இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

தொண்டை நாட்டின் சந்திப் பூஜைகள்

மு. கயல்விழி
உதவிப் பேராசிரியர் (தமிழ்),
பச்சையப்பன் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரம்.


முன்னுரை

மனித வாழ்வு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. பலவிதமான நம்பிக்கைகள் அவன் வாழ்க்கையை இயக்கும் உந்து சக்தியாய்த் திகழ்ந்தன. மனிதன் தெய்வங்களைத் தொழுவதன் மூலம் தன் வாழ்வில் தீமைகள் நீங்கி நன்மைகள் நடக்கும் என்று நம்பினான். இவ்வாறு அவன் நம்பியதன் விளைவாய் பலவிதமான தெய்வ வழிபாட்டு முறைகள் தோன்றின. தமிழர்கள் தெய்வப்பற்று மிக்கவர்கள், எப்பொழுதும் இறைவனைத் தொழ மறவாதவர்கள். இவ்வாறு இறைவனைத் தொழவும், அத்தெய்வத்தை சாந்திபடுத்தவும் பல்வேறு வழிபாட்டு முறைகள் தோன்றின. அவ்வாறான ஒரு சிறப்பான வழிபாட்டு முறையே சந்திப்பூஜையாகும். இடைக்காலத் தொண்டை நாட்டில் (வடதமிழகம்) தமிழ் மக்கள் சிறப்புடன் இவ்வழிபாட்டு முறையைப் பின்பற்றினர்.

இடைக்காலத்தில் பொதுமக்கள் தம் நேர்த்திக்கடனைச் செலுத்தக் கோயில்களுக்கு விளக்கெரிக்க எண்ணையும், அன்னதானம் வழங்க கால்நடைகளையும், நிலங்களையும் தானமாக வழங்கினர். அதே சமயம் அரசர்களும், பிரபுக்களும், அரசு அலுவலரும், உயர்குடியினரும் தாம் வழிபட்ட கோவில்களில் சந்திப்பூஜைகளை நிறுவி தம் தெய்வ நம்பிக்கையை வெளிப்படுத்தினர். அவைம் அக்கால அரசர்கள் எத்துணை தெய்வப்பற்று மிக்கவர்களாகவும், ஆன்மீக நாட்டம் கொண்டவர்களாகவும் திகழ்ந்தனர் என்பதைப் புலப்படுத்தின. இடைக்காலத் தமிழகத்தின் சந்திப்பூஜைகள் தமிழர் பண்பாட்டு முதிர்ச்சியின் அடையாளங்களாகத் திகழ்ந்தன. இன்று நாடு முழுவதும் கோயில்களில் சிறப்பாக நடத்தப்படும் சந்தி மற்றும் பல்வேளைப் பூஜைகளுக்கு இச்சந்திப்பூஜைகளே முன்னோடிகளாய்த் திகழ்ந்தன. இவற்றைப் பற்றி பல்வேறு கல்வெட்டுகள் அழகுடன் சான்று பகர்கின்றன. அவற்றை ஈண்டு ஆராய்வோம்.

தொண்டை நாடும், சந்திப்பூஜைகளும்

தொண்டை நாடென்பது வட தமிழ்நாட்டைக் குறிக்கும். இது சங்ககாலம் தொட்டு சிறப்பிடம் பெற்ற பகுதியாகும். சங்ககாலத்தில் இப்பகுதி சுதந்திரமான பகுதியாகத் திழ்ந்த போதிலும் பல்லவர் காலத்திலும் அதன்பின் வந்த பிற்காலச் சோழர் காலத்திலும் அவர்தம் ஆளுகையின் கீழிருந்து பல்வகை கலாச்சாரப் பண்பாட்டுச் சிறப்புகள் பெற்றது. சோழர்களின் குறுநில மன்னர்களான சம்புவராயர்கள் இடைக்காலத்தில் தொண்டை நாட்டை சுதந்திரமாக ஆட்சி புரிந்து வந்தனர். “தொண்டை நாடு சான்றோர் உடைத்து” என்பது முதுமொழி. சான்றோர்கள் நிறைந்த பகுதியாதலால் இது பல்வகை கலாச்சாரப் பண்பாட்டு நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டு தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு முன்னோடியாகத் திழ்ந்தது. அவ்வாறு திகழ்ந்த பல்வகைப் பண்பாட்டு நிகழ்வுகளில் சந்திப்பூஜையும் ஒன்றாகும். சமய கலாச்சார நிகழ்வுகளில் தொண்டைநாடு பிற பகுதிகளுக்கு முன்னோடியாக விளங்கியது என்பதற்கு சந்திப்பூஜைகளே சாலச் சிறந்த சான்றுகளாகும்.


