புதுமைப்பித்தன் படைப்புகளில் ஆண்பாத்திரங்கள்
சு. விமல்ராஜ்
உதவிப்பேராசிரியர்,
ஏ. வி. சி. கல்லூரி, மன்னம்பந்தல், மயிலாடுதுறை.
பகுதி - 5
16. சாமியாரும்,குழந்தையும் சீடையும்
இந்தச் சிறுகதை புதுமைப்பித்தனின் தத்துவார்த்தச் சிந்தனையின் வெளிப்பாடாய் இருக்கிறது. இச்சிறுகதையில் இடம் பெறுகிற ஆண் பாத்திரம் சாமியார்ப் பாத்திரம். அவர் கீழ்க்காணுமாறு உரையாற்றுகிறார்,
“மனிதன் கடவுளைப் படைத்தான். அப்புறம் கடவுள் மனிதனை சிருஷ்டிக்க ஆரம்பித்தான்.
இருவரும் மாறிமாறிப் போட்டிபோட ஆரம்பித்தார்கள். இன்னும் போட்டி முடியவில்லை.
நேற்றுவரை பிந்திப் பிறந்த கடவுளுக்கு முந்திப் பிறந்த மனிதன் ஈடுகட்டிக் கொண்டு வந்தான்.
இதில் வெற்றி தோல்வி, பெரியவர் சின்னவர் என்று நிச்சயிப்பதற்கு எப்படி முடியும்?
நிச்சயிக்க என்ன இருக்கிறது?” (81)
என்று உரையாற்றிக் கொண்டே போகிறார்.
இந்தச் சாமியார்ப் பாத்திரத்தின் வழியாக வெளிப்படுத்துவது; உலக வாழ்க்கை என்பது எதையோ நோக்கி ஓடுகிற மக்கள் கூட்டத்தைக் கொண்டது. அவர்கள் எதிர்பார்த்துச் செல்வது எதுவுமே அற்றது, ஒன்றுமில்லாதது. அப்படிப்பட்ட மனிதக் கூட்டம் படைத்ததுதான் கடவுளேயொழிய, கடவுள் மனிதனைப் படைக்கவில்லை.
“மனிதன் தன் திறமையை அறிந்து கொள்ளாமல் செய்த பிசகுக்குக் கடவுள் என்று பெயர். மனிதனுக்கு உண்டாக்கத்தான் தெரியும். அழிக்கத் தெரியாது. அழியும் வரை காத்திருப்பதுதான் அவன் செய்யக்கூடியது” (82) என்று மனிதனின் வாழ்க்கை முறையை விமர்சித்துப் புதுமைப்படுத்துகிறார் புதுமைப்பித்தன்.
இப்பாத்திரம் சாமியார் என்னும் வடிவில் இருந்தாலும், தத்துவத்தின் பிரதிபலிப்பாய் பேசும் தொனிகொண்டது மட்டுமல்ல எதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது. இயல்பு வாழ்வின் அமைப்புக் குறியீட்டை வெளிப்படுத்த வல்லது. கலைநயம் நிரம்பியது. கலைநோக்கோடு வாழ்வியலின் ரம்மியத்தை மட்டுமல்லாது அதன் எதார்த்தத்தை வெளிப்படுத்துவது மிக முக்கியம். வாழ்வியல் என்பது எதார்த்தம் நிரம்பியதும்தான். கலை கலைக்காக என்னும் கோட்பாடு உண்டு. கலையின் வழியே மக்களுக்கான உண்மைத்தன்மையை எடுத்து மொழிவதும் ஒரு படைப்பாளனின் மிக முக்கியப் பணியாகும்.
