இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

நாஞ்சில் நாடன் படைப்புகளில் வாழ்க்கை அனுபவம்

ம. இராமநாதன்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, ஆத்தூர் - 636121.


முன்னுரை

ஒரு படைப்பாளியின் மனம் கதையை நோக்கியப் பயணமாக இல்லாமல் அதாவது கதையை எப்படி வெளியிட வேண்டும்? கதாப்பாத்திரத்தின் இயல்புகளை எப்படிக் கட்ட வேண்டும்? கதைக்காளம் எப்படி வார்க்க வேண்டும்? என்றெல்லாம் முன் கூட்டியேத் திட்டமிடாமல் எழுதத் தொடங்கும் போது மனதில் தோன்றும் அனுபவங்களைப் போகிறப் போக்கிலேயே அள்ளித் தெளிக்கிற அனுபவப் பதிவுகள் நாஞ்சில் நாடன் கதைகளில் மிக ஏராளம். இந்தக் கதைக்கு இது தேவை, அது தேவையில்லை என்கிற பாரபட்சமின்றி அனுபவங்களையும், தனது வாசிப்பு வழி கிடைத்த அல்லது பெற்றிட்ட சிந்தனைகளை கதைகளில் வெளியிட முன் வருவதென்பது ஒரு படைப்பாளனின் மிகப்பெரியத் துணிச்சல் என கருத இடமுள்ளது.

தமிழில் சங்ககாலம் முதல் நவீன இலக்கியங்கள் வரை வாசித்த அனுபவங்களைக் கதைகளில் பகிர்ந்தளிக்கிறார். கதைக்கு ஏற்ற பொருண்மைகளில் அவரது வாசிப்பு அனுபவத்தையும் தன் மனதுள் சேமித்து வைக்கப்பட்டச் சிந்தனைகளையும் பதிவு செய்வதைப் பெரும்பான்மையான கதைகளில் அறியமுடிகிறது. இடையிடையேத் தனது சுய அனுபவங்களையும் பதிவு செய்கிறார்.

சுய அனுபவங்கள் பலமாக, பலவீனமாக என்ற கேள்விகளை ஒருபோதும் கேட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. இது போன்ற அனுபவங்களைத்தான் கதைகளில் பயன்படுத்தப் போகிறோம் என்ற எந்த முன்னேற்பாடும் செய்து கொண்டதாகக் கருதமுடியவில்லை.

கதையோட்டத்தோடு மனதில் தோன்றும் அனைத்தும் தணிக்கையில்லாமல் வெளியிடும் துணிச்சல் மிகுந்தவராகவேத் தன்னை காட்டிக் கொள்கிறார் என்று அறியமுடிகிறது. கதைகளின் இடுக்குகளில் வரும் தகவல்கள் அறிவிப்பா? அறிவுறுத்தலா? தத்துவமா? என்று ஆராயாமல் கால்போன போக்கில் செல்வது போல், கதை போகிற போக்கில் பல சிந்தனைகளைக் கதைகள் தோறும் தெளிக்கிறார்.

ஒருவேளை அந்தச் சிந்தனைக்கள் அவரது மனக் குமுறலாக இருக்கலாம். சமூகத்திற்குக் சொல்ல வந்தப் பிழிவாக இருக்கலாம் அல்லது எதிர்காலச் சமூகத்தைத் தட்டி எழுப்பும் தூண்டலாக இருக்கலாம். ஆனால் தூண்டல்களைத் தொடர்ந்து பதிவு செய்து கொண்டே வருகிறார்.

பொதுவாகப் படைப்பாளன் என்பவன், சமூகத்தைத் தொடர்ந்து தூண்டிக் கொண்டே இருப்பவன். படைப்பாளனின் தூண்டல் இருந்தால்தான் சமூகம் ஒரு நிலையானப் பண்பாட்டுக் கலாச்சார உறவு நிலைகளோடு இயங்கிக் கொண்டிருக்கும். இல்லையெனில், தனது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் நட்டாற்றில் விட்டுப் புதுமைக்குப் புலம்பெயர்ந்து தறிகெட்டு ஓடிவிடும் என்ற பொறுப்புணர்வு எல்லாப் படைப்பாளனுக்கும் உண்டு.

புதுமைகளைப் புறந்தள்ள முடியாதெனினும் பழமைகளை புறந்தள்ள நினைத்தால் ஒரு சமூகம் தடம் தெரியாமல் தரைமட்டமாகும் என்ற சிந்தனை படைப்பாளன் மனதுள் தொடர்ந்து ஒடிக்கொண்டிருக்கும். அதன் அடிப்படையில்தான் படைப்பாளனின் எழுத்துப்போக்கும் இருக்கும் எனக் கருத இடமுள்ளதாகக் கருதப்படுகிறது.

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நமது பண்பாட்டையும், பாரம்பரியத்தையும், தொன்மையையும் நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டியக் கட்டாயம் நமக்குரியது என்ற உயரிய நோக்கோடு நாஞ்சில்நாடன் கதைகள் வழித்தடம் செய்திருக்கிறார் என்று ஆராய முடிகிறது.