சந்திப்பூஜைகளின் சிறப்பு

இடைக்காலத் தமிழகத்தில் தொண்டை நாட்டில் சந்திப்பூஜைகள் கோவில்களில் தினசரி நடத்தப்பட்டன. இப்பூஜைகள் மன்னர்களாலும், பிரபுக்களாலும், அரசு அலுவலர்களாலும், உயர்குடியினராலும் நடத்தப்பட்டன. அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சிறப்பு நிகழ்வுகளைக் கொண்டாடவும், அவர்கள் பெற்ற வெற்றிகளைச் சிறப்பிக்கவும் இச்சந்திப்பூஜைகள் ஏற்படுத்தப்பட்டன. இப்பூஜைகள் இதை ஏற்படுத்தியவர் பெயராலும், அவர்கள் பெற்ற வெற்றிகளின் பெயராலும் அழைக்கப்பட்டன. கோயில்களில் தொடர்ச்சியாக, பூஜைகள் செய்யப்பட்டு பிராமணர்களுக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுகளை முறையாக செயல்படுத்தவும், கண்காணிக்கவும் கோயில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்காகும் செலவுகளை ஈடு செய்யக் கோயில்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. பொதுவில் கோயில்களுக்கு அருகில் உள்ள கிராமங்களே மானியங்களாக வழங்கப்பட்டன. அக்கிராமத்தின் மூலம் வரும் வருவாய் யாவும் அரசாங்கத்தைச் சேராமல் இப்பூஜைகளுக்காகக் கோவில்களுக்கு வழங்கப்பட்டன. இப்பூஜைகள் நாடு முழுவதும் சைவ, வைணவக் கோயில்களில் நிகழ்த்தப்பட்டன. இவ்வாறு சிறப்புடன் கொண்டாடப்பட்ட பூஜைகள்வருமாறு;

செய்யாற்றைவென்றான்சந்தி

இச்சந்திப்பூஜை வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள அரங்கநாதர் கோயிலில் ஏற்படுத்தப்பட்டது. சம்புவராய மன்னர் குலசேகர சம்புவராயன் சேர மன்னன் பாஸ்கர இரவிவர்மனையும், அவனுக்குத் துணை நின்ற பாண்டிய மன்னன் வீரபாண்டியனையும் சேயாற்றங்கரையில் (திருவொத்தூர்) வெற்றி கொண்டான். தன்னுடைய வெற்றியை இறைவனுக்குக் காணிக்கையாக "செய்யாற்றை வென்றான்” என்ற ஊரை ஏற்படுத்தியதுடன், செய்யாற்றை வென்றான் சந்தி என்ற சந்தியை இங்குள்ள வேதபுரீஸ்வரர் கோயிலில் ஏற்படுத்தினான். இந்தப் பூஜைக்காக அத்தி என்ற கிராமம் கோயிலுக்கு மானியமாக வழங்கப்பட்டது. (ARE.NO:456/1925).

வீரசம்பன்சந்தி

சம்புவராய மன்னன் வீரசம்பன் என்பவன் தன் பெயரில் விழுப்புரம் மாவட்டம் திருத்தலூரில் உள்ள சித்தீஸ்வரர் கோவிலும் (ARE.NO:436/1935), இதே மாவட்டம் மாரங்கியூரில் உள்ள இராமலிங்கேஸ்வரர் கோவிலிலும் (ARE.NO:91/1935), காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழியில் உள்ள விஜயராகவப் பெருமாள் கோவிலிலும் சந்திப்பூஜைகளை ஏற்படுத்தினான் (ARE.NO:183/1916). தன்னுடைய பிறந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இப்பூஜைகள் நடத்தப்பட்டன. இதற்காக வீரசம்பநல்லூர் என்ற ஊர் உருவாக்கப்பட்டுக் கோவிலுக்குத் தானமாக வழங்கப்பட்டது.


இராஜநாராயணன் சந்தி

இரண்டாம் இராஜநாராயணன் என்ற மன்னன் தன்னுடைய ஆட்சி சிறக்க விழுப்புரம் மாவட்டம் சோழகுலவளநல்லூரில் உள்ள வடக்கிருந்தவர் கோவிலில் இச்சந்தியை நிறுவினார் (ARE.NO:49/1922). இந்தப் பூஜைக்காகக் கீழ்புத்தூர் கிராமத்தில் 3 வேலி நிலம் கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட்டது. இவனது மகனான மூன்றாம் இராஜநாராயணன் தன்னுடைய பெயரில் விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூரில் உள்ள அபிராமேஸ்வரர் கோவிலில் ஒரு சந்திப்பூஜையை நிறுவினான் (ARE.NO:64/1922). இதற்காக சோழிங்கநல்லூர் என்ற கிராமம் தானமாகக் கோவிலுக்கு வழங்கப்பட்டது.

பசவசங்கரன் சந்தி

வேலூர் மாவட்டம் தக்கோலத்தில் உள்ள ஜலநாதீஸ்வரர் கோவிலில் இச்சந்தி நிறுவப்பட்டது (ARE.NO:201/1921). முதலாம் இராஜநாராயண சம்புவராயன் காலத்தில் அவனது சிற்றரசனான பொதுக்காமூர் நாட்டைச் சார்ந்த புல்லகண்டன் என்பவன் பஸவசங்கரன் சந்தி என்ற சந்தியை நிறுவினார். இதற்காக மாபூதி தண்டலம் என்ற கிராமம் கோவிலுக்குத் தானமாக வழங்கப்பட்டது.

