இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

புதுமைப்பித்தன் படைப்புகளில் ஆண்பாத்திரங்கள்

சு. விமல்ராஜ்
உதவிப்பேராசிரியர்,
ஏ. வி. சி. கல்லூரி, மன்னம்பந்தல், மயிலாடுதுறை.


பகுதி - 5

16. சாமியாரும்,குழந்தையும் சீடையும்

இந்தச் சிறுகதை புதுமைப்பித்தனின் தத்துவார்த்தச் சிந்தனையின் வெளிப்பாடாய் இருக்கிறது. இச்சிறுகதையில் இடம் பெறுகிற ஆண் பாத்திரம் சாமியார்ப் பாத்திரம். அவர் கீழ்க்காணுமாறு உரையாற்றுகிறார்,

“மனிதன் கடவுளைப் படைத்தான். அப்புறம் கடவுள் மனிதனை சிருஷ்டிக்க ஆரம்பித்தான்.

இருவரும் மாறிமாறிப் போட்டிபோட ஆரம்பித்தார்கள். இன்னும் போட்டி முடியவில்லை.

நேற்றுவரை பிந்திப் பிறந்த கடவுளுக்கு முந்திப் பிறந்த மனிதன் ஈடுகட்டிக் கொண்டு வந்தான்.

இதில் வெற்றி தோல்வி, பெரியவர் சின்னவர் என்று நிச்சயிப்பதற்கு எப்படி முடியும்?

நிச்சயிக்க என்ன இருக்கிறது?” (81)

என்று உரையாற்றிக் கொண்டே போகிறார்.

இந்தச் சாமியார்ப் பாத்திரத்தின் வழியாக வெளிப்படுத்துவது; உலக வாழ்க்கை என்பது எதையோ நோக்கி ஓடுகிற மக்கள் கூட்டத்தைக் கொண்டது. அவர்கள் எதிர்பார்த்துச் செல்வது எதுவுமே அற்றது, ஒன்றுமில்லாதது. அப்படிப்பட்ட மனிதக் கூட்டம் படைத்ததுதான் கடவுளேயொழிய, கடவுள் மனிதனைப் படைக்கவில்லை.

“மனிதன் தன் திறமையை அறிந்து கொள்ளாமல் செய்த பிசகுக்குக் கடவுள் என்று பெயர். மனிதனுக்கு உண்டாக்கத்தான் தெரியும். அழிக்கத் தெரியாது. அழியும் வரை காத்திருப்பதுதான் அவன் செய்யக்கூடியது” (82) என்று மனிதனின் வாழ்க்கை முறையை விமர்சித்துப் புதுமைப்படுத்துகிறார் புதுமைப்பித்தன்.

இப்பாத்திரம் சாமியார் என்னும் வடிவில் இருந்தாலும், தத்துவத்தின் பிரதிபலிப்பாய் பேசும் தொனிகொண்டது மட்டுமல்ல எதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது. இயல்பு வாழ்வின் அமைப்புக் குறியீட்டை வெளிப்படுத்த வல்லது. கலைநயம் நிரம்பியது. கலைநோக்கோடு வாழ்வியலின் ரம்மியத்தை மட்டுமல்லாது அதன் எதார்த்தத்தை வெளிப்படுத்துவது மிக முக்கியம். வாழ்வியல் என்பது எதார்த்தம் நிரம்பியதும்தான். கலை கலைக்காக என்னும் கோட்பாடு உண்டு. கலையின் வழியே மக்களுக்கான உண்மைத்தன்மையை எடுத்து மொழிவதும் ஒரு படைப்பாளனின் மிக முக்கியப் பணியாகும்.