தொகுப்புரை
இச்சிறுகதைத் தொகுப்பின் பதினாறு சிறுகதைகளில் இடம் பெற்றுள்ள ஆண் பாத்திரங்களில் பலவிதமான பண்பு நலன்களைக் கொண்ட மாந்தர்ப் பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த உலக வாழ்வில் பலவிதமான பண்புக் கூறுகளைக் கொண்ட மனிதர்கள் உலவுகிறார்கள். எல்லா மனிதர்களும் ஒரேவிதமான எண்ண நிலைப்பாடு உடையவர்களாக இருந்தால் இவ்வுலக இயக்கம் சரிவர இயங்காது. நேர்மறை + எதிர்மறை இரண்டும் கலந்துதான் மனித வாழ்வியலை இயக்குகிறது.
ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து வெளிப்படுகிறது. மனிதர்கள் பலதரப்பட்டவர்கள். அப்படியேப் புதுமைப்பித்தனும் பலவிதமான மாந்தர்ப் பாத்திரங்களைப் படைத்திருக்கிறார். கீழ்க்காணுமாறு ஒவ்வொருப் பாத்திரங்களின் உள்ளிருக்கும் குறியீடுகளை விரித்துப்பார்க்கும் ஒரு விசாலக்கண்ணோட்டம்.
ஆண்முதன்மைப் பாத்திரங்கள்
1. கோதமர்(தொன்மம்)
தொன்மம் சார்ந்த பாத்திரம். தொன்மக் கூறுகளின் வழியே பழமைக் கட்டுகளை கட்டுடைத்தல் என்னும் நோக்கில் அத்தொன்மத்தை விமர்சனம் செய்வதாய் அமைத்திருக்கிறார்.
2. பால்வண்ணம்பிள்ளை (கொள்கை விடாமை)
தான்பிடித்த முயலுக்கு மூன்று கால் என்னும் மனநிலை உடையவர்கள். சிறுசிறு கருத்துகளில் முரண்பட்டு அதற்காக உயிரையேனும் கொடுத்து நிரூபிக்க முனையும் மாந்தர்ப் பாத்திரம். இவர்களைப் போன்றவர்கள் தங்களைச் சமாதானப் படுத்திக் கொள்ளவே மாட்டார்கள்.
3. பரமசிவம்பிள்ளை (நனவோடைப் பாத்திரம்)
புதுமைப்பித்தன் அவர்கள், இந்தப் பாத்திரத்தை நனவோடை உத்தி என்னும் ஒருவகை முதிர்ப்பாத்திரமாய்ப் படைத்திருக்கிறார். இது பாத்திரம் தானே தன் மனதுக்குள் எண்ணிப் பார்த்து உணர்ச்சிப் பெருக்கில் ஆளும் தன்மையில் கதைவோட்டத்தை நகர்த்தும் முறையாகும்.
4. தலைமைக்காரத் தேவர் (காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு + வாரிசுக் கொள்கை)
ஒவ்வொரு தாய் தந்தைக்கும் தங்கள் குழந்தைகளின் மீது அளவு கடந்த அன்பிருக்கும். யாரும் ஊனப்பட்ட தன் குழந்தையைத் தனித்து விட்டு விடுவதில்லை. அவர்களுடைய வளர்ச்சிக்கு அதிகப்படியான சிரத்தையெடுத்து, அவர்களுடைய வளர்ச்சிக்கு என்னென்ன முயற்சிகளை எடுக்க வேண்டுமோ அதை அவர்கள் ஒருபொழுதும் விடுவதில்லை. அப்படிப்பட்ட ஒரு தகப்பனின் பாத்திரம் மட்டுமல்ல; ஊர்த்தலைவர் என்னும் இடம் இவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறபடியால், அந்தத்தலைமையைத் தனக்குப் பின்னால் சுமக்கத் தன் பிள்ளை தயாராக வேண்டும் என்னும் எண்ணம் மிகுந்திருக்கும் ஒரு பாத்திரம்.
