இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

கு. அழகிரிசாமியின் சிறுகதைகளில் உளவியல் சிக்கல்கள்

முனைவர் அரங்க. மணிமாறன்
முதுகலைத் தமிழாசிரியர்,
அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, செங்கம்-606701.


முன்னுரை

மனித மனம் வினோதமானது. பல்வேறு நேரங்களில் வெவ்வேறு விதமாகச் செயல்படக்கூடியது. ஒருவன் மற்றவா் மீது அன்பு, வெறுப்பு, பொறாமை, அதீதப்பற்று ஆகியவை கொள்வதற்கு அவனது மனவியலே அடிப்படையாக அமைகிறது.

மனித மனத்தின் பரிமாணங்களை ஆராயும் உளவியல் இன்றைய ஆராய்ச்சிக் கூறுகளுள் ஒன்றாகத் திகழ்கிறது.

உளவியலாளா்கள் மனித மனம் ஒரு பனிக்குன்றுப் போன்றது. அதன் ஒரு பகுதிதான் வெளிப்படையாகத் தோன்றி, வெளிமனமாக இருக்கிறதென்றும், மற்றொரு பகுதி மறைந்து நின்று மறைமனமாக இருக்கிறதென்றும் அவா்கள் விளக்கம் கூறுகிறார்கள் என்கிறார் பெ.துாரன். (1)

உளவியல் எனும் சொல் கிரேக்க மொழி சொற்களான ஸைக்கி என்ற உயிரையும், லோகஸ் எனும் அறிவியலையும் குறிக்கும் சொற்களின் கூட்டிணைவாகும். ஆன்மா, மனம் பற்றி ஆராயும் இது நடத்தையியல் தற்காலத்தில் வழங்கப்படுகிறது.

உளவியல் என்பதனைத் தற்காலத்தில் நடத்தை மற்றும் அனுபவத்தை அறிவியல் முறையில் ஆராயும் ஒரு பிரிவாகக் கொள்கின்றனா். உளவியல் மனித மூளை அதன் சிந்தனை, புறநிலை ஆகியவற்றோடு தொடர்puடையதாக உள்ளது.

மனிதனின் புறச்செயல்களை உற்றுநோக்கி, முறையாக ஆராய்ந்து அதன்மூலம் அவை எங்ஙனம் அகத்தே நிகழும் சிந்தனை ஓட்டங்களுடன் தொடா்பு கொண்டுள்ளன என்றும் புறநிலைகளால் ஏற்படும் நிகழ்வுகளால் எவ்வாறு பாதிப்படைகின்றன என்பதையும் விளக்குவதே உளவியலாகும் என்கிறார் கி.நாகராஜன்.(2)

இத்தகைய உளவியல் சார்ந்த சிக்கல்களை கு.அழகிரிசாமியின் சிறுகதைகளின் வழி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

இரவு நேரத்தின் குணம்

மனித மனம் தனிமையில் இருளில் எந்த தீமைகளையும் செய்ய துணிகிறது. அதற்குக் காரணம் இரவு இருள் நிறைந்தது. கொலை, கொள்ளை, களவு, விபச்சாரம் போன்ற தீமைகள் இரவிலேயே தடையின்றி நடக்கின்றன.

இரவு சிறுகதையில் இளம்வயது நண்பா்கள் கூடிப் பேசிக்கொள்கின்றனா். இரவுக்கென்று தனிப்பட்ட குணம் உள்ளதாகவும், பகலில் ஒரு பொருள் பற்றி தோன்றும் எண்ணத்திற்கும், இரவில் அதே பொருள் பற்றி தோன்றும் எண்ணத்திற்கும் வேறுபாடு உள்ளதாகவும் கூறுகின்றனர்.

இரவு வந்ததும் தனிமையின் துணிவோடு மனம் கெட்ட எண்ணங்களை எண்ணுகிறது. உலகம் இருண்டதும் மனிதன் துணிந்துவிடுகிறான். எந்தக் கெட்ட காரியத்திற்கும் இரவு ஆதரவாகத்தான் இருக்கிறது.(3) என்று இரவின் உளவியல் ஆற்றலை வெளிப்படுத்துகிறார் கு. அழகிரிசாமி.