வாழ்க்கை அனுபவம்

பொதுவாக இலக்கியம், அறிவித்தல், அறிவுறுத்தல், மகிழ்வித்தல் ஆகியப் பணிகளைச் செய்வதாகச் குறிப்பிடுவர். நாஞ்சில் நாடனும் மிகுதியான இடங்களில் கதையுடன் தொடர்பில்லாதச் சமூக விழிப்புணர்வை எற்படுத்தக் கூடிய இலக்கியம் சார்ந்த அல்லது சாராத பாமர மக்களும் புரிந்துக் கொள்ளக்கூடியச் சிந்தனைகளைப் படைப்பின் இடையே கையாண்டுள்ளார்.

கதைகளின் ஊடே அறிவுறத்தும் பெருபாலானத் துணுக்குகள் வலிந்து வந்து சேர்க்கப்படாமல் உரிய இடங்களில் இயல்பாகச் சேர்த்துள்ளமை படைப்பாளனின் கைதேர்ந்த நேர்த்தியைச் சுட்டுகிறார்.

படைப்பு ஒரு குறிக்கோளினை நோக்கிச் செல்கையில் படைப்பாளியின் அறிவுறுத்தல் பண்பு, மற்றொரு துணைமை குறிக்கோளை நோக்கிப் பயணப்படுவதை மிகத்தெளிவாகக் காணமுடிகிறது. அது சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற உத்தியை நினைவூட்டுவதாக அமைகிறது.

‘பேய் கொட்டி’ கதையில்

“தானாக தவறு செய்தால் மனம் பொறுக்கும். பிறரால் வலிந்து தவறு செய்யும்போது மனம் சஞ்சலப்படும். திட்டமிட்ட தவறை ஒருவன் ஏற்க முடியும். சந்தர்ப்ப சூழ்நிலையால், செய்த தவறுக்கு தவறை செவித்ததே காரணம்” (1)

எனும் கருத்து வழி, தவறுகள் பிறர் தூண்டுதலால் பெரும்பாலும் நடப்பதை அறிவுறுத்துகிறார்.

சுத்தமான உணவுகளை உண்டு உடற்பயிற்சி செய்து, நோயில்லாமல் வாழ வேண்டும். ஒரு வேளை நோய்க்கு ஆளாகிவிட்டால் கவலைபடக் கூடாது என்றக் கருத்தை ‘வந்தான் வருவான் வாரா நின்றான்’ என்ற கதையின் வழியில் கூறுகையில்,

“இந்த நோயினால் செத்துப் போகத்தான் வேண்டும் என்றால் கவலைப்பட்டுப் பயனில்லை. காசுப்போவதில்லை என்றால் எதற்காகக் கவலைப்படவேண்டும்” (2)

என்று நோயைப் பற்றிய நோக்கு நிலையை அறிவுறுத்துகிறார்.

மனித மனம் இக்காலத்தில் சுயநலம் கொண்ட வக்ர நிலையில் இருக்கிறது. இந்நிலை மாறவேண்டும். மனதில் உறவுகள் ஒற்றுமையுடன் விட்டு கொடுக்கும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்பதை,

“மனமிருந்தால் புளியிலையில் கூட
புரண்டு படுக்கலாம்” (3)

என்று குறிப்பிடுகிறார்.


‘படுவப்பத்து’ கதையில் சாதிய அறிவுறுத்தல்களையும், சமூக ஏற்றத் தாழ்வுகளையும் குறிப்பிடும் போது விளிம்புநிலை மாந்தர்கள் நற்பண்பு உள்ளவராகச் சுட்டிக்காட்டுகிறார். சான்றாக,

“எந்தசாதி தெய்வமானாலும் தெய்வம் தெய்வம்தான்” (4)

என்று தெய்வத்தில் வட சாதி பார்ப்பதையும்,

“பிறர் பொருளை ஏழைகள் வஞ்சிப்பதில்லை” (5)

என்ற சிந்தனை வழி அடித்தட்டு மக்களின் பண்புகளைச் சுட்டிக்காட்டுகிறார்.

சாதி மத பேதம் பார்க்காத தலைவர்களைப் பிற்காலத்தில் அந்தந்த சாதியினர் சாதியத் தலைவர்களாக மாற்றி தலைவர்களின் பெருமைக்குக் களங்கம் விளைவிக்கிறார்கள் என்ற கருத்தை அறிவுறுத்துகிறார். இதனை,

“சாதிமத பேதமற்ற தலைவர்கள் சுட்ட அரசியலில் பகடைக் காய்” (6)

எனும் கருத்து வழி சுட்டுகிறார்.

இந்திய நாட்டில் பெரும்பாலானப் பகுதிகளில் வசிக்கும் நேபாளிகள் குடும்ப உறவுகளைப் பிரிந்து நாள் முழுவதும், மாதம் முழுவதும் வேலை, சிறிய அறை எனும் சிறை என்றெல்லாம் சுட்டிக் காட்டும் கதையாசிரியர் அவர்களின் நிலையை

“உடல் தேவைகள் மறுக்கப்படுவது நோபாளிகளின் வாழ்க்கைச் சூழல்” (7)

என்று விளக்குகிறார்.

