இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
சமூகம்

அண்ணாவின் நாடகங்களில் சமூகச் சிந்தனைகள்

முனைவர். ந. உமாதேவி


செம்மொழித் தமிழுக்கு அருந்தொண்டாற்றிய பெருமக்களுள் குறிப்பிடத்தக்கவர் பேரறிஞர் அண்ணா. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் வல்லவர். நாடகத் தமிழ் அண்ணாவின் கைகளில் தவழும் போதுதான் அதன் தரம் உயர்ந்தது. பழங்கதைகளையும் புராணங்களையும் பேசி வந்த நாடகங்களுக்கு அண்ணாவின் கைகள் புத்துயிர் ஊட்டின. பழமை மோகத்திலிருந்த நாடக மேடையைப் புரட்சிப் பாதைக்குத் திருப்பியதில் அண்ணாவிற்குப் பெரும்பங்கு உண்டு. பிற கலைகளைக் காட்டிலும் நாடகம் மக்களுக்கு விரைவான அறிவுணர்ச்சியை ஊட்டக்கூடியது என்பதை உணர்ந்திருந்தார்

“கண்ணைச் செவியைக் கருத்தைக் கவர்ந்து நமக்கு
எண்ணரிய போதனைகள் ஈவதற்கு - நண்ணுமந்த
நாடகசாலை யொத்த நற்கலா சாலையொன்று
நீடுலகில் உண்டோ நிகழ்த்து”

என்கிறார் கவிமணி. இவ்வாறு எண்ணரிய போதனைகள் செய்யும் வகையில் நாடகத்தின் கருத்தை, உள்ளடக்கத்தை மாற்றியவர் அண்ணா அவர்களே என்றால் மிகையாகாது.

பெரியார் பாராட்டு

திராவிட இயக்கச் சிந்தனைகளை நாடகத்தின் மூலம் வெளிப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். அண்ணாவின் ‘சந்திரோதயம்’ நாடகத்தைக் கண்ட பெரியார்,

“இதை நாம் சுமார் 10,15 வருட காலமாகவேச் சிந்தித்துச் சிந்தித்து ஒன்றும் கைகூடாமல் இப்போது தோழர் அண்ணாதுரை அவர்கள் துணிவோடு கிளம்பி முகத்திற்குச் சாயம் பூசிக் கொண்டு, மேடையேறிப் பாவலாப் போடவும், அதை ஒரு சமயத்தில் 5000 மக்கள் பார்த்துக் களிக்கும்படியான நிலை ஏற்பட்டிருப்பதையும் பார்த்து நாம் பெருமை அடையாமல் இருக்க முடியவில்லை. நாடகம் பார்த்த மக்களுக்கு வெகு உணர்ச்சியாகவும், அறிவுக்கு நல் விருந்தாகவும், மானத்திற்கு உயர்தர வழிகாட்டியாகவும் தொடக்கம் முதல் முடிவு வரை விளங்கியது என்பது சிறிதும் மிகைப்படக் கூறியதாக ஆகாது. சமய சஞ்சீவிகளுடன் அரசியல் சேற்றில் புரண்டு அல்லல் படாமல், இம்மாதிரியான தொண்டு உண்மையும் பயனளிக்கக் கூடியதாகும் என்று தெரிவித்துக் கொண்டு அண்ணாதுரையையும் காஞ்சி திராவிட நடிகர் கழகத்தாரையும் மனமார வாயாரப் பாராட்டி ஆசி கூறுகிறோம்.”

என்று நாடக மேடையிலேயேப் பாராட்டியதுடன், இச்செய்தியினை 27-11-1943 ஆம் தேதியிட்ட குடியரசு இதழில் தலையங்கமாகவும் எழுதினார்.