5. விசுவநாதன் (புதிய பரிசீலனைக் கொள்கை)
இவர் மருத்துவர். புதிய புதிய சிந்தனைகள், கொள்கைகள், கண்டுபிடிப்புகள் ஆகிய இவற்றினை ஏற்று அவற்றின் உண்மைத் தன்மையை ஆராயும் ஒரு மன நிலை உடையவர். நவீனக் கொள்கையோ அல்லது பழமைவாதக் கொள்கையோ அவற்றினைப் புரிந்து கொள்ளவேண்டும். அந்த ஆராய்ச்சி மனப்பாங்கு உடைய பாத்திரம்.
6. வில்கின்ஸன் (துணைமைப்பாத்திரம்)
7. அரிமர்த்தன பாண்டியன் (துணைமைப்பாத்திரம்)
8. வாதவூரார் ‘மாணிக்கவாசகர்’ (தொன்மம்)
மாணிக்கவாசகர் என்னும் ஆன்மீகக்கதையில் இடம் பெறும் ஒரு பாத்திரத்தின் விமர்சன நோக்குப்பாத்திரம்.
9. சொக்கன் (துணைமைப்பாத்திரம்)
10. சொக்கேசன் (துணைமைப்பாத்திரம்)
11. சுந்தரம்பிள்ளை (கானல் நீர் மிகுநிலை மனப்பாத்திரம்)
தாங்கள் என்ன செய்கிறோம் என்பதில் ஒரு மிகுதியான அதீத தன்னம்பிக்கை உடைய மன நிலைப்பாத்திரமாக இது படைக்கப்பட்டுள்ளது. தாம் ஒரு அறிவு ஜீவி என்ற மனநிலை எப்போதும் குடிகொண்ட பாத்திரம் உடையவர்கள், கானல் நீர் என்பது எப்படி இல்லாத நீரோ அதுபோல், தங்கள் மீதான அறிவின் தன்மை இல்லாத ஒன்றே. ஆனால் அதை இருப்பதாய் நினைத்து மிகுதிப்படுத்துவது.
12. முருகதாசர் (பொழுது கடத்தி)
ஒருநாள் கழிந்ததின் முருகதாசர் எப்படியாவது குடும்பத்தை நகர்த்திக் கொண்டிருக்கும் சாமார்த்தியம் நிரம்பிய பாத்திரம். சமூகத்தோடு ஒட்டித்தான் இருப்பார்கள், அவர்களின் உழைப்பின் மீதான மூலதானம் என்பது சொற்பமாகத்தான் இருக்கும். திட்டமிடல் என்பது இளமையிலேயே தீர்மானிக்கப்படுவது. அது இல்லாவிட்டால் வாழ்க்கையின் பிற்பகுதி முருகதாசரைப் போல்தான் கழியும்.
13. வைரவன்பிள்ளை (அனுபவப் பாத்திரம்)
வாழ்க்கையின் பல நிலைகளை அனுபவித்து வாழ்ந்து முடிக்கிற ஓர் அனுபவப் பாத்திரமாய் வைரவன்பிள்ளை வருகிறார். ஒருமனிதன் பிறந்த அந்த நொடியிலிருந்து அவனுக்கான அனுபவத்தின் மணி எண்ணிக்கையும் தொடங்கி விடுகிறது. இடர்வரும், இழுக்கு வரும், சவாலானப் பொழுதுகள் பல வரும், வாய்ப்புகள் வரும் இப்படிப் பல கணங்களை கடந்துவரும் மனிதன் தன் அனுபவ முதிர்ச்சியின் காரணமாய் நிதானப்படுகிறான். எந்த ஒன்றையும் ஏற்றுக் கொள்கிற மனநிலை வந்துவிடும்.
