இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

தோல் புதினத்தில் சாதிய விதிகள்

பி. வித்யா
முனைவர் பட்ட ஆய்வாளர்,
மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி, தஞ்சாவூர்.


முன்னுரை

மனிதர்கள் யாவரும் சமம் என்று பெரியோர்கள் பலர் கூறினாலும், அவை நடைமுறையில் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படாத ஒன்றாகவே உள்ளது. அனைத்து மனிதரும் ஒரே இனம்தான் என்ற கொள்கையை விடுத்து,தொழிலால் அமைந்த சாதிய வேறுபாடுகளுக்குள் சிக்கி, ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் குறைவாக எண்ணும் மனப்போக்குக்கு உத்வேகம் அளிப்பது இந்தச் சாதி முறையே ஆகும். இத்தகைய சாதி முறைகள் தொழிற்முறைப் பிரிவினைகளாகத் தோன்றி, தனது உருவத்தை மாற்றியது இந்தியாவில் தான் என்று மானுடவியலாளர்கள் தம் கருத்தை வெளியிட்டுள்ளனர். இவற்றை அடிப்படையாகக் கொண்டு தோல் புதினத்தில் காட்டப்பெறும் சாதிய விதிகளை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

சாதிய விதிமுறைகள்

சாதிய முறைகள் காலங்காலமாக பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்து வந்தாலும், அவை சிற்சில மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறதே தவிர, அவற்றின் வேர் அழியவில்லை. சமூகத்தால் தாழ்ந்தவர் என்று கருதப்பட்டோருக்கு கடைகளில் தேங்காய் கூடுகளான மட்டைகளில் நீர், ஆகாரம் போன்றவை வழங்கப்பட்டு வந்துள்ளது. அவை கண்டிப்புக்கு உள்ளானதும், இரு குவளை முறை உருவானது, இவை கண்டிப்புக்கு ஆட்பட்டதால் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் குவளைகள் அறிமுகமானது. இவ்வாறாக சாதிய எதிர்ப்பு வலுக்கும் இடங்களில் அவை மாற்றம் பெறுகிறதே அல்லாமல் தீர்வுகள் கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இவ்வகையான சாதி குறித்து பக்தவத்சல பாரதி, “சாதி என்பது சமுதாய அமைப்பில் இயங்கும் ஒரு தனிப்பட்ட குழுவைக் குறிக்கும். இக்குழுவில் இடம்பெறும் தகுதி பிறப்பால் அமைகிறது. அதனால் ஒரு சாதியில் பிறந்தவர் வேறு சாதிக்கு மாற இயலாது” (1) என்று பண்பாட்டு மானுடவியல் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

மேலும் சாதிய முறைகள் வலுவான விதம் குறித்து நா. வானமாமலை, “கிராம வாழ்க்கையில் பன்னெடுங்காலமாக வேலைப்பிரிவுகள் முறைப்படுத்தப்பட்டு ஜாதிப்பிரிவினைக்குள் இறுக்கமாக அடைத்து வைக்கப்பட்டது” (2) என்று தமிழர் வரலாறும் பண்பாடும் என்ற நூலில் குறிப்பிடுகிறார். சாதிய ஏற்றத்தாழ்வு ஆகிய இத்தகைய பிரிவினைகள் மக்களைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து அவர்களைக் கூறுபோட்டு விடுகிறது. இத்தகைய பாகுபாடுகள் மக்கள் மனிதாபிமானமற்ற நிலையில் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடவும் தூண்டுகோலாக அமைகிறது. இம்முறை பல்வேறு விதமான விதிமுறைகளையும் வகுத்து மக்களுக்கு இடையில் உத்தப்புரத்தில் அமைக்கப்பட்டது போன்ற சுவரினை உருவாக்கிவிடுகிறது. இவற்றில் சில மாற்றத்திற்கு உள்ளானாலும், சில வடிவங்களை மாற்றி உலவிக் கொண்டுதான் இருக்கின்றது. இவற்றில் தோல் புதினம் காட்டும் விதிமுறைகள் பின்வருமாறு:

1. மேல் வகுப்பினருக்கு மாpயாதை

2. தெருவுக்குள் அனுமதியின்மை

3. கோயிலுக்குள் அனுமதியின்மை

4. தாழ்வுக்குள் தாழ்மை

5. தீண்டத் தகுதியின்மை

என்று இவை தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கான விதிமுறைகளாகக் காணப்படுகின்றன.