தொகுப்புரை

இச்சிறுகதைத் தொகுப்பின் பதினாறு சிறுகதைகளில் இடம் பெற்றுள்ள ஆண் பாத்திரங்களில் பலவிதமான பண்பு நலன்களைக் கொண்ட மாந்தர்ப் பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த உலக வாழ்வில் பலவிதமான பண்புக் கூறுகளைக் கொண்ட மனிதர்கள் உலவுகிறார்கள். எல்லா மனிதர்களும் ஒரேவிதமான எண்ண நிலைப்பாடு உடையவர்களாக இருந்தால் இவ்வுலக இயக்கம் சரிவர இயங்காது. நேர்மறை + எதிர்மறை இரண்டும் கலந்துதான் மனித வாழ்வியலை இயக்குகிறது.

ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து வெளிப்படுகிறது. மனிதர்கள் பலதரப்பட்டவர்கள். அப்படியேப் புதுமைப்பித்தனும் பலவிதமான மாந்தர்ப் பாத்திரங்களைப் படைத்திருக்கிறார். கீழ்க்காணுமாறு ஒவ்வொருப் பாத்திரங்களின் உள்ளிருக்கும் குறியீடுகளை விரித்துப்பார்க்கும் ஒரு விசாலக்கண்ணோட்டம்.

ஆண்முதன்மைப் பாத்திரங்கள்

1. கோதமர்(தொன்மம்)

தொன்மம் சார்ந்த பாத்திரம். தொன்மக் கூறுகளின் வழியே பழமைக் கட்டுகளை கட்டுடைத்தல் என்னும் நோக்கில் அத்தொன்மத்தை விமர்சனம் செய்வதாய் அமைத்திருக்கிறார்.

2. பால்வண்ணம்பிள்ளை (கொள்கை விடாமை)

தான்பிடித்த முயலுக்கு மூன்று கால் என்னும் மனநிலை உடையவர்கள். சிறுசிறு கருத்துகளில் முரண்பட்டு அதற்காக உயிரையேனும் கொடுத்து நிரூபிக்க முனையும் மாந்தர்ப் பாத்திரம். இவர்களைப் போன்றவர்கள் தங்களைச் சமாதானப் படுத்திக் கொள்ளவே மாட்டார்கள்.

3. பரமசிவம்பிள்ளை (நனவோடைப் பாத்திரம்)

புதுமைப்பித்தன் அவர்கள், இந்தப் பாத்திரத்தை நனவோடை உத்தி என்னும் ஒருவகை முதிர்ப்பாத்திரமாய்ப் படைத்திருக்கிறார். இது பாத்திரம் தானே தன் மனதுக்குள் எண்ணிப் பார்த்து உணர்ச்சிப் பெருக்கில் ஆளும் தன்மையில் கதைவோட்டத்தை நகர்த்தும் முறையாகும்.

4. தலைமைக்காரத் தேவர் (காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு + வாரிசுக் கொள்கை)

ஒவ்வொரு தாய் தந்தைக்கும் தங்கள் குழந்தைகளின் மீது அளவு கடந்த அன்பிருக்கும். யாரும் ஊனப்பட்ட தன் குழந்தையைத் தனித்து விட்டு விடுவதில்லை. அவர்களுடைய வளர்ச்சிக்கு அதிகப்படியான சிரத்தையெடுத்து, அவர்களுடைய வளர்ச்சிக்கு என்னென்ன முயற்சிகளை எடுக்க வேண்டுமோ அதை அவர்கள் ஒருபொழுதும் விடுவதில்லை. அப்படிப்பட்ட ஒரு தகப்பனின் பாத்திரம் மட்டுமல்ல; ஊர்த்தலைவர் என்னும் இடம் இவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறபடியால், அந்தத்தலைமையைத் தனக்குப் பின்னால் சுமக்கத் தன் பிள்ளை தயாராக வேண்டும் என்னும் எண்ணம் மிகுந்திருக்கும் ஒரு பாத்திரம்.


