்கள் இருவகைப்படுத்துவர். அவை பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் மற்றும் பிராமிக் கல்வெட்டுக்கள் என்பனவாகும். அவற்றிடையே சில பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் காலத்தால் முற்பட்டவையாகும். சோழ மண்டலக் கரையிலுள்ள காவிரிப்பூம் பட்டினம் போன்ற துறைமுகப் பட்டினங்கள் வழியாக ஏற்பட்ட கடல்வழிப் பிரயாணங்கள் மூலமாக ஆதி இரும்புக் காலத்துக்கு உரியதான பெருங்கற் பண்பாடு தென்னிந்தியாவில் இருந்து மட்டக்களப்புத் தேசத்துக்கும் பரவியதாகவே கருதப்படுகின்றது. எனினும் இங்கு இதுவரை முறையான தொல்லியல் ஆய்வுகளோ, அகழ்வாய்வுகளோ குறிப்பிடத்தக்க அளவிலே மேற்கொள்ளப்படவில்லை என்பது பெரும் குறையாகவே தென்படுகின்றது. இங்குள்ள மிக முக்கியமான ஆதி இரும்புக்காலத் தொல்லியல் தளம் கதிரைவெளியில் காணப்படுகின்றது. மகாவலி ஆற்றின் கழிமுகப் பகுதியில் குரங்கு படையெடுத்த வேம்பு எனும் இடத்தில் பாறைக் கற்களால் அமைக்கப்பட்ட கற்கிடை அடக்கங்கள் தென்படுவதை இதில் முக்கியப்படுத்த முடியும். பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் கி.மு 5ஆம் நூற்றாண்டு முதலே மட்டக்களப்புத் தேசத்தில் தமிழ் மொழியைப் பேசிய மக்கள் வாழ்ந்துள்ளமையை இதில் நிச்சயப்படுத்தமுடியும்.

கிறிஸ்துவுக்கு பிற்பட்ட காலத்தே எலுமொழியானது தமிழ், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை படிப்படியாக உள்வாங்கிய தன்மையில் சிங்கள மொழியின் தோற்றுவாயாக அது அமைகின்றது. கி.பி 6ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்திலேதான் இம்மொழியின் முழுமையைக் காணமுடிகின்றது. மிக நீண்ட காலமாக இந்துப் பாரம்பரியம் பேணப்பட்ட இலங்கையில் மகிந்த தேரரின் வருகையின் பின்னரான கி.மு 3ஆம் நூற்றாண்டில் பௌத்தமும் தலையெடுக்கலானது. ஆங்காங்கே பௌத்த வழிபாட்டுத் தலங்களும் உருவாகத் தொடங்கின. இதன் பின்னணியில் சிங்களவர் மாத்திரமன்றி இந்து சமய நெறிமுறைகளை அடித்தளமாகக் கொண்டிருந்த பௌத்தத்தை தமிழரிலும் ஒரு சாரார் பின்பற்றவே செய்தனர். இதனால் மட்டக்களப்புத் தேசத்திலும் கி.பி 13ஆம் நூற்றாண்டு வரை ஆங்காங்கே தமிழ்ப் பௌத்தம் நிலைபெற்றிருந்தமை உறுதியாகின்றது. இதன்படி ஒரு நீண்டகாலத்தே தமிழர், சிங்களவர் என்ற இரு மொழிவழிச் சமூகங்களை பண்டைய மட்டக்களப்புத் தேசம் கொண்டுள்ளமையை உணரமுடியும். எனினும் இதில் மிகப் பெரும்பான்மைச் சமூகமாக தமிழர் சமூகமே விளங்கியது. மட்டக்களப்புத் தமிழர் சமூகம், கிடைக்கின்ற வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் கி.மு 5ஆம் நுற்றாண்டுவாக்கில் உருவாக்கம் பெற்றிருக்கப் போதுமான காரணங்கள் உள்ளன.



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/community/p8.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License