1.மேல் வகுப்பினருக்கான மரியாதை

மேல் வகுப்பினரை எங்காவது பார்க்க நேர்ந்தால் தனது தலைத்துண்டை அவிழ்த்து விட வேண்டும் என்பது நெடுங்காலமாக நடைமுறையில் இருந்துவந்த எழுதப்படாத விதியாகும். இதனை நூலாசிரியர் தமது தோல் புதினத்தில்,“சேரி வாலிபன் தனது தலைத்துண்டை அவிழ்த்துக் கக்கத்தில் இடுக்கிய வண்ணம் தொண்டனிடப் போனான்” (3) என்று காட்டுகிறார்.

இவ்வாறாக மேல் வகுப்பினருக்கு மரியாதை செலுத்த வேண்டியது கீழ் வகுப்பினரின் கடமை என்றானது. அதோடு கூட மேல் வகுப்பினர், தன்னைவிட வயதில் குறைவானவராய் இருந்தாலும் காலில் விழும் வழக்கத்தை கண்டிக்கும் இடத்து டி.செல்வராஜ், “பெரியவரே ஒம்ம வயசு என்ன. எம் வயது என்ன, மனிசனை மனிசன் வணங்கப்படாதுய்யா” (4) என்று அவ்வழக்கத்தைச் சாடி நிற்கிறார்.

2. தெருவுக்குள் அனுமதியின்மை

மேல் வகுப்பினர் வசிக்கும் தெருவில் கீழ்வகுப்பினர் நடமாடக்கூடாது. அப்படி அவர்கள் நடந்து விட்டால் தெருவே தீட்டுப்பட்டு விடும் என்பதும், கீழ்வகுப்பினர் காலணி கூட அணியக்கூடாது என்பதும் போன்ற விதிமுறைகள் கூட ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையைச் சாடும் நூலாசிரியர், “ஊரணியிலே தண்ணி நெம்பிக் கிடக்குது. இடுகாட்டுக்குப் பெணத்தை எடுத்துட்டுப் போக வழி தெரியலை. மேல் சாதிக்காரவுக பொணத்தை மேலக்குடிக தெருவழியா கொண்டு போவப்படாதுண்டு மரிக்காவ ஒண்ணும் தோணாம சணமே கையப் பெசஞ்சிக்கிட்டு நிக்குவு மாஞ்சி போவுது” (5) என்று காட்டுகிறார்.

தெருவுக்குள் கீழ்வகுப்பினருக்கு அனுமதி கொடுக்காதவர்கள் இறந்து போன கீழ்ச்சாதிப் பெண்ணின் உடலுக்கு வழி விடுவார்களா? அதற்குத் தெய்வகுத்தம் என்றொரு போர்வையை ஏற்கனவே தயார் செய்திருந்தனர். இதனைக் குறித்து டி.செல்வராஜ், “பொணம் இந்த வழியாப் போனா, ஊரே தீட்டுப்பட்டுப் போகும். நாங்க கும்பிடுத சாமி எல்லாம் ஊரைவிட்டு ஓடிப் போயிரும் ஆத்தா எங்களையெல்லாம் பழிவாங்கிப் போடும்” (6) என்று ஏதேதோ காரணங்களைக் காட்டி கீழ்ப்பிரிவினரை ஒதுக்கி வைத்தனர்.