5. விசுவநாதன் (புதிய பரிசீலனைக் கொள்கை)

இவர் மருத்துவர். புதிய புதிய சிந்தனைகள், கொள்கைகள், கண்டுபிடிப்புகள் ஆகிய இவற்றினை ஏற்று அவற்றின் உண்மைத் தன்மையை ஆராயும் ஒரு மன நிலை உடையவர். நவீனக் கொள்கையோ அல்லது பழமைவாதக் கொள்கையோ அவற்றினைப் புரிந்து கொள்ளவேண்டும். அந்த ஆராய்ச்சி மனப்பாங்கு உடைய பாத்திரம்.

6. வில்கின்ஸன் (துணைமைப்பாத்திரம்)

7. அரிமர்த்தன பாண்டியன் (துணைமைப்பாத்திரம்)

8. வாதவூரார் ‘மாணிக்கவாசகர்’ (தொன்மம்)

மாணிக்கவாசகர் என்னும் ஆன்மீகக்கதையில் இடம் பெறும் ஒரு பாத்திரத்தின் விமர்சன நோக்குப்பாத்திரம்.

9. சொக்கன் (துணைமைப்பாத்திரம்)

10. சொக்கேசன் (துணைமைப்பாத்திரம்)

11. சுந்தரம்பிள்ளை (கானல் நீர் மிகுநிலை மனப்பாத்திரம்)

தாங்கள் என்ன செய்கிறோம் என்பதில் ஒரு மிகுதியான அதீத தன்னம்பிக்கை உடைய மன நிலைப்பாத்திரமாக இது படைக்கப்பட்டுள்ளது. தாம் ஒரு அறிவு ஜீவி என்ற மனநிலை எப்போதும் குடிகொண்ட பாத்திரம் உடையவர்கள், கானல் நீர் என்பது எப்படி இல்லாத நீரோ அதுபோல், தங்கள் மீதான அறிவின் தன்மை இல்லாத ஒன்றே. ஆனால் அதை இருப்பதாய் நினைத்து மிகுதிப்படுத்துவது.

12. முருகதாசர் (பொழுது கடத்தி)

ஒருநாள் கழிந்ததின் முருகதாசர் எப்படியாவது குடும்பத்தை நகர்த்திக் கொண்டிருக்கும் சாமார்த்தியம் நிரம்பிய பாத்திரம். சமூகத்தோடு ஒட்டித்தான் இருப்பார்கள், அவர்களின் உழைப்பின் மீதான மூலதானம் என்பது சொற்பமாகத்தான் இருக்கும். திட்டமிடல் என்பது இளமையிலேயே தீர்மானிக்கப்படுவது. அது இல்லாவிட்டால் வாழ்க்கையின் பிற்பகுதி முருகதாசரைப் போல்தான் கழியும்.

13. வைரவன்பிள்ளை (அனுபவப் பாத்திரம்)

வாழ்க்கையின் பல நிலைகளை அனுபவித்து வாழ்ந்து முடிக்கிற ஓர் அனுபவப் பாத்திரமாய் வைரவன்பிள்ளை வருகிறார். ஒருமனிதன் பிறந்த அந்த நொடியிலிருந்து அவனுக்கான அனுபவத்தின் மணி எண்ணிக்கையும் தொடங்கி விடுகிறது. இடர்வரும், இழுக்கு வரும், சவாலானப் பொழுதுகள் பல வரும், வாய்ப்புகள் வரும் இப்படிப் பல கணங்களை கடந்துவரும் மனிதன் தன் அனுபவ முதிர்ச்சியின் காரணமாய் நிதானப்படுகிறான். எந்த ஒன்றையும் ஏற்றுக் கொள்கிற மனநிலை வந்துவிடும்.