ஆண் பெண் நேசத்தில் வேறுபாடு

திருமண வயதில் ஓா் ஆண், தான் பார்க்கும் எந்தப் பெண்ணையும் அவள் தனக்கு மனைவியாக வருவாளா என எண்ணிப்பார்க்க முடியும். ஆனால் ஒரு பெண் அப்படி நினைக்க முடியாது. சமுதாயம், கட்டுப்பாடு, கற்பு ஆகிய காரணிகள் அதற்குக் காரணம்.

ஏமாற்றம் சிறுகதையில் நாயகன் கிருஷ்ணமூர்த்தி, திருமணத்திற்குப் பின் பழைய நினைவுகளை அசைபோடும் போதுதான் அவளைப் பால்ய வயதிலிருந்தே விரும்பி வருவதாகக் கூறுகிறான். ஆனால் அவன் மனைவி லஷ்மியோ மூன்றாம் வருடம் சந்தித்தபோதுதான் விரும்பியதாகக் கூறுகிறாள். இது அவனுக்குப் பெருத்த அவமானமாகிவிடுகிறது.

“வீட்டுக்கு அப்பாவையோ அண்ணணையோ தேடிக்கொண்டு வருபவர்களுக்கு நான் பதில் சொல்லநேரிடும்போது வரக்கூடியவர்களெல்லாம் உங்களைப்போல மனப்பரவசத்துடன்தான் பேசுவார்கள்” (4)

திருமணத்திற்கு முன் எல்லா வாலிபர்களுக்கும் ஏற்படும் பரவசமே கிருஷ்ணமூர்த்திக்கும் ஏற்படுகிறது. ஆனால், பெண்ணுக்கு ஆணின் மீது நம்பிக்கை உருவான பிறகுதான், பெற்றோரின் சம்மதத்திற்குப் பிறகுதான் நம்பிக்கையும் காதலும் வரும். அதுவன்றி எல்லா ஆடவரையும் கண்டவுடன் தன் கணவனாக நினைத்துப் பரவசப்பட முடியாது என்ற உளவியல் கருத்து இக்கதையில் வெளிப்படுகிறது.

குழந்தை உளவியல்

பெரியவர்களை விடக் குழந்தைகள் வேறுபாடு கருதாதவர்கள் மாசுமறுவற்றவர்கள். தன்மீது அன்புகொண்டவர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள். கல்வி, பதவி, வயது, புகழ் ஆகியவற்றாலும் உயர்ந்தவர்களானாலும் குழந்தைகளுக்கு அது பெரிதில்லை.

அன்பளிப்பு கதையில் பல குழந்தைகளோடு நாயகன் நட்புக் கொள்கிறான். அக்குழந்தைகளுக்குப் புத்தகங்களைப் பரிசளிக்கிறான். சாரங்கன் என்ற சிறுவன் மட்டும் வால்ட் விட்மனின் கவிதைத் தொகுப்பைக் கேட்கிறான். அவனால் இச்சிறு வயதில் புரிந்து கொள்ளமுடியாது எனக்கருதி நாயகன் தரமறுக்கிறான். அதனால் சிறுவன் கோபித்துக் கொள்கிறான். தன் தோழி ஒருத்திக்கு உடல்நலமிலாதபோது நாயகன் சென்று பார்த்து வந்ததைப் போல தன் வீட்டிற்கும் வரவேண்டும் என்கிறான்.

நாயகன் தன் நட்பு குழந்தைகளுடன் மட்டுமே. அவர்களின் பெற்றோர்கள் என்ன நினைப்பார்களோ என எண்ணி மறுக்கிறான்.

“எங்கள் வீட்டுக்கும் வாருங்கள் என்று கையைப்பிடித்து இழுத்தான்.

உங்கள் வீட்டிற்கு எதற்கு?

பிருந்தா வீட்டிற்கு மட்டும்?

பிருந்தாவிற்கு ஜீரம் அதனால் போய்ப்பார்த்து வந்தேன்.

ஊஹீம்.. எங்கள் வீட்டுக்கும் வரவேண்டும். ஆமாம்” (5)

பணக்காரக் குழந்தையின் வீட்டிற்குச் சென்றவன் ஏன் தன் வீட்டிற்கு வரவில்லை? அனைவருக்கும் புத்தகம் தந்தவன் தனக்கு ஏன் தரவில்லை? என்பது சாரங்கன் வாதம்.