3. கோயிலுக்குள் அனுமதியின்மை

மேற்சொன்னவை மட்டுமல்லாமல் எல்லாருக்கும் பொதுவானவர் என்று பலரும் போற்றிய இறைவன் இருப்பதாகக் கூறப் பெறும் கோயில்களிலும் இவ்வகையான முறையினை எதிர்த்துப் பல்வேறு தலைவர்கள் போராடியதும் அனைவரும் அறிந்ததே. ஆயினும் இவ்வகையான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டதைத் தோல் புதினத்தில் நூலாசிரியர், “அபயம் நாடி பெரிய மூக்கனும், ராமாத்தாளும் அரங்கநாதர் கோயிலுக்குள் போக முடியாது. பஞ்சம ஜனங்களை எப்படிக் கோவிலுக்குள் அனுமதிக்க முடியும். கோவிலே தீட்டுப்பட்டுப் போகும்” (7) என்று மேல்வகுப்பினர் கூறுவதை ஆசிரியர் பதிவு செய்கிறார். இவ்வகையாக தீட்டு என்றும் புனிதமாக்குதல் என்றும் சாதிய விதிகளை வலுப்படுத்திய இடம் பெரும்பாலும் கோயிலாகவே இருந்துள்ளது.


5. தாழ்வுக்குள் தாழ்மை

சாதிப்பிரிவுகளில் தாழ்ந்தவர்களாய் கருதப்படுவோரும் தங்களுக்குக் கீழ் சிலர் என்று நினைத்துக் கொண்டு அதே விதிகளை அவர்கள் மேல் பயன்படுத்துதல் உண்டு. இவை இப்படியிருக்க ஒரே பிரிவுக்குள்ளும் தாழ்வு கொண்ட நிலையினை நூலாசிரியர், “அவன் பாண்டிச்சேரித் தங்கப் பறையன். அவளோ செத்த மாட்டைத் தின்னும் ஊருக்கெல்லாம் துட்டி சொல்லிப் போய், சுடலையைக் காக்கும் உள்லூர் சேரிப் பறைப்பெண். பாண்டிச்சேரிப் பறை ஜனங்களைப் பொறுத்தமட்டில், உள்ளூர் பறை ஜனங்கள் தீண்டப்படாதவர்கள்” (8) என்று காட்டும் போது ஒரே இனத்துக்குள்ளும் பிரிவினைகள் இருந்ததை உணர முடிகிறது.

மேலும் ஒரு இனத்தவர் இன்னொருவரைக் கீழாகப் பார்த்தலை, “சக்கிலிய முண்டைக்குப் பறத்தெருவுக்குள்ளே என்ன வேலை. எம்புட்டுத் தகிரியம் இருந்தா அம்ம பயவளை மொறை சொல்லிக் கூப்பிடுவா? அவளை அங்ஙனயே நிக்கச் சொல்லுங்கப்பா” (9) என்று தாழ்ந்ததாகக் கருதப்படும் இனத்துக்குள்ளும் காணும் பிரிவினைகளைக் காட்டிவிடுகிறார் நூலாசிரியர்.

மேலும் இத்தகைய விதிமுறைகள் கீழ்சாதியினராக கருதப்படுபவா;கள் மத்தியிலும் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிடுகிறது. இதனையும் நூலாசிரியர், “வண்டியைவிட்டு இறங்கிய சங்கரன் பாதையில் அனாதையாகக் கிடக்கும் பிணத்தைப் பார்க்க வந்தபோது “அய்யோ சாமி வராதீங்க. தீட்டுப் பட்டிருக்கும்” யாரோ சேரிக் கிழவன், தனது குரலின் உச்சத்தில் சங்கரனைப் பார்த்து ஓலம் வைத்தான்” (10) என்று காட்டுவதை நோக்க காலங்காலமாக மற்றவர்களிலிருந்துதள்ளி இருந்து அவர்களும் தங்களை அவ்வாறே எண்ணிக் கொள்ளப் பழகிவிட்டதை, “வாணாம் அம்பி அவங்க ஒன்னண்டை வரமாட்டாங்க. அய்யரண்டை எப்படி தீட்டுப்பட்ட சனங்க வரமுடியும் வழக்கத்தை எப்பிடி ஒடைக்க முடியும்” (11) என்னும் போது பிராமண இனத்தவர் அருகில் போய் நிற்பதே தவறு என விதி இருப்பதாக அவர்களே கருதிக் கொள்ளுதலும் புலனாகிறது.