பாராட்டுக் கவிதை

அண்ணாவின் பன்முக நாடகம் ஒன்றிற்கு தலைமை வகித்துச் சிறப்புரையாற்றிய நாடக ஆசிரியர் கவிஞர் எஸ். டி. சுந்தரம்,

“ஓரிரவு நாடகத்தில் ஓங்கிச் சிரித்திடலாம்
நூரிரவு நடந்தாலும் நுணுக்கங்கள் பார்த்திடலாம்
பேரிரவு நேரத்தில் பிரிந்தறியாத் தம்பதிகள்
கோரிவந்து நாடகத்தில் கொண்டாடிக் களிப்பார்கள்!
ஆறறிவைச் சீராக்கும் ஆற்றல் உள்ள நாடகங்கள்
ஆறாகப் பெருகி வரும் அத்தனையும் புது வெள்ளம்!
வீரசிவாஜி மன்னன் வெற்றிமிகு நாடகத்தில்
யாரிவர் போல் நடிப்பார்கள், இணையில்லாக் கலைமன்னன்!
வேலைக்காரி என்னும் வியப்பான நாடகத்தை
வேலை மறந்துவிட்டு விருப்பாகப் பார்த்து விடலாம்!
மாலைச் சந்திரோதயத்தில் மங்காத நல் ஒளியில்
மலர்ச்சி பெறும் மனக்குமுதம் மணமாகும் எழுத்துக்கள்!
பால் போன்ற நகைச்சுவைக்கு பர்னாட்ஷா என்பார்கள்
மேலான அறிவியலில் எம்.என்.ராய் என்பார்கள்
கோலக்குளிர் நடைக்கு கோல்ட்ஸ்மித்தே என்பார்கள்
அவரெல்லாம் உரைகல்தான்! அண்ணா ஓர் அசல் தங்கம்!”

- என்று அண்ணாவின் நாடகத்திற்குக் கவிதை வழியிலான பாராட்டுரை வழங்கிச் சிறப்பித்துள்ளார்.



பகுத்தறிவுக் கருத்துகள்

சமூக அக்கறை கொண்ட அண்ணா அவர்கள், நம்மிடையே பலகாலமாகக் குடிகொண்டிருந்த சாதி, மதம் மற்றும் பல மூடநம்பிக்கைகளைப் போக்க எண்ணினார். சமூக அநீதிகளைக் கண்ணுற்று சீர்திருத்தவாதியான அண்ணா சமயத்தைக் கடுமையாக எதிர்த்தார். சமயம் மனிதனுக்கான வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்து வைப்பதாக அமைய வேண்டும் என்று கருதினார். ‘மதம் ஒரு மாபெரும் நச்சுக்கோப்பை அதில் விழுந்த துகள்களாக மக்கள் இருக்கக் கூடாது’ என்று திராவிட இதழில் அண்ணா கூறுவது குறிப்பிடத்தக்கது.

கடவுளின் பெயரால் ஏற்பட்ட மூடநம்பிக்கைகளையும், அவற்றின் உண்மையான தன்மைகளையும் எடுத்துரைக்கும் விதமாக அமைந்த நாடகம் ‘சந்திரோதயம்’. இந்நாடகத்தில் வரும் துரைராஜ் எனும் கதாபாத்திரத்தின் வாயிலாக மூடநம்பிக்கைகளை வெளிப்படுத்துகிறார். புரோகிதர்கள் சுவர்க்கம், நரகம் என்று கூறி மக்களை ஏமாற்றுவதனையும், திதி என்ற பெயரால் அரிசி, பருப்பு, வேட்டி முதலியவற்றை அவர்கள் பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்வதனையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றார். இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் தம்முடைய பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்புகின்றார்.



சாதி ஒழிப்பு

மதத்திற்கு அடுத்தபடியாக மக்களிடையே மண்டிக் கிடக்கும் பிரச்சனைகளுள் ஒன்று ‘சாதி’, சாதியத் தாக்கம் நம் சமூக அமைப்பைக் கிழித்துச் சின்னாபின்னமாக்கி விட்டது. மிகச் சுலபத்தில் சரிசெய்ய முடியாத அளவுக்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கி விட்டது. ஒருவனது பிறப்பிலேயே சாதி நிர்ணயிக்கப்படுகிறது. அவனது சமூக நிலை, பொருளாதார நிலை, தொழில் செய்யும் நிலை முதலியவற்றைச் சாதியே நிர்ணயிக்கிறது. எனவேதான் அண்ணா அவர்கள் “பேதமற்ற சமுதாயத்தை, சமத்துவத்தை, சமதர்மத்தை நாம் காணவேண்டும் என்றால் முதலில் சாதி தொலைந்தாக வேண்டும்” என்கிறார். அதனைத் தம் படைப்புகளிலும் முன்வைக்கின்றார்.