நட்பு குழந்தைகளோடு மட்டுமே. அவர்களின் குடும்பத்தாரோடு இல்லை என்பது நாயகனின் பார்வை.

குழந்தைகள் அன்பு வைத்துவிட்டால் பேதம் பார்க்கமாட்டார்கள் என்ற உளவியல் சிக்கல் இக்கதையில் விடுவிக்கப்பட்டுள்ளது.


மனம் எனும் புதிர்

மனித மனம் எப்போதும் தன்னுள் ஏதோ ஒரு பாதிப்பையோ, நிகழ்வையோ மனதில் வைத்துக்கொண்டு சமயம் வாய்க்கும்போதெல்லாம் அதன் பாதிப்புகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்.

அழகம்மாள் சிறுகதையில் வாழ்ந்து கெட்டவரான கிருஷ்ணக்கோனாருக்கு உறவுமுறைப் பெண்ணான அழகம்மாளைத் திருமணம் செய்து வைக்கின்றனர். மகன் வளர்ந்து மதுரையில் கல்லூரியில் படிக்கிறான். விடுமுறைக்காக அவன் வரும்போதெல்லாம் தாயும் தந்தையும் ஒருவரோடு ஒருவா் சண்டையிடுகின்றனர். மற்ற நேரங்களில் இயல்பாக இருப்பவர்கள், தான் ஊருக்கு வரும்போதுமட்டும் ஏன் சண்டையிடுகின்றனர் என வேதனைக் கொள்கிறான்.

கறிச்சோறு போடும் போது அவனிடம் கொஞ்சம் கறிவிட்டுச் சாப்பிடேன் எனக்கூற இதைக்கேட்ட அழகம்மாள் நான் செய்ததும் செய்யாததும் அந்த அவிஞ்ச கண்ணுக்குத் தெரியப் போகிறதா? (6) என்றுச் சொல்லி மனதை நோகடிக்கிறாள்.

தற்போது தன் மகனின் மோகன வடிவையும், அவனது வளர்ச்சியையும் ஊரார் அவனை மதிப்பதையும் கண்டு தன்வாழ்வு இந்த ஊதாரியிடம் பறிபோனதை எண்ணி வேதனைக் கொள்கிறாள். அதன்வெளிப்பாடே எரிந்து விழுவதும் கண்டையிடுவதும் என்று உளவியல் சிக்கலை விடுவிக்கிறார்.

கௌரவச் சண்டை

நல்லவள் சிறுகதையில் வித்வான் வீட்டில் குடியிருக்கிறாள் ஜெயா. வித்வானின் மனைவி ராஜேசுவரி தன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஜெயாவிடம் சிறுசிறு கடன் வாங்குகிறாள். சில நேரங்களில் அவர்களோடு காரணமின்றிச் சண்டையிடுகிறாள். கோபமாக பேசுவதும் தன் மகளை அவர்கள் வீட்டிற்கு போகாதே என்று திட்டி அடிப்பதும் தொடர்கிறது.

“ராஜேசுவரி அப்பறம் எனக்கு ஆராய்ச்சிக்குரிய விஷயமாவே மாறிவிட்டாள். கடன்கொடுத்த தினத்தில் சண்டைக்கு வருவாள். கையில் பணம் இருக்கும்போது அன்பில் உயிரையேக் கொடுக்கச் சித்தமாக இருப்பாள். இவளை நல்லவள் என்று எப்படி சொல்லாமல் இருப்பது?” (7)

தன்வீட்டில் குடியிருப்பவளிடம் தான் கடன்வாங்குவதால் தன்னை அவள் ஏளனமாக நினைத்துவிடக்கூடாது என மான உணர்ச்சியினால் கோபமும் சண்டையும் போட்டுத் தன் கௌரவத்தை நிலைநாட்ட நினைக்கும் உளவியல் சிந்தனை இக்கதையில் வெளிப்படுகிறது.