6. தீண்டத் தகுதியின்மை

தீண்டத்தகாதவர்களாகக் கருதி மற்றுமொரு இனத்தாரின் வாழிடத்தையும் கூட ஒதுக்கி வைக்கும் அமைப்பு முறை இன்றும் பல கிராமங்களில் காணப்படுகிறது. இந்த அமைப்பு முறையினைக் கண்டிக்கும் விதமாக நூலாசிரியர், “எல்லா ஊர்களிலும் இருப்பது போலவே அந்த நகரத்திலும் சக்கிலியக்குடி, அதாவது முனிசிப்பல் ஸ்காவஞ்சர்கள் காலனி, நகரத்துக்கு வெளியே கிழக்குத் திக்கில் ஒரு ஒதுக்குப்புறமாக இருக்கிறது. அதாவது வடக்கே இருந்து வரும் வாடைக்காற்றும், தெற்கே இருந்து வீசும் தென்றல் காற்றும் ஊருக்குள் வரும் போது தீட்டுப்பட்டுவிடக்கூடாது என்கிற முன் கருதலோடு சக்கிலியக்குடி ஒதுக்கப்பட்டிருக்கிறது” (12) என்று பதிவு செய்கிறார்.

இவற்றோடு தீண்டாமையை எதிர்த்து முன்னேறுபவர்களையும் தண்டிப்பதற்குச் சமூகம் தயாராய் இருப்பதையும் உணர்ந்துகொள்ள முடிகிறது. இதனை நூலாசிரியர்,“பரிகாரம் என்ன பரிகாரம். இந்த அக்ரஹாரத்தையே தீட்டுப்படுத்திய குடும்பம் சுந்தரேச அய்யர் குடும்பம் இந்த அக்ரஹாரத்தில் இருக்கப்படாது. தீட்டுப்பட்டுப்போன இந்த பூமியை நாங்கள் பரிகாரம் செய்து சுத்தப்படுத்திக்கிறோம்” (13) என்று அவர்களுக்கும் எதிர்ப்பு வலுப்பதைக் காட்டுகிறார்.

இவ்வாறாகத் தீண்டாமை என்னும் விதியின் கீழ் சில பிரிவினரை அடக்கி வைத்திருக்க எல்லாவகை முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதை உணர முடிகிறது.


முடிவுரை

இவ்வாறாக மேல் வகுப்பினருக்கு மரியாதை கொடுத்தல், தெருவுக்குள் அனுமதிக்கப்படாதிருத்தல், கோயிலுக்குள் நுழையவிடாதிருத்தல், தாழ்வுக்குள் தாழ்மை, தீண்டத் தகுதியின்மை என்று இம்மாதிரியான விதிகள் மேல் வகுப்பினரின் செல்வாக்கைத் தொடர்ந்து காப்பதற்கும், தன் அதிகாரத்தைத் தொடர்ந்து காட்டுவதற்கு அரணாகவும் பயன்பட்டு வந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இவற்றை வேரோடு அகற்றுதல் அவசியமாகும். ஆகவே இம்மாதிரியான விதிகள் அகற்றப்படுதலும் அதனை எதிர்த்து மக்கள் வீறு கொண்டு எழுதலும் அவசியமாகும். மக்கள் அனைவரின் ஒத்துழைப்பே இதற்கான தீர்வாகும். அதிலும் முக்கியமாக இளைஞர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். இவற்றோடு மக்களின் கட்டப்பட்டுள்ள சுவர்கள் உடைபட வேண்டும்.

அடிக்குறிப்புகள்

1. பக்தவத்சல பாரதி, பண்பாட்டு மானுடவியல், ப 314

2. வானமாமலை.நா., தமிழக வரலாறும் பண்பாடும், ப.120

3. செல்வராஜ்.டி,தோல், ப.96

4. மேலது,ப.105

5. மேலது, ப.97

6. மேலது,ப.108

7. மேலது, ப.325

8. மேலது, ப.21

9. மேலது, ப.181

10. மேலது,ப.104

11. மேலது,

12. மேலது, ப.185

13. மேலது, ப.120.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/general/p181.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License