14. தேவ இரக்கம் நாடார் (கொள்கை பேதப்பாத்திரம்)
இப்பாத்திரம் கிருத்துவராய் இருந்து கடவுளிடத்தில், எங்களை மன்னியும்; எங்களுக்கு கடண்பட்டவர்களை நாங்கள் மன்னிக்கிறோம் என்று மன்றாடுகிறார். இவர் நீதிபதியாய் இருக்கும் பட்சத்தில் அங்கு சட்டத்தின்படி தீர்ப்பு சொல்ல வேண்டும். இந்த இடத்தில் இரண்டு நிலைப்பாடு உடைய தன்மை வெளிப்படுகிறது. ஒரு நீதிபதியாய் சட்டத்தின்படி ஒழுகுவதும்; கிருத்துவராய் மன்னிப்பை வழி மொழிய முடியாததுமான நிலைப்பாடு உடையப் பாத்திரமாய்த் தேவ இரக்கம் நாடார் உள்ளார்.
15. சாத்தன் (கலை கலைக்காவென்னும் குறியீட்டுப் பாத்திரம்)
கலை கலைக்கானவென்னும் கோட்பாடுண்டு. கலையைக் கலையாக எண்ணுவது. கலையை இயல்பு வாழ்வின் உண்ர்ச்சிக்கு மதிப்பளித்து; அதன்வழியே அதை ஒரு கருவியாக்குவது என்று இரண்டு அமைப்பு முறை உள்ளது. சிலையை கலையாகப் பார்ப்பது; கடவுளாகப்பார்ப்பது. கலைஞன், சிலையை மக்கள் கலை நயத்தோடு பார்ப்பதை தன்கலைக்கான மிகப்பெரிய அங்கீகாரமாய் நினைக்கிறான். ஆனால் மக்கள் கடவுள்மீதான அன்பின் பெருக்கோடு பார்க்கும் போது அங்கே கலை மறைந்து விடுகிறது. சாத்தன் கலை கலைக்காகவென்னும் குறியீட்டுப் பாத்திரம் எப்படியெனில், அவன் அச்சிலை மக்களின் கலை நோக்குப் பார்வையில் பார்த்து, ரசித்து, பாராட்டப்பெறும் உணர்ச்சிப் பெருக்கை விரும்பி ஆவலுறுகிறான். கலையைக் கலையாகப் பார்ப்பது. புதுமைப்பித்தன் இச்சிறுகதையை முடிக்கும் போது மக்கள் அச்சிலையை பக்திப்பெருக்கோடு பார்த்துக் கலையை முற்றிலும் அழித்து விடுவர் என்னும் ஒரு கூற்றோடு முடிக்கிறார். சிலையைச் செதுக்கும் ஒரு சிற்பிக்கு அதன் ஆன்மீக ஆழம் மிக்க நெருக்கமுடையதாக இருக்கிறது. அந்தக் கடவுள் மீதான நெருக்கம் சிலையை வடிக்கிற ஆவலின் உள்ளார்ந்த அர்த்தம் நிரம்பியது. அதில் இருக்கும் கலைக்கோட்பாடு மிக நுண்ணிய இழையைப்போல பிண்ணியிருக்கிறது.
16. காஞ்சனை ஆண்பாத்திரம் (சந்தேகப்பாத்திரம்)
எல்லாவற்றையும் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பது. எந்த ஒரு நிகழ்வையும் அதன் போக்கில் வைத்துப் பார்க்காமல், நம்முடைய எண்ணத்திற்கு உகந்தது போன்று ஒரு உருவத்தில் அதைக் கற்பனை செய்து கொள்வது என்ற மனநிலை உடையவர்களின் சார்பு நிலைப்பாத்திரம்.
17. கந்தசாமிப்பிள்ளை (இயல்பு மாந்தர்ப் பிரதிநிதிப் பாத்திரம்)
கடவுள் பூமிக்கு வந்து ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் ஒட்டுமொத்த மனிதவர்க்கத்தின் வாழ்க்கை நிலைப்பாட்டுக்கு கந்தசாமிப் பிள்ளையை வைத்து உணர்ந்து கொள்கிறார். இவ்வுலக வாழ்வின் மனிதப் பாத்திரத்தின் பிம்பமாய் இப்பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. “உம்மை பார்த்தால் உலகத்தைப் பார்த்தது போல் என்று உலக மனிதர்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாய் வெளிப்படுகிறார் இவர்.
