இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

மணிமேகலை வெண்பா

முனைவர் ம. தேவகி
தமிழ்த்துறைத் தலைவர்,
நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேனி.


முன்னுரை

பாரதிதாசனின் ‘மணிமேகலை வெண்பா’ 288 பாக்களை உள்ளடக்கியது. நளவெண்பாவிற்குப் பிறகு வெண்பாவால் படைக்கப்பட்ட குறுங்காவியம். இந்நூலிற்கு முன்னுரையில் “பழைய மணிமேகலை என்பதில் அடிமரத்தை மட்டும் நான் கூறிக் கிளைகளைக் கூறாது விடுத்ததன் நோக்கம் அந்தப் பழைய மணிமேகலை காப்பியத்தையும் மக்கள் மறக்காமல் அடிக்கடி படிக்க வேண்டும் என்பதற்காகவே” (1) என்று கூறியுள்ளார். ஆகவே இவருடைய நோக்கம் வெண்பாவால் காப்பியத்தை இயற்ற வேண்டும் என்பதாகும்.

மணிமேகலை வெண்பா

பாரதிதாசனின் மணிமேகலை வெண்பாவின் நோக்கம் சுருங்கச்சொல்லல் - 30 காதைகளில் சீத்தலைச்சாத்தனார் கூறிய செய்தியை 288 பாக்களில் கூற முயன்றுள்ளார். ஆனால் காப்பியத்தின் மையக்கருத்தை விளக்கும் இடங்களில் ஒரு கருத்தை விளக்க 2 வெண்பாக்களை இயற்றியுள்ளார்.

“உள்ளத்தில் உள்ளது கவிதை - இன்பம் உருவெடுப்பது கவிதை” என்ற கவிமணியின் வாக்கிற்கேற்ப தமிழ்மொழியின் மீது தான் கொண்ட பற்றினை விளக்க மணிமேகலை கதாபாத்திரத்தைப் பயன்படுத்தியுள்ளார்.

கடவுள் மறுப்பு சிந்தனை உடையவராதலால் பௌத்த சமயக்கருத்துகளை விளக்காமல் வாழ்வியல் அறநூலான திருக்குறளின் கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார். இச்செய்திகள் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.

வெண்பா யாப்பு - விரித்துக்காட்டல்

தேசியக்கவிஞர் சுப்ரமணிய பாரதியார் கவிதைக்கு விரித்துச்சொல்லும் மரபு சிறப்பு என்கிறார். “கிழக்குத்திசையின் கவிதையிலே இவ்விதமான ரஸம் அதிகந்தான் தமிழ்நாட்டில் முற்காலத்திலே இது மிகவும் மதிப்பெய்தி நின்றது. ஆனாலும் ஒரேயடியாகக் கவிதை சுருங்கியே போய்விடுதல் நல்லது அன்று” (2) இக்கருத்தை பாரதிதாசன் தன் மணிமேகலை வெண்பாவில் ஓரிடத்தில் செம்மையாக இயற்றியுள்ளார்.


மணிமேகலை காப்பியம் படைக்கப்பட்ட நோக்கம் ‘உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’. இதனைத் தெளிவாக விளக்கும் காதை ‘ஆதிரை பிச்சையிட்ட காதை’ இக்காதையில் மணிமேகலை ஆதிரையிடம் பிச்சை பெறும் முறையை,

“தொழுது வலங்கொண்டு துயரறு கிளவியோடு
அமுத சுரபியின் அகன்சுரை நிறைதரப்
பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என
ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்தென” (3)

என்கிறார் சீத்தலைச் சாத்தனார். இதே வெண்பா ஆதிரை தானம் செய்த விதத்தை 2 நேரிசை வெண்பாக்களாக படைத்தளித்துள்ளார் பாரதிதாசன்,

“தேவர் உலகம் சிறப்பென்னும் ஆரியர் சொல்
ஈவார் உலகம் இழிவாக்கப் - பாவை
கலமே நிறையக் கறியோடு சோறிட்டாள்
இலமே இலம்என்னு மாறு” (4)

மணிமேகலை தொண்டால் அவள் புகழ் நிலைக்க வேண்டும் என்று ஆதிரை வாழ்த்துவதாகவும் இப்பாடலை இயற்றியுள்ளார்.

“அழகும் இளமையும் எண்ணாய் துறவே
பழகும் இளையாய் பசுநெய் - ஒழுகக்
கலத்திலிட் டேனிரு கையாலும் சோறு
நிலத்து நிலைக்கநின் சீர்” (5)

பாரதிதாசன் மணிமேகலை வெண்பாவை சுருங்கச் சொல்லும் முயற்சியாக இயற்றிருப்பினும் காப்பிய மையக் கருத்தை விளக்குவதற்காக இப்பகுதியை விரித்துக் கூறியிருக்கலாம்.