14. தேவ இரக்கம் நாடார் (கொள்கை பேதப்பாத்திரம்)

இப்பாத்திரம் கிருத்துவராய் இருந்து கடவுளிடத்தில், எங்களை மன்னியும்; எங்களுக்கு கடண்பட்டவர்களை நாங்கள் மன்னிக்கிறோம் என்று மன்றாடுகிறார். இவர் நீதிபதியாய் இருக்கும் பட்சத்தில் அங்கு சட்டத்தின்படி தீர்ப்பு சொல்ல வேண்டும். இந்த இடத்தில் இரண்டு நிலைப்பாடு உடைய தன்மை வெளிப்படுகிறது. ஒரு நீதிபதியாய் சட்டத்தின்படி ஒழுகுவதும்; கிருத்துவராய் மன்னிப்பை வழி மொழிய முடியாததுமான நிலைப்பாடு உடையப் பாத்திரமாய்த் தேவ இரக்கம் நாடார் உள்ளார்.


15. சாத்தன் (கலை கலைக்காவென்னும் குறியீட்டுப் பாத்திரம்)

கலை கலைக்கானவென்னும் கோட்பாடுண்டு. கலையைக் கலையாக எண்ணுவது. கலையை இயல்பு வாழ்வின் உண்ர்ச்சிக்கு மதிப்பளித்து; அதன்வழியே அதை ஒரு கருவியாக்குவது என்று இரண்டு அமைப்பு முறை உள்ளது. சிலையை கலையாகப் பார்ப்பது; கடவுளாகப்பார்ப்பது. கலைஞன், சிலையை மக்கள் கலை நயத்தோடு பார்ப்பதை தன்கலைக்கான மிகப்பெரிய அங்கீகாரமாய் நினைக்கிறான். ஆனால் மக்கள் கடவுள்மீதான அன்பின் பெருக்கோடு பார்க்கும் போது அங்கே கலை மறைந்து விடுகிறது. சாத்தன் கலை கலைக்காகவென்னும் குறியீட்டுப் பாத்திரம் எப்படியெனில், அவன் அச்சிலை மக்களின் கலை நோக்குப் பார்வையில் பார்த்து, ரசித்து, பாராட்டப்பெறும் உணர்ச்சிப் பெருக்கை விரும்பி ஆவலுறுகிறான். கலையைக் கலையாகப் பார்ப்பது. புதுமைப்பித்தன் இச்சிறுகதையை முடிக்கும் போது மக்கள் அச்சிலையை பக்திப்பெருக்கோடு பார்த்துக் கலையை முற்றிலும் அழித்து விடுவர் என்னும் ஒரு கூற்றோடு முடிக்கிறார். சிலையைச் செதுக்கும் ஒரு சிற்பிக்கு அதன் ஆன்மீக ஆழம் மிக்க நெருக்கமுடையதாக இருக்கிறது. அந்தக் கடவுள் மீதான நெருக்கம் சிலையை வடிக்கிற ஆவலின் உள்ளார்ந்த அர்த்தம் நிரம்பியது. அதில் இருக்கும் கலைக்கோட்பாடு மிக நுண்ணிய இழையைப்போல பிண்ணியிருக்கிறது.

16. காஞ்சனை ஆண்பாத்திரம் (சந்தேகப்பாத்திரம்)

எல்லாவற்றையும் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பது. எந்த ஒரு நிகழ்வையும் அதன் போக்கில் வைத்துப் பார்க்காமல், நம்முடைய எண்ணத்திற்கு உகந்தது போன்று ஒரு உருவத்தில் அதைக் கற்பனை செய்து கொள்வது என்ற மனநிலை உடையவர்களின் சார்பு நிலைப்பாத்திரம்.

17. கந்தசாமிப்பிள்ளை (இயல்பு மாந்தர்ப் பிரதிநிதிப் பாத்திரம்)

கடவுள் பூமிக்கு வந்து ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் ஒட்டுமொத்த மனிதவர்க்கத்தின் வாழ்க்கை நிலைப்பாட்டுக்கு கந்தசாமிப் பிள்ளையை வைத்து உணர்ந்து கொள்கிறார். இவ்வுலக வாழ்வின் மனிதப் பாத்திரத்தின் பிம்பமாய் இப்பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. “உம்மை பார்த்தால் உலகத்தைப் பார்த்தது போல் என்று உலக மனிதர்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாய் வெளிப்படுகிறார் இவர்.