18. சாமியார் (தத்துவார்த்தப் பாத்திரம்)
சான்றெண் விளக்கம்
1. முனைவர் சீ. குமரேசன், புதுமைப்பித்தன் படைப்புகள் - ஓர் ஆய்வு. ப.197.
2. மேலது. ப.197.
3. தி. முருகரத்தினம், புதுமைப்பித்தன் சிறுகதைக்கலை. ப.97.
4. Evelyn May Albright.Ashort story its principles and structure. p.121.
5. முனைவர். சீ. குமரேசன், புதுமைப்பித்தன் படைப்புகள் ஓர் ஆய்வு. ப.237.
6. மேலது. ப.237.
7. மேலது. ப.237.
8. மேலது. ப.249.
9. ப. மருதநாயகம், தொன்மத்திறனாய்வு. பக்.12-13
10. மேலது. ப.7
11. ந. இளங்கோ, பன்முகப்பார்வையில் புதுமைப்பித்தன். பக்.24-25
12. மேலது. ப.25.
13. க. பஞ்சாங்கம்.தொன்மத்திறனாய்வு.பக்.114-115
14. மேலது. ப.118.
15. முனைவர் சீ. குமரேசன், புதுமைப்பித்தன் படைப்புக்ள் ஓர் ஆய்வு. பக்.217-18
16. புதுமைப்பித்தன், புதுமைப்பித்தன் சிறுகதைகள். ப.8
17. மேலது. ப.9
18. மேலது. ப.25
19. மேலது. ப.25
20. மேலது. ப.25
21. மேலது. ப.28
22. மேலது. ப.25
23. ப. ஆனந்த்குமார், பன்முகப்பார்வையில் புதுமைப்பித்தன். ப.76
24. மேலது. ப.34
25. மேலது. ப.40
26. மேலது. ப.49
27. மேலது. பக்.47-48
28. மேலது. ப.52
29. மேலது. ப.52
30. மேலது. ப.52
31. மேலது. ப.53
32.மேலது. ப.55
33. மேலது. ப.57
34. மேலது. ப.67
35. மேலது. ப.81
36. மேலது. ப.82
37. மேலது. ப.82
38. மேலது. ப.88
39. மேலது. ப.88
40. மேலது. ப.88
41. மேலது. ப.85
42. மேலது. பக்.86-87
43. மேலது. ப.87
44. மேலது. ப.88
45. மேலது. ப.89
46. மேலது. ப.92
47. மேலது. ப.92
48. மேலது. ப.99
49. மேலது. ப.102
50. மேலது. ப.107
51. மேலது. ப.108
52. மேலது. பக்.107-108
53. மேலது. ப.111
54. மேலது. ப.112
55. மேலது. ப.112
56. மேலது. ப.113
57. மேலது. ப.115
58. மேலது. ப.115.
59. மேலது. ப.115
60. மேலது. ப.122
61. முனைவர் சீ. குமரேசன், புதுமைப்பித்தன் படைப்புகள் - ஓர் ஆய்வு.
62. புதுமைப்பித்தன், புதுமைப்பித்தன் சிறுகதைகள். பக்.123-124
63. மேலது. ப.124
64. மேலது. ப.124
65. மேலது. ப.125
66. மேலது. ப.126
67. மேலது. ப.127
68. மேலது. ப.128
69. மேலது. ப.132
70. மேலது. ப.133
71. மேலது. ப.134
72. மேலது. ப.139
73. முனைவர். சீ. குமரேசன், புதுமைப்பித்தன்படைப்புகள் - ஓர் ஆய்வு.பக்.221-222
74. மேலது. ப.141
75. மேலது. ப.141
76. மேலது. ப.150
77. மேலது. ப.163
78. மேலது. ப.164
79. மேலது. ப.164
80. மேலது. ப.168.
நிறைவுற்றது
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.