வள்ளுவர் சொல் ஓர்ந்தவன்

மணிமேகலை காப்பியத்தின் ஒவ்வொரு காதையிலும் பௌத்த சமயக் கருத்துக்களைத் தொகுத்து கூறியுள்ளார் சீத்தலை சாத்தனார். ஆனால் பாரதிதாசன் நீரோட்டயமக அந்தாதியில் அமைந்த ஒரு குறளைத் தம் பாடலின் வரிகளாக்கிப் பின்வரும் நேரிசை வெண்பாவைப் படைத்துள்ளார்.

“யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் என்றே - ஓதினார்
வள்ளுவர் அன்னாரின் வாய்மை யதனையோ
எள்ளுவர் எய்தார் நலம்” (6)

பற்று நீக்கி வாழ வேண்டும் என்ற வள்ளுவரின் கொள்கையைப் பின்பற்றினால் மட்டுமே நலம் பெற இயலும் என்கிறார்.


“கல்வியே ஒரு மனிதனைச் செம்மையாக்கி உயர்த்தும்” என்ற கருத்தை எடுத்துரைப்பதிலும் வள்ளுவர் வாய்மொழியாகத் திருக்குறளைக் கையாண்டு பின்வரும் வெண்பாவை இயற்றியுள்ளார்.

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தகவென்ற நேயத்து
வள்ளுவர் வாய்மையை உள்ளுக உள்ளாரை
எள்ளுவர் இல்லாதார் என்று” (7)

பாரதிதாசன் கடவுள் மறுப்புக் கொள்கையை உடையவர். ஆகவே பௌத்த சமயக் கருத்துக்களைக் கூறாது திருவள்ளுவரின் மொழிகளை எடுத்தாண்டுள்ளார்.

தமிழே மணிமேகலை

சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையை அறச்செல்வியாகப் போற்றியுள்ளார். ஆனால் பாரதிதாசனோ மணிமேகலையைத் தமிழோடு ஒப்பிட்டுள்ளார்.

“நீர்க்கும் உணவுக்கும் கையேந்தி நிற்கின்றார்
யார்க்கும் தமிழ்வேண்டும் என்றேற்றார்” (8)

மணிமேகலையின் மூலம் தமிழின் மேன்மையை எடுத்துரைக்க முயன்றுள்ளார். தமிழைக் கற்று அறியாதவர் அறிவில்லார் என்னும் பொருளில் இப்பாடலை இயற்றியுள்ளார்.

“அந்தமிழ் இல்லார் அறிவில்லார் அன்னவர்க்குக்
குந்தக் குடிசை குடிக்கக்கூழ் - கந்தை
அடைய விடாரே அறிவின் இடையார்
அடையவிப்பார் முற்றுணர்ந் தார்” (9)

தமிழிலக்கியம் கண்டவர்க்கே உணர்வு வரும். ஆகவே அம்மொழியை எவ்விதமான தடையுமின்றி கற்று உணருங்கள் என்னும் பொருளில்,

“- தடையின்றி
வெள்ளத் தமிழின் இலக்கியம் வேண்டினோர்க்
குள்ளத் துணர்வு வரும்” (10)

இப்பாடலை இயற்றியுள்ளார். ஆகவே மக்கள் தமிழ்கற்று அறிவுநெறியோடு புகழப்படுதல் வேண்டும் என்று தமிழ்மொழியின் மேன்மையை மக்களுக்கு எடுத்துரைப்பதாகவும் படைத்துள்ளார்.


முடிவுரை

பாவுக்கு வேண்டுவன பொருட்சுவையும்,சொற்சுவையுமாகும். இத்தகையப் பொருட்சுவை,சொற்சுவையோடு கவிதையை இயற்றியது மட்டுமின்றி தன்கருத்தை உணர்வோடு எடுத்துரைக்கும் களமாகவும் பாரதிதாசன் தன் மணிமேலை வெண்பாவைப் படைத்துள்ளார். மேலும் 19ஆம் நூற்றாண்டில் மூல மணிமேகலையை அடியொற்றி இந்நூல் படைக்கப்பட்டிருப்பினும் எல்லோருக்கும் புரியக்கூடிய எளிய நடையில் இந்நூலின் பாக்களை யாத்துள்ளார். அது மட்டுமின்றி ஒரு இலக்கியத்தை ஆசிரியர் விரும்பினால் எந்த பா வடிவிலும் எழுதலாம் என்ற கருத்தினை இக்காப்பியம் மூலம் அறியலாம்.

அடிக்குறிப்புகள்

1. பாரதிதாசன், மணிமேகலை வெண்பா முன்னுரை ப.2

2. அ.கி.பரந்தாமனார், கவிஞராக ப.44

3. சீத்தலைசாத்தனார், மணிமேகலை

4. பாரதிதாசன், மணிமேகலை வெண்பா 131 ப.72

5. மேலது 132 ப.73

6. மேலது 169 ப.91

7. மேலது 267 ப.143

8. மேலது 204 ப.141

9. மேலது 265 ப.142

10. மேலது 266 ப.143

(குறிப்பு: இக்கட்டுரையினைச் சிறப்பாக்க கட்டுரையாசிரியர் ‘துணை நூல் பட்டியல்’ அளிக்கலாம். ஆசிரியர்)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/general/p176.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License