நாட்டு மக்களுக்குள் பேதத்தை ஏற்படுத்தும் முதல் சாதனம் சாதி என்பதைக் ‘காதல்ஜோதி’ என்னும் நாடகத்தில் வலியுறுத்துகின்றார். மக்களின் இரத்தத்திலே கலக்கப்பட்டிருக்கும் கடும் விஷம் சாதி. எனவே பேதமற்ற சமுதாயத்தை நாம் காண வேண்டுமானால் முதலில் சாதியைத் தொலைத்தாக வேண்டும். மேலும் சாதியை அழிப்பதற்கான கருவியாகக் ‘காதல்மணம்’ அமையும் என்கிறார். ‘காதலினால் சாதி மறையும்’ என்று கூறி கலப்பு மணத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றார். விதவை மறுமணத்தின் அவசியத்தையும் இந்நாடகத்தில் வலியுறுத்துகின்றார். விதவைப் பெண்களுக்கு மறுமணம் மறுக்கப்படும்போது, அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதையும், பெண்கள் தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடுவதையும் இந்நாடகத்தில் பதிவு செய்திருக்கின்றார்.



பெண் விடுதலை

அண்ணாவின் காலத்தில் சமூக அமைப்பில் இருந்த மற்றுமொரு பிரச்சினை ‘பெண்ணடிமைத்தனம்’. அக்காலத்தில் பெண்கள் பல்வேறு வகையான துன்பங்களை அடைந்தனர். அக்காலத்தில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. அண்ணா தாம் படைத்த பெண்களைப் படித்த பெண்களாக, துணிச்சல் மிக்க பெண்களாக, சீர்திருத்தக் குணம் படைத்தவராகக் காட்டுகின்றார். ஓரிரவு நாடகத்தில் சுசீலா என்ற பெண்ணைப் படித்த பெண்ணாகவும், முற்போக்குச் சிந்தனையுடைய பெண்ணாகவும் படைத்துக் காட்டுகின்றார். வேலைக்காரி நாடகத்தில் வேலைக்காரப் பெண்ணாக வரும் அமிர்தத்தை மதிநுட்பம் நிறைந்த பெண்ணாகப் படைத்திருக்கின்றார். தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாகச் சந்திக்கும் பெண்ணாகப் படைத்துக் காட்டுகின்றார். பெண்களுக்கு வாழ்க்கையானது எவ்வளவு பயங்கரமானது என்பதையும், சமுதாயத்தில் பெண்கள் படும் துயரினையும் ‘பாவையின் பயணம்’ எனும் நாடகத்தின் மூலம் புலப்படுத்துகின்றார். சமயத்தின் பெயரால் செய்யப்பட்ட பெண்ணடிமைத்தனத்தினை மாற்றிட பெண் விடுதலைக்குத் தன் நாடகங்கள் வழியாகக் குரல் கொடுத்திருக்கின்றார்.

முடிவுரை

அண்ணாவின் நாடகங்கள், அன்றைய சூழலில் இளைஞர் சமுதாயத்தால் பெரிதும் வரவேற்கப்பட்டன. தமிழகத்தில் புரையோடிக் கிடந்த மூடப்பழக்க வழக்கங்கள், பொருந்தாமணம், கைம்மை நோன்பு, முதலாளி-தொழிலாளி என்கிற பேதம் போன்றவற்றை மையமாகக் கொண்ட கருத்துச் செறிவு மிக்க நாடகங்களைப் படைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சமுதாயத்தைப் பண்படுத்த வேண்டும், படிப்பறிவற்றவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும், போலிச் சாமியார்களை இனம் காண வேண்டும், கட்டுக் கதைகளை அகற்ற வேண்டும், தன்மானத்தை உயர்த்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு சீர்திருத்தக் கருத்துக்களைத் தனது நாடகங்கள் வழியாக எடுத்துக் கூறினார். இதன் மூலம் தமிழ்நாட்டில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட முனைந்தார். பேரறிஞர் அண்ணா சிறுகதை, புதினம், அரசியல் கட்டுரைகள் எழுதுதல், மேடைகளில் பேசுதல் போன்ற பல்வேறு சிறப்புகளைப் பெற்றவர் எனினும், அவருடைய நாடகப் படைப்புகள் அவையனைத்திலும் தலைசிறந்ததாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/community/p9.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License