சமூகத்தில் எவ்விதத்திலேயோ நாம் கட்டுப்பட்டு விடுகிறோம், அது மாறாது காலகாலமாக மேலதிகாரிகளின் நற்பெயர் பெறப் பழக்கப்பட்ட நம் கொத்தடிதைத்தனம் மாறாது என்பதை

“உதவியாளன் போற்றியே போற்றி என அடியெடுத்து உலா, கலம்பகம், அந்தாதி, பரணி பிள்ளைத்தமிழ் ஆகியவை பாடியிருப்பான்” (8)

என்று அறிவுறுத்துகிறார்.

மொழியை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் அவல நிலையை

“மொழி முக்கித் கொண்டும் முனங்கிக்கொண்டும் பெருமூச்சு விட்டபடி ஆட்சியாளர் பிடியில் சிக்கிக் கொண்ட முனகலுடன்” (9)

என்று ‘செம் பொருள் அங்கதம்’ கதை வழி அறிவுறுத்துகிறார்.

வாழ்க்கையில், அழகு என்பது அகமா? புறமா? எனும் போது அகமே அழகு என்பதை,

“வாழ்க்கை ஆடையிலும் அணிகலனிலும் உண்பதிலுமில்லை… … ... அகம் பிரகாசமாக இருந்தால் போதும்” (10)

என்று ‘கோம்பை’ கதை வழி அறிவுறுத்துகிறார்.


தூயக்காற்று களவாடப்பட்டுவிட்டது. இருக்கிற மரத்தையாவது பாதுகாப்பது சிறப்பு. ஆனால், உதிர்கிற இலைகளைப் பெருக்க உடல் வளையாததால் மரங்களை நகரவாசிகள் வெட்டுகிறார்கள் என்பதை,

“முடி உதிருகிறது என்பதற்காக தலையை வெட்டும் அறிவாளிகள்” (11)

என்ற சிந்தனை வழி மரம் தலைமையானது என்ற கருத்தினை வலியுறுத்துகிறார்.

பண்பாடு என்பது அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது . இதனை நாஞ்சில் நாடன் தனது அனுபவத்தில் கூறுகையில்,

“பண்பாடு நகர்ந்து, ஊர்ந்து, நடந்து இப்பொழுது ஓடிக் கொண்டிருக்கிறது தலைதெறிக்க” (12)

என்ற ‘ஐயம் இட்டு உண்’ சிறுகதை வழியாக அறிவுறுத்துகிறார்.

‘பெருமை’ என்பது பொருளாதர, சாதிய அடிப்படையில் உருவாவது அல்ல அது அவரவர் மனவோட்டத்திற்கு ஏற்ப ஆழ்மணத்தின் உணர்வாகும். அந்த உணர்வுக்கு. உயர்வு. தாழ்வு. சாதி மத பேதம், ஆண்டான் அடிமை போன்ற சிக்கல்களுக்கு அப்பாற்ப்பட்டது என்பதை அறிய முடிகிறது. அதனைப் புலப்படுத்த

“அனாதை என்பதால் எந்நேரத்திலும் சாப்பிடுவார் என்பதல்ல பொருள், “கஞ்சியானாலும் உரிய நேரத்தில் உண்பது ஊசி போனதை கிடைக்கும் போதல்லாம் உண்பதல்ல” (13)

என்று அறிவுறுத்துகிறார்.

அடிப்படைச் சுதந்திரத்தைப் பற்றி பேசும் நாம்

“கருத்துச் சுதந்திரம் என்று பேசினால் ஊரில் நடமாட முடியாது” (14)

என்று ‘ஐயமிட்டு உண்’ கதைவழி புலப்படுத்துகிறார்.

இதே கதையில் நதிகள் வறண்டு போனதற்கு, நாம்தான் காரணம்,

“குடிநீர் சாக்கடையாகும் பஞ்சமா பாதம்” (15)

நடந்தேறி வருகிறது, அது சரி செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

சான்றெண் விளக்கம்

1. நாஞ்சில் நாடன் சிறுகதைகள், ப.387

2. மேலது, 402

3. சூடிய பூ சூடற்க, ப.11

4. மேலது, 61

5. மேலது, 58

6. மேலது, 80

7. மேலது, 85

8. மேலது, 102

9. மேலது, 103

10. கான் சாகிப், ப.42

11. மேலது, 118

12. சூடிய பூ சூடற்க, 42

13. கான் சாகிப், ப.47

14. மேலது, 44

15. மேலது, 72

(குறிப்பு: சான்றெண் விளக்கத்தில் குறிப்பிடப்படும் நூல், ஆசிரியர் பெயருடன் வெளியிட்ட பதிப்பகம், ஊர், பதிப்பாண்டு போன்றவைகளையும் சேர்த்துத் தந்தால் கட்டுரை மேலும் சிறப்பாக அமையும் - ஆசிரியர்)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/general/p180.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License