அழகின் மீது நாட்டம்

அழகற்ற தேவகியை யாரும் திருமணம் செய்துகொள்ளாத நிலையில் ஆறாம் வகுப்பு பெயிலாகி ஒரு மளிகைக் கடையில் கணக்குப் பிள்ளை வேலைப்பார்க்கும் பாண்டுரங்கன் திருமணம் செய்துகொண்டு பெண் பிள்ளைப் பெற்று வாழ்கிறான். தேவகி வந்த நேரம் குடும்பம் தழைக்கிறது. அவள் அழகில்லாதவள் என்பதை மறந்து மனைவிப் பித்தனாகி குடும்பம் நடத்துகிறான். வீட்டின் மேல்மாடியில் சில இளைஞர்களை குடிவைக்கின்றனர்.

தேவகி அலங்கார பிரியையாகி முப்பொழுதும் தன்னை அலங்காரப்படுத்திக் கொண்டே இருக்கிறாள். தாம் அழகற்றவள், வயதானவள் என்பதை மறந்து இளைஞர்களிடம் வளைய வந்து நட்பையும் பாராட்டையும் பெற விழைகிறாள்.

தன்னை அழகி என்று அவர் தொடர்ந்து கருதுகிறாரா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவள் சிறுநடை பயில்வாள்; கொஞ்சுவாள்; கோபிப்பாள்; கூப்பிட்டால் வரமாட்டாள். (8)

இறுதியில் தன் மகளோடு வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர்களில் ஒருவன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு பதறிப்போய் அவனை வசைபாடுகிறாள். இதனை அறிந்த பாண்டுரங்கன் தன் பிள்ளைகளைக் கவனிக்காமல் அலங்கார மயக்கத்திலேயே காலம் கழித்து இளசுகளிடம் சிரித்துப் பேசிக் குதித்து கும்மாளமிட்டதைக் கண்டித்தும் வசைமாரி பொழிகிறான்.

இதனால் அவள், “அலங்காரத்தையும் கைவிட்டாள். உலகத்தையே வெறுத்தவளாக வீட்டிற்கும் வாசலுக்கும் நடமாடிக் கொண்டிருந்தாள்” (9)

இவ்வாறு அழகின்மை எனும் தாழ்வுணர்ச்சியினால் அலங்காரப் பைத்தியமாகி தவிக்கும் பெண்ணின் உளவியல் நிலையை வெளிப்படுத்துகிறார்.

முடிவுரை

மனிதர்களின் ஒவ்வொரு நடத்தையிலும் உளவியல் உட்கூறு வெளிப்படுகிறது. கணவன்- மனைவியிடத்தும், மாமியார் மருமகளிடத்தும், பணக்காரன் ஏழைகளிடத்தும் உளவியல் காரணமாகவே மோதல்களும் சிக்கல்களும் உருவாகின்றன. ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொண்டாலேச் சிக்கல்களுக்கான தீர்வுகள் கிடைக்கும். உளவியல் சிக்கல்கள் அற்ற சமுதாயமேப் பிரச்சனைகள் நீங்கி மேம்பட்ட சமுதாயமாக மலரும் என்பது கு. அழகிரிசாமியின் சிறுகதைகளின் வழி தெளியமுடிகிறது.

முதன்மை ஆதாரம்

கு.அழகிரிசாமியின் சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)

பதிப்பாசிரியர் பழ.அதியமான்.

காலச்சுவடு பதிப்பகம்

669 கே.பி.சாலை நாகர்கோவில்-1

முதல் பதிப்பு ஏப்ரல் 2011.

அடிக்குறிப்புகள்

1. பெ.தூரன் -மனமும் அதன் விளக்கமும்-ப.165

2. கி.நாகராஜன்-கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல் ப.1.-ஸ்ரீராம் பதிப்பகம் சென்னை-2009.

3. இரவு-சிறுகதை பக்.73-74. கு.அழகிரிசாமி சிறுகதைகள் காலச்சுவடு பதிப்பகம் நாகர்கோவில். முதற்பதிப்பு ஏப்ரல் 2011.

4. மேற்குறித்த நூல் ஏமாற்றம் சிறுகதை ப.186.

5. மேற்குறித்த நூல் அன்பளிப்பு சிறுகதை ப.375

6. மேற்குறித்த நூல் அழகம்மாள் சிறுகதை ப.466

7. மேற்குறித்த நூல் நல்லவள் சிறுகதை ப.703

8. மேற்குறித்த நூல் முகக்களை சிறுகதை ப.1186

9. மேற்குறித்த நூல் முகக்களை சிறுகதை ப.1194

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/general/p184.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License