கண்டகோபாலன்சந்தி

தெலுங்கு சோழமன்னான விஜயகண்ட கோபாலன் என்பவன் காஞ்சீபுரத்தை வென்று தன் ஆட்சியைத் தொண்டை மண்டலத்தில் நிறுவினான். தன் வெற்றியைக் கொண்டாடக் காஞ்சியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் ஒரு சந்திப்பூஜையை நிறுவினான் (ARE.NO:556/1919). இதுகண்ட கோபாலன் சந்தி என்று அழைக்கப்பட்டது.

ஆளப்பிறந்தான் சந்தி

சம்புவராயமன்னனான வீரபெருமாள் சம்புவராயன் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் ஆளப்பிறந்தான் சந்தியை நிறுவினான். இதற்காகப் பெருங்காநல்லூர் என்ற கிராமம் இக்கோவிலுக்கு மானியமாக வழங்கப்பட்டது (ARE.NO:556/1919).

அழகியசோழன் சந்தி

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அத்தீஸ்வரர் கோவிலில் இச்சந்தி நிறுவப்பட்டது. சம்புவராய மன்னன் எதிரிலிச் சோழ சம்புவராயன் இச்சந்தியை நிறுவினான் (ARE.NO:182/1962). இதற்காக அழகிய சோழநல்லூர் என்ற கிராமம் உருவாக்கப்பட்டு இக்கோவிலுக்குத் தானமாக வழங்கப்பட்டது.


காளிங்கராயன் சந்தி

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள புகழ் பெற்ற வேதகிரீஸ்வரர் கோவிலில் இச்சந்தி நிறுவப்பட்டது. அக்காலத்தில் பெரும் வள்ளலாகத் திகழ்ந்த ஆர்ப்பாக்கத்தைச் சார்ந்த காளிங்கராயன் என்ற அரசு அதிகாரியால் இது ஏற்படுத்தப்பட்டது. இச்சந்திப் பூஜைக்காக குளத்தூர் என்ற கிராமம் தானமாகக் கோயிலுக்கு வழங்கப்பட்டது. (ஜெயந்தி.ச, திருக்கழுக்குன்றம், சென்னை, 2008, ப:16)

முடிவுரை

இடைக்காலத் தமிழகத்தின் சிறப்பான பண்பாட்டுக் கூறாக சந்திப்பூஜைகள் திகழ்ந்தன. அக்காலமக்களின் இறைநம்பிக்கைகளுக்குச் சாட்சிகளாக இச்சந்திப்பூஜைகள் திகழ்ந்தன. இப்பூஜைகள் தமிழகம் முழுவதும் பரவலாகக் காணப்பட்டாலும் தொண்டை நாட்டில் சிறப்புற்று விளங்கியது. இச்சந்தி பூஜைகளை நிறுவிய மன்னர்களும், பிரபுக்களும் அதுதொடர்ந்து தடையறாது நடைபெற இடைவிடாது கண்காணித்தனர். இப்பூஜைகள் நடத்தப் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக தாராளமாக நிலங்கள் மானியங்களாக வழங்கப்பட்டன. பூஜைகளைக் கோயில் அதிகாரிகளான ஸ்ரீகாரியம், ஸ்ரீமகேஸ்வரர், தேவகன்மிகள், கரணத்தவர்கள் போன்றோர் பொறுப்புடன் நடத்தினர். இடைக்காலத் தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் ஏராளமான சந்திப்பூஜைகள் நிறுவப்பட்டாலும் ஒரு சில மட்டுமே வெளிச்சத்திற்கு வந்தன. இப்பூஜைகளை நிறுவிய மன்னர்களும், அலுவலர்களும், உயர்குடியினரும் மறைந்தாலும் அவர்கள் ஏற்படுத்திய இச்சந்திப்பூஜைகள் அவர்களுடைய இறை உள்ளங்களுக்கும், கொடை நெஞ்சங்களுக்கும், பண்பாட்டு உணர்வுகளுக்கும், பக்திச் சிறப்பிற்கும், சாட்சிகளாகத் திகழ்ந்து வருகின்றன.

விரிவாக்கம்

ARE-Annual Report on Indian Epigraphy.

கருவி நூற்பட்டியல்

1. Pillai.K.K, A Social History of the Tamils, Chennai,1975.

2. Swaminathan.A, Social and Cultural History of Tamil Nadu,Chennai,1991.

3. பிள்ளை.கே.கே, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், சென்னை, 2013.

4. தங்கவேலு.கோ.& தியாகராஜன்.இல, சம்புவராயர் வரலாறு,சென்னை, 1990.

5. தமிழக வரலாறு-சோழர்காலம், சென்னை, 1998.

6. ஜெயந்தி.ச, திருக்கழுக்குன்றம், சென்னை, 2008.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/general/p203.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License