18. சாமியார் (தத்துவார்த்தப் பாத்திரம்)

சான்றெண் விளக்கம்

1. முனைவர் சீ. குமரேசன், புதுமைப்பித்தன் படைப்புகள் - ஓர் ஆய்வு. ப.197. 2. மேலது. ப.197.
3. தி. முருகரத்தினம், புதுமைப்பித்தன் சிறுகதைக்கலை. ப.97.
4. Evelyn May Albright.Ashort story its principles and structure. p.121.
5. முனைவர். சீ. குமரேசன், புதுமைப்பித்தன் படைப்புகள் ஓர் ஆய்வு. ப.237.
6. மேலது. ப.237.
7. மேலது. ப.237.
8. மேலது. ப.249.
9. ப. மருதநாயகம், தொன்மத்திறனாய்வு. பக்.12-13
10. மேலது. ப.7
11. ந. இளங்கோ, பன்முகப்பார்வையில் புதுமைப்பித்தன். பக்.24-25
12. மேலது. ப.25.
13. க. பஞ்சாங்கம்.தொன்மத்திறனாய்வு.பக்.114-115
14. மேலது. ப.118.
15. முனைவர் சீ. குமரேசன், புதுமைப்பித்தன் படைப்புக்ள் ஓர் ஆய்வு. பக்.217-18
16. புதுமைப்பித்தன், புதுமைப்பித்தன் சிறுகதைகள். ப.8
17. மேலது. ப.9
18. மேலது. ப.25
19. மேலது. ப.25
20. மேலது. ப.25
21. மேலது. ப.28
22. மேலது. ப.25
23. ப. ஆனந்த்குமார், பன்முகப்பார்வையில் புதுமைப்பித்தன். ப.76
24. மேலது. ப.34
25. மேலது. ப.40
26. மேலது. ப.49
27. மேலது. பக்.47-48 28. மேலது. ப.52
29. மேலது. ப.52
30. மேலது. ப.52
31. மேலது. ப.53
32.மேலது. ப.55
33. மேலது. ப.57
34. மேலது. ப.67
35. மேலது. ப.81
36. மேலது. ப.82
37. மேலது. ப.82
38. மேலது. ப.88
39. மேலது. ப.88
40. மேலது. ப.88
41. மேலது. ப.85
42. மேலது. பக்.86-87
43. மேலது. ப.87
44. மேலது. ப.88
45. மேலது. ப.89
46. மேலது. ப.92
47. மேலது. ப.92
48. மேலது. ப.99
49. மேலது. ப.102
50. மேலது. ப.107
51. மேலது. ப.108
52. மேலது. பக்.107-108
53. மேலது. ப.111
54. மேலது. ப.112
55. மேலது. ப.112
56. மேலது. ப.113
57. மேலது. ப.115
58. மேலது. ப.115.
59. மேலது. ப.115
60. மேலது. ப.122
61. முனைவர் சீ. குமரேசன், புதுமைப்பித்தன் படைப்புகள் - ஓர் ஆய்வு.
62. புதுமைப்பித்தன், புதுமைப்பித்தன் சிறுகதைகள். பக்.123-124
63. மேலது. ப.124
64. மேலது. ப.124
65. மேலது. ப.125
66. மேலது. ப.126
67. மேலது. ப.127
68. மேலது. ப.128
69. மேலது. ப.132
70. மேலது. ப.133
71. மேலது. ப.134
72. மேலது. ப.139
73. முனைவர். சீ. குமரேசன், புதுமைப்பித்தன்படைப்புகள் - ஓர் ஆய்வு.பக்.221-222
74. மேலது. ப.141
75. மேலது. ப.141
76. மேலது. ப.150
77. மேலது. ப.163
78. மேலது. ப.164
79. மேலது. ப.164
80. மேலது. ப.168.

நிறைவுற்றது


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/essay/general/p132d.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License